ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஊழ்வினை உன்னை விட்டுவிடாது,

ஒரு வீட்டை வைத்துக்கொண்டு அதற்குப் பல தொகைகளையும் வரியென்றும் கட்டணங்களென்றும் கட்டிக்கொண்டு இருப்பது தொல்லை,  என்ன செய்யலாம். வீட்டை விற்றுவிட்டால் தொல்லைகள் நீங்கிவிடும், என்று ஒருவன் எண்ணினான். விற்றுப் பணமாக்கினான.  அதன்பிறகு அவனுடைய முட்டாள் மனைவி தன் தம்பிகள் தங்கைகள் எல்லோருக்கும் மறைமுக உதவிகள் செய்யலானாள். கொஞ்சம் கொஞ்சமாக இப்படிப் பெற்றுக்கொண்டிருப்பதை விட ஒரு மொத்தமாக எடுக்கலாம் என்று நினைத்த அவள் தம்பி தங்கைகள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து அவள் நகைகளை முதலில் கொள்ளை இட்டனர்.
கொள்ளை அடிப்பவர்கள் அதனைக் கண்டுபிடிக்க இயலாதவாறு செய்து வெற்றிபெற்றனர்.   நகை போன துயரத்தில் இருந்த அவளிடம் மெதுவாகப் பேசி ஐயப்ப பூசையில் கொண்டுபோய்ச் சேர்த்தனர்,  அங்கு அவள் மன அமைதி ஒருவாறு அடைந்தாள். கொஞ்சம் தேறியவுடன் இழந்த பணத்தை மீண்டும் பெற ஒரு வழி கூறி ஓர் இலட்சத்தை வாங்கி, வட்டி வியாபாரம் நடத்துவதாகக் கூறினார்.
சிலமாதங்கள் கழித்து, இடையில் இருந்த தரகன் பணத்துடன் ஓடிவிட்டான் என்று நாடகமாடிவிட்டனர். இப்போது அவனுக்கும் அவளுக்கும் கையில் காசில்லை.

இப்போது விடயத்துக்கு வருவோம்.  வீட்டை விற்றுவிட்டால் தொல்லைகள் முற்றுப்பெறும் என்று எண்ணியது நிறைவேறியதா?

ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்றார் இளங்கோவடிகள். தொல்லைகளிலிருந்து தப்பிவிட முடியாது. இருந்தாலும் முயற்சி
திருவினை ஆக்கும் என்றார் வள்ளுவர். முயன்று கொண்டிருங்கள்.

சோவியத்தை உடைத்துவிட்டால் சடாம் உசேன் கிளம்புகிறான்; சடாமினை  ஒழித்துவிட்டால்  ஐ எஸ் கிளம்புகிறது, ஏ மனிதனே
உன் ஊழ்வினை உன்னை விட்டுவிடாது,

ஆனால் மெய்வருத்தக் கூலி ஒன்றிருக்கிறது,  அது கிடைத்தாலே போதும் என்கிறாயா?

சாம் > சாமி

சாமியை கீழே விழுந்து ( சாய்ந்து அல்லது முன்னாகத் சாய்ந்து) வணங்குவது இன்றும் உள்ளது, பிற மதத்தாரும் முன் வீழ்ந்து வணங்குதல் காண்கிறோம்.  சாதல் என்பதும் சாய் என்ற சொல்லிலிருந்து பிறந்ததே.  மொழியில் இவையெல்லாம் கருத்து வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சா >  சாய்,  சாய்தல்.
சா >  சாதல்.
சா >  சாம் >  சாமி >  சுவாமி >  ஸ்வாமி,

சாம் என்பதே மூலம் என்பதை பிற தமிழறிஞரும் கூறுவர்,

சாம் என்ற மூலம் தமிழில்மட்டும் காணப்படுவது. இங்கு யாம் கூறுவது சாம் என்ற மூலத்திற்கு மூலமாவது‍  அதாவது அடிமூலம் சா என்பது.  அத்துடன் அதன் பின்னணிக் கருத்தையும் விளக்கினோம்.

சாமி  : பெறப்பட்ட பொருள்:   சாவு முதலிய நடப்புகளைத் தீர்மானிப்பவன் ;
வணக்கத்திற் குரியவன் . 

தொடர்புடையன

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_12.html

https://sivamaalaa.blogspot.sg/2016/07/blog-post_3.html




அதிகாரி பெரிய நாய்

ஒவ்வொரு மொழியிலும்  நாம் அறிந்து நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான சொல்லாக்கங்களும் சொல்லாக்கத் தொடர்களும் உண்டு.

அடியார் என்ற சொல்லைப் பாருங்கள்.  அடி என்பது காலின் ஒரு பகுதி. இதிலிருந்து  பரமனைப் பணியும் பற்றருக்கு ( பக்தருக்கு)ப் பெயர் அமைந்தது பொருத்தமே. இதை மனப்பதிவு முறையில் அமைந்தது என்று ஒதுக்கிவிட முடியாது.  அடிகள் என்பதை சுவாமிகளுக்கு வழங்கியதும் பொருத்தம்தான்.  சுவாமி என்பது சாம் என்ற பழந்தமிழ்ச் சொல்லிற் பிறந்தது. சாம் என்பது கடவுள், அடிகள் என்று பொருள்படினும் இது சாதல் என்பதிலிருந்து வந்ததாகத் தொடர்புபடுத்துவதில் தவறில்லை. பல மதங்களும் மதம் கடவுள் பற்றிய பதங்களும் சாவினுடன் நெருங்கிய கருத்துக்கள் கொண்டவை.
இதை முன்  இடுகை ஒன்றில் விளக்கியுள்ளோம். அவண் காண்க.  Click the link below.

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_12.html

சா> சாம்;  ஒ. நோ.  தே >  தேம்> (  தேன். )



தேம்பாய உண்டு தெவிட்டு மனம் என்றான் கம்ப நாடன்.

மலாய் மொழியில் காக்கி தங்ஙான் என்றால்   அலுவலக ஊழியர்.  இதன் சொற்பொருள் கால்‍ கை என்பது.  ஸ்டாஃப்  (staff  -  English )  என்பது கம்பு, குச்சி
என்று பொருள்படுவது. இன்று அக அலுவலரைக் குறிக்கிறது.

சீன ஹொக்கியன் கிளைமொழியில் நாய் என்பது நாயான விலங்கையும்  அதிகாரியையும் குறிக்கும்.  அதிகாரி என்றுகுறிக்கையில் பெரிய நாய் என்று அடைமொழி தரப்படும். "துவா காவ்" என்பது அது.

அமைச்சரவை என்று பொருள்படும் கேபினட் என்பது பேழை என்று பொருள்படும்.  அவைத்தலைவரைப் பேசுநர்   speaker  ( Mr Speaker Sir )  என்றன்றோ சொல்கிறார்கள். பேரரசியிடம் அந்தக்காலத்தில் சென்று பேசும் தகுதி அவருக்குமட்டுமே இருந்தது. ( The Lords always had  been accepted for Royal Audience but the Commons could only speak through the Speaker, elected by themselves. )  He spoke for them.  இதெல்லாம் வரலாற்று வழிவந்த சொற்கள்.

அடியார், அடிகள், அடிமை என்ற சொற்கள் திறம்பட அமைக்கப்ப்ட்டுள.
அறிந்து மகிழ்வீர்.
------------------------------------------------------------------------------------------------------------------------

  நாங்கள்    மகிழ்வீர்   என்று தட்டச்சு செய்தால் இது  மக்கீஸ்விற்  என்று அடிக்கிறது.  இதைச் சிலர் நோண்டி  இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் வாழ்க‌.  ( வாழ்க‌ என்பதை வாஸ்க்கா என்கிறது. )   If there are mistakes appearing after the posts are created and uploaded. these chappies are responsible, 99 percent. However we review whenever possible.