வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

If you have leg pain..........

கடினப் பட்டு  நடைமேற் கொண்டதால்
காலில் நல்ல வலி!
உடனே வெந்நீர் ஊற்றி உதவியும்
ஒழியா தயர்ந்த தொலி .

சொந்த மருந்துகள் செய்து தடவிட
சூழ் நிலை ஒப்பிட வில்லை .
சொந்தப் பாட்டியும் எந்தப் பாட்டியும்
சொல்லவும் அருகினில்  இல்லை .

ஆங்கில மருத்துவர் கண்டேன் அன்புடன்
அவரென் கால்களைத் தடவி
வீங்கிட வில்லை வீணிலேன் கவலை
விந்தைக் களிம்பிது  வென்றார்.

செருப்பினில்  அழுக்கென்று சொல்லியும் கைபடச்
செம்மகன் கழற்றி  விட்டும் ,
பொறுப்புடன்  பிடித்து வழித்து  வலிதனைப்
போக்கினார் முடிந்த மட்டும்

அப்புறம் தந்த களிம்பொன்று  அதனையே...............
அன்பர்கள் நீவிர்  கேட்பீர்.
இப்பொழு ததன்பெயர் இங்குரைப்பேன் தேய்க்க
எவ்வலிக்  கினியும்  தோற்பீர். ?

Name of Gel:  Fastum.
This is not an ad.
Any other  pl share.

  

புதன், 3 பிப்ரவரி, 2016

இலக்கிய மொழியும் பேச்சு மொழியும்

தமிழர்கள் தங்கள் மொழியை எப்போதும் திருத்தமாகப் பேசியவர்கள் அல்லர் .
அவர்கள் பேச்சு மொழியில்  பல்வேறு வகைகளில் திரித்துச் சொற்களை வழங்கியதால் பல  கிளைமொழிகள் தோன்றி, அவற்றில் பல கிளைமொழிகளாகவே   தொடர்ந்தன.  சில  உயர்த்தம் பெற்றுத் தனிமொழிகள்  ஆய்விட்டன.   வெளி நாட்டிலிருந்து  நாவலந் தீவினுள் வந்து வழங்கிய  மேலைச் சொற்களையும்  உள் நாட்டில் வழங்கிய பல பாகத மற்றும் தமிழ்த்  திரிபுகளையும் ஏற்றுச்   சமஸ்கிருதமும்  நன்கு புனையப்பெற்றது.  திராவிட  ஒலி யமைப்பை  அடிப்படையாக வைத்தே  அது உருப்பெற்றது. வெளி நாட்டினர் ஈண்டு வந்தேறி வாழ்ந்தனர் எனினும் அவர்கள்  எல்லோரும் ஓரினத்தினர் என்பதற்கோ  ஆரியர் என்பதற்கோ  ஆதாரம் தேவைப் படுகிறது.  ஆரியர் வருகை என்பது ஒரு தெரிவியல்   theory  என்ற நிலையிலேயே தொடர்கிறது.

நாம் சொற்கள்ளை  எப்படியெல்லாம் திரித்து வழங்குறோம் ......

பண்ணிகிட்டிருக்கேன்   -    பண்ணிக் கொண்டிருக்கிறேன்.!

இருக்கிறேன் >  இருக்  க் + இ     ற்   + ஏ + ன்.>    இருக்கேன் ,

இ, மற்றும் ற்  என்ற ஈரொலிகள் தொலைந்தன,    க்  +   ஏ =  கே  ஆனது. 

இலக்கிய இலக்கண மொழியும்  பேச்சு மொழியும் ஒருங்கே வழங்குவதால் 
இருக்கிறேன்  இருக்கேன் என்று திரிதலை நாம் முன்வைக்குமிடத்து  அதனை ஐயுறுவாரில்லை  என்றுணர்க . இலக்கிய மொழி ஈண்டு இல்லையெனில் 
இதனை உணர்த்துவது  பெரும்பாடாகவன்றோ  இருக்கும் ?




வாலை நறுக்கென்று.....

பிள்ளைக்கு மென்குட்டிப்  பூனையுடன் ஓடியாடி
துள்ளிக் குதித்திடத் தூண்டிடும் வெள்ளையுளம்  ;

சொல்லிக் கொடுப்பவர்க் குள்ளிலோர் நல்லாசை
அள்ளிப் படிப்பதில் ஆகிடணும் மேலெனவே.

கவர்ச்சிப் பொருள்களுடன் கல்விக்கோ போட்டி!
தவற்றை அறியாத் தடுமாற்ற   மென்றே

உவர்ப்பாய் வரும்பேச்சு "ஒழுங்காய்ப் படித்தே
உயர்ந்திடப் புத்தியுனக் கில்லை!"யென  வைதிட்டார்.

பாவம் சிறுபிள்ளை என்று கருதி அவன்
நோவ ஒறுத்திடா நுட்பநெறி ஆரறிவார்

கோலை எடுத்தால் குரங்குமே  ஆடிவிடும்
வாலை நறுக்கென்று வாதமும்  வந்திடுமே!!

will edit.. A spy programme attached to our browsers by third party to read and edit have been removed successfully.