வெள்ளி, 29 ஜனவரி, 2016

அட்சய பாத்திரம்

அட்சயப்  பாத்திரம் என்பது ஓர்  அழகான பெயர்.  இது அள்ள அள்ளக்  குறையாது வழங்கிக்  கொண்டிருக்கும் ஓர் ஏனத்தைக்  (  utensil  ) குறிக்கும்.  பழைய  மணிமேகலைப் படத்தில்  " அட்சயப் பாத்திராமி தாருக்குச் சொந்தமே?   ஆனந்தமே" என்று  கே.பி. சுந்தராம்பாள் பாடுவார்.

இந்தச் சொல்லை ஆய்வு செய்வோம்.

எல்லோரும் வந்து உணவை அள்ளிக்கொண்டு போகும் ஐயப் பாத்திரம்.

ஐயம் = பிச்சை .

இப்போது மறுபுனைவில் ஈடுபடுவோம்,

அள்ளு + ஐய   பாத்திரம்,

அள்  சு  ஐய  பாத்திரம்.

அட்சு  ஐய  =  அட்சைய  பாத்திரம்.

> அட்சய பாத்திரம். (  சை > ச    )  ஐகாரக் குறுக்கம்)

அள்  என்பது  வினைப் பகுதி.     சு  ஒரு விகுதி 


அள் என்பது  அள்ளு என்று உகரத்தில் முடிகிறது. உ  ஒரு சாரியை. வினையாக்க விகுதி .எனலும் ஆம். எது என்ற ஆய்வு பின் ..

அள்ளையப் பாத்திரம் என்றால்  அள்ளு ஐயப் பாத்திரம் என்று  தமிழ்ப் பேச்சிலேயே தங்கிவிடும். வேலை கிட்டி வெளி நாடு செல்வோரை நாம் தடுக்கிறோமா? அதுபோலத்தான்.


இந்தச் சொற்புனைவில்  சிறிய மாற்றத்தையே செய்துள்ளனர்.

அள்ளு(தல் )>   அள்+ ள்​ +உ  >   அள் + ( ள் + ச்  + உ )  >  அள்சு  > அட்சு . இதில் ஒரு 
ச்  மட்டுமே நுழைக்கப்பட்டது.   மற்றவை இயல்பாக நிகழும் திரிபுகள்

ஒரே  ஒரு சகர ஒற்றைப் போட்டுப்  பெரிய மாற்றமாக வெளிப்பட்ட சொல் இதுவாகும். இதைப் புனைந்த புலவர் மிக்கக் கெட்டிக்காரர். இதுபோன்று புதுப்புனைவுகள் மேற்கொள்ளத்  திறன்பெறுதல் நன்று. 

இப்படியும் காட்டலாம்:

அள்ளு  ஐயப்  பாத்திரம்>
அள் சையப்  பாத்திரம் >
அட்சையப் பாத்திரம் >
அட்சயப் பாத்திரம்.

இதில் அய்ய அல்லது ஐய என்பது  சை ய  என்று ஆனது
அகர வருக்க -  சகர வருக்கத் திரிபு.
இன்னோர் உதாரணம்:  அமணர் > சமணர்.

திங்கள், 25 ஜனவரி, 2016

Tolkappiyam is not dependent on other languages

Tolkappiyam is not dependent on Sanskrit sources and a work that demanded not only vast knowledge but also a lot of thinking from its author, according to Alexander Dubyanskiy, veteran Tamil scholar from Moscow State University.


Read more:

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tolkappiyam-is-not-dependent-on-sanskrit-sources-tamil-scholar/article489121.ece



Also on Tolkappiyam


Sivamala: Tolkappiyam timeline




ஞாயிறு, 24 ஜனவரி, 2016

றகரம் ஷகரமாய் மாற்றப்படும்,

தமிழுக்கு ற என்னும் எழுத்து சிறப்பானது. இதுபோலவே, அயல்மொழிகட்கு ஷ, ஜ, ஸ என்பவை சிறப்பனவை. சிறப்பு என்றால் இவ்வெழுத்துக்கள் அம்மொழிக்காரர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தவை. மற்றபடி, இவை எல்லாமும் மனித நாவினின்று வழிந்து பறந்து வெளிவந்து கேட்போனின் செவிப்பறைகளில் மோதுபவைதாம் . இவ்விடையத்தில் யாவும் ஒப்பனவாம்.

இப்போது பாருங்கள், றகரத்துக்குப் பதில் ஷகரம் இட்டுச் சொல்லை உருமாற்றிவிடலாம்.   படிப்போன்  ‍‍

நூறாண்டு புழங்கினும் மாறின எழுத்துகள்
கூறாது விடிலோ கொஞ்சமும் அறியான்.

ஆகையால்,  இப்போது ஒரு பயிற்சியில் ஈடுபடுவோம்.


சிறு >  சிஸு

சிறியர்  > சிஷ்ய‌
பெரியவரான குருவிடம், சிறியவர்களான சிஷ்யர்கள் பாடங்கேட்பர்,
வயது ஆகியிருந்தாலும் அறியார் குருவிற்குச் சிறியவர்தான்.

சிறுமைக்குள் அறிவுக் குறுக்கமும் அகவைச் சிறுமையும் அடங்குவன.

இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர். அல்லது  ஈஸ்வர்   .இகர நீட்சித் திரிபு. (முதனிலை நீண்டு நடு திரிதல்)

ஒரு சொல்லை மாற்றுகையில் ஒலிக்க எடுப்பாகவும் எளிமையாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையேல் பயன்படுத்துவோரிடம் எடுபாடாது கெடும்,

புள் >  புட்சி  >பட்சி.   உகர அகரத் திரிபும்  ஓர் விகுதி பெறுதலும்.
கதை  > கிதை  > கீதை.  (  அகர   ஈகாரத்  திரிபு. )  கிதை  என்றே விட்டுவிட்டால்
இன்னா ஒசைத்தாகிவிடும்.  (அதாவது  ஒலி  நயக்  கேடாம் )

will edit