செவ்வாய், 31 மார்ச், 2015

Our old viceroys -- ஏற்றாண்டார்

ஏற்றாண்டார்  என்பது  பழந்தமிழ்  அரசு அலுவலரின் பட்டப்பெயர்.  இது மிக்க அழகாகத்  தனித்தமிழில் அமைந்த ஒரு கூட்டுச் சொல் ஆகும்.

இதன் பொருளை ஆய்ந்தால் இது  ஆங்கிலத்தில் viceroy என்பதற்கொத்த உள்ளீட்டினைத் தருகிறது.   அரசரே  நேரடியாக ஆட்சி செலுத்துதலுக்கு  ஏதோ காரணத்தால் ஒத்து வராத ஒரு வட்டத்தை  ஏற்றுக்கொண்டு  அதனைத் திறம்பட  ஆட்சி புரிந்தவர் என்ற பொருள் இச்சொல்லில் நன்கு தொனிக்கிறது.

பிற மொழிக் கலப்புச் சொல்லாக இல்லாமல் இப்பட்டப்பெயர் அமைந்தது அரசின் தமிழ் ஈடுபாட்டையும் பட்டம் பெற்றவரின் தமிழ்ப் பற்றையும் விளக்குவதாகக் கொள்ளுதல் வேண்டும். 

ஏற்று என்ற சொல் இதில் திறமாகக்  கையாளப் பட்டுள்ளது.

"vice roy"   என்பதில் உள்ள  "வைஸ்" என்பதற்கு இன்னொரு சொல் தேடிக்கொண்டிருக்கும் புலவர்க்கு "ஏற்று"  என்பதும் சிந்திக்க வைக்கும் தமிழ்ச் சொல் ஆகும்.  ஒரு பேரரசனுக்காகப்  பொறுப்பை மேற்கொள்கிறார் -
இதுவே உண்மை நிலை அல்லவா ?

Whenever a word occurs in the past tense like "ANdar"  it denotes an accomplishment,  though the holder of the underlying official position might have contrinued.in his political power and ruling of the place. In modern parlance,  it could have been variously expressed as "ERRatchiyar". 

The city before LKY


Friday, March 20, 2015

லீ குவான் யூவிற்கு முந்திய சிங்கப்பூர்

நகரத்தில் உள்ள  கல் கட்டிடங்களில்  தண்ணிர்ப் பகிர்வு முறை இருந்தது  வீட்டிற்குக் குழாய்களின் மூலம் தண்ணிர்  தரப்பட்டது.  இவ்வீடுகளில் பெரும்பாலும் ஒரு கிணறும் இருக்கும்/    மக்கள் இரண்டையும் பயன் படுத்தினர் என்று சொல்கிறார்கள். பின்பு என்ன  ஆயிற்று என்று தெரியவில்லை.  கிணறுகள் மறைந்து குழய் தரும் நீர் மட்டுமே பயன்பாடு கண்டது,

தண்ணிர் அடைப்பு திறப்புக் கருவிக்கு பீலி என்று சொல்வார்களாம்.  இது என்ன சொல் என்று தெரியவில்லை.  பொதுக் குழாயடிகளும் இருந்தன.  லீ வந்தபின் இந்தப் பொதுக் குழாய்களில்  தண்ணிர் இலவசமாகப் பெறும் முறை மறைந்து விட்டது ,

கழிவறைகளில் தண்ணீர் இழுக்கும் தூய்மை முறை பலவிடங்களில் இருந்தது.  இதனை இழுப்புக் கக்கூஸ் என்பர்.  ஆயினும் எடுப்பு முறையும் இருந்தது (  எடுத்து அப்புறப்படுத்தும் முறை. ) சிற்றூர்ப் புறங்களில் பெரும்பாலும் எடுப்பு முறைதான்.

கழிவு வாயுவில் எரியும் தெருவிளக்குகள் இருந்தன. மின் தெரு விளக்குகளும் இருந்தன.போக்கு வரத்து விளக்குகளும் இருந்தன   காவலர் கையசைவுகளால் வண்டிகளுக்கு வழிகாட்டும் முறையும் இருந்தது.

லீ ஆட்சி அமையுமுன்பே சிங்கை நகரம் என்னும் தகுதியைப் பெற்றிருந்தது. ஒரு  நகர அவையும் அவைத்தலைவரும் இருந்தனர்.  நகர உள்ளாட்சி முறை இருந்தது.

But there were not many flats in Singapore as you see today.

சிங்கப்பூர்  நகரத்திற்கு எல்லைகள் வைத்திருந்தார்கள்.  அந்த எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளை Outside city limits
என்று  குறிப்பிட்டார்கள். உதாரணமாக தெம்பெனிஸ்  வட்டாரம் நகர எல்லைகளுக்கு அப்பாற் பட்ட பகுதியாகும்.  இவ்வெளிப் பகுதிகள்  மாவட்ட அவைகளினால் ஆளப்பட்டன.  நகரப் பகுதிகளை  நகர அவை பார்த்துக்கொண்டது.  நகர  அவைஞர்கள் ( கமிஷனர்கள் பின்னர் ) city councilors  எனப்பட்டனர்.  உள்ளாட்சிக்கு ஒரு மந்திரி இருந்தார்.

திங்கள், 30 மார்ச், 2015

Sleep: "Niththirai"

உறக்கம் என்பது  அலை அலையாக வருவது.

ஓர்  அலை வருகிறது.  அதில் அமிழ்ந்து உறங்குகிறீர்.  ஆழ்ந்த உறக்கம்  சற்று மாறி  இன்னோர் அலை வருகிறது.  மீண்டும் உம்மை  அழுத்துகிறது.  அதில் அமிழ்ந்து தொடர்ந்து தூங்குகிறீர்.  இப்படிப் பல் அலை அமிழ்வுதான் உறக்கம் ஆகும்.

இப்போது நித்திரை என்ற சொல்லைக் காண்போம்.

நி என்பது நில் என்பதன் கடைக்குறை.   நில்>   நி.   திரை என்பது அலை என்று  பொருள்படும்.  அது ஒரு விகுதியுமாகும்.

நி + திரை = நித்திரை.

நில் + திரை =  நிற்றிரை > நித்திரை  எனினுமாம்.

இதன் பொருள் ,  "நிற்கும் அலை " என்பது:  அலையாக வந்து உறக்கத்தில் அமிழ்த்தி  நின்றுவிடுகிறது.   நிற்றலே உறக்கத்தின் தொடக்கம்  அல்லது தொடர்தல்.   Sleep comes in circles  என்று  பிறரும் கூறுவர்.    இதை நம் முற்கால மனிதரும்  உணர்ந்திருந்தனர்.  அதனால்தான் இச்சொல் இப்படி அமைந்துள்ளது.

தமிழில் உள்ள சொற்கள் சிலவற்றை ஆய்ந்தால்  பிறமொழியில் புரியாதது
புரிந்துவிடுகிறது  என்று ஸ்ரீ  அரவிந்தர் சொன்னதன் உண்மை இப்போது புலனாகும்.