வெள்ளி, 5 டிசம்பர், 2014

மாணவி கற்பில்

மாணவி கற்பில் மகிழ்ந்திருந்த வாத்தியார்க்குப்
போனதடி சிங்கப்பூர் வாழ்வுரிமை === ஏனிவனே
குற்றச் செயலில் குறுமதி கொண்டலைந்தான்
முற்றும் திருந்தானை மொத்து


Malaysian law lecturer in sex-for-grades scandal loses Singapore PR case

.


https://sg.news.yahoo.com/malaysian-law-lecturer-sex-grades-scandal-loses-singapore-012942320.html


A Malaysian law professor, embroiled in a sex-for-grades scandal, has lost his bid to have his Singapore permanent resident status reviewed after it was revoked last year, reports The Straits Times today.
Tey Tsun Hang lost his PR status when he left the country without a re-entry permit (REP).
The former National University of Singapore (NUS) lecturer had been convicted in June 2013 of corruptly obtaining sex and gifts, including a Mont Blanc pen and an iPod, from his former student Darinne Ko, as an inducement to give her better grades.
Tey, 43, was accused of "clearly and systematically" taking advantage of Ko and had even impregnated her.
More at the website.....................

செவ்வாய், 2 டிசம்பர், 2014

குது என்னும் அடிச்சொல்

இப்போது குது என்னும் அடிச்சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.

குது என்பதன் அடிப்படைப் பொருள், தொடுதல் என்னும் கருத்தே ஆகும்.
தொடுதலிற் பலவகை.சற்று கடுமையாகச் சென்று தொடுதல், மென்மையாகத் தொடுதல் என்று சொற்களை ஆய்ந்து அறிந்துகொள்ளலாம்.

குது என்ற சொல், இடைவிரிந்து குத்து என்று ஆகும்.  கூரான பொருளால் குத்துதல்,கூரற்ற பொருளால் குத்துதல் என்று வேற்றுமையுண்டு.

குது >  குத்து.

தகர ஒற்று வல்லினம். குத்துதல் என்பது வன்மையாகத் தொடுதலாகும்.
அதுவே மென்மையுடன் நிகழுமாயின், அதற்கேற்ப வல்லினத் தகர ஒற்று மெல்லினமாகி விடும்.

குது > குந்து என்று ந்  வந்து மென்மையானது.

குந்தும் போது உடற் பின்பாகம் தரை தொடுகிறது. என்றாலும் இது வன்மையாக நிகழ்வதன்று என்பது சொல்லவேண்டுவதில்லை.

உட்காருங்கால் தரையிற் படும் உடற்பின்பாகம் குறிக்கும் சொல், வல்லின ஒற்றின்றி, மெல்லின ஒற்றுமின்றி ஒரு சொல் பெற்றது.

குது >  குதம்.  (குது + அம்).

குதம் என்பது செயல் ஒன்றும் குறிக்காத உடற்பகுதி.  எனவே அது
வலிக்கவோ மெலிக்கவோ செய்யாமல், அடிச்சொல்லிலிருந்தே அமையலாயிற்று.

இனிச் சாய்வு ஏதுமின்றி தரைதொட்டு நிற்கும் செயலுக்குச் செங்குத்து என்ற சொல் பயன்பட்டது. செம்மை முன்னொட்டு சாய்வின்மை குறிக்கின்றது.

குது > குத்து >  செங்குத்து. (செம் + குத்து).  முழுச்சொற்களாய்ப் புணர்பெறுதலையே இலக்கணியர் போற்றினராதலின், செம் என்பதனோடு மை விகுதி சேர்க்கப்பட்டு, செம்மை + குத்து எனவந்து, பின் மை கெடுத்து, செங்குத்தாக்கினர்.

செங்குத்தாக நீட்சியுள்ள ஒன்றை (தடியை)ப் பிடித்துக்கொண்டு அணிவகுத்துச் செல்வது படைமறவரிடத்து நடைபெறுமொரு நிகழ்வு.
இது காண அழகாய் இருக்கும். அதற்கேற்ப, செங்குத்து என்பதிலுள்ள‌
வல்லினத் தகர ஒற்று, நகர ஒற்றாக (  ந்  )  மாறி அமைந்தது; ஆக‌

செங்குத்து > செங்குந்து > செங்குந்தம் என்றாகும்.

இதைப் பிடித்துக்கொண்டு, முதல் வரிசையிற் சென்ற படைஞர், செங்குந்த முதலியார் எனப்பட்டனர்.

வாழ்க்கையும் ஓர் இயங்கு திறமுடைய ஓர் இயந்திரமே ஆகும், இக்கருத்து சரியோ தவறோ ‍== அது நின்றுவிடின், அது நிலைகுத்தி விட்டதென்பர்.  நிலை குத்துதல் என்பதில் குத்து என்பதைக்  கவனிக்கவேண்டும்.  குத்தி நிற்பது, ஓடாமல் நிற்பது. வாழ்க்கை ஓடுகிறது; ஓடாதபோது நிலை குத்தி நிற்கின்றது.  அது ஓரிடத்தில் உட்கார்ந்து போய்விட்டதெனலாம். ஆதாவது குந்திவிட்டது. குந்துதல் தொடர்பில் அமைந்ததே:

குந்துதல் :  குந்து > குந்தகம் ஆகும்.

இருவர் (அல்லது அதனின் மேற்பட்ட எண்ணிக்கையுடையோரோ) சேர்ந்து நிகழ்த்தும் ஒரு செயல்பாட்டில், கருத்துகளும் நடைமுறைகளும், செய்ம்முறைகளும் அங்குமிங்கும் வழவழ என்றில்லாமல் வரையறவு உடையனவாய் இருத்தல் வேண்டும். அதுவும் வணிகம், வியாபாரம், நிதி நிறுவாகம் முதலியவற்றில்  இன்றியமையாதது. ஒப்பந்தங்கள் ஏற்பட்டபின், இந்த நெகிழ்வு நிலை   ஓடிக்கொண்டிராமல் குத்தி நிற்கும்.

குத்து >  குத்து + அகம் + ஐ = குத்து+ அக + ஐ =  குத்தகை.

குத்தி நிற்கும் வரையறைக்குள் நெகிழ்வு நிலை அகப்பட்டுக் கொண்டதென்பது பொருள்.  சில்லறையாக இல்லாமல், கொத்தாக (மொத்தமாக)ப் பிடிக்கும் வணிகத்தில்   கொத்து > கொத்தகை > குத்தகை  என்றும் காணலாம் ஆகையினால் இச்சொல் ஒரு இருபிறப்பி எனலாம்.

குது என்பது தொடுதற் கருத்தாதலின், பிறனுடலை வன்மையாகத் தொடும் ஒரு விளையாட்டுக்குக் குத்துவிளையாட்டு என்றனர். அதுபின் குத்திவிளையாட்டு , குஸ்தி விளையாட்டு என்று திரிந்தது.

குத்து >குத்தி > குஸ்தி.

கால்களால் வன்மையாகத் தரையைத் தொடுதல், குதித்தல் ஆகும்,

குது > குதி > குதித்தல்.

குதித்தாடுதல், கூத்து:

குது > குத்து > கூத்து.  தரையில் கால்கள் சற்று வனமையாய்க் குத்துவதுமாம்.

குத்து : > குத்தாட்டம்.


கூத்து என்பது குத்துதல் என்பதன் முதனிலை நீண்ட தொழிற்பெயர் என்பதைக் கண்டுகொள்ளலாம்.

நிற்றல், நடத்தல், ஆடுதல், ஓடுதல்,   ஓடுதலும் நிற்றலும் மாறிமாறி வருதல், என‌ இன்ன பிறவும் நடனத்தின் பல்வேறு உறுப்புகள்.

நில் > நிறு > நிரு > நிருத்தம்.  றகரம் ரகரமாகவும் திரியும்.
நட > நடம் > நடன் > நடனம்,  இவற்றில் விகுதிகளை ஒன்றாய்க் கட்டி, நட + அனம்  நடனம் எனினும் அதுவேயாம்.


நிற்றல், நடத்தல், ஆடுதல், ஓடுதல்,   ஓடுதலும் நிற்றலும் மாறிமாறி வருதல், என‌ இன்ன பிறவும் நடனத்தின் பல்வேறு உறுப்புகள்.

நில் > நிறு > நிரு > நிருத்தம்.  றகரம் ரகரமாகவும் திரியும்.
நட > நடம் > நடன் > நடனம்,  இவற்றில் விகுதிகளை ஒன்றாய்க் கட்டி, நட + அனம்  நடனம் எனினும் அதுவேயாம்.

நடு>  நடுதல்,
நடு > நட > நடத்தல்: கால்களைத் தரையில் நட்டு, நட்டு முன்செல்லுதல்.  நட > நடனம்.
குத்து > கூத்து : கால்களைக் குத்திக் குத்தி யாடுதல்.

இவையெல்லாம் நடனம் இன்றைய உன்னத நிலையை எய்துமுன்
பழங்காலத்தில் அமைந்த சொற்கள்.

இவற்றை அமைத்த மக்களைப் பாராட்டவேண்டும். இற்றை நிலையில் இப்படி அமைக்க இற்றை மக்களும் புலவர்களும் திணறியிருப்பார்கள்.


[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

இறையனார் அகப்பொருளிலிருந்து "சென்றே ஒழிக"

சென்றே ஒழிக  வயலணி ஊரனும் தின்னத்தந்த‌
கன்றே  அமையுங் கல்வேண்டா பல்யாண்டு கறுத்தவரை
வென்றான் விழிஞம்கொண் டான்கடல் ஞாலம் மிக அகல் இது
அன்றே அடியேன் அடிவலங் கொள்ள  அருளாகவே (275)

இறையனார் அகப்பொருளிலிருந்து  ஓர்  உதாரணப்1 பாடல்.

இந்தப் பாடல், பரத்தையிடம் போதற்குப் பிரிந்த தலைமகன் பற்றியது என்ப‌. But please see  last few paragraphs herein. அவன் போய்விட்டாலும் அவனுக்காகத் தலைமகளிடம் பேச, ஒருவன் வருகிறான். அவன் யாரென்பது, பாட்டிலிருந்து வெளிப்படையாகத் தெரியவில்லை.அவன் தலைமகளிடம்  பேசியதாக வருகிறது இந்தப் பாடல்.


சென்றே ஒழிக வயலணி ஊரனும்:  அழகான வயல்கள் நிறைந்த ஊரை உடைய‌ அந்தத் தலைவன்   போனால் போகட்டுமே! (அப்படி உங்களை விட்டு
எங்கே போய்விடப் போகிறான் என்பது)

தின்னத் தந்த கன்றே அமையும் :  புல், பிண்ணாக்கு முதலிய தீனிகள் அளித்ததுக் கொண்டிருக்கிறானே, உங்கள் கன்றுகட்கு! உங்கள் வீட்டின் பாலுள்ள அன்பையும் கவனிப்பையும் அவன் மறந்துவிடவில்லை என்பதை, இந்த அவன் செய்கை காட்டுகிறதே. புல் பிண்ணாக்கு தவிடு முதலிய தின்னத்தந்த கன்றுகள் சான்றாய் அமையும் என்றபடி,

கல் வேண்டா: அவன் போய்விட்டானென்று நீங்கள் உயிர் விடுவதா? கல் ‍ நடுகல்;( நீங்கள் நடுகல்2 ஆகவேண்டாம்.)

பல்யாண்டு கறுத்த வரை வென்றான்:  அவன் கறுத்துவிட்ட பழைய மலையை வென்றவன்; ( பல்லாண்டு சினந்து போர்செய்து மலையை வென்றவன் எனினுமாம். ) கறுத்தல் ‍ சினத்தலும் ஆகும். Rocks become darkened  owing to raining for a long time.  (old rocky mountain ) வரை:  mountain.
...
விழிஞம் கொண்டான்:  கடற்போரிலும் வென்றவன்; ( உங்கள்   தலைவன், வீரன்; நாட்டுப் பற்று உடையவன். அவன் வென்ற  இடங்களை விட்டு நீங்கிவிடமாட்டான்.)


அடியேன் அடிவலங் கொள்ள -  அடியேனின் அடிகள் வலமாகச் -சென்று தேடுவதற்கு,  அடிவலம்கொள்ள -: நடந்து  சுற்றித் தேட‌

கடல் ஞாலம் மிக அகலிது அன்றே :  கடலால் சூழ்ந்த இவ்வுலகு மிகவும் அகன்றது அன்றோ?

(ஆகவே விரைந்து ஒன்றும் நடந்துவிடாது, காலம் தேவை.  இப்போது எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறானென்பதை  உடனே அறிந்து கொள்வதும் அரிதே ஆகும்.)

அருள் ஆகவே: யாவும் நன்று ஆவதற்கு அருள் உண்டாகட்டும் என்றபடி


தலைமகன் எதுகாரணமாகச் சென்றுவிட்டானென்பதற்கு இப்பாடலில் வெளிப்படைக் குறிப்பு எதுவும் இல்லை, பரத்தை காரணமாக என்பது உரை எழுதியோர் கூற்றேயாகும். கல் வேண்டா என்றதால் பிறபெண்ணை நாடிச்சென்றிருத்தல் கூடுமென்பதும் அவள் பரத்தையாய் இருப்பாள் என்பதும் ஊகமாம்.(யூகம்). உண்ணுதல் என்னாது தின்னத் தந்த என்றதனால் புல் முதலியன கன்று ( or கன்று புல் முதலியன....... ) தின்னத் தந்த என்பது பெறப்படும். வீட்டில்  கன்றுக்குத் தீனி உட்பட எல்லாவற்றையும் கவனிப்பவன் என்பதனால் கவலை கொள்ள வேண்டாமை அறிகிறோம். பாடலுக்கு உரையாசிரியர் உரை ஏதுமில்லை.தலைப்புத் தந்ததே உளது அதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாய் இல்லை. பாடல் புனைந்தவர் யாரென்பது தெரியவில்லை.

தலைமகள் வீண்கவலை காட்டுவது இப்பாடல்.

அருள் ஆகவே என்றதனால் வந்தவன் முதியோனாய் இருக்கலாம். தான் தேடிக் கண்டுபிடிக்க நாளாகலாம் என்பதால் அவன் தலைமகனால் அனுப்ப‍ப்பட்ட தூதுவனல்லன் என்பதே சரியாகும்


1 உதாரணம் என்பது மிக்க அழகாய் அமைந்துவிட்ட ஒரு சொல். அது இது உது என்பவற்றில் உது:  முன் நிற்பது; ஆர் : நிறைவு; அண் : பொருளால் அண்மையில் இருப்பது; அம் : விகுதி;  ஆகவே உதாரணம் என்றனர்.

2 þíÌ ¯¨Ã¢ø ¿Î¸ø ±ýÈÐ À¢½õ Ò¨¾ò¾À¢ý Ò¨¾ò¾ þ¼ò¾¢ø
¨Åì¸ôÀÎõ «¨¼Â¡Çì ¸ø¨Ä. Not used here in the sense it has
been used in ancient grammar works. (Not a "technical term" or "term of art" in the commentary herein). The writer at this point was neither referring to nor having any interest in those works for her purpose of interpretation.  

Footnote 2 added on 12.3.2018.
Will edit later