சனி, 2 ஆகஸ்ட், 2014

583 தத்தெடுத்த அதிகாரி



http://tamil.thehindu.com/tamilnadu/

'19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி: சத்தமில்லாமல் ஓர் அசாத்திய சாதனை'

1995-ல் என் மனைவி இறந்தபிறகு, அந்தக் காப்பகத்தை இன்னொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு, பணம் இல்லாததால் படிப்பை கைவிடும் ஏழை மாணவர் களின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன். அதற்காக 1996-ல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்த ஏழை மாணவர்களின் பட்டியலை கேட்டு கடிதம் எழுதினேன். 

சரியான மாணவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிகள் பரிந்துரை செய்திருந்த மாணவர்களை அழைத்து, நானே ஒரு தேர்வு வைத்தேன். அதில் முதல் ஆண்டு தேர்வான 13 பேரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவுகள் அனைத்தையும் செய்து படிக்க வைத்தேன். படிப்பு மட்டுமில்லாமல் மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளையும் தனியாக நடத்த ஆரம்பித்தோம். 

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவு உள்ளிட்ட தனித் திறன் பயிற்சி வகுப்பை நிபுணர்களைக் கொண்டு நடத்தினோம். இப்படி, கடந்த 19 ஆண்டுகளில் 583 பேரை தத்தெடுத்து நல்வழிப்படுத்தி இருக்கிறோம்.
கூடலூரைச் சேர்ந்த பால் விற்கும் பெண்ணின் மகன் ஒருவன், கையில் பணம் இல்லாத தால் படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்குப் போகும் முடிவில் இருந்தான். அவனை நாங்கள் தத்தெடுத்து படிக்க வைத்தோம். அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., முடித்தான். தற்போது தனது தம்பியை மதுரை அமெரிக்கன் காலேஜில் எம்.எஸ்சி. படிக்க வைத்திருக்கிறான். 

எங்களிடம் பயிற்சி பெற்று படித்த 8 பேர் டாக்டர்களாகவும் நிறைய பேர் பொறியாளர்களாகவும் உள்ளனர். எங்களிடம் பயின்ற மாணவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். 15 வயதில்தான் மாணவர்கள் வழி தடுமாறிப் போகின்றனர். அந்த நேரத்தில் உரிய கவனம் செலுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி விட்டால் நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். 

எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன்

(தொடர்புக்கு -9442564078).
__._,_.___

உங்கள் நாட்டுத் திறன்

அவர் வெளி நாட்டு வேலைக்காரர்.
இங்கு வந்து  குளம்பி (காபி)  போடுகிறார்!
தாகம் எடுத்த  அதனாலே,
நாமும் வங்கிக் குடிக்கிறோம்!
இங்கு வேலை செய்ததனால்
அவர் திறமும் (தரமும் )
இந்த நாட்டின் திறமோ? வெளி நாட்டுத் திறமோ?

அவர் நன்றாகக் குளம்பி போட்டால்
அந்தத் திறமை அவர்திறமை.
அவர் இருந்துவந்த நாட்டின்  திறமை.

ஒரு மருத்துவ  மனையில்
வெளி  நாட்டுத் தாதிமார்,
வெளி நாட்டு மருத்துவர்கள்!
அந்த மருத்துவ மனைத் தரம்
வெளி நாட்டுத் தரமா? உள் நாட்டுத் தரமா ?


இலவசம்

இலாகா என்ற சொல்லின் தொடர்பில் இலவசம் என்ற சொல்லையும் நினைவு கூர்வது  நலமென்று நினைக்கிறேன்.  இலவசம் என்னும் சொல்லினைப் பற்றி சில ஆண்டுகட்கு முன் எழுதியிருக்கிறேன்.

இலவசம் எனில் " இல்லாமல் வசமாவது".  -  என்ன இல்லாமல் ?  என்ற கேள்விக்கு "விலை இல்லாமல்",   "கட்டணம் இல்லாமல் "   "காசு இல்லாமல்" என்றே  எல்லாம் விரிக்கலாம்.  இது பொருள் கைமாற்றம் தொடர்பில் வரும் சொல் ஆதலால் வேறு ஏதும் இல்லாமல் என்று சொல்ல இயலாது.

வசம் என்பது வை என்ற சொல்லின் அடியாய்ப் பிறந்தது.

பை > பய் > பயல் > பயன் > பசன் >பசங்க
பை> பையல் > பையன் .

பையலோடிணங்கேல்  என்பது ஆத்திசூடி.

இந்த மாதிரி திரிபுதான் இது.

வை > வய் > வயம் > வசம்

ஓன்று (உங்கள் ) வசமிருக்கிறது என்றால்  அதை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.

இல் >  இல்+வசம் >  இ (ல் +அ ) வசம் >  இலவசம்.

இடையில் ஒரு அகரம் தோன்றிவிட்டது.  சிலருக்கு அதனால்  மூளை  திசை மாறிவிடுகிறதோ?

இலாகா என்பதில் உள்ள இல் house குறிக்கும் .
இலவசம்   என்பதில் உள்ள இல் no, without  குறிக்கும்