வியாழன், 30 ஜனவரி, 2014

காரசாரம்

காரசாரம் என்பதோர் அழகிய சொல்.

காரம் என்பதற்குப் பல பொருளுண்டு எனினும், மிளகாயின் காரம் நினைவுக்கு வந்துவிடுகிறது.

சாரம்  : சார்ந்தது.  சார்தல், சார்பு, இவை சார் என்னும் அடிச்சொல் கொண்டு அமைந்தவை.

காரசாரமான விவாதம் என்கிறோம்.

விளக்கம் தேவையில்லாத சொல்லாகும்.

புதன், 29 ஜனவரி, 2014

வகரம் பகரமாகத் திரியும்

வகரம் பகரமாகத் திரியும் என்பது :தூபம்" என்ற சொல்லைப் பற்றிய விளக்க இடுகையில்  (கீழே )  எடுத்துச் சொல்லப்பட்டது.

இப்போது  வேறு  சில சொற்களை ஒப்பிடுவோம்.

கூவம் > கூபம்.
*தவி + அம் = தாவம் > தாபம். தாவம் > தாகம்.
அவி + அம் = அவம், அவம்> அப, (அவிதல், அவிந்து கெடுதல், கேடு)
(அப கீர்த்தி, அபகடம், அபகாரம்  அபத்தம் எனப்பல)

அவ என்பது ஒரு சங்கத முன்னொட்டானது )

பாவம் > பாபம்
சாவி(த்தல்), சாவி+ அம் = சாவம் > சாபம்,
கோவம்  > கோபம்.

கா > காவல் ;
கா > காவந்து > காபந்து @
(காவல் > காவல்+து >  காவந்து ) இது பேச்சு வழக்குச் சொல் .
காவல் >காவன் > காவன்  து  > காவந்து.  ல்>ன்  திரிபு  மற்றும் து விகுதிச் சேர்க்கை .

@ இது  போன்றவை நம்  பழைய இலக்கணக் கோட்பாடுகட்கு இணங்க அமையவில்லை. இருப்பினும்  தமிழே.  

...........எனப்  பலவாம்.

குறிப்புகள்

*தாகம்  எடுக்கிறது என்று சிலர் கூறினாலும் " தண்ணீர்  தவிக்கிறது"  என்று 
சிற்றூர்களில் கூ்றுவதுண்டு. எனவே "தவி" அடிச்சொல்..      

புதன், 22 ஜனவரி, 2014

தூபம்.



இப்போது சாம்பிராணி, பல மாதிரிகளில் கிடைக்கிறது. கட்டி, தூள், குப்பி என்பன எனக்குத் தெரிந்த சில  வடிவங்கள். இவற்றுள் கட்டிச் சாம்பிராணியே முந்தியது என்று தெரிகிறது. கட்டியை நொறுக்கித் தூளாக்கித் தான் தூபக்கால் நெருப்பில் இடவேண்டும்.

தூளாக்கித் தூவினால் நறுமணப் புகை வருகிறது.

தூவு  > தூவம் > தூபம்.

ஒப்பீடு :  வசந்த் -  பசந்த்   (வசந்தம்)

வகரம் பகரமாகத் திரியும்.