திங்கள், 7 அக்டோபர், 2013

உலகம் சுழல்கிறது. references from KuRaL

உலகம் சுழல்கிறது.

உலகம் சுழல்கிறது.

ஏறத்தாழ 2000 ஆண்டுகளின் முன் வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த தமிழர், உலகம் உருண்டையானது என்று நம்பினரா, அன்றி அது ஒரு தட்டை என்ற கொள்கை உடையோரா என்பது தெரியவில்லை.

வள்ளுவனாரும் இதுபற்றி நேரடியாகத் தம் குறளில் ஏதும் சொல்லவில்லை.

உலகம் சுழல்கிறதென்பதை அவர் ஒருவாறு உணர்ந்திருந்தார் என்றே தோன்றுகிறது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல்,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.

என்கிறார்.

சுழன்றும் எனின், உலகம் பல்வேறு நெறிகளிற் சென்றாலும் என்று பொருள்தருமென்பர். ஆனால் உலகம் சுழல்கிறது என்ற கருத்தும் அங்கு ஒளிந்துகொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

மேலும், உலகம் சுற்றுகிறது என்பதற்கு இன்னொரு குறளையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. 1025.

இங்கு சுற்றும் என்ற சொல்லுக்கு "விரும்பிப் போற்றிக் கொள்ளும்" என்பது பொருள். "சூழ்ந்து நிற்கும்" என்றும் கூறலாம். வேறு சொற்களால் உரை கூறியிருப்பினும், கருத்து இதுவாகவே இருக்கக் காணலாம்.

ஆனால், உலகம் சுற்றுகிறது என்று வள்ளுவர் உணர்ந்திருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு குறிப்பாகக் கூடுமே!
இதைத்தான் "சூட்சுமமாகக்" கூறுதல் என்பர் பிறர். 

சனி, 5 அக்டோபர், 2013

mIn, kiiZkaL meaning

from a dialogue with another writer:


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

இதில் மீன் என்பது எதைக் குறிக்கிறது? குளத்து மீனா? விண்மீனா?

The reference here is to the stars - viN mIIn,


Please note that the word mIIn here is plural, though in singular format. 

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.


இதற்கான பொருள் என்ன? இங்கே கீழ்மக்கள் என வள்ளுவர் குறிப்பிடுவது யாரை?

கீழ்கள் = கயவர்.

இந்தக் "கயவர்" என்ற சொல்லை மாற்றாகப் பயன்படுத்தி மீண்டும் குறளைப் படித்தால், தெளிவாகும் என்று எண்ணுகிறேன்.

ஆசாரம் = ஒழுக்கம், செல்லும் நெறி.

கணக்கியல் திட்டவட்டமுடையதுபோல (mathematical precision), "=" என்னும் குறியீடு போட்டுப் பொருள்சொல்வது, அறிஞர் சிலரையாவது வியப்பிலாழ்த்தக்கூடும். என்னைப் பொறுத்தவரை ஐயப்பாடொன்றுமின்றிக் கூறுகிறேன் என்று நீங்கள் கொண்டாலும், தவறொன்றுமில்லை.

"என்பது யாதெனின்" என்ற தொடருக்கு ஈடாக அதனைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதால், அவரெழுதியதைக் கணக்கியல் திட்டவட்டத்துடன் பொருள்விளக்கம் செய்யும் எவரும் இன்றில்லை என்பது உண்மைதான். ஆசிரியர்கள் ஓருவருக்கொருவர் மாறுபடுவதினின்று அது தெளிவாகிறது.

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

கயவர் யார், கீழ் யார், கீழ்மகன் யார் என்பது வள்ளுவரால் ஒரு வரையறவாக (definition) இவ்வதிகாரத்திற் கூறப்படவில்லை (அவர் காலத்தில் அது தெளிவாய் இருந்திருக்கும் ) எனினும், திருக்குறளையும் ஏனைத் தமிழ் நூல்களையும் நுணுகியாய்ந்து அதற்கு ஒருவாறு பொருள்கூறுவது இயலாத ஒன்றன்று. நீதி நூல்கள் மிகப்பல தமிழிலுண்டு ஆதலின், அதற்கு மிக்க இடமும் வசதியும் தமிழில் உண்டு என்பதுண்மை.

"=" என்பதற்குப் பதிலாக "≈" என்ற குறியீட்டை நீங்கள் போட்டு வாசித்தாலும், எனக்கு மறுப்பொன்று மில்லை.

இக்காலத்தவர் "கீழ்" என்பதைக் கீழ்ச்சாதி என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடும். . இதன்பொருள் அதுவன்று.

இன்னொரு கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும், கயவர் யார் என்று கேட்பீர்கள் என்று அல்லது, கீழ் என்பது எப்படிக் கயவரைக் குறிக்கும் என்று!   பொருள் தெளிவாய் உள்ளது . 

வியாழன், 3 அக்டோபர், 2013

அதிராகும் தீர்ப்புகளை,,,,,,,,,,,,


சிதறாத‌ சான்றுகளைக் கண்டு கேட்டார்!
அதிராகும் தீர்ப்புகளை ஒவ்வொன்  றாக‌,
ப‌தறாத தூண் ஒத்தார் பதறிப்  போக‌
கதறாத கட்சியினர் கதறி நிற்க,
உதறாமல் கால்கையை‍ ‍ உச்ச  ரித்தார்!
குதறாத வழியர்க்கோ அச்ச மென்ன?
குதர்க்கமிலார் என்றென்றும் எதற்கு மஞ்சார்,
இதற்குவர லாறிதுவாம் நேரம் தானே!

some explanation of the words used:

With ref to post #494:-

சிதறாத - referring here to evidence ( before a court,) which the judge considered to be reliable and not punctured with holes by the defence attorney in cross-examination etc.,

சான்றுகள் - evidence, oral as well as documentary and exhibits.

கண்டு - seen and examined.

கேட்டார்! - heard in hearing session.

அதிராகு - unprecedented.

பதறாத தூண் ஒத்தார் - refers here to the high stature of the accused person,
  கதறாத கட்சியினர் - the political party to which the accused belongs has been taken aback by the court decision. Previously they had never been in such position.

உதறாமல் கால்கையை*- with unshaken resolve to do justice. disregarding the stature of the accused person,
உச்ச ரித்தார்! - made decisions and passed judgment.


 குதறாத வழியர் -  குற்றங்கள் செய்து தன் வாழ்கையைக் குழப்படியில் மூழ்கடித்துவிடாத நேர்மையாளர்கள்.  குதறுதல்    messing  up,

இதற்குவர லாறிதுவாம் -    இது வரலாறு படைக்கும் நிகழ்வு என்பது குறிப்பு.
இதற்கு வேறு வரலாறு முன் இல்லை ஆகவே இதற்கு இது தான் வரலாற 

Note: There is some bug here which prevents proper editing.  This will be reviewed  when it is rectified.`



குதறாத ‍ குற்றங்கள் செய்து தன் வாழ்கையைக் குழப்படியில் மூழ்கடித்துவிடாத நேர்மையாளர்கள்.  குதறுதல்  

இதற்கு வரலாறிதுவாம்  இது வரலாறு படைக்கும் நிகழ்வு என்பது குறிப்பு.
இதற்கு வேறு வரலாறு முன் இல்லை ஆகவே இதற்கு இது தான் வரலாறு
ஆகும். இதுவேமுதல் என்பது.