திங்கள், 25 பிப்ரவரி, 2013

மாதமொன்று வெண்பா

மாதமொன்று வெண்பா மதிபெறப் பாடினும்
சாதனை யாகிடும் சின்னாளில் -- யாதொன்றும்
தீதில்லை தென்மொழியின் தேனைப் பருகிடத்
தோதில்லை என்பதோ பொய்.

கவிதையில் மட்டும் மாதமோர் வெண்பா என்று வருவதில் இழுக்கில்லை என்றாலும் இங்கு மாதமொன்று என்று பாடப்பெற்றுள்ளது. அந்த விதிவிலக்கு தேவையற்றதாகிவிடுககிறது.




ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

தத்தித் தொடரும்,,,,,,

  இது  ஒரு கவிக்கு உற்சாகமூட்ட எழுதியது. 28.11.11.


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்.

கண்ணுக்குள் காதலி


கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே 
பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.