ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

தத்தித் தொடரும்,,,,,,

  இது  ஒரு கவிக்கு உற்சாகமூட்ட எழுதியது. 28.11.11.


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்.

கண்ணுக்குள் காதலி


கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே 
பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.

போராட்டம்

கூடத்தில் தங்கிக் குளத்தில் குளித்துவிட்டு
மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
தாலாட்டும் ஆழிபுக் கார்.

புக்கார்  -  புகுந்தார் ;  ஆழி  - கடல் ,

போராட்டத்தில் ஈடுபடுவது துன்பம்  தருவது என்பது  கருத்து 
 புகை  என்றது கண்ணீர்ப்புகையை ,