ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கொங்கலர்தேர் தேனீ

கொங்கலர்தேர் தேனீ



முன்னிருப்ப தொருநச்சுச் செடியாம்
முனைந்துவரும் தேனீயும் அறிந்தே
எண்ணரிய நறுமணமே பரப்பும்
எழில்மலரைத் தான் நாடி அமரும்!

அஞ்சிறையின் கொங்கலர்தேர் தேனீ
அதுதன்னை ஏமாற்றும் வித்தை
தன் சிறைக்குள் தான்கிடக்கும் மாந்தன்
தாரணியில் கண்டறிந்த துண்டோ?





சிறை = சிறகு; அஞ்சிறை = அழகிய சிறகு.( The other meaning is "prison": "தன் சிறைக்குள் " )
கொங்கு= தேன்.
அலர் = மலர்.
தேர் = தேடிக் கண்டறியும்.
நச்சு = விடம்(விஷம்)

வியாழன், 27 ஜனவரி, 2011

சொல்ல நினைத்ததோ

சொல்ல நினைத்ததோ ஒன்றாம் எழுதுங்கால்
வல்ல பிறிதொன்று தோன்றியதே--வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்.

Describing a friend's situation.
Presented as though he speaks.


The friend said: வல்ல என்ற சொல் positive அல்லவா. நினைத்ததை விட வல்லதாக ஒன்று தோன்றினால் தத்தளிக்க வேண்டாமே.


Reply: நீங்கள் சொல்வது சரிதான்.....ஆனால், முயலுக்காக அம்பெய்-
த வேடன்முன், செடிமறைவிலிருந்து புலியொன்று தோன்றி-
னால், சமாளிக்க இயலாத அளவுக்குப் பேரிடர் ஆகித்
தத்தளிக்க மாட்டானோ? ஆகவே வேடனின் திறன் இங்கு
கேள்விக்குறி ஆகிவிடுகின்றதன்றோ....
வல்லனவெல்லாம் நல்லனவென்று .... எப்படி......?

"சாய்வில்லா வெண்பா"

சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்
றுங்கள் மனத்திலே உள்ளுணர்வு --- தங்கிற்றேல்
என்னதான் செய்திருப்பீர் சொல்லுவீர் இங்கெவரும்
அன்ன தறியும் படி.

"சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்"


chAyvu 1. slope, declivity, side of a hill; 2. bias, partiality; 3. defect, deficiency; 4. straitened circumstances; 5. going obliquely; turning aside, obliquity, divergency; 6. inclination, bent of mind; 7. death; 8. gradient


கவிதையில் வந்த "சாய்வு" என்ற சொல்லின் பொருள், மேலே தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளது.