திங்கள், 4 மே, 2009

poems

வெங்காவைப் பற்றி விளைத்தோம் ஒருபாடல்
வெங்கா விரைந்தார் பதிலோடு --- எம்கண்கள்
கண்ட ஒருநொடியில் கற்பனையில் இன்னொன்று
பண்டுபோல் ஊறிடும் பார்!

பணம்

தேடாமல் இருக்கவும் முடியவில்லை
தேடிக் கிடைத்தாலும் போதவில்லை
வாடாத பூவில்லை அதனைப்போல
வற்றாத நீரில்லை அதனைப்போல
தேடியே பெற்றதும் ஓடிப்போக
தேடுவார் முன்போலச் சென்றலைவார்!
மாடியில் வாழ்ந்தாலும் வேண்டும்சின்ன
மண்குடிசை வாழ்வார்க்கும் தேவைதானே!

பணம்

ஞாயிறு, 29 மார்ச், 2009

சொல்லமைவு ராஜ் முதலியவை

பிரகதீசுவரர் - பெருவுடையார்:
பெருகு > பிரக.
பெருகு+அது > பிரகது
இ(றை)வர் > இ(ஷ்)வர் > ஈஷ்வர் > ஈஸ்வர் > ஈசுவரர்.

தென்+கண்+அம் = தெற்கணம் > தெக்கணம் > தக்கணம்> தட்சிணம். ( தெற்கின்கண் உள்ள நிலம்).

அல்லது: தக்கு+அணம் = தக்கணம் ( தாழ்ந்து செல்லும் நிலம்). [ ஞா. தேவநேயப் பாவாணர்).

முகிழ்த்தல் = தோன்றுதல்.
மூள்தல் = தோன்றுதல்.

முகிழ் > மூர். முகிழ்த்து+இ = மூழ்த்தி > மூர்த்தி.

(தோன்றுவது; இறைத்தோற்றம்).

எனப்பல.

அரசு > ராசு > ராஜ.
ராசு > ராஷ் > ராஷ்டிரீய
ராஷ்ட் ர
மா ராஷ்ட் ர > மகாரஷ்ட் ரா
ராஷ்ட்ரபதி
ராசு > ராய். (ஐஸ்வர்யா ராய்).
ராஜ் - ரெக்ஸ். rex (L)
ராஜ் > ரெஜினா. regina (L)

ராஜ்் > ரோய் > ரோயல். royal