வெள்ளி, 10 அக்டோபர், 2008

கட்சியினர் கூறும் திட்டங்கள்..

ொல்வதெலாம் நடந்திட்டால் "சொர்க்க பூமி"
சுவைசேரும் நல்வாழ்வு மக்கட் கெல்லாம்!
கொள்கையிலே பல்வேறு பாட்டைக் காட்டும்
குறையற்ற சொல்லடுக்கில் நெஞ்சை யள்ளும்
ஒல்கரிய பெரும்புகழின் கட்சிக் காரர்
உலகுக்கும் நாட்டுக்கும் சாற்றும் திட்டம்,
மல்குகணீர் ஏழையரின் வாழ்வில் கொஞ்சம்
மாறுதலும் தருமாயின் ஆறு தல்காண்!்

பாக்கிஸ்தான் நிகழ்வு பற்றிய பாடல்

அரிய நிகழ்வு.

மனைவியை இழந்தோர் மண்ணில்
மாபெரும் துயரம் பூண்டு
நினைவினைத் தவிர்க்கொ ணாது
நிலைகெட, மாண்டு போவர்;
அனைவரும் வியக்கும் வண்ணம்
அரசினைக் கைப்பற் றிப்பின்
இணையறு தலைவ னாதல்
இது நிகழ் வரிதே சொல்வேன்!

[ இது பாக்கிஸ்தான் இன்றைய அரசுத்தலைவர் சர்தாரி குறித்த பாடல் ]

மதுவிலக்கு

மதுவிலக்கு

மண்ணுலகின் நாடுகளில்
மது விற்பனை இலா நாடு
எண்ணிடலாம் விரல்விட்டே!
இதுதானே உள்ள நிலை.

விற்பனைக்கு உளதெனினும்
வேண்டிமது அருந்திடுவோர்
சிற்சிலரே பிற இனத்தில்!
செந்தமிழ் நாட்டினிலே :

மதுவினால் உருக்குலைந்தோர்
மா நிதியம் இழந்தவர்கள்,
முதுமைவரை மனைவியரை
மொத்திமொத்தி எடுத்தவர்கள்

பல்லோரோ ஆகையினால்
பயனில்லா மதுவொழிக்க
உள்ளகட்சிக் காரர்கள்,
ஓங்கிடவே குரல்கொடுத்தார்?

தமிழரிடை மட்டுமிந்த
தலைதடு மாற்றமென்ன?
எமக்கது வேண்டாமென்று
ஏன் ஒதுங்க இயலவில்லை!

பிறர்போல் குடிக்காமல்,
ஏனிருக்க முடியவில்லை?
பிறர்போல் அளவருந்த
ஏனிவர்க்கு முடியவில்லை?

அரசியல் பேசுவோனும்
அரசும் காவலரும்
பிறரும் உரைக்காமல்
பிழைக்க அறியாதவனோ?


--------------------