புதன், 8 அக்டோபர், 2008

எல்லாளன் பின்னோரே

எல்லாளன் பின்னோரே ஈழத் தமிழர்
இதுவேநல் வரலாறென் றுள்ள பொழுதில்,
வல்லாளர் சட்டத்தை ஞால முழுதும்
வழங்கியவர் வழுவாதோர் என்றே புகழும்
சொல்லாடும் பிரித்தானி ஆண்டார் குழுவும்
சோர்ந்துற்ற அறிவாலோ ஈழ நிலத்தை,
அல்லாடும் சிங்களவர் கையில் கொடுத்தே
அன்முறைதான் செய்ததற்கு மாற்றும் உளதோ?

தமிழர்கள் எண்ணிக்கை எடுத்தல்.

கொழும்பில் தமிழர்கள் எண்ணிக்கை கொண்டால்
அழும்புசெய் வோரை அடக்கிடலாம் --- விழும்புலிகள்

சேர்ந்தியங்கும் செய்கைபச் சேசொன்னான் இவ்விதம்!்
ஊர்ந்துவரும் இன்னல் உருக்குலையும்--- தேர்ந்தமொழி

இந்தவொரு கட்டளை என்றுகை தட்டினர்!
தந்தேய மக்கட்கோ இந்தவிடர்? --- சொந்தமற?

இந்த இடர்களை ஏற்படுத்தல் கூடாதென்(று)
எந்தப் பெருநாட்டின் தோழரும் --- முந்திவந்து

சொல்லவே இல்லையோ! சோர்வுறுத்தும் சோகமே!

அல்லதைச் செய்யும் அகத்தியமும் -- இல்லையன்றோ
நல்லதைச் செய்தந்த நாட்டை நடத்தினால்?

மெல்லவே மேவும்நாள் எந்நாளோ!---நல்லறிவும?்
செல்லக் கிளி நீயே சொல். ்
(13 lines).


குறிப்புகள்:

அகத்தியம் = அவசியம்.

இது இந்தச் செய்தியைப் பற்றிய பாடல்: Census of Tamils in Colombo.

வியாழன், 2 அக்டோபர், 2008

A bird in agony: நண்பரை இழந்த துன்பம்...

நல்ல கனிமரமே - அதில்
நானொரு சிறுபறவை.
சொல்ல வொணாஇன்பம் - ஒரு
சோர்வின்றி இருக்கையிலே,

அந்தப் பெருமரமும் -- அதன்
அடியொடு தொலைந்திடவே,
நொந்து விழி நீரே -- உகுத்து,
வேதனைக் கடல்வீழ்ந்தேன்.

சுற்றி இருந்தவையாம் -- நல்ல
சுறுசுறுப் புடன்பறக்கும்,
உற்றஇன் நட்பினரை -- நான்
முற்ற இழந்துழந்தேன்.


என்றவற்றைக் காண்பேன்? -- நான்
எங்கு பறந்துசெல்வேன்?
வென்ற மனிதர்களும் -- எனை
விரட்டி அடிக்குமுன்னே!