வெள்ளி, 14 மார்ச், 2025

நிமிடம் என்ற சொல்.

 நிமிடம் என்ற சொல்லைச் சற்று விளக்கமாக்குவோம்.

இமை என்பது நிமை என்று திரியும் என்பது தமிழாசிரியரிடம் கருத்தாக இருந்துள்ளது.  இது பிறழ்பிரிப்பாலும்  அல்லது திரிபாலும் நிகழலாம்.  பிறழ்பிரிப்பானால் இதை இவ்வாறு காட்டுக:

கண்+ இமை > கண்ணிமை >  நிமை .    கண் என்ற ஈரெழுத்து மறைவு. இதை முதற்குறை என்னாமல் ஒருவகைத் தொகுப்பு என்னலாம். "ணி" முதலெழுத்தாகாதபடியால்  "நி"  வந்தது.

இமை இடுதல் என்பது நிமை இடுதல் என்றாகும்.

நிமை +  இடு +  அம் >  நிமிடம். 

நிமை என்ற சொல் தன் ஐகார இறுதியை இழந்து, நிம் என்று நின்று "இடு + அம்" என்றவை புனைவுற்றது.

ஏனைக் கருத்துகளுக்கு வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_9.html.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்.

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.



திங்கள், 10 மார்ச், 2025

குறைபட்ட இந்தப புவி வாழ்வு

 இரவொன்று வாராமல் பகலே வந்த

இன்பநாளைத் தருகின்ற வலிமை ஒன்றைத்,

தரவேண்டும் என்றெண்ணும்  பகலோன் தானும்.

தகவளந்து   தருதற்கோ இயல்வ தில்லை!

பரவோங்கும் வான்போற்றும் புவியின் மீதும்

பரந்துவாழும்  மக்களிடை  நிலவும் சூழல்,

குறைவாழ்ந்த திலையென்று  நினைத்திட்  டாலும்

குறைவிகுந்து தலைசாய்ந்தார் பலரே ஆமே.   

\

உலகில் சில நடப்புகள் நாம் நினைத்தபடி நடப்பதில்லை.  அதற்காக உடனே உயிரை மாய்த்துக்கொள்வது பரிதாபத்துக்குரியது ஆகும்.  இன்று காலையில் வந்த மணிலாச் செய்தியில் 24 வயதுடைய ஒரு தென் கொரிய சிறந்த நடிகை இறந்துவிட்டாள் என்று தெரிகிறது. ஏதோ ஒன்று நிறைவேறாமல் போனதாக இருக்கலாம்.  பாவம் இவள்.  இதுபோன்று உயிரை மாய்த்துக்கொண்டோர் பலர். இரங்கத் தக்க இதுபோல்வோருக்கு இப்பாடல் எழுதப்பட்டது. 


பொருள்:

தகவளந்து -  தகுதியை அளந்து அறிந்து 

பரவு ஓங்கும்  -  மிகுந்த பரப்புடைய

குறைவு இகுந்து - ஒரு குறைவினால் நிலை அழிந்து 

குறைவு ஆழ்ந்த -  குறைகள் பலவுடைய

இலை என்று - இல்லை என்று

தலைசாய்ந்தார் -  தற்கொலைக்கு ஆட்பட்டார்  ( இடக்கரடக்கல்)

You may share this post with your friends. though any social media.
Copyright is waived. 



மகமும் மிருகமும்


மக என்பது அம், அ, கு, அ என்ற எழுத்துக்களால் அறியப்படுவது ஆகும். இவை, அம் - அமைவும் , அ - அதில் தோன்றுதல், கு - சேர்க்கை, அ - சேய்மை விரிவு, இவற்றைக் குறுக்க, மக என்பது கிட்டுகிறது. கு அ என்ற கடை இரண்டும் க ஆயின.

மக என்ற  மகவு, மகன்,  மகள், மக்கள்  எனற் றொடக்கத்து  பல சொற்களிலும் மகரமே முன்னிற்க,  ஏன் அம் என்பது முதலில் நிற்கிறது என்று சொல்லுகிறோம் என்றால்,  அம் + அ  என்பது  ம + அ  எனில் மக என்ற சொல்லாகும்.  அம் அ கு என்பது ம அ  கு என்றாகி  மக என்று சொல்கிறோம்!  அமைப்பில் அங்கு சேர்ந்தது என்பது பொருள். இதுவே பிறப்பு ஆகும். இது ஒரு Reverse Formation through which certain words were formed. இதைப் பல ஆண்டுகட்கு முன்னே எழுதியிருக்கிறோம்.  ஆனால் இடைக்குறை முதலியவற்றுக்கு விரிவு கொடுத்ததுபோல் இந்தச் சொல்லமைப்பு முறைக்கு அவ்வளவு விரிவு கொடுக்கவில்லை. காரணம் ஒன்றுமில்லை, இடைக்குறைகள் அதிகம் இருந்தன என்பது தவிர.    தொகுப்பும் இங்கு இடைக்குறையில் அடக்கியே
சொல்லப்படுகிறது. அமக என்று அமைத்து அது சொல்லுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது கண்டு,  அமக என்பதை மக என்று நாளடைவில் வழங்கினர் என்க.  இவ்வாறு செய்வது முதற்குறை என்பதால், இதில் இலக்கணத்தில்கூட இடமிருக்கிறது. நீங்கள் ஒரு கணக்கு எடுங்கள். மூன்று  குறில்கள், உயிராயினும் மெயயாயினும் தொடர்ந்து வரும்படியாக எத்தனை சொற்கள் உள்ளன என்று பாருங்களேன். இரண்டு உயிர், உயிர்மெய் வர அடுத்து ஒற்று வந்த சொற்கள் மிகுதியாக இருக்கவேண்டும்.  யாம் கணக்கெடுக்கவில்லை. ஓர் உய்த்துணர்வாகச் சொல்கிறேன்.

மகன் என்ற சொல்லைப் படைக்கும் முனைப்பு,   அமைவு  குறிக்கும் அம் என்ற தொடக்கத்திலிருந்து தமிழன் அமைத்தான் என்றாலும்,  வீண் நீட்டத்தை விரும்பாமல் ஒரு முறையைக் கையாண்டு சொல்லைக் குறுக்கினான்.  அதனால்  அதனால் சொல்  அமகன் என்று அமையாமல் மகன் என்றே சுருங்கி அமைந்தது.  அமைகன் என்றும் அவன் அமைக்கவில்லை.
 ஒவ்வொரு சொல்லையும் ஆய்ந்து ஒலிமுறை அமைப்பைப் புரிந்துகொள்ளூங்கள்.

சமஸ்கிருதத்தில் இன்னும் முன்னேற்றமாக,  ம, இர், உ, கு  அம் என்று அமைத்து மகம் என்பதை ம்ரு கம்  >  ம்ருகம் என்று அமைத்துக்கொண்டனர்.

நனகு சிந்த்தித்து  எனக்கு எழுதுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

You may share this post with your friends. though any social media.
Copyright is waived.