வியாழன், 19 செப்டம்பர், 2024

விலைகள் விழ என்ன மார்க்கம்?

 கோடியிலே இருபத்தி ரெண்டுகோடி  யின்மிக்கார்

கோவிட்டின் வேலையின்றித் தவித்த  மக்கள்,

ஓடியோடித் தேடினாலும் வேலையொன்றும் எங்குமில்லை

உனைவேண்டாப் பூமியிதோ என்ன துன்பம்! 

கூடிநண்பர் தம்மோடு களித்திருப்போம் எனச்சென்றால்

நாடுமிடம் எங்கெனினும் நோயின் தொல்லை,

மாடுகட்கு வேலையுண்டு, மனிதனுக்கோ வேலையில்லை

மந்தநிலை பலருக்கும் ; ஓய்ந்த பூமி!


அந்தநிலை இந்தநேரம் இல்லைஎன்ற  போதினிலும்

அதன் தாக்கம் அங்குமிங்கும் இன்னும் உண்டு,

 வெந்தஉண   வின்விலைகள் ஏறியவை இறங்கிடுமோ

வீழ்ந்துமுன்னர் உலகமது போலும்  வருமோ?

எந்தஒரு காரணமோ சிந்திக்கும் போதினிலே

இருக்கிறவை அங்குமிங்கும் கிறுக்குப் போர்கள்!

சிந்தனையில் ஒன்றாகிச்  சேர்ந்துவாழ நாம்மனிதர்

சீர்பெறுவோம் என்றெண்ணில் துன்பம் ஏது?


திரம்பின்கா  லத்தில்போர் இல்லைஇப்  போது 

வரம்பிகந்து   செல்கின்  றது! 


பொருள்:

உலகில் 2 கோடிக்கு வேலை இல்லை என் கின்றது ஒரு கணக்கு.

 வரம்பிகந்து -  நிறுத்தும் எல்லை கடந்து

இதில் எளிய சொற்களையே பயன்படுத்தியுள்ளோம்.


அறிக மகிழக

மெய்ப்பு பின்னர்

Edited 22092024 0520

மோடியின் உதவிகள் - வாழ்த்து

 தேடியே   போய்உதவும் சீர்த்தகவர் மோடிவிசு

வாமித்தி ரர்வாழ்க நீடு.

இது மோடிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கூறும் ஒரு குறள்.

இதை இப்படிப் பிரித்து எழுதினாலும் யாப்பியல் பிழைபடாது.

தேடியே    போய்உதவும் சீர்த்தகவர் மோடிவிசு

வாமித் திரர்வாழ்க நீடு.

-----------------------------------------------------------------------------------------------------------------------

தேடிப்போய் வேண்டுவோருக்கு உதவுபவர் மோடி. அவர் வாழ்க என்பது இக்குறள்.

சீர்த்தகவர் = சீரான தகைமை அல்லது நற்பண்புகள் உள்ளவர்.

விசுவம் என்ற சமஸ்கிருதச் சொல்லும் விசும்பு என்ற தமிழ்ச்சொல்லும் ஒரே அடியில் தோன்றிய சொற்கள். இதை  இனி   ஓர் இடுகையி விளக்குவோம்.



பின்னுரை:

மோடி அவர்கள் தம் நீண்ட அரசியல் வாழ்வில் பலருக்கு உதவியாக இருந்து பல நன்மைகளைச் செய்திருக்கிறார்.  ஆனால் அரசியல் கட்சிகள் தேர்தலில் அவரை வெல்லும் பொருட்டுச் சிற்றூர் மக்களிடம் பல பொய்களைச் சொல்லியாவது அவரைத் தோற்கடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலைசெய்து வருவதுபோல் தெரிகிறது.  இந்திய  அரசியலில் வெளியார் தலையீடும் காணமுடிகிறது.

ஆங்கில மொழியறிவு இல்லாதவர்களை ஏமாற்றுவது அரசியலில் எளிதாக உள்ளது.  தமிழிலும் உண்மை கூறும் வெளியீடுகள் இல்லாமல் இல்லை.  ஆனால் நகரங்களிலிருந்து தொலைவில் உள்ளவர்கள் தமக்குக் கிடைக்கும் சில ஏடுகளையே அல்லது வாய்மொழித் தகவல்களையே நம்பி இருக்கிறார்கள். அவை பல சரியானவற்றை மக்களுக்குச் சொல்வதில்லை. இது காரணமாக இருக்கலாம்.

மோடிஜியின் முன்னோர்  யாரும் அரசியலில் இருந்தவர்கள் அல்லர். அவர் எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர்.  நேர்மை இல்லையென்றால் இந்த அளவுக்கு வந்திருக்க இயலாது.

மோடிஜி அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். வாய்மையே வெல்லும்.

அவர் விசுவாமித்திர முனிவரின் மறுவரவு.

நன்மைஒன்றே மோடிக்குண்   டாகத் தொழுவோமே

உண்மைஒன்றே செல்கமக்கள் பால்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

"காலந்தருவது" இலத்தீன் மொழியில்.

தமிழ் நாட்டிலிருந்து சில தமிழ் வித்துவர்கள் உரோமுக்குச் சென்றிருந்தனர். அவர்களை அங்கிருந்த பேரரசின் கல்விமான்கள் வரவழைத்திருந்தனர்.  இலத்தீனுக்குச் செழிப்பூட்டும் பணி இத் தமிழ்ப் புலவர்களின் கடமையாகவும் உரோமப் பேரரசின் எதிர்பார்ப்பாகவு மிருந்தது. இது உரோமப் பரப்பாட்சிக் காலத்தில் நடைபெற்றது.

அக்காலங்களில் அங்கு பயன்படுத்திய  கணக்குப் புத்தகங்களுக்கு காலக்கணக்குடன் கூடிய தொகைவரவு எழுதுவதற்கு ஒரு சொல்லை மேற்கொண்டனர்.

அவர்கள் பயன்படுத்திய ஒரு தமிழ்த்தொடர்.

காலம் தருவது என்பது.

காலம்தாரியம்  

காலம் என்பது காலன் என்றும் வரும்.  அறம்-  அறன்.  மறம் - மறன். திறம் - திறன்.


calendarium

காலன் தா -  calendae

தா என்பதிலிருந்த தாராய் என்ற சொல்லும் அமையும்.  தாராயோ.

அருள்தாருமே தேவா எனக் காண்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்,