சனி, 14 அக்டோபர், 2017

சில நாடுகளில் தீபாவளி விடுமுறை நிலைமை



தீபாவளியைக் கைவிட்ட  நகராண்மைத் தலைவர் (மேயர்)

நியூ யார்க் நகராண்மைத் தலைவர் (மேயர்)  தீபாவளியையும் சந்திரப் புத்தாண்டையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க மறுத்துவிட்ட்தாகத் தெரிகிறது.

பொரறுமையுடன் தொடர்ந்து முயன்றால் அத்தலைவர் இவற்றையும் விடுமுறைகளாக அறிவிக்க இணங்குவார்  என்று நம்பலாம்.

நியூ யார்க வட்டார மக்கள்  தொடர்ந்து தீபாவளிக்காக முயற்சி மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

தகவல் இங்கே::


 
2016ல் தீபாவளி பாகிஸ்தானில் விருப்ப விடுமுறையாக இருந்தது.  இவ்வாண்டு  அது விலக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் இந்துக்கள் சொந்த விடுப்பு  எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிகிறது.


வெள்ளி, 13 அக்டோபர், 2017

தவம் தியானம் நிட்டை ( நிஷ்டை).

இக்காலத்தில் யாரும் தவம் செய்துகொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுதலில்லை.  தியானம் செய்வதாக நாம் அறிந்துள்ளோம். மனத்தை ஒரு நிலைப்படுத்தி  ஓரிடத்தில் இருப்பதை நாம் தியானம் எங்கிறோம்.

ஒரு விளக்கையோ  அல்லது தீபத்தையோ கொளுத்தி முன் வைத்து அதை நோக்கியவாறு மனம் நிலை நிறுத்துவதென்பது ஒரு வகையாகும். ஒரு கண்ணாடிமுன் அமர்ந்து தியானம் செய்தோரும் உண்டு.

விளக்கு மற்றும் கண்ணாடி முதலான  உதவிப்பொருட்கள் இல்லாத முன் காலத்தில் தீயை உண்டாக்கி முன் அமர்ந்தனர் என்று தெரிகிறது. தீக்காய்ந்துகொண்டு தியானத்தில் ஈடுபடும்போது  “அகலாது  அணுகாது” அமர்ந்து ஈடுபடவேண்டியது செய்வோனின் கடமை ஆகும்.
“தியானம்” என்னும் சொல்லில் தீ + ஆன+ அம் என முன் இரு சொற்களும் இறுதி விகுதி (மிகுதி)யும்  உள்ளன.  இது உதவுபொருளைக்கொண்டு, முதற்செயலை விளம்பிய நிலையைக் காட்டுகிறது.

தவமென்பது,  அழித்தல், கெடுத்தல் என்று பொருள்தரும் சொல்லினின்று வருகிறது.

தபுதல் - கெடுதல், கெடுத்தல், அழித்தல். மாற்றுதல்.

தொடர்ந்து வரும் பிறவியையும்,  வினைகளையும் கெடுத்து நிறுத்தவேண்டும்.  தொடராமல் அவற்றுக்குக் “கெடு” வைக்கவேண்டும். கெடுத்தல் என்பது அது தொடரும் காலத்தை முடித்தல்.

தபுதல் என்பது ஒரு அருஞ்சொல்லாக இல்லை?

தப்புதல் என்பதில் ஒரு ப் எழுத்தை எடுத்துவிட்டால் அதுவே தபுதல். தப்புதல் என்பதும் விடுபடுதல் என்ற பொருளை உடையது.  அதிலிருந்து தோன்றிய தபுதல் என்பதும் அந்த எல்லைக்குள்தான் நிற்கின்றது.

தபுதாரநிலை என்றால் தாரமிழந்த நிலை. இது தொல்காப்பியச் சொல்.

 தபு + அம் = தபம், ப -  வ திரிபாகி தவம் ஆகும்.

தபு+ சு =  தபசு.  (சு விகுதி; )  சு விகுதி பெற்ற சொற்கள் பல.  கா+சு = காசு.  (காக்கப்படுவதாகிய பணம்).

நிட்டையில் அமர்தல் என்பது நெடு நேரம் அமர்ந்து மனம் நிலை நிறுத்துதல்.

நீடு + ஐ =  நிட்டை. இது பின் நிஷ்டை என்று மாறிற்று. முதனிலை குறுகி விகுதிபெற்ற சொல்.

சா+வு+அம் = சவம் போல.

தொழுதல் என்பதையும் விளக்குவோம். பின்.



சிகை பூமி பூவுலகு ... சொல் அமைந்த விதம்


இகுத்தல் என்பது குழைத்தல், மறித்தல் என்றும், இகுப்பம் என்பது திரட்சி  என்றும் பொருள்படுவன‌.

சிகை என்பது ஒன்றாகக் குழைத்து வேண்டியாங்கு மறித்தும் திரட்டியும்
கட்டப்படுவது.

இகு> இகை;
இகை > சிகை.

இது எளிதான அமைப்புச்சொல்.

அகரவருக்கச் சொற்கள் சகர வருக்கமாகும்; அதாவது அ>, >சா, > சி என்று இப்படியே நெடுகிலும் வரும்.

குழைத்து, அதாவது திரட்டிக் கட்டப்படுவதால் தலைமுடிக்கு குழல்
என்றும் பெயர். கூட்டிக் கட்டப்படுவதால் கூ > கூ + தல் > கூந்தல்
என்றும் பெயர்.

இகுத்தல் என்பது குழைத்துத் திரட்டுதல் ஆதலால்,

இகு> இகு+ = இகை > சிகை ஆனது.  இகு> சிகு > சிகை எனினும் ஆம்.

இகு என்பது சுட்டடிச் சொல்.  = இவ்விடம்;  கு = அடைவு அல்லது
சேர்தல் குறிக்கும் மிக்கப் பழங்காலச் சொற்கள். இன்னும் நம் மொழியில் உள்ளன‌. இங்கு தலையில் வளர்வதை இங்கேயே குழைத்துக் கட்டுதலைக் குறிக்கும். எனவே சிகை அழகிய கருத்தமைதி கொண்ட சொல். +கு என்பதிலிருந்து திரிந்து அமைந்தது.  கு என்பதும் அவனுக்கு, சென்னைக்கு என்று இன்றளவும் வழங்கி சேர்விடம் உணர்த்துகிறது.

தமிழை நன்குணர ஓர் ஆயுள் போதாது. இங்கே(தலையில் வளர்வதை)
இவ்விடமே குழைத்துத் திரட்டிவைக்கும் செயல் இகு> சிகு> சிகை.
இங்கிருப்பது அங்கு செல்லுமானால் இ+அம்+கு = இயங்கு என்பது
இதற்கு மாறுதலாக அமையும் ஒரு கருத்து.  இவையெல்லாம் திட்ட்வட்டமான அமைப்புகள்.

அறிந்து மகிழுங்கள்.
--------------------------------

பூத்தல் என்பது, பலரும் அறிந்த பொருள்,  பூ மலர்தல் ஆகும்.

ஆனால் இச்சொல்லுக்கு வேறு பொருள்களும் உள்ளன.

தோன்றுதல், பயன் தருதல், அழகாகுதல், பருவம் எய்துதல் என்பன.

இவற்றுள் தோன்றுதல், முன்மைவாய்ந்த பொருளாகும்,

புவி அல்லது இவ்வுலகம் தோன்றியது  என்பதே பலரின் எண்ணமாகும்.
தமிழரின் எண்ணமும் அஃதே ஆகும்.

மண் தோன்றி... என்பதைக் கேட்கையில், இம்மண் தோன்றியதென்பதே
நம் அறிவு நமக்குச் சொல்வது ஆகும் ‍  :  தோன்றிய ஞான்று நாம்
இல்லை எனினும்.

பூ > பூவுலகு.  ( பூ+ உலகு).
பூ >  பூமி.    ( இங்கு "ம்" இடைநிலை).
(இவ்விடைநிலை உம் என்பதன் தலைக்குறை.)
பூ > பூவனம் > புவனம்.
( பூ ‍= தோன்றிய; வனம் = அழகுள்ளது ).
( வல்>வன்; வன் > வனை> வனைதல்; வன்>  வனம் ).
வனப்பு = அழகு. வல்> வல்லி ‍: பெண்,அழகி.
இவ்வோர்பும் ஏற்புடைத்தே:‍
பூவு> பூவு+அன்> அம் > பூவனம்; . புவனம்.
நெடில் குறுகுதல் பல சொற்களில் வரும்.

இவற்றையும் ஆய்ந்து தெளிக.


---------------------

இது  பின் மறுபார்வை  செய்யப்படும்