செவ்வாய், 26 மார்ச், 2024

சகரமெய் இரண்டாமெழுத்துத் திரிதலும் பிறவும் : (ஆச், நாச், என)

சொற்படைப்பு:- சோ என்னும் சொல்.

 மொழிகள்,  எழுத்துத் திரிபுகளால் புதிய சொற்களைப் படைத்துக்கொள்கின்றன.  இந்தத் திரிபுகளை மொழியினுள் உள்ளிருத்திய மனித உறுப்பு வாய்,  வாயினுள் நாக்கு,  பல், உதடு, வெளிப்படும் காற்று, ஒலி எனப்பல உள்ளன. மூக்கும் உதவுகிறது.   தொண்டையும் உதவுகிறது. நெஞ்சுப் பாகமும் உதவுவதாகச் சொல்வர்.  முயற்சியும் முயற்சியின்மையுமே உருவேதும் அற்றவை.  ஒரு சொல்லைப் பிறப்பிப்பதற்கு இத்துணை உறுப்புகளா என்று வியப்பாக இருப்பதில்லை.

சோம்பல் இல்லாமல்  எப்போதும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மனிதன் உலகிலே இல்லை என்னலாம்.  சோ என்ற தொடக்க எழுத்தைப் பயன்படுத்திய முதல் மனிதன் யாரென்று தெரியவில்லை.  அவனைப் பாராட்டலாம்.  சோ என்ற ஒலியை அவன் முயற்சிக் குறைவுக்குப் பயன்படுத்தினான்.  அதைக் கேட்ட பான்மையினரும்  ( பகு> பாகு > பாக்கு>  பாக்கு + இயம் > பாக்கியம் > பாக்கியம் உடையாரும்) அதை முயற்சிக்குறைவினைக் குறிப்பதாக உணர்ந்துகொண்டனர்.

பொருளுணர்தல்:  அடிச்சொல்லும் அதன் வளர்ச்சியும்

  ஒருவனே  சோ என்று பலுக்க, இன்னொருவன் ஒன்றும் உணர்ந்துகொள்ளவில்லை என்றால்,  அவ்வொலியினால் ஒன்றும் பயனில்லை ஆகிறது. உணரும்போதுதான்  சொல்லுக்குப் பொருள் உண்டாகிறது.   மொழி என்பது இத்தகு பல்லாயிரம் ஒலிகளின் கூட்டமைப்பு. அது எந்த வட்டாரத்தில் பெரிதும் ஒலிப்புறுகிறது என்பதை வைத்து,  ஒரு மொழி ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறோம். வட்டார எல்லைகளில் உள்ளவர்கள் சொற்களைப் பலுக்கும் நெறிகளை ஆய்ந்தால்  இரு நிலப்பகுதிகளில் நிலவும் ஒலியமைப்புகளின் கலவையைக் காண்கிறோம்.  வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என்னும் திசைகளைக் கொண்டு  சொல் வடக்கத்திப் பாசையா,  தெற்கத்திப் பாசையா என்றெல்லாம் அடையாளம் செய்துகொள்கிறோம். இவைதவிர  இன்னும் மொழிச்சொற்களுக்குப் பல அடையாளங்கள் உள்ளன.

இத்தகைய கலவைகளை யாரும் திணிப்பதென்பது  ஒரு மிகக் குறைந்த நிகழ்வே. மக்கள் இயல்பாகவே திணிப்பின்றிச் சொற்களை வேண்டியபடி கையாண்டு பேசக் கூடியவர்கள்.  ஒன்றை முயற்சி அதிகமின்றி முடிக்கவேண்டும் என்பதே அவர்கள் சிந்திக்காமல் மேற்கொள்வதாகும். 

சோம்பல் என்பது  சோ என்ற அடியின் தொடக்கத்தைக் கொண்டு எழுந்தது.  சோ என்பதற்குத் தொடக்கத்தில் பொரு ளிருந்திருந்தாலும்,  இப்போது அதன் பொருள் தெளிவாக இல்லை.  அதாவது சோவென்பது செவிப்பட்டவுடன் என்ன சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை. வேறு பல மொழிகளில் பொருள் இருக்கலாம்,  எடுத்துக்காட்டாக,  ஆங்கிலத்தில் சோ என்றால்  அப்படி என்று பொருள்.  தமிழில் அது ஓர் அடிச்சொல், ஓர் எழுத்து என்ற அளவிலேதான் வருகிறது. சோர் என்று இன்னும் ஓர் ஒலியை இணைத்தால், பொருள் வந்துவிடுகிறது. சோர்தல் என்று பெயராக்கம் செய்து,  ஒரு முயற்சிக்குறைவினைக் குறித்தமையை உணர்ந்துகொள்கிறோம். சோம்பு என்பது ஒரு விதை குறிப்பதாகவும்,  ஓர் ஏவல்வினையாகவும் அறிந்துகொள்கிறோம். அல் என்று இன்னொரு விகுதியைச் சேர்த்து,  ஒரு முயற்சிக்குறையைக் குறிப்பதாக அறிகிறோம்.  இதையே ஒரு மலாய்க்காரனிடம் சொன்னால் அவன் என்ன என்று கேட்கிறான்.  இச்சொல் அவன் பேச்சில் இல்லை.  பேசு> பாசு> பாசை என்று,  அவன் "பாசை"யில் இல்லையாகின்றது.மொழியின்றி இயங்க முடிவதில்லை.

சோ என்ற அடிச்சொல்லின் பொருட்கள்: 

1  உடற்சோர்வைத் தருவது:  ( இரத்த நோய்.)

2  மாறுபடுவது.  இயல்பாய் இல்லாமை  (சோங்கண்)

3 நினைவைப் பாதிப்பது    (மறதி ) ( சோங்கு    )

4 மனிதரை நீங்கியவை : (  மரங்கள்  மற்ற நிலைத்திண)

5 மாறுதலான வெட்டுகள்

6 இயற்கையான வடிவில்  இல்லாமை  (சோறு)

7 நீர் இல்லாமை

8 சரிவு   அல்லது சாய்வு

9 தொழிலால் மதிப்பு இல்லாதவன்

10 மாயமந்திரங்களில் ஈடுபடுதல்

இவ்வாறு நிலையில் மாறுபாடு குறிக்கும் சொற்களை  அடிச்சொல்லிலிருந்து உண்டாக்கிக்கொள்ள இந்த  அடிச்சொல் ( சோ) பயன்படுகிறது.

சோம்பல் என்ற புதுச்சொல் உண்டாதல்

சோ என்ற ஓரெழுத்துச் சொல்லிலிருந்து  சோம்பல் என்று இன்னொரு சொல் அமைந்தது நம் நற்பேறு என்றே   கருதவேண்டும். இப்போது மொழி உள்ள நிலையில்  சோம் என்று ஒரு பகுதியையும் பல் என்றோரு பகுதியையும் கண்டு இது ஒரு கூட்டுச்சொல் என்னலாம்.  இதில் சோம் என்பது  சோரும் என்பதன் இடைக்குறையாகவும்  பல் என்பது வாயிலுள்ள பல் என்றும் விளக்கி  ஆடிக்கொண்டிருக்கும் ஒரு பல் என்றும் கூறலாம். ஒரு சொல்லில் என்ன பொருள் காண்பது என்பது தனிக்கலையாக இருக்கிறது.  சோரும் என்பதை சோர்ம் என்று குறுக்கிக் கவிதைக்குள் ஒரு சீராக்கிக்கொள்ளலாம்.  அப்போதும் பொருளறியத் தக்கதாக இருக்கவேண்டும்.  தமிழ் பயன்படுத்துவோர் யாருமே அறியமுடியாத பொருளாயின்  கருத்தறிவிப்பாகிய மொழியின் பயன் இலதாயிற்று என்று கொள்ளப்பட்டு அது வழுவாகிவிடும்.

திரிபுகள்

பல சொற்கள் ஆக்கப்பட்ட நிலையினின்று மாறிவிடுகின்றன.  அவற்றைத் திரிபு என்கிறோம்.   திரியாத சொல் இயற்சொல். திரிந்துவிட்டது  திரிசொல்.  சொல் விகாரப்பட்டது என்றும் சொல்வர்.  மிகுந்துவிட்டால் மிகாரம்>  விகாரம் என்று இதுவும் ஒரு திரிசொல்லே ஆனது. மிஞ்சு > விஞ்சு என்ற  திரிபுவிதியின்படி இது மெய்ப்பிக்கப்படுகிறது. முன் இல்லாத எழுத்தொன்று தோன்றியிருந்தால் அது "தோன்றல்"   எனப்படும்.  இங்கு மி என்பது வி  ஆகிவிட்டதால்  இது திரிதல் எனப்படும்,  ஒன்றோ பலவோ ஆன எழுத்துக்கள் இல்லாமற் போய்விட்டால் அது "கெடுதல்"  என்பர்.  

நாற்சேர் என்ற சொல்  நால் + சேர் என்ற இருசொற்கள் அமைந்த   ஆக்கம்.  இது நாச்சேர் என்று மாறிவிடுகிறது.  ஆசு   என்பது  ஆசு+ ஆர் + இ என்று இன்னும் இரு பகவுகளுடன் இணைந்து  ஆச்சாரி என்று வருங்கால்,  ஆசாரி என்றும் வரும்;  ஆச்சாரி என்றும் வரும்,  ஆசு என்பது புணர்ச்சியில் ஆச்சு என்று வந்தால் இது இரட்டிப்பு. இங்கு, சகர ஒற்றுக்கள் இரட்டித்தன.  ஆ+ ச் + ச்+ ஆர் + இ  என்று பிரித்தால்  இரண்டு ச் என்ற மெய்யொலிகள் சொல்லில் வந்துவிட்டன. ஒன்று முன்னரே சொல்லில் இருந்தது.  இன்னொன்று பின்னர் ஏற்பட்டது.  ஆதலின் மெய்யெழுத்து இரட்டித்தது. இது சொல் எவ்வாறு நம் காதைச் சென்று சேர்கையில் ஒலித்தது என்பது பற்றிய வரணனை. வீட்டின் முற்றத்தை நாற்புறமும் வீடுகள் இணைந்திருப்பது நாச்சேர் என்று சொல்லப்படுகிறது. 

மால் சரி  அம் என்ற மூன்று பகவுகள் இணைந்து  மாற்சரியம் என்று அமைந்து பின் மாச்சரியம் என்று ஆகின்றது.  மாலுதல் என்றால் மயங்குதல். எவ்வாறு ஒன்றை எதிர்கொள்வது என்ற தெளிவு இல்லாமல் நிலையின் வீழ்ச்சியை அடைதல் என்பது பொருள். இது பொறாமை என்றும் பொருள்படும்.  சொல்லின் இரண்டாமெழுத்துத்  திரிந்தது.

தச்சன் என்ற சொல்.

தைத்தல் என்பது இணைத்தல். நூலினால் தைத்தல் என்பது பின்னாளில் உண்டான பொருள்.  தைத்தல் :  தைத்து > தச்சு > தச்சன் என்று சொல் அமைந்தது.  தை> தச்சு> தச்சன் எனினுமாம்.  சு என்பதும் ஒரு விகுதி.  இது மாசு என்பதிலும் காசு என்பதிலும் உள்ளது.  இவ்விகுதி பெயரிலும் வினையிலும் வரும்.  வினையில்:  பேசு,  கூசு என்பவற்றில் அறிக. தை என்ற வினையில் சு சேர்ந்தது எனின் தைச்சு என்பது  தச்சு என்று ஐகாரம் குறுக்குற்று , சொல் அமைந்தது எனினும் இழுக்காது. தை என்ற அடியினின்று சொல் அமைந்தது என்ற அறிவைத் தெளிவித்தலே நோக்கமாதலின் எவ்வாறு இங்கு அறியினும் அதில் ஒப்புதல் ஏற்படும்.  எனவே தை என்பது த் என்பதனோடு இணைந்த  ஐகாரம் கெட்ட திரிபு ஆகும். ( த் +   )

மாடிவீடும் மச்சு வீடும்

மச்சு வீடு என்பது மாடியுள்ள வீடு.  இங்கு ஒவ்வொரு மாடியும் ஒரு மடிப்பாகிறது. மடி> மாடி. இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  மடிச்சு வீடு கட்டியதனால் இச்சொல்லால் அமைந்து பின்னர் டிகரமாகிய கடின ஒலி கெட்டு, மச்சு  என்று ஆனது.  கடின ஒலிகள் விலகி அமைதலை,  கடைஞ்சி என்பது கஞ்சி என்றானதிலிருந்து அறியலாம்.  கடைந்தது அல்லது "கடைஞ்சது" கஞ்சி. [ க(டை)ஞ்சி ]  டை என்னும் கடின ஒலி (வல்லொலி) ஒழிந்தது. கரைஞ்சி என்பதும் இடைக்குறைந்து கஞ்சி என்றே  முடிதலால்  இச்சொல் இருபிறப்பி ஆகும்.  கடை, கரை என்பன வினைச்சொற்கள்.  சி என்பது விகுதி.

இஞ்சி என்ற சொல்:

இஞ்சி என்ற சொல்,  இன்+ சி என்பது தவறு,  அதில் இனிமை எதுவுமில்லை. இடை இடையே சிறிதாகி அதன் உடற்பகுதி அமைவதால், இடை+சி > இடைஞ்சி என்றாகி பின் கடின ஒலியாகிய டை குறைந்து அல்லது கெட்டு, இஞ்சி என்னும் சொல் அமைந்தது. சி என்பது ஒரு விகுதியும் சிறுத்தல் என்ற குறிப்பும் ஆகும். இது நன்கு அமைக்கப்பட்ட சொல். காரணம் சி என்ற சிறுத்தல் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதுடன் ஒரு விகுதியுமாய் ஆனது.

மீண்டும் சந்திப்போம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 

சில திருத்தங்கள் செய்யப்பட்டன }

( தட்டச்சுப்பிறழ்வுகள்) 27032024        }

குறிப்பு: எழுத்துக்கள் தாமே மாறிக்கொள்கின்றன.

கவனம்.  மாற்றங்கள் போல் தோன்றினால் பின்னூட்டம்

இட்டுத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 27032024 1613

Please do not enter compose mode  esp  with your mouse.




திங்கள், 25 மார்ச், 2024

Outperforming : the Singapore Dollar

 https://theindependent.sg/singdollars-outperformance-of-asian-currencies-may-end-soon-bloomberg-report/?utm_source=izooto&utm_medium=news_hub&utm_campaign=Singdollar%E2%80%99s%20outperformance%20of%20Asian%20currencies%20may%20end%20soon%E2%80%94Bloomberg%20report%20-%20Singapore%20News&utm_content=article_click#google_vignette


Singdollar’s outperformance of Asian currencies may end soon—Bloomberg report

ஞாயிறு, 24 மார்ச், 2024

கச்சேரி.

 கச்சேரி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களின் இடைக்குறைச் சொல் ஆகும். இவற்றில் ஒன்றினை முன்னரே இங்கு விளக்கியுள்ளோம்.  நாலாயிரத்துக்கும் மேற்பட்ட இடுகைகள் இங்கு இருப்பதால் இவற்றைக் கண்டுபிடிப்பதில் தடைகள் சில இருக்கலாம்.  உதவிக்கு இங்கு இதனை எளிதில் அடையக் குறிப்பினைத் தருவோம்.

கச்சேரி என்ற சொல்லுக்குரிய முழுச்சொற்களை இங்குப் பட்டியலிடுவோம்:

கலைச்சேரி:

வேலை முடிந்தவுடன் ஊழியர்கள்  ஒன்றாகக் கலைந்து செல்வது எங்கும் நடைபெறுவதொன்று.  இவர்கள் செல்லும் வண்டிகளில் ஒன்றாக உடன்பயணம் செய்வதும் அடிக்கடி நிகழ்வதே.  கலையும்போது ஒன்றாகச் சேர்ந்து வெளிப்படுதல் என்ற பொருளில் "கச்சேரி" என்ற குறைச்சொல்லின் நிறைவடிவம் அமைந்தது.


கலச்சேரி:-   >  கச்சேரி.

கலைதல் -  கலைந்து தம்தம் இடம் அல்லது இல் நோக்கிச் செல்லுதல். அப்போது கலந்து = வெவ்வேறு இருக்கைகளிலிருந்து வந்து,   சேர் இ >  சேர்ந்தவாறு செல்லுதல். 

வினைச்சொல்: கலைதல் மற்றும் கலத்தல்.

கலைசேரி>  க+ சேரி >  கச்சேரி  ( லை  குறைந்தது)

கல சேரி >  கலச்சேரி >  கச்சேரி  ( ல குறைந்தது )

கலசேரி  >  க(ல)ச்சேரி மற்றும் க(தை)ச்சேரி

பல வித இசைப்பாடல்களும் கலந்து வரிசையாகப் பாடப்பெறும் இடம்.

வினைச்சொல்:  கலத்தல்.

கதைச்சேரி >  கச்சேரி  எனினுமாம்.  பல கதைகளும் சொல்லும் மேடை.

இரு பெயர்ச்சொற்கள்  ஒட்டு.


கருமச்சேரி

கருமச்சேரி > ( கருச்சேரி) >  கச்சேரி.   அலுவலகம்,  வழக்குமன்றம்.

மேலும் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_43.html

பல முதன்மைக் கருமங்கள் நிறைவேறும் இடம் என்ற கருத்திலோ,  அல்லது தம் முன் கருமவினையின் காரணமாகவோ இங்கு போக நேர்ந்தது என்ற நினைப்பின் காரணமாகவோ இவ் விடைக்குறை ஏற்பட்டிருக்கலாம்.  தமிழ்மக்கள் முன்னாட்களில் காவல்நிலையத்திற்குச் செல்ல விருப்பம் இல்லாதவர்கள்.

கதம் என்பது ஒலி.  இவ்வொலிகள் எழுப்பப்படும் இடமும் கச்சேரி ஆகலாம்.

கத்து >  கது > கதம்.  சேரி என்பதிணைந்து கதச்சேரி >  கச்சேரி ஆகும்.


மேலும் வாசிக்க:  சொடுக்குக

https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_43.html

https://sivamaalaa.blogspot.com/2020/08/thii-and-day.html


மெய்ப்பு:  பின்னர்