புதன், 25 ஜனவரி, 2023

"பைண்ட்" என்ற ஆங்கிலச் சொல்லும் பந்து என்பதும்.

 தமிழ்ச்சொற்கள்  அவற்றோடுகூடச் சங்கதச் சொற்களும் ஐரோப்பிய மொழியில் பலவாறு கலந்துள்ளன என்பதையும்,  தமிழ்ப் புலவர்கள் உரோமபுரிக்கு அழைத்துச் சொல்லப்பட்டு அவர்கள் அளித்த பல்வேறு சொற்கள் எப்படித் தெரிவுசெய்துகொள்ளப்பட்டன என்பதையும் அறிந்துகொண்டால்,  தமிழ் உலக மொழிகட்கு எவ்வாறு ஊட்டம் கொடுத்துள்ளது என்பதை அறிந்து இன்புறலாம்.

சென்னைப் பல்கலைக் கழக  வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் இதிலீடுபட்டு உழைத்துள்ளார் என்பதை,  மயிலை சீனி வேங்கடசாமி தம் நூலில் நினைவுபடுத்தியுள்ளார்.  இஃது முன் எவராலும் கண்டுபிடிக்கப்படாத வரலாறு அன்று.

இரண்டாயிரமாம் ஆண்டு வாக்கில்தமிழ்ச்சொற்களின்  ஒரு பெரிய பட்டியலே இணையத்தில் கிடைத்தது.  இப்போது அது மறைந்த இடம் தெரியவில்லை. இதுபோன்ற வரலாறுகளைப் பகர்ப்புச் செய்து சேமித்து வைப்பது உதவக்கூடியது ஆகும்.  ஒருவர் கண்டுபிடித்தது காணாமற் போகாமலிருப்பது முதன்மையன்றோ?

நாம் கருதுவதற்குரியது "பெந்த்"  என்ற  இந்தோ ஐரோப்பிய அடிச்சொல் ஆகும். இதனின்றே  பைண்ட் என்பது வருகிறது.

கட்டுதல் என்பது ஒன்று மற்றொன்றைப் பற்றிக்கொண்டிருக்கச் செய்வதே. பற்று என்பது அதுவன்றி வேறில்லை.

பல் > பன்  ( லகரனகரத் திரிபு  ,  அல்லது போலி).

பன் + து > பந்து.  ( பந்து என்ற கயிற்றினால் உண்டையாகக் கட்டப்பெற்றது).

பந்து   பந்தம்  -  உறவுக் கட்டு.

எ-டு  இன்னொன்று :  எல் > எல்+பு > என்பு.  (எலும்பு)

எல்லு : மலையாளம்.

எற்புச்சட்டகம்  , உடலுக்கு இன்னொரு பெயர்.     எற்பு என்பதும் எலும்பு.

எல்+பு என்பது  எல், எலும்பு,  என்பு, எற்பு என்று பல்வடிவம் கொள்தல் காண்க.  அன்பு என்பது அற்பு என்றும் வருமாறு அறிக. ( எ-டு: அற்புத்தளை)

முன் - முந்து,  பின்- பிந்து என்பவற்றில் இத்தகைய புணர்ச்சித் திரிபுகள் வரல் கண்டுகொள்க.

ஆகவே,  பந்து, >  பைண்ட் என்பதன் திரிபையும் பொருளணிமையையும் கண்டுகொள்க. 

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

சனி, 21 ஜனவரி, 2023

சளிநோய் பிடித்ததனால்........ தொல்லை.

 தென்றலதும் உலவிவரும் தேகநலம் தருமே

அன்றலரும்  பன்மலர்கள் ஊரெங்கும் மணமே

என்றெனினும் மாலையிலே இனிதாக உலவிச்

சென்றுவரும் அரசர்களும் அரசிகளும்  பலரே!

மன்றினிலும் வந்துலவும்  மாருதமோ  இலதே

நின்றுலவும் நோய்நுண்மி  நெருங்கியத  னாலே

வென்றிடினும் ஓய்வடைந்தோம் சின்னாட்கள் கேளீர்

உலவுதலில் ஒற்றுமையே பிறவற்றில் இலையே.


சிலநாட்களாய் சளிபிடித்தலினால் தொல்லையாகி,  எதையும் எழுத இயல்வில்லை.. 

அதைக் கூறும் கவிதை இது.

தென்றலென்பது,  சுற்றிவந்து இனிதாக வீசி அதனால் தேகநலம் தருகிறது. அரசு அதிகாரம் உடையவர்கள்,  அஃது இல்லாதோர் எல்லோரும் அந்நலம் நுகர்வர்.  ஆனால் என்னைப் பீடித்ததோ,  உலவும் தென்றலன்று.  அது நோய்நுண்மிகளை அள்ளிவந்த காற்றுப்போல் தெரிகிறது. அதை இறுதியில் வென்றிட்ட போதும்  என்னுடைய அன்றாட நடவடிக்கைகள் ஓய்வு அடைந்துவிட்டன.  சில நாட்கள் அங்கனம் கடந்தன.  உலவுதலைச் செய்வன,  1.  தென்றல்.  அதுமட்டுமோ  ?   2 நோய் நுண்மிகளும்தாம்.  

இறுதியடி தவிர. ஏனை அடிகளிலெல்லாம் எதுகை வரும்படி அமைந்துள்ளது இக்கவிதை.

தென்றலதும்  ,  அன்றலரும்,  என்றெனினும்,  சென்றுவரும்,  மன்றினிலும். நின்றுலவும்,  வென்றிடினும் என்று எதுகைகளே  அடுக்கப்பட்டுள்ளன.  நுகர்ந்து இன்புறுவீர்.

உடலானது,  தேய்ந்தழியும் தன்மை உடையது.  அதனாலே  அது தேகமெனப்பட்டது.   தேய்>  தே+கு+அம்,  தேகம்.  தேய்தல் தன்மையது. "அவுணர்த் தேய்த்த"  என்ற குறுந்தொகைத் தொடரில்,  அரக்கரை அழித்த என்ற பொருள் பெறப்பட்டது போல்,  தேய்தல், தேய்த்தல் என்ற இருசொற்களிலும் அழிதற்பொருள் பெறப்படும்.

அவுணர்  என்பது  ஆ+ உண்+ அர் >  மாட்டிறைச்சி உண்டோர் (படை).  பெரும்பாலும்  ஆ உண்டோர்.  ஆ என்பது பின்னாளில் அ என்று குறிலானது. இவ்வாறு அகர ஆகாரக்  குறுக்கம்  நீட்டல் வந்த சொற்களைப் பழைய இடுகைகளைப்  படித்து பட்டியலிட்டுக் கொள்ளவும். எப்போதும்  அவித்த அல்லது ஆவிபரியும் உணவினையே உண்டவர்கள் என்பதும் கொள்ளலாம்.

அவி >  ஆவி.  இங்கு ஆவி என்பது அவி என்ற வினையிற் பிறந்து நீண்டு திரிந்த தொழிற்பெயர் என்பதும் அறிக.   காய்  பழங்களையே உண்ட இயற்கை உணவினர் ஞானிகள் என்னும் அறிவாளிகள். அவுணர் என்பது பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்



சனி, 14 ஜனவரி, 2023

பாலித்தல் ( அருள்பாலித்தல் ) லிங்கம் என்பதென்ன.

 இன்று பாலித்தல் என்ற தொழிற்பெயரை அறிந்துகொள்வோம்.

தொழிற்பெயர் என்பது ஒரு இலக்கணக் குறியீடு.   இதன் பொருள்,    ஒரு வினைச்சொல்லிலிருந்து  உருக்கொண்ட பெயர்ச்சொல் என்பதுதான்.  எடுத்துக்காட்டாக,  participate ( verb)  - என்பதிற்றோன்றிய   participation (noun). என்ற சொல்லுரு   ஆகும்.   இதனை வேறுபெயரிட்டுக் குறித்த இலக்கணியரும் உண்டு.

நன்னூலின் சுவடி கிடைத்த பின்னர்,  அதை ஐரோப்பாவிற்குக் கொண்டு போய் அவர்கள்  மொழியில் பெயர்த்துக் கொண்டனர்.  அதன்பின்  அவர்களும் இலக்கணம் வரைந்து அறிந்துகொண்டனர்.  ஆகையால் நம் இலக்கணங்கள் ஒன்றுபோல்   காணப்படும். யார் இதை எடுத்துக்கொண்டு போனவர் என்னும் குறிப்புகள் உள்ளன. அதை இங்கு எழுதவில்லை. நன்னூலைக் புகழ்ந்துள்ளனர்.  அறிக.  இயற்றிய பவணந்தியாருக்கு  நன்றி. 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்.  யாம் கால ஆய்வுகள் செய்வதில்லை.

இப்போது பாலித்தலுக்கு வருவோம்.

ஆங்கிலத்தில் "participate"  என்பது  பாலித்தல் என்பது போன்ற ஒரு சொல்லாகும்.   பால் - பகுதி.  பாலி -   பகுதி  தருதல் என்று சொல்லவேண்டும்.  அருளில் பகுதி தருதல்,   அல்லது பகுதி இங்கு தருதல்  பாலித்தல்.   பால்,  மற்றும் இ எனபது இங்கு தருதல், பெறுதல் என்றெல்லாம் அறிந்துகொள்க.

இறைவி  அருள் தரும்போது,  அவர்தம் கொடைத்திறம் மிளிரும் அனைத்தும் உமக்குத் தந்து விடுவதில்லை.  அது எல்லையற்றது.    உமக்குச் சோறில்லை என்று அறிந்துகொண்டு,  அதனைத் தந்து பசி போக்குகிறார். ஆகவே பகுதி அல்லது ஒரு சிறு துளியைத் தந்து காப்பாற்றுகிறார்.   ஆகவே  பாலிக்கிறார்.   அது இச்சொல்லின் கருத்து.

பாலி(த்தல்) என்ற சொல்லமைப்பில்  இ என்பது சுட்டுச்சொல், இங்கு என்பது இங்குப் பெறப்படுவது என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

இங்கு என்பதில் இ என்பது மட்டுமின்றி, இங்கு என்ற முழுச் சுட்டுச் சொல்லும் உள்வந்த சொல்லமைப்பும் உண்டு.  அவற்றுள் ஒன்று இலிங்கம் என்பது.  இதை லிங்கம் என்பதும் காணலாம்.  

இல்  - இடம்.

இங்கு -  இருப்பது என்னும் கருத்து.

அம் -  அமைந்தது.

இடத்தில் இங்கு அமைந்திருப்பது.

காரண இடுகுறிப்பெயர்.

இதன் பொருள் என்னவென்றால்,  மேல்தோலைப் போல் உடல்முழுமைக்கும் காணப்பெறாமல், ஓரிடத்தில் மட்டும் அமைந்துள்ள ஓர் உறுப்பு.  கண்கள் இரண்டிடத்தில்.  விரல்கள் பலவிடங்களில் ஆனால் வரிசையாக. வாய் ஓரிடத்தில் என்றாலும் முகத்தில் பரவலாக உள்ளது.  மூக்கு இரு துளைகளாக.  காதும் அப்படியே. இலிங்கம் மட்டும் ஓரிடத்தில் ஒட்டி வெளியில் உள்ளது.  ஆகவே இல் இங்கு அம் > இலிங்கம் என்பது மிகவும் பொருத்தமான பெயரமைப்பு.  இது ஒரு தமிழ்மூலங்களை உடைய சொல் தான்.  இதன் இடக்கர்ப் பொருண்மையால்  இது பெரிதும் விரவிப் பயன்படாதொழிந்தது. இந்த இடக்கர்ப் பொருண்மை  இதன் சொல்லமைப்பு அறியாமையால் உண்டானது.   ஆனால் சமத்கிருத (சமஸ்கிருத ) மொழியில் இலக்கணக் குறியீட்டில் பயன்பாடு கண்டது.  சமத்கிருத மென்பது பூசைப் பயன்பாட்டு மொழியாய் இங்குத்  தோன்றி,   பின் பரவியது. இதுவும் நல் நிகழ்வே.  உலக முழுதும் சிவனின் இடம்தாம்.  சிவ - சிவனின் ,  இல் -  இடம்,  இங்கு-  இவ்வுலகமும் ஒட்டியுள்ள எல்லா இடங்களும், அம் - (ஆகிய) அமைப்பு.  இல்+ அம் :  இல்லம் = வீடு.  இல் என்பது இடம் குறிக்கும் வேற்றுமை உருபும் ஆகும்.  இவ் வுருபுகள் சொல் துண்டுகள்.  இன்றளவும் வழங்குவன, தமிழின் மாண்பு குறிப்பன ஆகும். இவை உணராமல் வேற்றுமொழி என்றது மடமை.  சமஸ்கிருதத்தில் முதல் கவி யார்?  வால்மிகி.

 தாழ்த்தப்பட்ட கவி என்றனர். அப்படியானால், அது எப்படி இந்தோ ஐரோப்பிய மொழி ஆனது?  கேள்விகள் பல உண்டு. எல்லாம் எழுத எமக்கு நேரமில்லை.

இல் இங்கு என்பது இல்லிங்கு என்று வரவேண்டும் என்பது மடவாதம். அதுதான் இடைக்குறைந்து இலிங்கு  ஆகிவிடுமே.  இலிங்கம் அல்லது லிங்கம் . கெட்டவார்த்தை ஆகாது.

இரண்டு இயல்பான அன்றாடச் சொற்களை இணைத்தால் அது அந்தரத்திலிருந்து வந்த சொந்தமில் சொல்  போல உம்மை மருட்டுவதுதான் தமிழ்மொழியின் திறம் ஆகும் அறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.