புதன், 5 பிப்ரவரி, 2020

எமனாவது எருமைக் கடாவாவது?

எமன் என்ற கருத்தை  ஏளனத்துடன் எடு த்தெறிவோர்  உள்ளனர்.  மக்கள் அனைவரும்  எதையும் ஒருவரேபோல் கருதுவாரில்லை.  ஆகையால் வேறுபடச் சிந்திப்பார்  வாழ்க -, இனி தாக.

ஆனால் எமன் என்ற சொல்  தமிழ்ச் சொல்லே ஆகும். எகர த் தொடக்கத்துச் சொற்கள் யகர வருக்கத்துச் சொற்களாகத் திரிபு அடைதல் ஐயமின்றி நிறுவ ப்படும். எடுததுக் காட்டாக எவர் என்பது யார் என்பதனுடன்
தொடர்புற்ற சொல்லே ஆகும்.  ஆர் > யார் நேரடித் திரிபாகும்.  எமன் >. யமன்  > இயமன் என்று அவை வந்தன.

எமன் எனற சொல் எம்+ அன் என்று பிரியும். நோய் என்பது  உடலிற் பிறப்பது ஆகும். "உடன் பிறந்தே கொல்லும் வியாதி " என்றார் ஒளவைப் பாட்டி.  எப்போது மனிதன் பிறந்தானோ அப்போதே நோயும் கூடப்பிறந்துவிட்டது.  அது முற்றி வெளிப்படக் காலம் எடுத்துக் கொள்ளும்.  அவ்வளவு தான். அது உம்முடைய உரிமைகளில் ஒன்றாவது நிலையினதாகும். கிருமி யென்னும் குறுமியினால் வெளிப்பிணிப்பு ஆயினும் அது உம்முடையதே.  இதை உணர்ந்த பண்டை த் தமிழன் அதை "எமன்"எ‌ன்று ஒத்துக்கொண்டான்.  உருவகம் செய்து " எம்மவன்"  என்றான்.

எருமை,   தூய்மை அற்ற  -  பிற அணியிலுள்ள புற அணியினதான   -  'பிராணி". பல நோய்கள்  தூய்மை இன்மையால் வருதலின் எருமை வாகனம் என்றது மிக்கப் பொருத்தம்.

எத்தகைய வலிமையோனும் சுருண்டு விழுந்து இறந்தால் எமனுக்குக் கடவுள் தன்மை உண்டாகிவிடும். இது மாந்த வரலாற்றுக்குப் பொருந்துவதே.

ஆதலின் எமன் என்றது இந்தக் கொலைவழிகட்கு ஆன மொத்தக் குறிப்பையே ஆமென்று கொள்க.

எமன் என்று எம் என்னும் சொல்லுடன் ஒன்றித்தபடியால் மரணம் விளைவித்த எதையும் அவர்கள் தம்மின் வேறாகக் கருதவில்லை என்று உணர்வீர், மகிழ்வீர். எமன் என்பது உடனுறைவு குறித்து வாழ்வியலை விளக்கவல்ல சொல். இறைவன் தன்னுள் என்னும் கருத்தினுக்கும் இது புறம்பானதன்று என்க.

தட்டச்சு எழுத்துப் பிறழ்வுகள் சரிசெய்யப்படும்.



செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கிருமியும் குறுமியும்.

கிருமி என்னும் சொல்லுக்கு  ஆங்கிலத்தில்  உள்ள "ஜெர்ம்ஸ்" என்ற சொல்லின் பொருள் அகரவரிசைகளில் காண்பதற்கில்லை. பூச்சி புழு  என்ற பொருள்தான் காணக்கிடைக்கும். வேறு வழக்குச் சொல் இன்மையால் மக்கள் கிருமி என்றும் சொல்வர். ( பாக்டீரியா, வைரஸ் என்பார் ஆங்கில அறிவுடையார்).

கிருமி என்பது உண்மையில் "கருப்பான து " என்னும் பொருளது ஆகும்.   எப்படி என்றால்  கரிய   பக்கம் என்று பொருள்படும் "கிருஷ்ண பட்சம்" என்ற அயல் திரிபினில் கரு எனற்பாலது  கிரு என்று வந்திருப்பதுதான்.  கிருட்ணனும் கரி‌யோனே ஆவான்.  வானும் கருமையே ஆகும்.

கிருமி என்ற சொல் பழைய சங்கத அகராதிகளிற் காணப்படவில்லை. புதியவெளியீடுகளை யாம் ஆய்வு செய்யவில்லை. நீங்கள் தேடிப்பாருங்கள்.

கிருமி என்பது கரும்புழு என்று பொருளறியக் கூடியதாய் இருப்பதால்,  கருமைக்குத் தீமை என்னும் பொருள் பெறப்படுதல் ஏற்புடைத்தாகும்.
{" He is the black sheep in the family "என்ற வாக்கியத்தை நோக்குக.  English  idiomatic phrase. )

ஆனால் நோயணுக்கள் அல்லது நோய்நுண்மங்கள்  மிக்கச் சிறியனவாதலின், இச்சிறுமைக்கருத்து இச்சொல்லினில் இல்லாமை வேறு ஏற்புடைய பதங்களை தேடுதற்கு உந்தக் கூடும்.  நோயணு என்பதும் நோய்நுண்மம் என்பதும் உதவக்கூடும்.

கிருமி என்பதினும்  "குறுமை"க் கருத்து வெளிவருமாறு குறுமி என்று கூறுதல் பொருத்தமாகும்.  இனிக் குறுமையிலும் குறுமை உடைய சிற்றுயிராதலின் அல்லது நுண்மம் ஆதலின்,   குறுக்குறுமி என்று விரித்தல் இன்னும் நன்று. (கு
றுங்குறுமி எனினுமது).  இனிக் குறுக்குறுமியைக் குறுக்குவோம்.  றுகரத்தைக் களைந்துவிடில் குக்குறுமி ஆகிவிடும்.    கிருமி அல்லது "ஜெர்ம்ஸ்" என்பதற்கு குக்குறுமி என்பது நன்றாகவுள்ளதா?

இதுபோன்று அமைந்த இன்னொரு சொல் "குக்கிராமம்" என்பது. இது:

" குறுக்கு+ இரு+ ஆகும்+ அம்"
=  குறுக்கிராமம்". இதில் று விலக்க,
= குக்கிராமம்.

ஆகிவிடுகிறது

குறுக்கமாக அமைந்து குடியிருப்பதற்கான இடம் என்பதுதான் குக்கிராமம் என்பதன் அமைப்புப்பொருள். அமைப்பைக் குறிக்க எழுங்கால் " அம்" விகுதி பொருத்தமானது.  அம் > அமை.

. மிக்கச் சிறிய ஊர் என்பது பொருள்.

குறுக்குதல் என்பது குறுகக் கட்டப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட  ( சிற்றூர்) என்பது.

இடையில் றுகரம் வீழ்தல் சில சொற்களில் நிகழ்ந்துள்ளது.

எ-டு:

சக்கரம் - இது சறுக்கரம் என்பதன் இடைக்குறை.  உருளும் சக்கரம் அமையுமுன் பெரும்பாலும் சறுக்கிச் சென்றவை ஊர்திகள். ஆகவே சறுக்கி இலக்கை அடைந்தன. அல்லது தூக்கிச் செல்லப்பட்டன.   ஆள் இல்லாவிட்டால் சறுக்கலில் விடுதலே சேரிடத்தை அடைய உதவும்.  இதற்கு நிலம் தாழ்ந்துசெல்லவேண்டும். (  இறக்கம்).

இரு அமுக்குருளைகட்கு இடையில் கரும்பை அல்லது வேறு இனிப்பு விளைபொருளை சறுக்கிச் செல்ல விட்டுச் சாறு பிழிந்து அதனைக் காய்ச்சிச் செய்வது  சறுக்கரை.  ( சறுக்கி அரைத்து எடுக்கப்பட்டது ).  சறுக்கரை > சக்கரை  < > சர்க்கரை. இதிலும் றுகர ருகரங்கள் கெடும்.

சறுக்குமரம், சறுக்குக்கட்டை முதலிய வழக்குச்சொற்களும் உள.


மலைகள் குன்றுகளில் சறுக்கி இறங்குதல் நிகழும். மேலேறுகையில் தூக்குவது கடினம். ஆகவே உருளுறுப்பு தேவையாயிற்று.  இதுபின் ஏற இறங்க உதவிற்று.

உருள்+ ஓடு + ஐ = உருளோடை > ரோடை > ரோடா என்பதும் காண்க..

உருள் >  ரு.
ஓடு > ஓடு
ஆ >  ஆ.

ரோடை > ரோதை.

எனவே கிருமிக்குக் குறுமி, குக்குறுமி என்பனவும் கருதத்தக்கவை ஆகும்.

அறிவீர் மகிழ்வீர்.

தட்டச்சுப்பிறழ்வுகள் பின் பார்வைக்கு.

சனி, 1 பிப்ரவரி, 2020

அறிவியல் வளர்ச்சியும் நோய்களும்

அறிவியல் முன்னேற நோய்கள் அனை த்தும்
முறிவுறும்  என்றே  முகில்மேல்  ---  பறலானேன்;
கண்டதோ நோயாற் கவிழ்வதாய்;  கார்மழையோ
அண்டுமோ நம்மை நலம் ?

முறிவுறும் -  தீர்ந்துவிடும்
முகில்மேல் -  மேகத்தில்
பறல் -  பறவை;  பற + அல் =  பறல். (அகரம் கெட்டது.)
(பறந்தேன்)
கார்மழையோ -  துன்பகாலமோ
நலம் அண்டுமோ  - நோய்கள் நீங்குமோ நலம் வருமோ என்றபடி.