புதன், 3 மே, 2017

கடமை தவறாத சனிக்கிரகம்

கடமை தவறாதவர்களைப் பாராட்டி அவர்களின் நல்ல செயல்பாடுகளை ப் பயன்படுத்திக்கொள்ளுதல் மனித இனத்துக்குத் தேவையானது என்பதை சொல்லவேண்டுவதில்லை. இப்படிக் கடமை தவறாதோரின்
பட்டியலில் சனிக்கிரகம் முன் நிற்கின்றது. கிரகம் என்ற சொல்லை  முன் இவண் விளக்கியுள்ளோம்.

படைத்த சிவனாரையே பற்றிக்கொண்டு தன் கடமையை ஆற்றியதால்,  சனிக்கு ஈஸ்வரப் பட்டம் என்பார்கள். ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு விளக்கமும்  இங்குக் காணலாம்.

அவற்றுக்கான தனி இடுகைகளைக் காண்க.

சனி என்பவனே ஒரு தனித்தன்மை வாய்ந்தவன்.   ஆதலின்
தனி என்ற சொல்லினின்று சனி என்ற கோட்பெயர் அமைக்கப்பெற்றது.  தகரத்துக்குச் சகரம்  ஈடாகுமிடங்கள்
தமிழில் உண்டு. தங்கு > சங்கு என்பது காண்க.  தன் என்பதன்
பன்மையாகிய தம் என்பதும் தம்முடன் பிறரும் கூடியிருத்தலைக்  குறிப்பது  மறத்தலாகாது. வேறு சில மொழிகளில் த என்பது ச என்று ஒலிக்கப்பெறுதலும் உண்டு. ஒத்மான் என்பது ஒஸ்மான்  எனப்படுதல் காண்க. உலக மொழிகளை ஆராய்ந்தால் இவ்வுண்மை புலப்படும்.  யாப்பில் த என்னும் எழுத்துக்குச் ச மோனையாகிவருதலும் உண்டு.

சனி மெதுவாக நகரும் கிரகம் என்பர்.  அதனால்  அவனுக்கு
"மந்தன்"  என்ற பெயரும் சொல்வர்.   மந்தமாவது, விரைவுக்
குறைவு. சனி பிடித்துள்ளதாகக் கூறப்படும் காலங்களில் விரைவாக எதையும் நீங்கள் செய்து முடிக்க இயலாது என்பர்.  ஓர்  இராசி வீட்டைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்வான் சனி. இதைச் சோதனை செய்ய, சனி பிடித்த காலக்கட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்களுடைய முக்கிய வேலையை மேற்கொள்ளுங்கள். தடை, தாமதம் இருக்கின்றனவா என்று  அறிந்து மகிழலாம்.

குப்பைத் தொட்டி. குப்பை போடுதல் தொடர்பாக ஏதேனும் தகராறுகள்,  அழைப்பாணை வந்தால், சனி எந்த இராசியில் இருந்து என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று ஆய்வு செய்வது நலம்.


பாவம் என்ற சொல், தமிழ்ச்சொல்லே......

பாவம் என்ற சொல், தமிழ்ச்சொல்லே ஆகும். தமிழர்களும் பாவபுண்ணியம் பார்த்தவர்கள்தாம்.  எந்தக் காலக்கட்டத்திலும் எல்லோரும் நாத்திகர்கள் அல்லர்; சிலர் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்திருப்பது சாத்தியமே.

வினைச்சொல் பாவுதல் என்பதே. பாவுதல் என்பதன் பொருளாவன:

1 தாண்டுதல்
2 நடுதல்
3 பரப்புதல்
4 பரம்புதல்
5 பற்றுதல்
6 --
7 வேர் வைத்தல்
8 விரித்தல்
9 பரவுதல்
10 வியாபித்தல்
11 படர்தல்
12 விதைத்தல்
13 தளவரிசை இடுதல்.

விதைப்பதுபோலும் உள்ளிடப்பட்டுப் பாவம் பற்றிக்கொள்கிறது. ஒருவன் துணிந்து ஒரு பாவத்தைச் செய்தபின், தன் உணர்வுகளை
நிலை நிறுத்த முடியாதவன், பின்பற்றிப் பாவச்செயலில் ஈடுபட்டு
விடுகிறான். நல்லவை இப்படி இவ்வளவு  வேகமாகவும் தீவிரமாகவும்
பரவுவதில்ல. திருடுவதில் பொருள்வரவு இருக்கிறது. ஆகவே அது
வேகமாகப் பரவும். யாரும் பார்க்காமல் இருப்பதும் ஒரு காரணம்.
காவல்துறை அறியாததும் ஒரு காரணம். இன்னும் பல. பொருளை
இழந்தவன் மிரட்டினால் பணிந்துவிடுகிறான்....  ஆனால் பொருளை
அறத்திற்கு உதவு என்று  சொல்லிப்பாருங்கள்.  " கரவு உள்ள, உள்ளம் உருகும்" என்றார் ஆசிரியர் திருவள்ளுவனார். கொடுக்க‌ முன்வருவார் ஒருசிலர். எடுப்பாரே அதிகம்.



பாவம் விதைக்கப் படுகிறது ; பற்றுகிறது;  உள்பற்றி ( இதுதான் உத்பற்றி ) விரிகிறது. பாவிகள் மிகுதியாவர்; நல்லோர் குறைவர்.

பாவம் என்றவுடன், கடவுளைத் தொடர்பு படுத்தவேண்டாம். அவர்
கேட்டாலும் கேட்காவிட்டாலும், இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பாவம் பாவமே. நீதியரசர் இருந்தால்தான் குற்றம் என்பது தவறு.
குற்றம் முதலில் மெய்ப்பிக்கப்படும் நிறைவு நிலையை அடைகிறது.
பின்னர்தான் காவல்துறையும் நீதிபதியும் வருகின்றனர்.    நோய் இருந்தால் மருத்துவர் வரவேண்டும் என்பதில்லை; அவரிடம் போகுமுன்பே  இறந்தோர் பலர்.  பாவம் செய்தால் செய்து முடித்துச்
செய்தவன் உள்ளழிந்துபோகிறான்.  அவன்  ஆன்மா அழிவு நிலையை
எய்துகிறது. உங்கள் ஆன்மா அழிவுற, கடவுளுக்கு என்ன தொடர்பு?
தெயவ மேடைக்குச் செல்ல, தகுதி இழந்துவிடுகிறீர். எல்லாம் உங்களுக்கு நடக்கிறது; கடவுள் எப்போதும்போல் இருப்பவர். நீதியரசர்போல் பின்வந்து கேட்கிறார். பாவமானது உடலையும் ஆன்மாவையும் குமுகத்தையும் நாட்டையும் அழித்தபின்,  அடுத்தது என்பது அடுத்தது; நேரடித் தொடர்பு இல்லாதது.

இப்படி எழுதினால் சொல்லாராச்சியாக இருக்காது ஆகையால்
இனி,   பாவம் தமிழ் என்பதை விளக்குவோம்.

விதைக்கப்பட்டு, உள்பற்றி விரிவது பாவம்.

பாவுதல் தமிழ். அது பிற மொழிகளால் ஏற்கப்பட்டது தமிழின்
பெருமையாகும்.

முன்னரே உணர்வுகள் களத்தில் ஓர் இடுகையில் கூறியிருந்தேன்.
இது ஒருவகையில் மறுபதிவு ஆகும்.





திங்கள், 1 மே, 2017

துறவு மேற்கொள்ளாமலே ஆசை தீர்ந்துவிடும். ......

மகிழ்சியும்  துன்பமும் மாறிமாறி வருகின்றன.

எதில் மகிழ்ந்தோமோ,  அது கொண்டே துன்பமும் வந்துவிடுகின்றது.  துன்பம்
என்பது தனியே வருவதில்லை.

ஒரு சொந்தக்காரப் பையன் என்னுடன் மகிழுந்தில் பயணிக்க
வேண்டும் என்று மிக்க ஆசையுடன் என்னோடு வந்தவன்.

ஓரிடத்தில் மகிழுந்தை நிறுத்தியபோது கொஞ்ச தொலைவில்
ஒருவன் எதோ ஒரு தின்பண்டத்தை விற்றுக்கொண்டிருந்தான்.

என்னுடன் வந்த பையனுக்கு அதை வாங்கித் தின்னவேண்டும்
என்ற தாங்க முடியாத ஆசை. ஆசையை எப்படி அடக்குவது?

இதற்காக புத்தர்மாதிரி துறவு மேற்கொள்ள வேண்டுமா என்ன
அக்காள் வாங்கிக்கொடுப்பாள் என்று பையன் எதிர்பார்க்கிறான்.

உடனே அவனிடம் ஒரு பத்துவெள்ளியைக் கொடுத்து, அதை
வாங்கிச் சாப்பிடு என்று சொன்னேன். துறவு மேற்கொள்ளாமலே ஆசை தீர்ந்துவிடும்.

அவனைப் பார்க்கவேண்டுமே!  வண்டியிலிருந்து இறங்கி, காசைக் கையில் பிடித்துக்கொண்டு  தாவிக்கொண்டும் குதித்துக்கொண்டும் அங்கே ஓடினான்.

அதைப் பார்த்த மன நிறைவுடன் நான் வேறு சிந்தனையில்
ஆழ்ந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் பையன் அழுதுகொண்டு வந்தான். "என்ன. என்ன, யாரும் அடித்துவிட்டார்களா......."

"பத்துவெள்ளியைக் காணோம்"  என்று அழுதான்.

"சீ!  அழாதே...... அக்காள் இருக்கிறேன். " என்றபடி என் பையை
எடுத்து, இன்னொரு பத்துவெள்ளியைக் கையில் கொடுத்து, "ஆடக் கூடாது, குதிக்கக் கூடாது, கவனத்துடன் நடந்து போ. சாலையில் பல உந்துவண்டிகளும் மனிதர்களும் போகிறார்கள்.
யாருக்கும் இடைஞ்சல் உண்டாகாமல்  போய் வாங்கிச் சாப்பிடு. விழுந்துபோன காசு போகட்டும். இந்தக் காசு காணாமற் போய்விடாமல் பார்த்துக்கொள்..."  என்று சொல்லி அனுப்பினேன்.

ஒழுங்காகப் போய் வாங்கிக்கொண்டு வந்து, என் எதிரிலேயே
சாப்பிட்டு முடித்தான்.  "கவலைப் படாதே.....எதையும் சாதிப்பதுதான் முதன்மையானது என்று  திடமுறுத்தினேன்.

மகிழ்வும் துன்பமும் ஒரு பத்துவெள்ளிக்குள்ளேயே சுற்றிவருகிறது.  அதுதான் நாம் வாழும் மனித வாழ்க்கை. தனியாக ஏதும் துன்பம் தோன்றுவதில்லை. எல்லாம் உன்னிலிருந்தே உள்பற்றி வருகிறது.  (உள்பற்றி > உற்பத்தி ).

அரசியல் மேதை திரு லீ குவான் அவர்கள் கூறிய ஒரு
சீனக் கதை நினைவில் வந்து மோதுகின்றது. ஒரு சீனச் சிற்றூரான்  தன் மகனுக்குக் குதிரை வாங்கிக் கொடுத்த கதை. ஒரு குதிரையை வைத்தே இன்பமுன் துன்பமும் மாறிமாறிச் சுழல்கின்றன என்பதை அவர் பட்டியலிட்டுக் காட்டினார். அதை இன்னொரு நாள் அறிந்து இன்புற்றிடுவோம்.

will edit.
This story is from my diary in November 2014.  At that time I also analysed the word munthAnAL.
We shall discuss in another post. Pl stay tuned.