வெள்ளி, 13 மே, 2016

சுவாசம் என்பது

சுவாசம் என்ற சொல் நன்கு ஆராய்வதற்குரியது ஆகும்.

இதன் பிற்பாதியாகிய வாசம் என்பதை முதலில் கவனிப்போம்.
இந்தச் சொல், வாய் என்ற சொல்லில் இருந்து திரிந்து அமைகின்றது.

வாய் > வாயம்  >   வாசம் என்று இச்சொல்  அமையும்/.

வாய் என்பது பல்பொருள் ஒருசொல்.  வாயில் >  வாசல் என்ற சொல்லில்  அது வீட்டினுள் அல்லது  அதுபோன்ற இடத்தினுள் செல்லுதற்கும் வெளியில் வருதற்கும் உள்ள வழியைக் குறித்தது.

வாய்க்கால், கால்வாய் என்பவற்றுள் அது நீரோடு வழியைக் குறித்தது.  வருவாய் என்ற சொல்லில் அது பொருள்வரவு என்று  நாம் அறிகின்றோம்.

வாய் என்பது உண்மையில் இடம் என்று பொருள்படுவதாகும்.

எனவே சுவாசம் என்ற சொல்லில்,  வாசம் என்பது  நெடிதாக வரும் வழி என்று பொருள்படும்.  மூக்கு என்னும் மூச்சுக் கருவி வாயினுடன் தொடர்பு உடையது  என்பதால் அதுவும் வாயின் ஒருபகுதியாகக் கருதப்படக் கூடும், காரணம் மூச்சு என்பது வாயினாலும் இயங்கககூடியதாகும்.

இச்சொல்லுடன் சு என்பது முன் நிற்கிறது. மூச்சு என்பது  உள்ளும் வெளியிலுமாக சுழற்சி முறையில் நடைபெறுவது.  இது குறிக்கும் தமிழ்ச்சொல் சுலவு என்பது ஆகும்/ இதன் தலையெழுத்து: சு என்பது/  இது வாசம் என்ற சொல்லின் முன் நிற்கிறது.

ஆகவே சுவாசம் என்பது  சுழற்சியாக  நடைபெறும்  மூச்சைக் குறித்தது.  காற்று  என்று பொருள்படும் வாயு என்ற சொல்லும் வாய் என்பதன் அடியாக அமைக்கப்பட்டதே ஆகும்.

முடிவாக,  சுவாசம் என்பது தமிழினின்று அமைந்த புனைவுச்சொல் என்பது நன்கு தெரிகிறது. முழுச்  சொற்களை  முன்னொட்டுக்களாக  ஆக்குகையில்
முதலெழுத்துக்களை மட்டும் நிறுத்திச் சொல் அமைப்பது ஒரு கலையாகும்.
இந்த முறையைத் தமிழும் கையாண்டு உள்ளது.     உதாரணம்:  வடு :>  சுவடு.
பின் வந்தோர், இவற்றிலிருந்து கற்றுக்கொண்டனர்.

அறிந்து மகிழ்க/

The first draft on this subject was wiped out by a remote application.  Then this was rewritten.

வியாழன், 12 மே, 2016

பரிகாசம் என்றால் என்ன?

இதனை இப்போது அறிந்துகொள்வோம்.

கிண்டல் என்று பேச்சு வழக்கில் சொல்வர். இது கிண்டிவிடுவது என்ற சொற்பொருளை உடையது.  அதாவது அடக்கமாக இருப்பதைக்  கிளறி
மேல் எழுப்புவது என்று எடுத்துக்கொண்டால் தவறில்லை என்று சொல்லலாம். கேலிப்பேச்சு என்றும் சொல்வதுண்டு. கேலி என்பதோ கேளிக்கைப் பேச்சு என்பதன் சுருங்கிய வடிவம்.  கேளிக்கை >  கேளி > கேலி.  Now : " gElli " just like cheeni has become "jeeni!!


வக்கணைப் பேச்சு என்றும் சொல்வதுண்டு. இவை நிற்க:

பரிகாசம் என்பதில் பரிதலாவது அன்பு காட்டுதல், இரங்குதல் என்றெல்லாம் பொருள்  கொள்ளக்கூடிய சொல்.

காய்தல் என்பது சூடேற்றுதல் என்றும் ஒளிர்தல் என்றும் பலபொருட்சாயல்களை உடையது. "காய்தல் உவத்தல் இன்றி ஆராயவேண்டும் "  என்ற வாக்கியத்தில்,  வெறுப்பு விருப்பு என்று
பொருள்கொள்ளலாம். எரிச்சல் அல்லது பொறாமைப்படுதல் முதலியவையும் காய்தலில் அடங்குவன.  காய்மை என்ற வடிவமும் உளது.  சினமும் கண்டிப்பும்கூட இவற்றுள் அடங்கும்.
காய்தல் என்ற சொல்லுக்குப் பிறபொருள்களும் உள.

காய்>  காயம் >  காசம் என்று மாறும்.  யகரம்> சகரம் ஆகும்.

ஆகவே பரிகாசம் என்பது, பரிவு ஒருபுறமிருக்க, காய்தலை மேற்கொண்டு பேசுதல் என்ற அழகான பொருள் தருகிறது.

பரிகாசம் என்பதன் மூலங்கள் பரிதல், காய்தல். இவை தமிழ்.  Well, if father and mother are Tamils,  the offspring can be Indo-European?

இதிகாசம்

இதிகாசம் என்பது நாம் வழங்கும் சொல். இதற்குப் பிறர் எப்படிப் பொருள் கூறினாலும்.  நாம் ஆய்வு செய்யலாம்.

இது +  இகு  + ஆய் +  அம்.

இவற்றுள் கடைசி இரண்டு துண்டுகளையும்  புணர்த்தினால் ஆயம் என்று வரும. யகரம் சகரமாகத் திரியத்தக்கது ஆதலின்  இது ஆசம் என்று முடியும். ஆகவே இந்த இறுதி நிலையின் பொருளாவது: ஆயப்படுவது அல்லது ஆய்வு என்பதாகும்.


இகு என்பது தன்வினையாகவும் பிறவினையாகவும் வரும், இவற்றுள் இகுத்தல் என்பது பல பொருளது ஆகும். அழைத்தல், ஈதல் இசை வாசித்தல் என்பனவும் இவற்றுள் அடங்குவன.

ஆகவே கதைகளைத் தந்து வாசித்தல் அல்லது ஆய்தல் என்று
பொருள்படுவது இகுத்தலென்பது.

இது இகு ஆசம் என்பது இதிகாசம் என்று கோவைப் பட்டு  நிற்கும்.

இனி இகு என்பது இங்கு என்பதன் இடைக்குறை வடிவமும் ஆம்.

வெறுமனே  இது இங்கு ஆயப்படுகின்றது என்றும் பொருள்.

தமிழில் சொல்லை அமைத்தபின் வேறுவழிகளில் பொருள் கூறுதல்
ஒரு மொழி நாகரிகம் ஆனபடியால் பிற பொருள்களும் கூறுவர்.