ஞாயிறு, 6 மார்ச், 2016

புறப்பொருளில் தோற்றவர்க்கு இரக்கம்.



இந்தப் புறப்பொருட் கொளுவைச் சற்றுக்  காண்போம்.

அழிகு நர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று.

என்பது 20-ம் பாடல்.  வஞ்சித் திணையில் இது ஒரு துறை ஆகும்.

சரணடைந்தவர்களைக் குண்டுவீசித் தாக்கிய கொடியவர்க்கும் அதற்குத் துணைபோன அடுத்தார்க்கும் உண்மையில் தெரியவேண்டிய ஒரு பண்பாட்டை இக்கொளு எடுத்துக்கூறுகிறது. தோற்றவர்க்கு இரங்கிய தூயபண்பினன் இறுதியில் ஒழிக்கப்பட்டது  எத்தகு கேடு!

போரில் வன்மை அழிந்தவர் இரு கைகளையும் உயர்த்தித் தம் முதுகையும் காட்டுகின்றார். அந்த நிலையில் வெற்றி பெற்றவன்  தன் கூரிய வாளைச் சரணடைந்தோனின் முதுகில் குத்திவிடுவது எளிதுதான்.   ஆனால் குத்தக்கூடாது என்கிறது தமிழர் பண்பாடு. வாளைக் குத்தாமையே வீரப் பண்பாடு என்கிறது.  இதைப் பக்கலில் நின்று கண்டோர் அந்த வீரப் பண்பினைக் காதலிக்கின்றனர் என்கிறது நம் புறப்பொருள் இலக்கணம்.

சரணடைந்தோனைக் குத்துதல் கோழைமை.  அவனைக் காப்பாற்றுவதே  வீரம்.

வஞ்சியில் இது தழிஞ்சித் துறை ஆகும்.


You may continue reading on this topic . Click for more:


வென்றபின் பகைவனுக்கு அருள்செய்
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_24.html


சேரனுடன்  மோதாதே
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_39.html


போர்த் தந்திரங்கள்
http://sivamaalaa.blogspot.sg/2016/03/blog-post_91.html


சனி, 5 மார்ச், 2016

"விற்பன்னர்"

ஒரு பொருளை விற்பதற்குச் சில வேளைகளில் வணிகர் சிலர் மிக்கத் திறமையுடன் பேசுவர்.  மந்திரங்கள் சொல்லி, பாம்பு  விளையாட்டும் காட்டி அது கடித்தால் இந்த மருந்தைப் போடுங்கள்  விடம் ஏறாது,  ஏறின விடமனைத்தும் இறங்கிவிடும் என்றெல்ல்லாம் விளக்கம் தருவதற்குப்  பேச்சுத் திறன் முதன்மை  யானது ஆகும்.  இவர்கள் விற்பனைக் கலைஞர்கள்

அறிஞர்  சிலர்க்கும் இத்தகு திறன் காணப்படுகிறது.

ஒரு சமயம் ஒரு சீன நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.  இவர் சிங்கப்பூர் வானூர்தி நிலையத்தில் அறிஞர்  நெல்சன் மெண்டெலா  அவர்களின் உரையை நேரில் கேட்டவர்.  "இது அன்றோ  உரை! சிலர்  எழுதி வைத்துக்கொண்டு பேசுகிறார்களே! அதிலும் கூட தடுமாறுகிறார்களே "   என்றார்.   நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்  அரசியல் அறிஞர் லீ குவான்  யூ அவர்களும் சிறந்த உரைவலர் ஆவார்.

இவர்கள் திறம் ஒரு வகையில் விற்பனைத் திறத்துடன் ஒப்பீடு செய்யத் தக்கது ஆகும்.  செலச் சொல்லும் செந்நாப்போதார் சீர்மிக்க இம்மாமனிதர் .

இது தொடர்பில் "விற்பன்னர்" என்ற சொல்லை அலசுவோம்.

விற்பு  =  விற்பனை . விற்பனைக் கலை குறிக்கிறது.

அன்னர்  =  போன்றவர்கள்.

கலை குறித்த "விற்பு"    அதன் கலை உடையாரைக் குறித்தது.   இது ஆகுபெயராய் நின்றது.

முழு விரிப்புடன் சொல்லின்  "விற்பரன்னர் " எனல் வேண்டும்.  இரண்டு "அர் "
இன்றி  ஒரு அர்  வரச்  சொல் அமைந்தது சொற்புனை புலமை ஆகும்.  ஒரு ரகரம் மறைந்த இடைக்குறை எனினுமாம்.

வில் போல் குறிவைத்துப் பன்னுவோர் என்று கூறுவதும் கூடும் .  பன்னுதல்  -  சொல்லுதல்.

அறிவோம்  மகிழ்வோம்.


வெள்ளி, 4 மார்ச், 2016

இராத்திரி

இரவு  இரா என்பன தமிழ் .   ஆனால் இராத்திரி என்ற சொல்வடிவமும் தொன்று தொட்டு தமிழ்ப் பேச்சில் இடம்பெறத் தவறுவதில்லை. இரவு என்பது தலை கிள்ளப்பட்டு ராவு என்றும் தோற்றரவு  (அவதாரம் )  செய்யும்.  சில வேளைகளில் ரா என்றுமட்டும் வரும்.  ராவிலே படுக்கும் போது கால் கை மூஞ்சி எல்லாம் கழுவிவிட்டுப் படு என்று அம்மா சொல்வதைப் பிள்ளைகள் கேட்டிருப்பார்கள்.  இரவு குறிக்கும் இச்சொல் ஏன் இத்துணை உருவுகள்  கொள்கின்றன ? எல்லாம் நம் தமிழரின் சொல் பல்வடிவப் புலமைதான் !

இனி இராத்திரி என்பதனை உற்று நோக்குவோம்.

இரா+   அத்து + இரி

அத்து  என்னும் சாரியை இங்கு வந்துள்ளது.

இவர் நடனத்தில்  புலி  என்கையில்  நடனம்+  அத்து + இல் என்று அத்துச் சாரியை வரும்.  அத்து என்பதை விட்டு, நடனமில் புலி என்று புணர்த்தினால்  அது நடனம் இல்லாத புலி என்று கொள்ளவேண்டி வரும்.

ஆங்கு, பொருள் கெடுமன்றோ?

இருத்தல்  என்பது மலயாளத்தில் இரி என்று வரும்.  அன்றேல் இரு என்னும் தமிழ் இகர விகுதி பெற்றது எனினுமாம்.

இதை ஒரு வாக்கியமாமாக  எழுதின்,  இரவு நேரமாக இருத்தல் என்று விரிக்க.

அத்து + இரி

அத்து  என்னும் சாரியை இங்கு வந்துள்ளது.


இதை ஒரு வாக்கியமாமாக  எழுதின்,  இரவு நேரமாக இருத்தல் என்று விரிக்க.

இரவில் தூங்கு.
இராத்திரி தூங்கு.
இரவு நேரமாய்........

 இருக்கையில் தூங்கு.

இதிற் சிறக்கும் பொருள் விரிப்பு யாதுமில்லை எனினும் இதுபோலும் விரிப்புகள் பேச்சில் வருவனவே. இயல் நூலை ஏந்தி உசாவிக்கொண்டு யாரும் உரையாடுவதில்லை.

திரி என்பதை திரி என்னும் தனிச்சொல்லாகக் காணின்,

இரா + திரி    இராத்திரி  ஆகும்.

இரவாகிய திரிபு,    இரவாகிய மாற்றம்  எனல் பொருந்தும்.

இப்படி இவ்வழக்கு எங்கும் பரவி நிற்பது தமிழன் ஒரு காலத்து யாண்டு பரவி இருந்ததைக் காட்ட வல்லது.

இராத்திரி என்பது இருவேறு வகைகளிலும்  பொருந்தி வரும் சொல் அமைப்பு.

edited on 21.10.2022