சனி, 12 அக்டோபர், 2013

முச்சலிக்கை

வெவ்வேறு சார்பினர், ஒன்றுகூடி கலந்துரையாடி ஏதேனும் ஒன்றுபற்றி ஆய்வு நடாத்துதற்கு,  கலந்தாய்வு என்கிறோம். தொழிற்சங்க  வட்டாரங்களில் பெரும்பாலும் "பேச்சுவார்த்தை" என்கிறார்கள். இது மக்களிடையே பயின்று வழங்கி இன்று ஆட்சி பெற்றுவிட்ட வழக்கு. பேசி  முடித்து எதையேனும் வார்த்து எடுக்கவேண்டுமே! இப்படிப் பார்த்தால் நன்றாகவே உள்ளது. இல்லையேல், "பேச்சு" என்பதும் "வார்த்தை" என்பதும்
தொடர்பு உடையவை என்பது சொல்லாமலே புரியும். பேச்சு  (talk)   வார்த்தை, (word).  vaarththal - moulding. Figuratively speaking, all words are moulded.
இது நிற்க!

பேச்சுகளின் முடிவில், அறிக்கை வெளியிடுவார்கள். அறிக்கை வெளியிடப் படாத பேச்சு, பெரும்பாலும் பயனற்றதாக இருக்கலாம். அல்லது
பின்னொரு நாளில் மீண்டும் கூடுவதாக இருக்கலாம்.

பேச்சு முடித்து அறிக்கை > முடித்து அறிக்கை > முடித்தறிக்கை > முடிச்சறிக்கை > முச்சறிக்கை.

முச்சறிக்கை>  முச்சலிக்கை > முச்சலிக்கா

Note:
வாய் > வார் > வார்த்தை என்பதும் கவனிக்கத்தக்கதே ஆகும்.
வாய் இடமென்றும் பொருள். வார்த்தல் ‍ ஓர் அமை‍ப்புள்ள இடத்தில் இடுதல். அமைத்தல்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

chengkOl

chengkOl

மன்னவன் செங்கோலே காரணமாக....
“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்” (543)

என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார்.
Cited above: a Question posed.

இந்தக் கருத்தின்வழி சென்றால், மன்னவன் செங்கோலின் வல்லமையே, அந்தணராவாரின் சாதியமைப்பிற்கும் அவர்கள் மக்களிடையே அடைந்த மேனிலைக்கும் காரணம் என்றாகிறது. நேரடியாகக் கூறினால், அந்தணர் என்பாரை அரசர்களே உண்டாக்கி, மன்பதையினுள் நடமாட விட்டனர் என்றாகிறது....

இதைத்தான் வள்ளுவர் கூறினார் என்கிறீர்! So, it was the second jati (kings) who created the first jati (anthaNars), as per this research.

எந்த அரசர் ஆட்சியில் அந்தணர்கள் நிறுவப்பட்டனர் என்று கூறுங்களேன் கேட்டு இன்புறுவோம்....

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............
திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............

இருந்தால் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான்.இது கடைச்சங்கத்தின் இறுதி நிலையில் என்பர் அறிஞர் சிலர்...கடைச்சங்க காலத்தில்தான் சாதிகள் உருப்பெறத் தொடங்கின என்றும் வேறு சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இவைபோன்ற சாதிக் குறிப்புகள் சங்க நூல்களில் இருந்தால் அவை இடைச்செருகல்கள் என்பாருமுண்டு. சாதிகளை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு வரலாற்று அடிப்படை மிகமிகத் தேவையாய் இருந்த காரணத்தால், இங்ஙனம் முனைவதும் மனித இயற்கைதான். கற்பாருக்குத்தான் கன மதி தேவை.

சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலை நிறுவிய ஞான்று, கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் வந்திருந்தான். அது கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்று நிறுவப்பட்டுள்ளது. கயவாகு என்று பல மன்னர்கள் இருந்ததால், பிற்காலத்துக் கயவாகுவைத்தான் இளங்கோ குறித்தார் என்று சிலர் வாதாடத் தொடங்கினர். எப்படியும் சங்க காலத்தை பல நூற்றாண்டுகள் பின் தள்ளிவிட வேண்டுமென்பது இவர்கள் துடிப்பு.
வள்ளுவர் இளங்கோவுக்கு முந்தியவர். இப்போது குறிக்கப்பெறும் திருவள்ளுவராண்டு, சரியானதென்று தென்கலைப் பெரும்புலவர் சாமிநாத ஐயரும் ஏற்றுக்கொண்டுள்ளார். 
பிற்காலத்துச் சமண சங்கம் வேறு. முன்னிருந்த முச்சங்கம் வேறு



பிராமணத் தன்மை

சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி..........
“ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “
சரிதான், மறுக்கமுடியாத உண்மைதான், ஆனால் உம் முன் நிற்பவனொருவன், சொந்தப் பட்டறிவும் பிரம்மம்சார் உணரறிவும் உடையானென்று நீர் எப்படி அளவிட்டறிவீர்? அதனால்தானோ, அப்பன் பிராம்மணன் என்றறியப்பட்டு, இப்போது பூணூலணிந்து கோவிலில் மந்திரமோதுவோனே பிராமணன் என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட்டனர்....

People are just being practical about it.
If you go by certain criteria, even an Imam or a Catholic priest can be a Brahmin, though not a member of the Brahmin caste, as you yourself seem to come to realise. So, as per you, was VaLLuvar adverting to a member of a Brahmin caste (if existed then in present rigid form) or one who is Brahmin by certain qualities? If it is the latter, there is no need to feel so disappointed at kuRaL commentaries that leave out or differently interpret "paarppaan","anthaNar" etc.,
You agree that these words do not have a single meaning. Shall we call them multi-purpose words? Why work so hard on these terms...?

These were replies given to queries. 
.