செவ்வாய், 3 ஜூலை, 2012

அவல்.




"அவலாகு ஒன்றோ மிகையாகு ஒன்றோ" என்பது ஔவையாரின்  பாடல் வரிகள். புறம் 187

(இப்பாடலையும் அதன் பொருள் விளக்கத்தையும் இந்த  முன் இடுகையில் காண்க:   Pl see April 2012 collections. for this poem by Avvaiyar,  -> below   )

அவல் என்பது மலைப்பாங்கான இடத்துக்கு எதிரான பொருளில் இப்பாடலில் வருகிறது. மலை என்ற சொல்லுக்கு மடுவு என்பதுபோலவும், மேடு என்பதற்குப் பள்ளம் என்பது போலவும் எதிராக உள்ளது.

அரிசியிலிருந்து செய்யப்படும் அவல் என்பது வேறு.

அழு > ஆழ் > ஆழம்.
அழு > ஆழ் > ஆழ்தல்.
அழு > அழுந்து.
அழு > அழுந்து  > அழுந்துதல்.
அழு > அழுவம்.

  azuvam 1. depth; 2. pit; 3. deep sea; 4. expanse; 5. jungle, forest; 6. country, district; 7. battle; 8. middle; 9. abundance, copiousness; 10. greatness, excellence; 11. fortress

அழு > ( அழுவல் ) > அவல்.

எனவே, "ழு" இடைக்குறைந்து, அவலாயிற்று

இதில், அழுவம் என்பதனோடு ஒப்பிட்டு, அழுவல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இனி, அழு  > அழுவு > அவு >  அவல் என்றும் இதனை உணர்ந்துகொள்ளலாம்.

திங்கள், 2 ஜூலை, 2012

Sivamala on Sanskrit cited,

Urban Dictionary.com citing Sivamala on Sanskrit.

You may read this article:

http://www.urbandictionary.com/define.php?term=sanskrit&defid=2459636,

" ..that between the languages of Southern India and those of the Aryan family there are many deeply seated and radical affinities; that the differences between the Dravidian tongues and the Aryan are not as great as that between the Celtic for instance and the Sanskrit. "

----G.U.Pope



வாழ்த்துக்கள்



கவிகள் தந்த இரு நண்பர்களுக்கு வாழ்த்து.

இருவரின் கவிகளும் இனிமை
இனிமைத் தமிழ்ச்சுவைத் தனிமை!
தனி-மையோ எழுதுங்கால் வடிந்து--ஒரு
வடிவான தேனாச்சு முடிந்து.

முடிச்சினில் பொதிதிரிப் பருப்பு,
பருப்பினில் சருக்கரை கலந்து,
கலந்ததைக் காய்ச்சினீர் பாகாய்,--அந்தப்
பாகினைப் பாவலர் நோகார்!

நன்கு முயன்று எழுதியுள்ளீர்கள். சுந்தரராசு அவர்கட்கும் சின்னக்கண்ணனுக்கும் வாழ்த்துக்கள், இனியும் பாடுங்கள், கேட்போம்.

பொதி = பொதிந்த; திரி = முந்திரி. நோகார்= விரும்பாமல் இரார்.
வாழ்த்துக்கள் எனலாகாது என்பர் அறிஞருள் ஒரு சாரார். இருவகையிலும் எழுதலாம் என்பதே  எமக்கு உடன்பாடு.