செவ்வாய், 11 அக்டோபர், 2011

BIRTH DEFECTS

உடற்குறை ஏதுமின்றி -- இந்த
உலகிற் பிறந்துவிட்டால்,
தவக்குறை இல்லையென்று - நாம்
தனிமகிழ் வெய்திடலாம்.

வலிப்பு வளிமுடக்கு --இவை
வந்து துயர்படுவார் -- தமை
நினைப்பினும் நெஞ்சுமிக --ஒரு
நிகரிலாத் துன்புறுமே

பிறவியில் ஓர்சிறுவன் -- அவன்
பிற்பட இக்குறைகள்,
இறைவன் நிறுவினனோ --அதற்கும்
யாதுரை காரணமோ?

வளி - வாயு. முடக்கு - கைகால் முடக்கு.

பாவம் கழுதை

பாவம் கழுதை பளுதூக்கும் நோவதனால்
ஆவ தறியாமல் கீழ்விழுந்து --- கேவிப்
புரண்டெழுந்து கத்துமோ போம்கதி எண்ணி
மிரண்டநிலை மீளுமோ தான்.

This was a response to Mr Chinnakannan wrote:

Quote Originally Posted by chinnakkannan View Post
உடல் வலி தான்.. குப்பை கூளங்களில் கழுதை புரண்டுபார்த்ததில்லை..வைகை ஆற்று மணல் வெளியில் புரண்டு பார்த்திருக்கிறேன்.. கூடவே இலவசமாய் இனிய கானமும் இசைக்கும்..!






.

திங்கள், 10 அக்டோபர், 2011

amiz > tamiz

குமரிமுனைக்கும் தெற்கே குமரிநாடு இருந்ததாகத் தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன. சமஸ்கிருத நூல்களிலும் புராண நூல்களிலும் குறிப்புகள் உள்ளன என்பர். இது குமரி(க்) கண்டம் என்றும் அறியப்படுகின்றது.இதை மறுப்பவர்கள் சிலரும் உள்ளனர்.

ஆய்வாளர் சிலர், தமிழ் என்ற மொழிப்பெயர், அமிழ் என்ற சொல்லினின்றும் பிறந்ததாகக் கூறுகின்றனர். குமரி அமிழ்ந்து போயிற்றன்றோ? அமிழ்ந்துபோன நாட்டவரின் மொழி என்ற பொருளில் இங்ஙனம் அமைந்ததாம். தமிழ் என்ற சொல் தோற்றம் பற்றி வேறு கருத்துக்களும் உள்ளன.

உயிர்முதலாகிய சொற்கள் உய்ர்மெய் முதலாகத் திரிதலை முன் இடுகைகளீல் எடுத்துக்காட்டி யுள்ளேன். Pl see http://bishyamala.wordpress.com/2011/10/11/

அமிழ் என்பதுதான் தமிழ் என்று திரிந்து மொழிப்பெயர் அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள இயலுமாயின், இத்திரிபையும், மேற்குறித்த சொல்லமைப்பு விதியின்பால் அடக்கிவிடலாம்.

தெலுங்கு என்ற மொழிப்பெயர் அமைந்ததற்கு பலவாறு ஆய்வாளர் கூறுவதுபோல, தமிழுக்கும் பல கூறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.