கொழும்பில் தமிழர்கள் எண்ணிக்கை கொண்டால்
அழும்புசெய் வோரை அடக்கிடலாம் --- விழும்புலிகள்
சேர்ந்தியங்கும் செய்கைபச் சேசொன்னான் இவ்விதம்!்
ஊர்ந்துவரும் இன்னல் உருக்குலையும்--- தேர்ந்தமொழி
இந்தவொரு கட்டளை என்றுகை தட்டினர்!
தந்தேய மக்கட்கோ இந்தவிடர்? --- சொந்தமற?
இந்த இடர்களை ஏற்படுத்தல் கூடாதென்(று)
எந்தப் பெருநாட்டின் தோழரும் --- முந்திவந்து
சொல்லவே இல்லையோ! சோர்வுறுத்தும் சோகமே!
அல்லதைச் செய்யும் அகத்தியமும் -- இல்லையன்றோ
நல்லதைச் செய்தந்த நாட்டை நடத்தினால்?
மெல்லவே மேவும்நாள் எந்நாளோ!---நல்லறிவும?்
செல்லக் கிளி நீயே சொல். ் (13 lines).
குறிப்புகள்:
அகத்தியம் = அவசியம்.
இது இந்தச் செய்தியைப் பற்றிய பாடல்: Census of Tamils in Colombo.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
புதன், 8 அக்டோபர், 2008
வியாழன், 2 அக்டோபர், 2008
A bird in agony: நண்பரை இழந்த துன்பம்...
நல்ல கனிமரமே - அதில்
நானொரு சிறுபறவை.
சொல்ல வொணாஇன்பம் - ஒரு
சோர்வின்றி இருக்கையிலே,
அந்தப் பெருமரமும் -- அதன்
அடியொடு தொலைந்திடவே,
நொந்து விழி நீரே -- உகுத்து,
வேதனைக் கடல்வீழ்ந்தேன்.
சுற்றி இருந்தவையாம் -- நல்ல
சுறுசுறுப் புடன்பறக்கும்,
உற்றஇன் நட்பினரை -- நான்
முற்ற இழந்துழந்தேன்.
என்றவற்றைக் காண்பேன்? -- நான்
எங்கு பறந்துசெல்வேன்?
வென்ற மனிதர்களும் -- எனை
விரட்டி அடிக்குமுன்னே!
நானொரு சிறுபறவை.
சொல்ல வொணாஇன்பம் - ஒரு
சோர்வின்றி இருக்கையிலே,
அந்தப் பெருமரமும் -- அதன்
அடியொடு தொலைந்திடவே,
நொந்து விழி நீரே -- உகுத்து,
வேதனைக் கடல்வீழ்ந்தேன்.
சுற்றி இருந்தவையாம் -- நல்ல
சுறுசுறுப் புடன்பறக்கும்,
உற்றஇன் நட்பினரை -- நான்
முற்ற இழந்துழந்தேன்.
என்றவற்றைக் காண்பேன்? -- நான்
எங்கு பறந்துசெல்வேன்?
வென்ற மனிதர்களும் -- எனை
விரட்டி அடிக்குமுன்னே!
செவ்வாய், 30 செப்டம்பர், 2008
| ||
Back to top |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)