செவ்வாய், 30 செப்டம்பர், 2008

உலவத் துணை


இனிய தென்றல் வீசி எனைத்
தாலாட்டுதே...
என் தனிமை இன்பத்திற்கு அது
ஒரு மெருகூட்டுதே.

காணும் அழகு அனைத்தையும்
நான் ஒருத்தியே சுவைத்து நின்றேன்

சூடும் குளிரும் மலையும் கடலும் எதனிலும்
மனமே நிலைத்து நின்றேன்.

அன்னை இயற்கையின் அழகினில் களித்திட
இன்னொரு துணையும் வேண்டுவதோ?
என் தனிமைக் கோட்டினைத் தாண்டுவதோ!

துணையும் வேண்டுமெனில்
துணை நீ மெல்லிய பூங்காற்றே....
உலவிடுவேன் உன்னுடனே.
நிலவிடும் தனிமை மாறாமலே.

_________________
B.I. Sivamaalaa (Ms)
Back to top
View user's profile

செவ்வாய், 10 ஜூன், 2008

சாவின் பொருட்டுச் காண்நடபடி

சாங்கியம்

சாத்திரம் என்ற சொல் சா என்ற அடிச்சொல்லிலிருந்து
தோன்றியது போலவே சாங்கியம் என்ற சொல்லும்
சாவின் பொருட்டுச் செய்யப்படும் காண்நடபடிகளைக்
முதலில் குறித்துப் பின் அவைபோலும் உயிருள்ளோருக்கு
இயற்றபப்டுவனவற்றுக்கும்  புழங்கப்பட் டதென்பதை எளிதின் உணரலாம்.

மதங்களும் கடவுட் கொள்கைகளும் சாவின் தன்மை அல்லது திறம் உணரப்புறப்பட்ட மனிதன் நாளடைவின்
மேற்கொண்டவை என்பது மனிதவளர்ச்சி நூலாரின்
கொள்கையாகும்.  வரலாறும் அஃதே.

சா+கு+ இ + அம்.

இ அம் என்பன விகுதிகள்.
கு சொல்லமைப்பு இடைநிலை.
ங்கர ஒற்று:  மெலித்தல் எழுத்துப்பேறு.

வாந்தி என்பதில் ந் என்னும் எழுத்துப்பேறு போல்வதே.