சனி, 12 டிசம்பர், 2015

புத்திரி etc

மகள் என்பது குறிக்கும் புத்திரி,  மற்றும்  ஆண்பால் புத்திரன்,  பலர்பால் புத்திரர்  முதலியன  தமிழில் வழங்கும், இவற்றைத் தமிழாக ஏற்றுக்கொள்ளவில்லை   தமிழ்ப்புலவர்.

இவற்றின் அடிச்சொல்லைக் கண்டு பிடிப்போம்.

புதல்வன் என்பதன் அடியை முன் இடுகையில் ஒரு பத்தியில் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_63.html

இதுவும் அதே புது என்னும் அடியினின்று வருவதே.

புத்திரி புதியவளாக  வந்து இருப்பவள்.  அதாவது   குடும்பத்தில்   பிறந்து  புதிய உறுப்பினளாய்  இவ்வுலகில்  வந்தவள்-.   தாய்  தந்தையர்  முன்னரே தோன்றிப்   பழமை எய்திவிட்டவர்கள். முதலில்  பிறந்த குழந்தையைக்  குறித்துப்  பின் வளர்ச்சி பெற்றுப்  பெரியவர்கள் ஆனோரையும் குறித்தது இச்சொல்.  

புது + இரு + இ =  புத்திரி.  ( தகரம் இரட்டித்தது. )
புது + இரு + அன் =  புத்திரன் .
புது + இரு+ அர்  = புத்திரர்.  

இரு என்ற சொல்லை இடையில் செருகி அமைந்த இன்னொரு சொல்:

நம் + புது+  இரி =  நம்பூதிரி.

இதில் பூதிரி  என வந்தது  முதலெழுத்து நீண்டதனால். 

முதனிலை திரிதல் தொழிற்பெயரிலும் பிற பெயரிலும் வரும்,,

புத்திரி  என்ற சொல் மலாய் மொழியிலும் உள்ளது.  அங்கு அதற்கு "இளவரசி " என்று பொருள்.  பல மொழிகளிலும் புகுந்துள்ள இந்தப் புத்திரச் சொல்லை அமைத்து வழங்கிய  பெருமை தமிழினது ஆகும் . 

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பிற மதங்களும் சிவஞானமும்

முன் இடுகையிலிருந்து  தொடர்வோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_11.html


இதனைச் சிறிது ஒப்பாய்வு செய்வோம்.


இஸ்லாமிய மார்க்கத்திலும் கிறித்துவ சமயத்திலும்கூட,   ஆன்மா இருப்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது,   ஆனால் இந்து மதத்துக்கும் அவைகட்கும் ஒரு வேறுபாடு உண்டு,     அவற்றின் கூற்றுப்படி  ஒருவன் பிறக்குமுன் அவன்தன்  ஆன்மா இருக்கவில்லை.  அவன் பிறக்கும்போதுதான் அவன் ஆன்மாவும் உண்டாகி அவனுள் இருக்கத் தொடங்குகிறது.முன்பிறவி  இல்லையாகையால், முன் அவன் ஆன்மாவும் இல்லை.


அவன் இறக்கும்போது, அது அவனைவிட்டுப் போய்விடுகிறது. எங்கு போயிற்று என்பது தெரியவிட்டாலும்,  இறைவனிடம் சென்றுவிட்டது என்பர் அம் மதத்தினர்.


இந்து மதத்தில் நம் ஆன்மா முன்னும் இருந்தது. பின் இந்த உடலை எடுத்தோம். இதைப் பிறவி என்றும்  சென்மம்  (ஜென்மா)   என்று,ம் கூறுவர்.  இந்த உடலை விட்டுச் சென்றுவிட்டபின்னும் இருப்போம்.  ஆன்மா என்றும் இருப்பது.  கடவுளும் என்றும் இருப்பவர்.    இதில் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ளதோர் ஒற்றுமை.தெளிவுபடுகிறது .


கடவுள் என்பவர் பெரிய ஆத்மா.  நாமோ சிறிய துண்டு ஆதாமாக்கள். எப்படித்  துண்டுகள் ஆனோம்?  அதை வேறொரு சமயத்தில் சொல்வோம்


We shall also look at the Christian concept of purgatory  later. 

சிவஞான போதத்திலிருந்து...(பாடல் 2)

இப்போது சிவஞான போதத்திலிருந்து ஒரு பாடலைக் கண்டு
இன்புறுவோம்,

இது அந்நூலின் இரண்டாவது பாடல்.

அவையே தானேயாய் இரு முதலின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.   (2)

அவை என்றது:  உலகில் உள்ளவற்றின் தொகுதியை.
தானேயாய் :  (அவை அனைத்தும்) தானேயாக  
நீக்கம் இன்றி:  வேறுபடாதவாறு.
நிற்கும் :  நிலவும், இயங்கும் என்பது.

போக்கு என்றார் இறப்பினை,
வரவு:  பிறப்பு.

இரு முதலாவது நன்மை தீமை அல்லது நல்வினை தீவினை.
இருமுதலின் ‍-  நல்வினை தீவினை ஆகிய காரணங்களால்.

ஆணையின் : என்பது இறைவனின் ஆற்றலினால் என்றற்கு 

. தானவ னாகிய தற்பரந் 2தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை யுயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே..    2134   

என்பது  திருமந்திரம்.

அவையே  தானேயாய்  என்ற போதப் பாடலினோடு ஒப்பிடுக.   2தற்பரம்   என்பது  தானே பரமென்று  உணர்தல்.   தன்  + பரம் = தற்பரம்.    பர + அம்  =  பரம்.  எங்கும்  பரந்து  நிற்கும் இறை .

பிறந்த குழந்தையைப் புதுவரவு என்றும் கூறுவதுண்டு.  புதல்வர் என்பது இக்கருத்தில் அமைக்கப்பட்ட சொல் ஆகும்.  புது + அல் + வு + அர்   =  புதல்வர் .  இங்கு  அல்.  வு. அர்  மூன்று விகுதிகள் புகுத்தப் பட்டுள்ளன  இந்தப் பாடலில் வரவு  என்பது புதுவரவு  போன்ற கருத்தமைப்பே  ஆகும், பேச்சிலும் போய்விட்டார் என்பது இறப்பு  குறிக்கும்,    தொடர்ந்து நடைபெறுவதால் போக்கு வரவு என்றார்.

இவ்வுலகின் அனைத்தும் இறையாகிய அவனே ஆகி  நீக்கம் அற நின்று   தன்  ஆற்றலினால் இருவினைகளின் பயனாய்ப்  பிறப்பினையும் இறப்பினையும் நிகழ்த்துகின்றான் என்றபடி.  ஆணை என்பது ஆற்றல் .
நீக்கமற  நிறைந்திருக்கும்  பரிபூரணானந்தம்  என்று இறைவனைப் போற்றினார்  தாயுமானவரும் 

அன்றே  :    இது அசைச்சொல்.  ( இடம் நிரப்பிப்  பாடலை  நிறைவு செய்துவைக்கும் சொல். )   அல்லவோ   அல்லோ என்பனபோல்.   கேட்போனின் இசைவை  வெளிக்கொணரப் பயன்படுத்தப்படும்  சொல் எனினும்  அது,  

இது  தொடர்[பான கருத்துகள் சில  அடுத்த இடுகையில்  காண்போம்,

ஆன்மா  அல்லது ஆத்மா பற்றிப் பேசுவோம்   .