வெள்ளி, 16 மே, 2025

சிவமாலாவின் சிறப்பு சேமிப்பு (saving)

Date of photo:   1965 after wedding.  The uniform then  in use among others for this rank was  that  of a probationary inspector wearing  two Maltese crosses.  


https://www.maltauncovered.com/malta-history/maltese-cross/
Introduced to Malta by the Knights of St. John of Jerusalem upon taking possession of the islands in 1530.

வியாழன், 25 ஏப்ரல், 2024

பணம் சேமிக்கும் வழிகளில் ஒன்று.

 கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால்

காற்றின் ஓட்டம் மிகுமே!--- நீர்

மிதவை போலும்  வருமோர் இன்பம்

மெத்த மகிழ்வே தருமே--- குளிர்

உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில்

ஒண்மின் ஆற்றல் குறுகும்---நாளைச்

சிதைவில் திறத்தில் செலவும் குன்றிச்

சேமிப் பாகும் பணமே.



உரை:

கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால் காற்றின் ஓட்டம் மிகுமே!--- கதவைக் கொஞ்சம் நீம்பலாக வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்துகொண்டால்  காற்றோட்டம் ஏற்படும்;  நீர் மிதவை போலும்  வருமோர் இன்பம் மெத்த மகிழ்வே தருமே--- படகில் செல்வதுபோல் காற்றின் இன்பம் மகிழ்ச்சியைத் தருகிறது; குளிர் உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில் ஒண்மின் ஆற்றல் குறுகும்--- குளிரூட்டி ( ஏசி) மின்சாரத்தை எடுத்துக்கொள்வது குறைந்துவிடும்; நாளைச் சிதைவில் திறத்தில் செலவும் குன்றி சேமிப் பாகும் பணமே -  மின்சாரக் கட்டணச் செலவு குறைந்து பணம் சேமிப்பு உண்டாகும்

என்றவாறு.

வாயு என்ற சொல்லின் பொருளகற்சி.

 ஆரியன் என்ற சொல் தமிழ்ச்சொல்,  அஃது ஆர்தல்,  பொருள்:  நிறைதல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பதை முன்னர் சொல்லியுள்ளோம். ஆனல் வரலாற்று ஆசிரியர் சிலர் இச்சொல் எங்கிருந்து வந்தது என்று அறிந்தர்களில்லை. ஒருவேளை arable என்ற சொல்லோடு தொடர்பு உளதோ என்று அயிர்த்தனர். ( சந்தேகப்பட்டார்கள்). இந்தச் சொல்லும் "ஏர்"  ( ஏர் உழவு) என்ற தமிழ்ச்சொல்லுடன் தொடர்புடையது. சுமேரியா முதலிய இடங்களிலும் தமிழ் வழங்கியுள்ளபடியால்,  அங்கிருந்து தமிழ் பரவுவது எளிது.  ஆனால் ஆரியன் பற்றிய வரலாற்று  ஆய்வுகளில் ஆரியர் என்போர் நாடோடிகள் என்று கூறப்பட்டுள்ளதால்,  அவர்கள் ஏர் உழுதனர் என்று கதை எதுவுமில்லை.  ஆரியன் என்பது ஒரு தமிழ்ச்சொல். இதைத் தமிழ் மூலமாகவே அறியவேண்டும்.

வாயு என்பது தமிழ்ச்சொல் ஆகும். இது சங்கப்பாடல்களில் இடம்பெறவில்லை என்று கூறினாலும், இது வாய் என்பதனடியாக எழுந்த சொல். வாயினால் ஊதுவதுதான் வாயு என்னும் காற்று. பின்னர் நிலத்திலிருந்து எழுந்து வெளிப்படும் காற்றும் வாயு என்று பொருள்விரிவு கண்டது.

உ என்பது முன்வருதல் குறிக்கும் சுட்டடிச்சொல்.

https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_6.html

சொடுக்கி வாசித்து அறிக.

வாய் என்பதற்கு இடம் என்ற பொருளும் உண்டு, எவ்விடத்திலும் வரும் காற்றையும் வாயு என்பதில் பொருள் மாறுபாடு எதுவும் நேர்ந்துவிடாது.

வாயூது என்பதன் இறுதி எழுத்து மறைந்த சொல்லாகக் கருத ஏற்புடைமை உளதாதல் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.