ஆளை இங்கு அணை அம் என்ற சொற்களை அல்லது வாக்கியத்தைத் திரித்து இணைத்தாலும் ஆலிங்கனம் என்ற சொல் வந்துவிடும். இவ்வாறு இணைக்கும்போது உட்பகவுகளைத் திரிக்காமல் இருத்தல் இயல்வதில்லை. ஆளை என்பது ஆலை என்று மாறிவிடும். இங்கு என்பதை இணைக்கையில், ஆலை + இங்கு > ஆல்+இங்கு என்று மாறி, ஆலிங்கு என்று வரும். ஐகாரக் குறுக்கம் என்பது தொல்காப்பியத்தில் சொல்லப்படுகிறது.. பண்டைக் காலத்தில் கவிதைகளே பெரும்பாலும் எழுதப்பட்டன. ஐயை என்ற சொல்லுடன் ஐ என்ற வேற்றுமை விகுதியைப் புணர்த்தினால், பலுக்கும்போது ஐயயை என்று ஒலித்து, நடுவு இடத்து யை என்பது ய என்றாவது காண்க. இவண் ஆளை இங்கு என்பது ஆள்+ இங்கு என்றாகி ஆளிங்கு > ஆலிங்கு என்றாம்.
இனி அணை என்பது அனை> அன் என்று ஐகாரம் முற்றும் தொலைந்துவிடும். இவ்வாறு ஐகாரம் வீடுற, அனம் என்று வருதல் எளிதாம். ஆகவே ஆல் இங்கு அன் அம் என்று தோற்றமுற்று, ஆலிங்கனம் என்று எளிதாம் என் க.
இது இன்னொரு வகையிலும் உருவாக்கம் பெறலாம். இது முன் எழுதப்பட்டது. அதனை ஈண்டு காண்புறுவீர்.
ஆலிங்கனம் என்பதற்கு இன்னொரு முடிவு:
https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_28.html
இந்த இடுகையைச் சொடுக்கி, இன்னொரு வகை விளக்கத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக