வியாழன், 24 ஏப்ரல், 2025

அயலாருடன் ஒத்துப் போதல்

 அயலாருடன் ஒக்க இருப்பவன் அயிர்ப்புக்கு ( சந்தேகத்துக்கு) உரியவனாய்  அறியப் படுதலும் உண்டு.  அதிலும் அயலார் எதிரியாயும் இருந்துவிட்டால் இது உண்மையாகவே ஆகிவிடும் எனலாம்.

அயல் + ஓக்கு+    இ+அன்

(இங்கு அயல் என்பதில் உள்ள லகர ஒ ற்று  வீழ்கிறது.   அய என்றாகி வரு பகவுடன்  இணையும். ஒ க் கு ( த ல் )   என்ற  வினையில் முதனிலை நீ.ண்டு  ஓ க் கு  என்றாகும்.  இயன் - இங்கு உள்ளவன்.

அயலாருடன் ஒத்தவனாய் இங்கு நடப்பவன் என்று இதற்குப் பொருள் உரைக்க. உள்  ஊருக்கு  ஒத்துப் போகாது செல்பவன்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்க.




 

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

சரண்யா - யா இறுதி

 பெண் மக்கள் பெயர்களில் யா என்னும் இறுதி எவ்வாறு  ஏற்படுகிறது என்று அறிந்து கொள்வோம்.

சரண் என்ற ஆண்மகனின் தாய் அல்லது  "ஆயா" வை சரண் ஆயா என்று அழைப்பீர்கள். இப்படிச் செய்ய மனிதற்கு முயற்சி தேவைப் படுகிறது. இத்தகு கூடுதல் முயற்சிகளைக் குறைத்துக் கொண்டு சொல்ல வருவதை விரைவில் முடிக்க வேண்டியது அன்றாட வாழ்க்கையில்  முதன்மை யாம். செய்யத் தகுந்தவற்றைச் செய்யக் காலம் தாழ்த்தல் கூடாது. அத னால் சொற் சுருக்கம் தேவை யானதே. சொற்கள் சில சுருக்கத்தில் அழகுறுகின்றன.

சரண் ஆயா என்பது சரண்யா என்று சுருங்குகின்றது.

இதுவேபோல் சுகன்யா என்பதும் சுருக்கமே.

நீட்டங்கள் இல்லாமல் சுருக்கங்களே மிக்கு நின்ற மொழிகளும் உலகில் உண்டென்று கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்ந்துகொள்க.





 செய்ய




 அழைக்கும் அழைக்க  முயற்சி தேவைப் படும். இதைத் தெளிவுய்யன்ப

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

திராவிடம்

 இந்துச் சொல்லைப் பற்றிச் சிந்தித்த காலை முன்னே நாம் சில கூறி இருக்கிறோம். பஞ்ச திராவிடம் பற்றியும் சில சொன்னோம்.

இவை இருக்கட்டும்.

ப ஞ் ச. திராவிடமும் பற்றி யாரும் அக்கறைப் பட வில்லை.

Conic projection. என்று சொல்லப்பட்ட தென்னாட்டு  நிலப்பரப்பு  உண்மையாகவே ஒரு தி ற ப்பான  முக்கடலையும் அப்பால் ஒரு மா கடலையும் கொண்ட  புவிப் பகுதியே. திற ந்த இந்த இடம்    "தி  ற இடம"ல்லாது வேறு  என்ன ?  இடப்பெயர் இனப்பெயர் அல்ல. (அன்று)

தமிழன் வைத்த  வாய் மொழிப் பெயர் தான்.  ஒப்புக் கொள்ள  முடியவில்லை.  இதை மறைக்க முன்னரே முயற்சிகள் மேற்கொண்டிருப்பர்.  அது பலித்ததோ இல்லையோ,  அது  பிராமணர்களுக்குரிய பெயரும்  ஆனது   இப்போது அந்தச் சொல்லுக்குப்  பல சொந்தங்கள்.

திறந்த கடல் முப்புறமும் கொண்ட திறவிடம்.  திரவிடம் திராவிடம் என்று எப்படியானாலும் உண்மையை மட்டும் மறைக்கமுடியவில்லை.

இடம் என்ற இறுதிச் சொல் இன்னும் உயிரோட்டத்துடன் மிளிர்கிறது.

 அது இடப்பெயர்தான்.   சம்ஸ்கிருதம்  தமிழெல்லாம்  இந்தியத் தாயின் மொழிகள்தாம்,  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.












புதன், 16 ஏப்ரல், 2025

புதல்வன்

 மகன், மகள், மக்கள் என்று ஒருமை (ஆண்)- ஒருமை (பெண்) -  பன்மை ( இரு பாலாரும்) என இருந்தாலும் புதல்வன்,  புதல்வி ,புதல்வர் என ஆண்பால் பெண் பால் பலர்பாலாகவே இந்த அமைவுகள் வருகின்ற -ன.  குழந்தை, பிள்ளை மதலை, மழலை முதலிய சொற்கள் ஐ விகுதி பெற்று  முடிகின்றன. பொதுப்பால் என்ற பகுப்பினை நூல்களில் காணா விட்டாலும் இவை வெவ்வேறு கூ றுபாடுகள் உடைய பொதுச்சொற்கள் தாம். இவற்றிடையே பகவொற்றுமை  ( uniformity) காணலாம். 

புதிய வரவாக வந்த குழந்தைதான் புதல் வன் அல்லது புதல்வி எனப்பட்டது. புதுமை குறிக்க புது என்ற சொல் இருப்பதைக் கண்டுகொள்க.  

அல் எனல் அது  இடம் எனலே.

இன்னொரு முறையில் கூறுவதானால் இல் எ ன்பது இந்த இடம்,  அல் என்பது அந்த இடம். இடம் இது என்பது இல். இடம் அது என்பது  அல். இடம் முன் என்பது உல்.

ஆகவே இல் என்பது இது என்று சுருக்கிக் கூ  றலாம். இல் - வீடு மற்  றொரு  பொருள் 

புதல்வன் என்ற சொல்லை புது + அல் +வு + அன் என்று பிரிக்க வேண்டும். புது அல் வு இ என்பதும் இதனாலே பெறப்படும். புதல்வர் - அர் விகுதி. இதன்  அடி "புது" என்பதறிந்தீர்.

புகு என்னும் சொல்லும் புது என்பதுடன் தொடர்புடையதே என்க. புதியன புகுதல் என்னும் வழக்கினையும் காண்க

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்ந்துகொள்க. வணக்கம்.


வெள்ளி, 11 ஏப்ரல், 2025

சொல்லாக்கத்தில் கருத்தொற்றுமை - வயது, அகவை - Tamil, Sanskrit

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள ஆக்கப்பட்ட சொற்களில் உருவாக்கல் நிலையில் காணப்படும் கருத்தொற்றுமைகளை ஆங்காங்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.  சிலவேளைகளில்  வெளிப்படையாகக் காரணம் கூறவில்லை. வேறுசில இடங்களில் கூறியுள்ளோம்.  இப்போது இன்னொரு முறை இங்குக் கூறுகிறோம்.  சொல்லாக்கத்தில் கருத்தொற்றுமை என்று ஒரு நூலே எழுதலாம்.  எழுதிவைத்ததைப் படித்து அறிவு பெறுதலோ அல்லது எதிர்த்து நிற்றலோ  பலரும் ஈடுபடாத ஒரு துறையாகும். சில கட்டங்களிலும் பொருட்களிலும் எதிர்த்து நிற்றல் முதலியவை,  தாமே உருவாகி வந்தவை அல்ல. 

பரப்புடரைகளினால்  கவரப்பட்டவர்கள்  உள்ளுந்துலால  மேற்கொண்ட நடவடிக்கைகளே  ஆகும்.

அகப்பட்டுக்கொள்வது  அகவை.  வயப்பட்டு மூப்பதும் மாய்வதும் வயது.   அகவை என்பதில் வை என்பதும் விகுதி.  அகம் என்பது  உள்ளமைவு குறிக்கும் பகுதி  அல்லது பகவு ஆகும். இந்த இரு கருத்துக்களிலும் ஒற்றுமை காணப்படுகிறேதே! இவ்வாறு ஒன்றிரண்டு ஒன்ற்றுமைகள் மட்டும் இருந்திருந்தால் இரண்டு மொழிகளும் ஒரு களத்தில் தோன்றியவை என்று கூறமுடியாது.  ஆனால் பலகாலும் இவ்வொறறுமை மேலெழுந்து வருகிறது என்றால் இரண்டு மொழிகளும் ஒரு களத்தினரால் உருவாக்கப்பட்டவை என்று முடிபு கொள்ளுதல் எளிதானதே.

நீங்கள் இங்குக் கூறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்தாக்கி, இதை ( ஒற்றுமைக் காட்சியை )  வெளிக்கொண்டு வந்து மக்கள் பயனுறச் செய்யலாம்.

வயப்பட்டவன் அவன் வயப்பட்ட இடத்தில் அகப்பட்டுக் கொள்கிறான்.  வயது அப்படிப்பட்டதுதான்.  காலக் கடப்பில் நாம் மாட்டிக்கொள்கிறோம்.  வயதை வென்றவனும்  அகவையை வென்றவனும் எவனும் உலகில் இல்லை. எல்லோரும் நேரம் வரும்போது காலமாகி மறைந்துவிடுகிறார்கள்.

அகவையும் வயதும் எல்லா உயிரற்றவைக்கும் உயிருள்ளவைக்கும் பொதுவான கருத்துக்களன் ஆகும்

நம் முடிபு  தமிழும் சமஸ்கிருதமும் ஒரு களத்தில் தோன்றியவை ஆகும்.

இதனை ஒரு மொழிநூற் கருத்தாகவும் சொன்னூல் ஆய்வாகவும் முன் வைக்கிறோம்.

அறிக மகி

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




செவ்வாய், 8 ஏப்ரல், 2025

தர்சனம், தரிசனம், தர்சனை,

 தெரிதல் என்பது தனித்தமிழ்ச் சொல்..  இதற்கும் தெள்> தெர்> தெரிதல் என்ற சொல்லுக்கும்  பிறப்பியல் தொடர்பு  உள்ளது.   தெள்>  தெர் என்றும் மாறும்.  இந்த ளகர ரகர மாற்றீடுகளில்  கவனிக்கவேண்டிய முக்கியமான பழைய சொற்களில் ஒன்றுதான்  மடி - மரி என்ற  மாற்றீடு ஆகும்,   டி என்பது ரி என்று மாறிற்று. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் என்பதுதான் மொழி  நூல் விதியாகும்.  இதுவும் நம் பண்டை உரையாசியரால் பலமுறை விளக்கப்பட்டதே  ஆகும். இதை நீங்கள் தேடிக் கண்டுபிடித்துக் கட்டுரையாக வெளியிடுங்கள்.  அல்லது நூலாக்கிப் புகழ்பெறுங்கள்.

மாள் > மடி > மரி என்பனவும் தொடர்புடைய சொற்களே. இதன் அடிச்சொல் மள் என்பதாகும்.  இது குறைதல் குறிக்கும் சொல்.  மடிதலினால் ( மடியாமல் ) இருக்கும்  தொகை குறைவு படுகிறது..  மடிதல் என்பது நிகழ்வாகவும் குறைதல் என்பது மடிதலின் விளைவாகவும் கொள்ளத்தக்கவை.  பண்டை மனிதன் வேட்டையின் போது பத்து முயல்களில் நான்கைப் பிடித்துவிட்டால், மீதமிருபது குறைவுதான்.  பண்டை மனிதன் இவ்வாறே தொடர்பினை அறிந்துகொண்டான்.  இதன்மூலம்  மள்> மாள் என்பதன் தொடர்பினை அறிந்துகொள்ளுங்கள்.

மள் > மளிகை:  பெரும்பாலும் உயிரற்ற அல்லது காய்தலுற்ற பொருட்களை விற்றுத் தொழில் செய்வதுதான் மளிகைக் கடை.  மளிகாரம் என்பது காய்ந்த ஒரு மருந்துப்பொருள். ( பொராக்ஸ் borax ). நீரிருந்து காய்ந்த இடங்களில் கிடைப்பதும்  ( நீர்குறைதற் பயனால் கிட்டுவது) மற்றும் பூச்சிக்கொல்லக் கூடியதுமாகும். வெண்காரம்  என்பதும் இதுவே. பூச்சிகள் குறைவுக்கு உதவுவது.

குறைவதும் கூடுவதும் ஒரு நிலைக்களனில் தோன்றும் கருத்துகள்  ஆகும். பத்து முயல்களில் இரண்டு இறந்துவிட்டால் அல்லது அவற்றை உண்டுவிட்டால்,  இறந்தவையை நோக்க இருப்பவை எட்டு,  ஆகவே கூடுதல் ஆகும். பெரும்பாலும் உடற்பலம் அல்லது வலிமை என்பது இவ்வாறுதான் வலியவர்களைச் சுட்டும் கருத்தாகிற்று.  மள்ளர் என்பவர்கள் உடல்வலிமைக் குரிய வேலைகளில் ஈடுபட்டவர்கள். பள்ளம் தோண்டுவதும் வலிமையற்றோரால் இயலாதது  ஆகும். ஆகவே மள்ளர் என்பது உடல்வலியோர் என்றானது இவ்வாறுதான்.

இவை ளகர ரகர மாற்றீட்டை விளக்க எழுதப்பட்டன.  

தெள் > தெளி> தெரி.  இதிலிருந்து தெரிதல் வினை வந்தது . தெரி > தெரிசு> தெரிசு அன் அம் >  தெரிசனம் ஆகும்.  அன் > அண் தொடர்புள்ளவை. இவற்றை முன்வந்த இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  எடுத்துக்காட்டு: அன் > அன்பு, (அணுக்கம்).  அண்> அணுக்கம்.  அன்= அண். ( இதன் தொடர்பில்).

தெரி என்பது தரி என்று வந்தது திரிபு.  தெரிசனம் > தரிசனம்.  இது தரிசனம் என்றுமாகும். தர்ஷன் என்பது இதனின்று வந்த திரிபு.  தெய்வக்காட்சியைக் குறிப்பது இச்சொல்.

தெரிசனம் என்பது  தர்சனை என்றும் வரும்.

இனி வேறொரு விளக்கத்தில் தொடர்புற்ற பிற விளக்குவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

If you enter compose mode please do not make changes.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.




ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

விஞ்ஞானம் என்ற சொல்லின் முன்னோடிச் சொல்.

 விஞ்ஞானம் என்ற சொல்,  வி + ஞானம் என்று அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம்.   சொல்லைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது.  ஞானம் என்ற ஒரு தனிச்சொல்லும் இருப்பதால்  வி என்று சிறப்புக் குறிக்கும் சொல்லின் முதலெழுத்துடன் தொடங்குவது எளிதாகிறது. ஞானம் என்றால் அறிவு என்பது பலரும் அறிந்திருப்பதால்,  இதிலெதுவும் குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை!

விஞ்ஞானம் என்ற சொல்லின் முன்னோடியாய் இருந்தது விண்ணானம் என்ற சொல். இது விண்ணானம் என்றும் குற்றாலக் குறவஞ்ச்சி என்னும் நூலிலும் வந்துள்ளது. 

விண்ணாணம் என்பதன் பொருளாவன:

1. இடம்பகம்,  சாதுரியம்

2  சாதுரியம்

3 அறிவு\

4 நாகரிகம்

5 சாலக்கு, பாவனை

6 பகட்டு,  வெளியிற்  காட்டிக்கொள்ளுதல்

7 நாணம் ( யாழ் அகராதி )

ஏறத்தாழ இச்சொலின் பொருள் இவை என்று அற்கிறோம்.

இது விள்+ நாணம் என்று பிரிக்கப்பட்டுக் காட்டப்பெறும்.   ஆயினும் இவ்வ்வாறு காட்டுதல் யாழ் அகராதிக்குரியதாக இருக்கலாம்.   விஞ்ஞானம் என்பதற்கு இப்பிரிப்பு  உதவவில்லை.

விண்ணாணம் என்பதில் வரும் நாணம்,    வெட்கம் குறிக்கும் நாணம் அன்று. இது வேறு சொல்.  நண்ணுதல் என்ற வினை,  நண்ணு + அம் >  நாணம் என்று முதனிலை நீண்ட சொல்லால் அமைந்தது.    நண்ணுதல் என்பது அணூகி ஆராய்தலுக்கு உதவும் சொல்.விணை ஆராய்தல் என்பது பழங்காலத்திலிருந்தே தமிழர்களுக்கு ஒரு கலையாக இருந்துள்ளது. இதிலிருந்தே  விஞ்ஞானம் என்ற சொல்லும் திரிந்திருக்க வாய்ப்புள்ளது.  வானநூல் என்பது ஒரு அறிவியலும்  முதல் ஆய்வுமாக இருந்திருத்தல் பொருந்துவதே  ஆகும்,

விண்ணாணம் என்ற சொல்லைக் கண்டு அதைப் பின்பற்றி விஞ்ஞானம் என்ற் சொல்லை அமைத்தனர் என்பது தெரிகிறது.

அறிக மகிழ்க\

மெய்ப்பு பின்

.f you enter compose mode please do not make changes.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.

 இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.



வியாழன், 3 ஏப்ரல், 2025

சாமர்த்தியம் இன்னோர் முடிபு

 சாமர்த்தியம் என்ற சொல்லுக்கு இன்னொரு முடிபு காண்போம்.

முன்னர் கண்ட முடிபு இன்னும் உள்ளது.  சுருங்கக் கூறின்,  அது சா என்பதற்குச் சாதல் என்ற பொருள்கொண்டு  அதனின்று தப்பிக்கத் திரம்படச் செயல்பட்டு அந்த இடுக்கணிலிருந்து வெற்றியுடன் விடுபடுதல்  என்ற பொருள்பதிவுறு மாரு சொல்லப்பட்டது.

இப்போது சா என்பது சார் என்பதன் கடைக்குறையாகக் கொண்டு பொருளுரைக்கப்படுகிறது.   இடுக்கண் வந்துற்ற காலை,  சார்பு கொள்ளத்தக்க நிலையை மேற்கொண்டு,   மருவி -   அதாவது கடைப்பிடித்து,  அவ்விடுக்கணிலிருந்து தப்பி வாழ்தல் என்று பொருள்கொள்ளப் படுகிறது.  

சார்தல் - வினைச்சொல்.

சார் >  சா  -    இது கடைக்குறை வினைச்சொல்.

சார் +  மரு +  து  +  இ + அம்

சா+ மார் + து + இயம்

>  சாமார்த்தியம்   ஆகும்.             

மரு என்பது மார் என்று திரியும்.   இன்னொரு உதாரணம்:  தரு > தார்.   தருவான்,  தாரான்  என்பது காண்க.  தாரம் என்ற சொல்லிலும் தரு என்பது தார் என்று திரிந்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்     

முடிபு என்பது ஆய்வின்  முடிபு என்று பொருள்படும். இது தொல்காப்பியம் முதலிய நூல்களிலும் காணப்படும் சொல். 


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.



                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தூதன் யார்? எதனால் இப்பெயர்? அடிச்சொற்கள்

தூதன் என்ற  சொல்லை அறிந்துகொள்வோம்.

தூதனைப் பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.  தூதன் என்பவன் அரசரிடைத் தொழில் புரிவோம் மட்டுமின்றி,  காதரிடையே சென்று செய்தி சொல்வோனையும் குறிக்கிறது. பாட்டில்,

செல்லா மனைக்குத் தூது சென்றுவா என்றேனோ

செய்யாத காரியம் செய்யவும் சொன்னேனோ 

என்று வருவதால் இறைவனிடமும் இறைவியிடமும் தூதுபோகிறவனுக்கும் இதே பெயர் உள்ளது.

ஒற்றன் என்பவனும் தூதன் தான் எனினும், அவனுடைய வேலை மறைமுகக் கண்டுபிடித்து அரசனுக்குச் சொல்வதாகும்.  சற்று மாறுதலான வேலை இதுவாகும்.

உ,  ஊ என்பன  சு சூ என்றும் து  தூ என்றும் திரியத் தக்கவை.  உ என்றால் முன் செல்வது.  அரசன் போகுமுன் செல்வதால் முன்செல்வதாகிறது.

ஊ >  தூ >  தூது.  இதில் து என்பது விகுதி.

இது ஒரு சுட்டடிச் சொல்  ஆதலால் தமிழ்ச் சொல்.  இதை நீங்கள் மேலும் கேட்டறிந்ந்து கொள்ளலாம்.

அறிக மகிழ்க.\

மெய்ப்பு பின் 


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.