வெள்ளி, 16 மே, 2025

சிவமாலாவின் சிறப்பு சேமிப்பு (saving)

Date of photo:   1965 after wedding.  The uniform then in use among others   for this rank of a probationary inspector, was  that of  wearing  two Maltese crosses.  


https://www.maltauncovered.com/malta-history/maltese-cross/
Introduced to Malta by the Knights of St. John of Jerusalem upon taking possession of the islands in 1530.

ஞாயிறு, 19 மே, 2024

"தாக்கு" சொல்லும் பரவிய பொருளும்

 கொஞ்ச நாளாகவே  நாம் ஐரோப்பிய மொழிகளின் பக்கம் போகவில்லை. அப்போதைக்கப்போது சாளரத்தின் வழியாக அந்த மொழிகளையும் எட்டிப் பார்ப்பது சொல்லாய்வில் நேரிதே  ஆகும்.

தாக்கு என்பது தமிழில் ஒரு வினைச்சொல். அதவுதல் என்று இன்னொரு வினைச்சொல்லும் உள்ளது, ஒரு மடுவில் முதலை அந்தப் புலியை அதவிவிட்டாது  என்று சொல்லலாம்,  இது கொன்றுவிட்டது என்றும்  தாக்கிவிட்டது என்றும் இருபொருளும் தருஞ்சொல் ஆகும்.   தா என்ற சொல்லின் உறவு குறிக்க  அ-த என்று அங்கு தகரம் வருகிறது. தா  என்ற நெடில், இன்னொரு சொல்லின் பகுதியாக வருங்கால்  த என்று குறிலாகக் குன்றிவிடுவது சொல்லியலில் இயல்பு  ஆகும், தமி

ழில் அகரம் முன்னிற்க தாக்குதல் குறிக்கும் தகரம் அடுத்து வரல்போலவே  attack என்ற சொல்லும் அமைந்துள்ளமை கவனித்தற் குரியதாகும், அட்டாக் என்பதில் உள்ள கு என்பதன் ஒலிபோல வராமல் தமிழில் வினையாக்க விகுதியாக வுகரம் வந்துள்ளது தமிழியல்பு காட்டுவதாகும்,

அதவு என்ற சொல் முன்பகுதியில்  அட்டாக் என்பதன் முன்பகுதி போலவும்  தாக்கு என்ற சொல் அட்டாக்கு என்பதன் பின்பகுதி போலவும் ஐரோப்பிய மொழியில் அமைந்துள்ளது கண்டறியத் தக்கதாகும்,

தாக்கு என்பதில் உள்ள கு என்பது சொல்லாக்கத்தில் வினையாக்க விகுதியாகும்,  கு என்பதை எடுத்துவிட்டால் சீன மொழியில் உள்ள தா என்ற தாக்குதல் குறிக்கும் சொல்லுடன் இச்சொல் ஒருமை உடையதாகிவிடும்.அதவு என்பதில் உள்ள அகரம்  சுட்டுப் பொருளதாகும்,  அடு>  அடி என்பதில் சுட்டிலிருந்தே வினையாக்கம் தொடங்கிவிடுகிறது,

அட்டாச் என்ற ஆங்கிலச்சொல்  சகர ககர உறவு உள்ளது  ஆகும். இது திரிபுகளில் கேரளம் சேரலம் என்பதுபோலும் தொடர்பினது ஆகும்,  இவ்விரண்டும் இரட்டை என்று ஐரோப்பியச் சொல்லியலாரும் அறிந்துள்ளனர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

கடவுள், பாசம், அவர் இருக்குமிடம் தெரியவில்லை. ( தாயுமானவர் )

பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப் பேதைக்கும் 

வெகுதூரமே

.......

பாசாடு  அவிக்குளே செல்லா  தவர்க்கருள்

பழுத்தொழுகு தேவதருவே

,,,,,

பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும்

பரிபூரணானந்தமே.


சிலவரிகள் விடப்பட்டன.


தாயுமான சுவாமிகள்.


சுவாமிகட்கு எங்கு பார்த்தாலும் கடவுள் பரிபூரணானந்தமாகத் தெரிகிறார்.

இன்னொருவருக்குக் கடவுள் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.  இதன் 

பொருள் ?  கடவுள் தெரியவில்லை என்றால் அது 

பார்ப்பவனின் கோளாறுதான்.  அது கண்ணிலும் நெஞ்சிலும் உள்ள கோளாறு. 


தெரியாதவனிடம் கேட்டால் அவன் அவரைக் கண்டுபிடித்துச் சொல்ல 

முடியாது.

பாசம் என்னும் நெருப்புக்குள்  (அவிபட்டுக் கொண்டிருந்தால் )  இருந்தால் அவனுக்குக் கடவுள் தெரியமாட்டார்.

நெருப்புக்குள் எரிந்துகொண் டிருப்பவனுக்கு நெருப்பு மட்டுமே தெரியும்.

அவர்(கடவுள் )  எங்கிருந்தும் நீங்கியதே இல்லையே. என்று தாயுமானவர் காட்டுகிறார்.( எங்கும் இருப்பவரைக் கண்டுகொள்ள முடியவில்லை என்றால் அது உனது கோளாறு தான் ).