திங்கள், 16 பிப்ரவரி, 2026

சுதர்சன் என்பதன் பொருள் தமிழ் மூலம்

 சுதர்சன் என்ற சொல், தொன்றுதொட்டுத் தமிழிலும் வழக்குடைய  சொல். பெரும்பாலும் விட்ணுவையும் குறிக்கக்கூடும்.  அழகுடையது,  தோற்றப்பொலிவு கொண்டது என்பர். இதில்  சு, தர்ஷன் என்ற இரண்டு சொற்கள் உள.  

தெய்வ தெரிசனம் என்ற தொடரில் தெரிசனம் ( தெரி+ சன்+ அம்) என்றால் தெய்வம், தெய்வச்சிலை முதலானவை கண்ணுக்குத் தெரிவது அல்லது காட்சி தருவது.  தெரிதல் என்ற வினை தமிழ். இது தர்ஷன் என்று தமிழல்லாத இந்திய மொழிகளில் திரியும்.  சன் என்பது  சு விகுதியும் அன் விகுதியும் இணைந்த இணைப்பு.  சு என்பது சுற்றிலும் அல்லது சூழவும் என்ற பொருளது. அதன் ஒரு சொற்குறுக்கம்:  இங்கு கடைக்குறை போல்வது,  முன்னொட்டாக நின்றது. சு என்பது நாளடைவில் சுபம் அல்லது தீங்கற்றது, மேலானது என்று பொருள்வரத் திரிந்தது. இரண்டும் இந்திய மொழிகள் என்பது பல இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது.

இங்கு கண்டவற்றை  விரித்து உணர்ந்துகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வியாழன், 12 பிப்ரவரி, 2026

சர்வம் என்பது

 இதைப் பற்றிச் சற்று விரிவாக இங்கு எழுதியுள்ளோம்.

https://sivamaalaa.blogspot.com/2022/02/blog-post_8.html

ஒரு சரிவில் கொட்டிய நீரனைத்தும் சரிவினடிக்குச் சென்றுவிடுவதால், அடியிற் சென்று மீட்டாலன்றி, எல்லாம் ஓடிவிட்டது என்றுதான் சொல்வர். சரிவிலிருந்து மீட்டல் அரிய ஒன்றே ஆகும்.  இதன் அடிச்சொல் சரு என்பதுதான்.  அரு> சரு> சருவு> சருவம்> சர்வம் என்றானதுதான் இச்சொல். சரு என்பதற்கு முந்திய அடி அரு என்பது கூறினோம். மீட்டல் அரிது  என்பதை அரு என்ற அடி காட்டுகிறது. சரிதல் என்பது  சொன்னவன் பக்கம் சாய்ந்துகொள்வது என்ற பொருண்மையால் ஒத்துக்கொள்ளுதலும் உணர்த்துகிறது.

சர்வம் என்பது சமஸ்கிருதம் என்று வைத்துக்கொள்வோம்.  அப்படியானால் அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள்.  சம - ஒப்புமையுடன்  கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது.  இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார்.  சுனில் குமார் சட்டர்ஜீ  என்பது அவர் பெயர்.  இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள்  'தற்சமம்'',  ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின.  இதை மறந்துவிட்டு,  சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லா நினைப்பது  மூடமதேயாகும்.  உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ >  என்றால் முன் நிற்பதாக  ஆகுவது என்று பொருள்.  அண்- அண்மி நிற்பது.   அம் - அமைப்பு.  எல்லாம் சேர்த்தால்  ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும்,  சம கதம் என்பது புரிகிறதா?    கதம் என்பது:  கத்து,  இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம்,  அல்லது கிர்தம் என்றாகும்.  இப்போது சமஸ்கிருதம் என்ற சொல்  கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.

வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி,   இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே  ஆகும்.

சர்வம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஜீவன் என்ற சொல்.

 ஜீவன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இது சீவித்தல் என்று வினையாகவும் வரும். இதற்குப் பல சொல் தோற்றங்கள் சொல்லப்பட்டிருந்தாலும்,  இதைத் தமிழ் மூலத்தது என்று  ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.

மனிதன் இறந்தபின் மீண்டும் மறுபிறவி கொள்கிறான் என்பது ஒரு கொள்கையாகும். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதார் பலராயினும், நம்புவோரும் பலராவர்.  Lobsang Rampa முதல் பலர் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி மறுபிறவி உண்டென்று கூறுவர்.  தமிழ்ச் சங்க காலத்திலும் மறுபிறவி நம்பிக்கை உடையோர் பலர் இருந்தனர்.

உயிர் >  யிர் >  ஜிவ் > ஜீவன்,  ஜீவித்தல் என்று வருதல் கூடுமென்பர். இது இலங்கை ஆய்வாளரின் கருத்து.

சீர் வருந்ந >  சீவன்ன  > சீவன் என்று வருதலும் கூடுமென்க.

சீர் மிக்கது என்பது புவி வாழ்வே என்பது இதன் கருத்தாக,  உயிர்> உசிர்> சீர்> சீர்வன்ன >  சீவன் என்றாகுமென்ப.

சிர் > சீர்,  வருந்ந என்பது வருகின்ற  என்பது. இன்று என்ற சொல் இன்னு, இன்னக்கி என்றெல்லாம் பேச்சுமொழியில் வருகிறது. ஆகவே வருகின்ற என்பது வருகின்ன -  வருன்ன ,  இதில் வரு என்பது வ  என்று குறுகும்.  வரு என்ற மூலவடி,  வந்த என்ற இறந்தகால வடிவத்தில், தன் ருகரமிழந்து, வந்த  எனவாதல் அறிக. சீவன் என்பதில் இந்த வன் மட்டும் உள்ளது.  வந்> வன். இதில் அன் விகுதிபோலும் அழகு வந்துவிட்டபடியால், அதையே இறுதிநிலை ஆக்கிவிட்டனர்.

வரு என்ற வினைப்பகுதியும்  வருந்து என்ற வினைப்பகுதியும் இவற்றின் காலவினைத் திரிபுகளுடன் கலந்து மயங்குமாறு விளைதல்,  தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.

உயிர் என்ற சொல்லே ஜீவன் என்று வந்தது என்று பிற அறிஞரும் கூறியுள்ளனர்.

தலைச்சொல் இழக்கை பல சொற்களில் வந்துள்ள காட்சி ஆகும். எ-டு:  அரங்கன் - ரங்கன். இனி ரங்கா என்பது விளிவடிவம்.  பண்டை நாட்களில் கீழே நெடுஞ்சாண்கிடையாக  விழுந்தோ, நின்று முன்வாட்டாகச் சாய்ந்தோ வணங்கிய கடவுள், ''சாய்மி''   என்பது சாமி  ஆயிற்று.

சமஸ்கிருத மொழிச்சொற்கள் தமிழிலும் தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்திலும் கலந்துள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.