செவ்வாய், 17 செப்டம்பர், 2024

சாம்பான், சாம்பவர் முதலிய

 இவை சாம்பல் என்ற சொல்லிலிருந்து வருவன.

 சாம்பு >  சாம்பல்  ( சாம்பு+ அல்).

பு அல் என்பன விகுதிகள்.

சாம்பு  + ஆன் > சாம்பான்.

சாம்பு + அவன் >  சாம்பவன்.

எரிவன பின் குறுகிக் குவிந்து குப்பையாகும். சாம்புதல் என்பது குவிதல் என்றும் பொருள்.  குறுகுதலும் ஆகும்.   

அடிச்சொல்:  அண்>சண்>  சாண் ( குறுகுதல் ), சாண்+ பு+ அல்> சாண்பல்.> (திரிந்து) சாம்பல் ஆனது.  ண் அடுத்து ம்  ஆகத் திரிந்தது.  இதுபோன்ற திரிபுகள் முன் இடுகைகளிலும் காட்டப்பட்டுள்ளன.  ஓரிடத்திலிருந்து நகரும் பொருள் இன்னொரு பொருளை அண்டுகையில் இடைவெளி குறுகும்.  ஆகையால்  குறுதல் அண்முதல்   பொருளினின்று   எழுந்தது.  எரிந்து முடிந்தது  குறுகும். ஒரு மேசையைப் போட்டு எரித்து ஒரு நெகிழிப்பைக்குள் அடக்கிவிடலாம். 

ஒப்பிடுதல்:  ண்+ பு > ம்பு.

வீண் + பு > வீம்பு  ஆகிறது,

துண் + பு >  தும்பு.  ( துணிப்புற்ற கயிறு). முடிப்புடன் உள்ளது.

வன் + பு >  வம்பு.

இப்பொருள் தேவநேயருக்கு ஒப்ப முடிந்தது,  இனி சம்போ என்ற சொல்லின் விளக்கத்தையும் அறிக.

சாம்பவர் என்ற சொல் புத்தமத நூல்களிலும் காணப்படுகிறது. நாம் இங்குக் கருதுவது சொல்லமைப்புப் பொருள். இது தமிழின்வழி அங்குச் சென்றது. திபேத்துக்கும்  சென்றிருப்பதில் வியப்பு எதுவும் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

Edited on 19092024 0438

திங்கள், 16 செப்டம்பர், 2024

அமீத்ஷா: போர்ட் பிளேர் விஜயபுரம் ஆனது

 போர்ட்பிளேரை   விசயபுரம் என்று நாமம்

போற்றுவணம் அமிதுநல்லார்  மாற்றிச் சூட்டி,


மாட்டிநின்ற அயலிருளை ஓட்டி த்  தீரம்

மாற்றமிலா மேற்புகழை மன்னப் பெற்றார்!


ஏட்டினிலும் பாட்டினிலும் கூட்டிப்  பேசி

இயன்றசெயல் ஆற்றாதோர்க் கின்ன பாடம்,


தேட்டெனவே கருதினவாம் நாட்டும்  எல்லாத்

திருத்தங்கள் தரவினிலும்  தேம்பண்  மீட்டும். 


அரும்பொருள்:

மாற்றிச் சூட்டி - பெயரை வேறாக்கி அவ்வூருக்கு அணிவித்து

அமிது நல்லார் -  சிறந்தவரான அமீத் ஷா அவர்கள்

வணம்  - வண்ணம்  தொகுத்தல் விகாரம்.

மன்னப் பெற்றார் -  நிலையாக்கிக் கொண்டார்/

மன்னுதல் என்றால் நிலைநிற்றல். மாறாமைப் பண்பு.

நாமம் - நாவினால் சொல்லப்படும் அழைப்புச்சொல்,  

நாவினால் சொல்லிக்கொள்வதே நாமம்.  அந்தக்காலத்தில்

சான்றிதழ்கள் இல்லை.

ஓட்டி -  விரைவாக நீக்கி

மாட்டிநின்ற -  மாறாமல் பட்டுக்கொண்டு நிலையாகிவிட்ட

தேட்டு -  ஆய்வு, பொருள்சேர்ப்பு ஆகியவை.

கருதினவால் -  கருதியவற்றால்

ஆற்றாதோர்க்கு இன்ன பாடம் -  செய்யாதவர்களுக்கு

இத்தகையது ஒரு பாடம், பின்பற்றத் தக்கது.

நாட்டும் -  நிலைநிறுத்தும்

தரவு - மக்களுக்குச் சமர்ப்பிக்கும் எல்லா செயலும்

தேம் பண்  - தித்திக்கும் பாடல் போன்றது

மீட்டும்  - வீணைபோல் வாசிக்கும்


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

அங்கி என்னும் உடை

 அங்கி என்பதன் ஆய்வும் முடிபும் வருமாறு:

இச்சொல்லில் பகவுகள் அண், கு, இ  என்பன.

அண் என்பது உடை உடலை அடுத்து நின்று மறைப்புச் செய்வதைக் காட்டுகிறது.   இதனை அணிதல் என்ற சொல்லின் பகவுகளுடன்  ஒப்பிட்டு அறிந்துகொள்வீர்.  அண் + இ > அணி.  அணி-  அணி-தல்.

அங்கு எனபதைப் பார்ப்போம்: 

கு என்பது  அண்'ணை   அடுத்து நிற்கும் பகவு.

அண்+ கு > அங்கு. 

சொல்லமைப்பில் இவ்வாறு வரும்.

இதைப்  பணி என்ற சொல்லையும் பாங்கி என்ற சொல்லையும் அவிழ்த்து அறிந்துகொள்க.

பண் > பணி.

பண்ணிலிருந்து வரும் பணி என்ற சொல் வேலையைக் குறிப்பதற்குக் காரணியாவது யாதெனின், முன்னர் பணி என்பது பாணர்களின் வேலையாய் இருந்தது. பாடப் போகிறேன் என்பதற்குப் பணிக்குப் போகிறேன் என்னும் போது பணி என்பதற்கு வேலை என்பது பொருளாகிவிடுகிறது.  பாங்கி என்னும் சொல்லும் பண்> பாண் +கு+ இ>  பாங்கி ஆகிவிடும்,

இப்போது அண்+கு:

அண்+ கு+ இ >  அங்கி  ஆகி ஆடையைக் குறிக்கும்.

அண் = அடு,   அண்முதல் ,  அடுத்தல்.

அடு>  ஆடை.  முதனிலை நீண்டு வந்த தொழிற்பெயர்.

அடு > சடு> சடு+ ஐ >  சட்டை

தாள் அடுக்கிச் செய்வது அட்டை,   இது:  அடு>  அடு+ ஐ> அட்டை.

விகாரங்களில், இது தோன்றல் விகாரம் வந்த சொல்லமைப்பு.  அடு என்பதில் உ கெட்டது  ட் இரட்டித்தது,  அழகான அட்டை வந்தது,   அடுக்குதல் அடுத்தல் இரண்டுக்கும் மூலம் அடு என்பதுதான்,

இது பற்றிக் கூறும் பழைய இடுகைகளையும் படித்தறிக.

அங்கி அறிந்தீர். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


சனி, 14 செப்டம்பர், 2024

உவச்சன் என்ற சொல்.

 இன்று உவச்சன் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். வேறு அன்பர்கள் யாரும் விளக்கியுள்ளனரா என்று இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. இதை முடித்தபின் நாளைக்குத் தேடிப்பார்ப்போம். எம் கருத்துகளை முன் வைப்பதே நம் வலைப்பதிவின் நோக்கம்.

உ என்பது சுட்டடிச் சொல்.  . இதைத் தெரிந்துகொள்ள ஒரு நிகண்டையோ அகராதியையோ நீங்கள் நாடுதல் நன்று.  உ என்பது  முன்னிருப்பது என்று பொருள்படும் பண்டைப் பழஞ்சொல்.  தமிழ்ப் பழம்புலவர்கள் இதனைச் சுட்டடிச் சொல் என்றனர்.  எளிதாக அறிய, உன் என்ற சொல்லைப் பாருங்கள். உன் முன்னிருத்தலை ( முன் இருப்போனுக்கு உரியதை) க் குறிக்கும்.  

அடுத்து இருக்கும் பகவு, ( உவச்சன்) என்ற சொல்லில்),  அச்சன் என்ற சொல். இது அய்யன் (  ஐயன்)  என்ற  சொல்லின் திரிபு.  அய்யன்> அச்சன்.  எப்படி என்றால்,  வாயில் > வாசல் என்பதில்  யகரம் சகரம் ஆனது; மற்று இ (யி) என்பதும் அ ( ச)  ஆயிற்று.   அயல் என்பதும் அசல் என்பதன் திரிபே. இன்னொன்று: பயங்க> பசங்க என்று பேச்சில் வரும்.  வயம்> வசம். தமிழில் போதுமான அளவு பற்பல நூல்களையும் வாசித்தவர்க்கு இது காண அகராதி தேவையில்லை.

அச்சன் என்பதும் அய்யன் என்பதும் ஒன்றே.  அச்சன் என்பது திரிபு.

  ஐயன் என்பது பல்பொருளது. என்றாலும் அதன் மையக் குறிப்பு, முன்னிருப்பவர், தந்தை, தமையன் எனவாம்.

உ+ அச்சன் > உவச்சன்.  இங்கு வகர உடம்படு மெய் வந்தது.

உ+ ஐயன்> (உவை(ய்)யன்) > உவைச்சன் > உவச்சன் என்று காட்டினாலும் ஒன்றுதான்.

இது கல்வெட்டிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ள சொல்தான்.

உவச்சர் எனில் பூசையின்போது முன்னிருந்து ஓதி உதவுவோர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

    

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

மீசுரம் என்ற திரிபு

 இதில் மீசுரம் என்ற திரிபின் வருகையை அறிவோம்.

மிகு + உரு + அம் >   மீகுரம்.

இதன் சொல்லமைப்புப் பொருள் மிகப்பெரிய உருவத்தை உடையது என்பதுதான்.

இங்கு  மீகுரம் என்பது மீசுரம் என்று மாற்றமடையும்.

மி என்பது மீ என்று நீள்வதும் இயல்பான திரிபுதான்.

மிகு+ து >  மீது.  ஒ நோ:  பகு தி >  பா தி.  ( பாதி)

இது சொல்லிடையிலும் வரும்  முதலிலும் வரும்.

பிற மொழித் திரிபுகளை அவ்வந் நூல்களில் கண்டுகொள்க.

சேரலம் >  கேரளம்.

ஐரோப்பியத் திரிபுகளில் ch > k  ஒலிமாறும்

மிகு உரு அம் என்பதே  மீகுரம் > மீசுரம் ஆனது.

பொருந்தும் பொருண்மை பெற்றுலவும் இச்சொல்.  தெலுங்கில் மேலானது என்று பொருளாம்.

இதை மிசை+ உரு +அம் என்றும் விளக்கலாம். மீசரம் என்பதும் திரிபே.  உகரம் அகரமானது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

புதன், 11 செப்டம்பர், 2024

வைரம் என்ற சொல் தமிழ்

இனி வைரம் என்ற சொல்லை ஆய்வோம்.

 வைக்கப்பட்ட இடத்தில்  அது இறுகி, தீட்டியவுடன் ஒளிதரும் அழகுடன் மிளிரும் கல்லே வைரம்.  வைரம் என்பது என்ன சொல்?

வை  -  வைக்கப்பட்ட இடத்தில்.

இறு -  இறுக்கம் அடைந்து

அம் -  அமைந்த ஒளிக்கல்.

வைக்கப்பட்ட என்றால் இருந்த என்று பொருள்.  மனிதனால் வைக்கப்பட்ட என்று பொருளன்று. இயற்கையினால் வைக்கப்பட்ட அல்லது கடவுளால் வைப்புற்ற. தற்சூழல்களால் வைக்கப்பட்ட.


ஒரு காலத்தில் ரகரமும் றகரமும் வேறுபாடின்றி வழங்கின. ஆகவே இற்றை நிலைக்கு ரு-று மாற்றம் செய்துகொண்டாலே சரியாகும். இது ஓர் ஒலிநூல் படியான மாற்றம். இதைப்  பழைய இடுகையொன்றில் விளக்கியுள்ளோம். உம் பேராசிரியருக்குத் தெரிந்தால் கேட்டுத் தெரிந்துகொள்க.

இறுக்கம் என்பதே ஆக்கமூலமானாலும் சொல்லமைந்த வுடன்  று திரிந்து ரு- ர என்றாகிவிடும்.   று என்பது வல்லினம்.  இது சொல்லுக்குள் தேவை இல்லை. கல்லுக்குள்ளும் பயன் ஒன்றும் இல்லை. இதே போல் வல்லினம் வந்து திரிந்த சொற்கள் பல.

வையிறு அம் >  வையிரம்  >  வயிரம்.

இதேபோல் திரிந்த சங்கச் சொற்களும் உண்டு.  எடு:

வை >  வை+ இன் >  வயின்.  இடம்.

பொருள்வயின் பிரிதல் -  சம்பாதிப்பதற்காகக் காதலன் பிரிந்து போதல்.

வை >   இறுக்கம் என்பதற்கு இன்னொரு சொல்: காழ், காழ்ப்பு.

காழ்த்துவிட்டது என்பதை (கால்விரலில் )   "காச்சுப்போச்சு"
 என்பர்.

வை> வையகம்

வை >  வைகுந்தம்.  (  தான் குந்தியிருக்க தேவன் வைத்துக்கொண்ட இடம்).

வை> வைகுதல்:  வசித்தல், வாழ்தல்.  ( கு வினைச்சொல்லாக்க விகுதி)

வைகு+ உண்ட:  வைகுண்ட.   ( வைத்ததனால் உள்ளதானது).  

வெட்டுண்ட, கட்டுண்ட என்ற வழக்குகளைக் காண்க.

வைகுண்டம் :  தேவன் வைகுவதற்கு உண்டான இடம்.

இச்சொல்லை வய  (via)  என்று இலத்தீன் மொழியில் மேற்கொண்டனர்.  

via > way.  English.  viaduct.

மூலம்:  வாய் என்ற சொல்.  வாய் -  இடம்.

வைரம் தமிழென்று கண்டீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வைராக்கியம் என்னும் சொல்

 இதன் அடிச்சொல் வைத்தல் என்பதுதான்,

வை+ இறு + ஆக்கு+ இ + அம்

வைத்த இடத்தில் ( மனத்தில்)  ஓர் எண்ணம் இருகி ( இறுகி) (முன் வித்தியாசம் இல்லாமல் வழங்கியது) வெறோர் ஆக்கத்தை விளைவிக்குமானால் அதுவே வைராக்கியம்.  நீர் புரிந்துகொள்ளும் பொருட்டு இவ்வாறு வாக்கியப்படுத்தி உள்ளோம்.  இந்த வாக்கியத்தை மேலே குறித்த பகவுகளின் பொருளுடன் இணைத்துப் படித்து அறிந்துகொள்க. பின் உமக்கு வேண்டிய படி மாற்றி அமைத்துக்கொள்க.

படிப்பவர்க்கு உடனே பொருள் விளங்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறோம்.

இவ்வாறு தரவு செய்யவே இது தமிழ்ச்சொல் என்பது தெரியும்.

அறிக மகிழ்க.

 மெய்ப்பு பின்.






.----------------------------------------------------

வேறு சில குறிப்புகள்.  ஆசிரியர்க்கு.  நீங்கள் இதைத் தவிர்த்துவிடுக.

வை >  வயின். வை எனபது அடிச்சொல்லாக இருந்தால் அதிலிருந்து பிறக்கும் சொல் குறிலாகிவிடும்.  வை+ இன் >  வயின். இங்கு இன் என்பது விகுதி யானது.

வை+ அம் >  வையம்:   இது உலகம் என்று பொருள்படுவது. உலகம் என்பது கடவுளால், இயற்கையால் வைக்கப்பட்ட இடம் என்பது பொருள்.  வையகம் என்பது இதன் இன்னொரு வடிவம்.

வை+ கு+ அறை >  வைகறை:  சூரியன் அடிவானில் வைக்கப்பட்டது போல் பாதியும்  அறுத்து மீதமுள்ளதுபோல் வெளிப்பட்டுப்  பாதியும் தெரிய, விடியும் நிலை. 

அருணம் >  அறு+ உண் + அம் >  அறுணம்>   அருணம்,  இது வைகறை. சூரியன் அறுக்கப்பட்டதுபோல் பாதியும்  வெளிப்பாடு பாதியும் தெரிவது.  உண் என்பது   அறுதலுண்டது என்பதன் பொருட்டு. உள்> உண்.  அம் விகுதி.

உயரற்காலம் :  இது திரிந்து உயற்காலம் (  இடைக்குறை)  இது பின் திரிந்து உசற்காலம் ஆகி,  மெருகேறி உஷற்காலம் ஆயிற்று.

உதயம் :  உது + அ+ அம் : சூரியன் முன் அங்கு எழுந்தமைதல்.  உது = முன்.

றகரம் இன்னொரு சொல்லாக்கத்துக்குப் பயன்படுமாயின் ரகரமாக மாறும்



திங்கள், 9 செப்டம்பர், 2024

இந்திரியம் --சொல் புனையும் தந்திரங்கள்.

 இச்சொல் ஒன்றுபாட்டின்போது உடல்நிலை திரிந்து  வெளியேறும் திரவம்.

இச்சொல்லில் :

இன்  -  இது இன்பம் என்ற தமிழ்ச்சொல்லின் முன்பகவு.

திரி -  இது உடல்நிலையில் ஆண்மகற்கு உண்டாகும் மாற்றங்களைக் குறிக்கிறது.

அம்  -  விகுதி.  அமைதல் குறிக்கிறது.

இச்சொல் ஒரு புனைவு.  திரி என்று உள்ளிடாமல் தி என்று ஓரெழுத்துமட்டும் இட்டும் இது புனைவுபடுதல் உண்டு. அப்போது இது இந்தியம் என்று அமைதல் காண்க.

"கண்முதல் இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து

சயனா சனவானைப்  போலாகி  

கண்முதல் இந்தியத்துக்கும் பரனாய் சாதிக்கிற"

என்று மணிமேகலைக் காப்பியத்தில் வரும்,   இதைத் தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதையில் காண்க.

புனைவில் இந்திரியம் என்றே உண்டாகிப் பின் குறைப்பட்டிருப்பின்,  இடைக்குறை எனலாம். இன்பத்துக்கு இன் மட்டும் சொல்லுட் புகுந்திருப்பதால் திரிதல் என்பதற்கு தி மட்டும் இட்டுச் சொல்லாக்கி யிருக்கவும் கூடும்.  அவ்வாறாயின் இந்திரியம் என்பது இடைமிகை ஆகும்.

பரார்த்தம் என்றால் ஆன்மாவிற்குப் பயனாவது, சயன  ஆசனம் - படுத்தலும் அமர்ந்திருத்தலும்.  ஆசனவான் - ஆசனம்கொள்வான்.   பரனாய் -  பயன் கொள்வோனாய்.

கண்முதல் இந்தியம் என்றதால்  இது ஐம்பொறிகள் என்றும் உறுப்புகளைக் குறிக்கும் சொல். 

சொல்லாக்க உத்திகளை இச்சொல்லிலும் கண்டுகொள்ளலாம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

அகர எகரத் திரிபு.

 கல்லுதல் என்பது கெல்லுதல் என்றும் திரியும்,  ஆதலின் அகரத்துக்கு எகரமும் போலியாகும்.  ஆனால் இது கவனமுடன் விளக்குதற் குரியது.  திரிபுகள் பல. கதை என்பதும் கீதை என்பதும் எல்லாம் ஒலி என்ற அடிப்பொருளில் வருவனவே. பயன்பாட்டில் பொருள் நுட்பமாக வேறுபடலாம்.  கது என்ற அடிச்சொல்லி லிருந்து வரும் காது என்பது செவியைக்  குறிக்க,  கீதம் என்பது பாட்டைக் குறிக்க வழங்குவது காண்க.  ஆனால் காது ஓர் ஒலிபற்றி;  கீதம் ஒலி எனினும் இசை. அதாவது ஒலியெழுச்சி.

ஒலிபற்றி எனற்பாலது " ஒலிபற்றினி"   (a sound change receiver) என்ற புதுச்சொல்லால் குறிப்புறுதல் சிறப்பாம்.

காது:  உகரம் முன்வருதலை குறிக்கும் விகுதியாய் நுட்பமாக வழங்கியிருக்கலாம். இது பழஞ்சொல்.  கீதம் என்பதில்  கத் > க+   க் > ஈ (தருதல்)>கீ எனப் பின்னுதல் நிகழ்ந்திருக்கவேண்டும்.  இறுதி து மட்டும் பற்றிக்கொள்ளப்பட்டது.  கா து > கா/கீ (ஈ)  என பின்னது கொண்டு முன்னது கெடுத்தல்.  சொல்லின் பகுதியைத் திரித்தல் அயல்மொழிகட்கு வழக்கம்.  விகுதியை மட்டும் மாற்றாமல் பகுதியில் திரித்தல்.  கீதம் என்பதில் ஈதல் என்பதன் ஈ ஏறிற்று,  ஒலியினை  ஈதற் குறிப்பு.  ஈதல் என்பது வெகு நுட்பான முனைத்திரிபு ஆகும்.  ஆ+க்து > ஈ+க்த> க்+ ஈ/ து +அ. எனக்காண்க.

அகர வருக்கத்தவை,  குறில் நெடில் பேதமின்றி, ஒன்று மற்றொன்றாகத் திரிதக்கவை ஆனாலும்,  கவனத்துக்குரியவை.  எடுத்துக்காட்டு:  அதழ் - இதழ்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

சனி, 7 செப்டம்பர், 2024

ஹோத்ரி என்பதன் இன்னோர் தமிழ் அமைபு

 ஓதுதல் என்றால் படித்தல்,  வாசித்தல்.

படியே ஒலிசெய்தலே படித்தல் எனப்படும். எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே அதை ஒலிசெய்தல். எப்படி,  அப்படி, என்பவற்றை படி> படித்தல் என்பதுடன் இணைத்து அறிந்துகொள்க. இன்னொரு வகையில் சொல்வதானால் கண்ணிற் படுகின்ற வாறே நாவும் உதடுகளும் அசைந்து ஒலிசெய்தல் : படு> இதில் இகரம் வந்து "படி" ஆகிறது,  படு> படி > படித்தல்.  இறுதியில் வினைச்சொல்.

வாயினால் ஒலிசெய்தலே வாசித்தல்.   வாய்>  வாயி  > வாயித்தல் > வாசித்தல். இங்கு யிகரம் சிகரம் ஆகும்.

ஓதுதல் என்பது ஓவென்று ஒலிசெய்தலையே முன்னே  குறித்தது.  ஓ என்ற ஒலி என்ற பொருண்மைச் சொல்லுடன்,  து என்னும் வினையாக்க விகுதி இணைந்து ஓது-தல் என்ற சொல் உருவாயிற்று. ஒலியெழுப்புதல் படிப்பதாலேயோ மனப்பாடத்திலிருந்தோ நிகழும், ஆகவே ஓதுதலென்பது சற்று விரிந்த பொருளுடைத்தாகிறது.

ஓதுரை  அதாவது ஓது உரை என்ற இருசொல் இணக்கானது வடக்கில் ஹோத்ரி என்று ஆகிவிட்டது.  ஓ என்று ஹ இன்றி ஒலிக்க முயலாமல் ஹ இணைத்து ஒலித்தனர்.  இதனுடன் உய்த்தல் சொல்லினின்று வரும் ஹோத்ரியும் இணைந்துகொண்டுள்ளது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

பக்தியோகம் என்றால் என்ன?

 யாம் நம் வலைப்பூவகத்தில் பல பக்தி சாற்றும் படங்களையும் சில வேளைகளில் கவிதைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறேம். அந்தக் கவிதைகள் அம்மனுக்கு ( ஸ்ரீ துர்க்கையம்மாவுக்கு) ப் படைக்கப்பட்டவை. இவற்றை வெளியிட்டபின் எம் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இதை அம்மா படித்திருப்பார்கள். இவற்றின்பின்னும் யாவும் குறையின்றி நடைபெற்றன. யாம் எதுவும் கேட்பதில்லை.  அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்டு அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் யாம் கொடுப்பதில்லை. குறை ஒன்று மில்லை.  எமக்கு காபி ( குளம்பிநீர்) உரொட்டி கிடைத்தாலும் அவையும் பாயசம்தான்.

அவர்களுக்குப் பூமாலை முதலிய அணிவித்துக் கொண்டாடுகிறேம். பிறர் அவ்வாறு செய்து படம் அனுப்பினாலும் கவிதையால் கொண்டாடுகிறேம்.

யாம் செய்வது பக்தியோகம்.

வேறு உலக மாந்தர் ( ஜாம்பவான்கள்)  வேறுவேறு செய்திருக்கலாம்.  இவர்கள் அத்தனை பேர்களைப் பற்றியும் யாம் கவலைப்படவில்லை. எம் மனம் அம்மனுக்கு. அம்மன் எம்முடன் எப்படித் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை யாம் ஏன் வெளியிடவேண்டும்.  விளம்பரம் தேவை யில்லை. அதுதான்பக்தியோகம்.


வியாழன், 5 செப்டம்பர், 2024

அக்கினிவன்ஷி என்ற திரிசொல். அக்னிஹோத்திரி தமிழ் முன்சொலவு.

 இந்தச்  சொல், தமிழுக்குத் தொடர்பில்லாதது போலக் காணப்படுகிறது. இதன் காரணம்  அக்கினி என்ற சொல்லும்  வன்ஷி என்ற ஷிகரம்  வரும் சொல்லுமாகும்.

இச்சொல்லில் வன்ஷி என்பதை முதற்கண் துருவிச் சிந்திப்போம்.

வருமிசை என்பது தமிழ்த் தொடர். இதன் பொருள் மேலும் வருதல் என்பது. மிசை என்பது பழந்தமிழ்ச் சொல். " மலர்மிசை ஏகினான் மாண் அடி  சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்" என்பது குறள்.  மிசை என்றால் மேல்.  மலர்மிசை என்றால் மலர்மேல்.  அகமிசைக்கு இவர்ந்தோன் என்று தொல்காப்பியத்திலும் வரும் சொல்தான். மண்டலத்தின் மிசை ஒருவன் என்று தாயுமான சுவாமிகளும் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்.  உதட்டின் மிசை இருப்பதனால் மிசை என்பதில் முதலெழுத்து நீண்டு "மீசை" என்ற சொல்லாகி உதட்டின்மேற்பகுதி வளர்முடியைக் குறிக்கிறது .  ஆகவே இது தனித்தமிழ்ச் சொல் என்று கொண்டாடலாம். மறைமலையடிகள் 'மேல்' என்னாமல் 'மிசை' என்று எழுதிய இடங்களும் அவரது நூல்களில் உண்டு.

வம்மிசம் என்ற சொல்  வரு+ மிசை+ அம் என்ற மூன்று பகவுகளால் உருப்பெற்ற சொல்.  சங்கத் தமிழில்  வம்மின் மக்காள் என்றால்  வாருங்கள் அல்லது வருக மக்களே என்பதே பொருள்.  வரு என்ற வினைப்பகுதி வா என்றும் வ(ந்தான்) என்றும் குறுகும்.   வா> வ.  இப்போது வரு மிசை அம் என்பதை  வ + மிசை+   அம் என்று குறுக்கிக்கொள்ளலாம்.  மிசை என்பது அம்முடன் இணைந்து மிசம் என்றும் ஆகும்.  ஐகாரம் கெடும்.  அம் விகுதி பெறும்.  இப்படி வந்ததுதான் வம்மிசம் என்ற சொல். இகரம் (மி : இ)   குறுகின் வம்சம். இதில் ம் என்ற ஒற்றும் தொலையும்.

இது இந்தோனிசிய மொழிக்கும் போய் இருக்கிறது. புத்திரி வங்க்ஸா  என்றால் குலக்கொழுந்து என்றும் வம்மிச இளவரசி என்றும் பொருள்.

வம்மிசம் என்பது வம்மிசி > வம்சி என்றும் ஆகும்.  இனத்து மிசைத்தொடர் என்ற பொருள் ஏதும் மறைந்துவிடாது. அக்கினி வன்ஷி என்றால் தீயைத்தரு குலம் என்று பொருள். அக்கினி என்பது  தீ  - நீங்கள் அறிந்த பொருள்.

வம்சி > வன்ஷி.  மகரம் னகரமாய் உருமாறுவது உலக மொழிகள் பலவில் காண்புறுவது.

அக்கினி என்பது விளக்கப் பட்டுள்ளது:  https://sivamaalaa.blogspot.com/2022/03/blog-post_14.html.  அதையும் அறிந்து மகிழ்க. தீ மூட்டுதல் அறிந்த பின்னும் ஒவ்வொரு முறையும் அணைந்தபின் அதை மீண்டும் மூட்டுவது எளிதாய் இருக்கவில்லை. இவ்வாறு தீயை மீளவும் மூட்டிச் சேவை செய்தோர் பாராட்டுக் குரியவர்கள். இவர்கள் அக்கினிஹோத்திரி எனப்பட்டனர்.

உய்த்து இரு இ > உய்த்திரி> ஒய்த்திரி> ஹோத்திரி  என்று திரியும். உய்த்தலாவது உண்டுபண்ணி வேண்டும் காலம் வரை நடைபெறுவித்தல். உய்த்தல் என்பது சுட்டடிச்சொல்.  நிலம், தீ, நீர்,வளி , விசும்போ டைந்தும்  கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்றார் தொல்காப்பிய முனிவர். இவற்றுள் தீயும் நீரும் இன்றியமையாதவை. நிலம் இல்லையேல் உலகம் இல்லை,  விசும்பும் காற்றும் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாதவை . என்றாலும் மனிதன் அவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்கிறான்.

உய்த்திரு > உய்த்திரம் > ஹோத்திரம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

மெய்ப்பு: 0553   06092024 சில மாற்றங்கள்


செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மாலை செய்து போடுவதால் எதுவும் நடைபெறாதோ?

 பூக்களை மாலைகளாகக் கட்டி ஒரு சிலைக்கு அணிவித்தால் கடவுளைக் கண்டுவிட முடியாது என்று ஒரு நபர் கூறும் ஒரு காணொளியைப் பார்த்தேம். உம் நுகரறிவின்படி நீர் கூறுவது சரிதான். அது எமக்குச்  சரியன்று. இப்படிப் பூவணிவித்து யாம் அறிந்துகொண்டது வேறு.  கடவுள், தொழுகை எனத் தொடங்கி மனிதகுலத்தில் அறியப்படும் பலவற்றிலும்  ஒருவனுக்குச் சித்திப்பது இன்னொருவனுக்கு வெற்றிபெறாது. இதில் ஒரு வெற்றியும் பெறாமல் நீர் இருக்கவேண்டும் என்பது உமக்கு விதியானால்,  யாம் ஏன் அதை உமக்குத் தெரிவிக்கவேண்டும். நீர் இதைக் கண்டுகொள்ளவேண்டாம்.

எமக்கு உறுப்பினர்கள் தேவையில்லை. யாம் ஒரு மத நிறுவனர் அல்ல.

ஆரம்பம்

இந்த ஆரம்பம் என்னும் சொல், பல் பிறப்பி  ஆகும். இதைப் பல வழிகளில் துருவிச்சென்று பல்வேறு பொருண்முடிபுகளை உரைக்கலாம். இதை இப்போது இன்னொரு கோணத்திலிருந்து பிரித்து அறிவோம். மனிதன் தன் தொடக்க காலத்தில் கோவணமும் கட்டத் தெரியாமல் இலை தழைகளைக் கட்டிக்கொண்டு காட்டில் சஞ்சரித்தவன். நெய்தல் தொழிலுடையோர் ஆடைகள் செய்யத் துணிசெய்து கொடுத்து அவனை மானம் காத்தனர். அவன் சிறிது சிறிதாகவே பலவற்றையும் அறிந்து இன்று பல கோள்களுக்கும் சென்றுவரும் நிலையை அடைந்திருக்கிறான். உரோமாபுரி ஒருநாளில் அமைக்கப் பட்டதன்று என்றபடி அவன் முன்னேறிவந்துள்ளான் என்பதே உண்மை.  சீலை என்ற சொல்லே சீரை என்பதன் திரிபு.  தமிழ் என்ற பண்டை மொழியின் மூலம் இது மரப்பட்டையைக் குறிக்கும் என்பதும் இப்போது சீலை சேலை என்று மாறி அழகிய காஞ்சிபுரச் சேலையையும் காசிபுரச் சேலையையும் குறிக்கிறது என்பதையும் தமிழ்மொழிச் சொல்லாய்வு நமக்குத் தெரிவிக்கிறது.

ஆரம்பம் என்ற சொல்லின் உள்ளில் உள்ள சொற்பகவுகளைப் பட்டியலிடுவோம்.

அரு  -   தொலைவு குறைதல். 

அண் -  இதிலிருந்து அண்முதல் என்ற வினைச்சொல் வருகிறது.  "செயலுக்கு நெருக்கம்" உணர்த்தும் சொற்பகவு,

பு  -  புகுதல், தொடங்குதல்.

இ -  இது வினைப்படு  விகுதி.  இதை வினையாக்க விகுதி என்றும் குறித்துமுள்ளோம்.

அம் -  அமைப்பு குறிக்கும் விகுதி.

அரு + அண் + பு + இ + அம்  >  ஆரண்பம்.  >  ஆரம்பம் ( இது இறுதி அல்லது இப்போது இருக்கும் திரிபுச்சொல்)

இதன் பொருள்:  தொலைவு கடந்து நெருங்கிப் புகுந்து அமைதல்  என்பதாகும்.

துவங்குதல் தொடங்குதல் என்பதுதான் முற்ற  அறியும் பொருள்.

ஆரம்பம் என்ற சொல் ரம்பம் என்று முடிந்தாலும் இதில் ரம்பம் எதுவும் இல்லை. 

ஆரம்பி என்பது வினைச்சொல்.

நிலவை ஆராயும் மனிதன் அவன் தன் ஆய்வுக்கருவி அமைப்பினை நிலவில் இறக்கினாலே  ஆராய முடிகிறது, அருகிற் செல்வது வேண்டப்படுவது என்பதை இச்சொல் காட்டுகிறது,  உண்மையும் அதுதான். மனிதனுக்கும் ஆய்படு பொருளுக்கும் உள்ள இடைத்தொலைவு குறைதல் முதன்மை ஆகும். இதை அரு ( அரு, அருகுதல் ( தொலைவு குறைதல்) , அருகில் என்ற சொற்கள் தெரிவிக்கும். அரு என்ற சொல் அடுத்துவரும் அண் என்ற சொல்லின் முன் ஆர் என்று திரிதல் தமிழின் செம்பான்மையைக் காட்டுகிறது.  அண் என்பதும் வேண்டிய சொல்லே ஆகும்.  அண்மித்துப் புகுதல் என்பது இச்சொல்லால் வலியுறுத்தப் படுவதொன்றாம்.  அண்பு என்பது அம்பு என்று இயைக்கப்படுகிறது.  இதுவும் நல்ல திரிபே ஆகும்.

அறிக மகிழ்க/

மெய்ப்பு பின்.