ஞாயிறு, 19 மே, 2024

கடவுள், பாசம், அவர் இருக்குமிடம் தெரியவில்லை. ( தாயுமானவர் )

பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப் பேதைக்கும் 

வெகுதூரமே

.......

பாசாடு  அவிக்குளே செல்லா  தவர்க்கருள்

பழுத்தொழுகு தேவதருவே

,,,,,

பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும்

பரிபூரணானந்தமே.


சிலவரிகள் விடப்பட்டன.


தாயுமான சுவாமிகள்.


சுவாமிகட்கு எங்கு பார்த்தாலும் கடவுள் பரிபூரணானந்தமாகத் தெரிகிறார்.

இன்னொருவருக்குக் கடவுள் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.  இதன் 

பொருள் ?  கடவுள் தெரியவில்லை என்றால் அது 

பார்ப்பவனின் கோளாறுதான்.  அது கண்ணிலும் நெஞ்சிலும் உள்ள கோளாறு. 


தெரியாதவனிடம் கேட்டால் அவன் அவரைக் கண்டுபிடித்துச் சொல்ல 

முடியாது.

பாசம் என்னும் நெருப்புக்குள்  (அவிபட்டுக் கொண்டிருந்தால் )  இருந்தால் அவனுக்குக் கடவுள் தெரியமாட்டார்.

நெருப்புக்குள் எரிந்துகொண் டிருப்பவனுக்கு நெருப்பு மட்டுமே தெரியும்.

அவர்(கடவுள் )  எங்கிருந்தும் நீங்கியதே இல்லையே. என்று தாயுமானவர் காட்டுகிறார்.( எங்கும் இருப்பவரைக் கண்டுகொள்ள முடியவில்லை என்றால் அது உனது கோளாறு தான் ).

சனி, 18 மே, 2024

பண்ணில் தோய்ந்த வாத்தியார்கள் ( ஒரு சாதியினர்)

 பந்தோபாத்யாய  அல்லது பண்ணில் தோய்ந்த வாத்தியார்கள் 

 இது ஒரு சாதியினர் ஆவர்.  இந்த வடபெயரின் தமிழ்,   பண்தோய் என்பதுதான், இவர்கள் பண்டை நாட்களில் பாடித் திரிந்தவர்கள். பண் என்றால் பாட்டில். அதில் தோய்ந்திருந்தவர்கள்.  பாணர் வீடு வீடாய்ப் போய் பாடலைப் பாடி வீட்டிலுள்ள பெண்ணுக்கும் அவளைச் சில காரணங்களால் பிரிந்து சென்றுவிட்ட தலைவனுக்கும் இடையில் பிணக்கைத் தீர்த்துவைக்கவோ திருமண முயற்சிகட்கு உந்துததல் கொடுத்து உறவை உயிர்ப்பிக்கவோ முயலுவர்.இவர்கள்  செய்துவைத்த ஒற்றுமை முய₹சிகளை இறையனார் அகப்பொருள் என்னும் நூலிலோ அன்றி ஏனைச் சங்க இலக்கியப் பாடல்களிலோ காணலாகும்.

Bandyopadhyay [ பண்தோய்வாத்தியாய( ர் )

பந்தோ என்று திரிந்துள்ள வடக்குமொழி வழக்கு  "பண்தோய்"  என்பதுதான். பண்ணில் அல்லது பாடலில் தோய்ந்து வாழ்தல்.  வாய்மொழியாகப் பாடித் திரிவதைத் தவிரப் பழங்காலத்தவர்க்கு  வழி வேறில்லை. வாய்த்தி>  வாத்தி> வாத்தியார்கள் என்று அவர்கள் குறிக்கப்பட்டனர். இவ்வாறு நாட்டில் திரிந்தவர்கள் பலராதலால், அதுவே ஒரு தொழிலாகி, அதைச் செய்தவர்கள் வாத்தியார்(வாத்தியாய)  என்றாகிவிட்டனர். வாய்ப்பாடகர்ளும் வாய்த்தி  ஆர்களே.  ஆர்கள் என்றால் அவர்கள் என்பதுதான். இவர்களெல்லாம் ஒரு சாதி ஆனார்கள்.  சாதி என்பது தொழிற்சார்பினர் என்பதுதான். சார்> சார்தி> சாதி> ஜாதி.  இவர்கள் ஒவ்வொரு கூட்டத்திற் பிறந்திருந்த படியால்,  சார்(தல்)> சா> ஜா என்ற சொல் உண்டாகி அது பிறத்தல் என்று பொருள்படும் சொல்லைப்  பிறப்ப்பித்தது.  தொல்காப்பியத்தில்  சாதி என்பது நீர்வாழ் உயிரினங்களுக்கே வழங்கியது.  பின்னரே அது மனிதர்களுக்கு உதவும் சொல்லானது. இஃது பிற வழக்கு ஆகும்.  மாறிவழங்குதல்.

இது பாணர் அல்லது பாணர்ஜி  என்றும் வரும். இதன் தமிழ் வடிவம் பாணனார் என்பதுதான். பாணர்ஜி என்பதும் பந்தோவாத்தியார் என்பதும் ஒரு பொருளுடையவை.

இவர்கள் பாக்களால், பாடலால், சிறந்தோங்கிய சீருடையார்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





வெள்ளி, 17 மே, 2024

நாதன், நாமம் என்பவை

 இறைவனைச் சொற்றுணை வேதியன் என்பதால்,  அவன் நாமத்தின் இருப்பிடம் நம் நாவினால் செய்யும் ஒலியாகிய அவன் பெயரை ஒலிப்பதே  ஆகும்.  இவ்வாறு நாவொலி பெறுபவை  நாதன், நாமம், நமச்சிவாயம் என்பனதாம்.

பாடல்: திருநாவுக்கரசர்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன் 

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் 

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் 

நற்றுணை யாவது நமச்சி வாயவே.

(கல்+ தூண் > கற்றுண் என்று குறுகியது எதுகைநோக்கியது.)


சொல்லுக்குத் துணைவருவது நாவு. அதிலிருந்து  நா+இம்+ அம் > நாமம்.  இம் என்பதில் இகரம் கெட்டு மகர ஒற்று மட்டும் நிற்கும்.  அ, உ மற்றும் இ என்பவற்றிலிருந்து அம், இம் மற்றும் உம்.  இவை அன், இன், உன் என்றும் திரிந்து சொற்களில் இடைநிலைகளாக வரும்.    உன் ( உனது) என்ற முன்னிலைத் தொடர்பான உன்-ஐ இந்த இடைநிலையினின்று தனியாய்ப்  பிரித்து அறிந்துகொள்ளவேண்டும்.  அது குழப்பம் ஏற்பாடாமல் காத்தற்கு.

ஆதலின் நாமம், நாதன் என்பவை தமிழிலும் அவற்றின் பொருளைத் தருவனவாம்..

நா+ த் + அன் >  நாதன்.

இதை நா+ தன் எனினும் இழுக்கில்லை. இங்கு இது, து, த் என்பன சொல்லாக்க இடைநிலைகள்.  அதாவது சொல்லமைக்கும் உதவி ஒலிகள்.

நா+ ம் + அம்>  நாமம்.

ஆனால் நா+ மம் என்று விளக்குவதைத் தவிர்த்து,  நா+ ம் + அம் என்றே விளக்குக.

இது என்பதே த்  என்று குறுகி ஏற்பட்டது  எனினும் நா + இது + அன் என்று விரிக்கவேண்டியதுமில்லை. சில வடிவங்கள் திரிந்தபின் உள்ளபடி காட்டின் நலம். சில திரிதலின்முன் உள்ளவாறு காட்டினும் ஏற்புடையவாகும்.

எப்படி விளக்கினால் ஒவ்வொன்றையும் எளிதாக உணர்ந்துகொள்ளலாம் என்பதே குறிக்கோள்..  அன்+ அம் என்பதை அனம் என்று காட்டுவதுபோன்றதே இது  .  அனம் என்பது இங்கு இடைச்சொல்.  அனம் என்று ஒரு தனிச்சொல் ( பெயர்ச்சொல்) இல்லை.

மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_32.html   

நாதன் நாமம் முதலியவை

https://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_6.html

சில சோதிடச் சொற்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பதாகை என்னும் விரிகொடி

 பதாகை என்பது இருவழிகளில் விளக்கத்தக்க சொல்லமைப்புடையது ஆகும்.

பதி (~ தல்) என்ற வினையடியாகவும் இதை விளக்கலாம். சில குறியீடுகள், நிறம், சித்திரவேலைப்பாடுகள் முதலியவை கொடியில் பதிவு பெற்று கொடி அழகுபடுத்தப்படும்.

பதி + ஆகு + ஐ.

இந்தச் சொல்லில் ஐ என்பது விகுதி.  பதி + ஆ என்பது பதா என்று வந்தது.  பதி என்பதன் இறுதி இகரம் ஒழிந்தது. ( கெட்டது என்பர் இலக்கணத்தில் ). ஆகாரம் வந்து ஏறுவதால் பதா என்றானது  முடிவில் இது பதாகை என்றாகும்.

பரத்தல் என்ற வினையினடியாக:

பர + து + ஆகு + ஐ

பரதாகை, இதில் ரகரம் இடைக்குறைந்தும்  பதாகை ஆகும். துணி பரவலானதாக வைத்து அதில் எழுத்துக்கள் இருத்தலால் பதாகை என்பதும் பொருத்தமான சொல்லாக்கமே ஆகும்.  ஆகவே இது இருபிறப்பி ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 16 மே, 2024

முனிவர்திலகம் மோடி வெற்றி வந்துகொண்டிருக்கிறது

 உலகநண்பர் மோடிஎனும் உத்தமமா முனிவர்

திலகமென்பர் தேர்ந்தருளித் தேர்தல்வெல்வு  உற்றார்

பலகலைஞர் பாராட்டிப் புகழ  அறிந்   தோர்தம்

நிலைநானூ(று ) இருக்கைகளே நேரிதினே நன்றே.


நலம்வருக நலம்வருக நாட்டினர்யா  வர்க்கும்

நனிசிறக்க அவராட்சி  தணிவுறுமே இன்னல்

தனிஎவரும் இணையில்லை நாட்டில்  மேம் பாடே

இனிநிலத்து நற்காலம் நேரிதினே நன்றே.


பொதுநலமே போற்றுகிற இதயநெறிச் செல்வார்

இதுநலமென் றறிந்தபடி எந்நாளும் வெல்வார்

மெதுநடையொன் றாளாத  விஞ்சுவிரை வாளர்

கதிமோடி காண்கின்றோம் நேரிதினே நன்றே.


இவை தாழிசைப் பாட்டுகள்.

உலகநண்பர்  - விசுவாமித்திரர்

முனிவர்திலகம் -  முனிவருள் தலைமையுடையார்

தேர்ந்து அருளி -  வேட்பாளர்களை ஆய்ந்து எடுத்து நாட்டினுக்களித்து

அறிந்தோர்தம் -  கணிப்புச் செய்து கண்ட எண்ணிக்கை அவருக்கு

நேரிதினே நன்றே -  எப்படிப் பார்த்தாலும் நாட்டுக்கு நல்லது

தணிவுறும் - குறைவாகும்

இதயநெறி - மனச்சாட்சிப்படி நடத்தல்

மெதுநடை - விரைவாகச் செல்லாமை

ஆளாத - மேற்கொள்ளாத

விஞ்சுவிரைவு  -  அதிவேகம்

கதி மோடி - மேடியே நாட்டுக்குக் கதி. 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


A P Mani Birthday


 நம் எழுத்தாளர் அ.மா. பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா இன்று  16 மே அன்று கொண்டாடப் பட்டுப் பலர் கலந்துகொண்டனர்.  அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்.

ஏற்பாட்டாளர்:  திரு குமரன் பிள்ளை மற்றும் பிள்ளைகள் குடும்பத்தார்

                     ```        ஆசிரியர்  The Independent Singapore  




விருந்து தொடங்குமுன்......

புதன், 15 மே, 2024

சங்கல்பம் தன்முனைப்பு ஈடுபாடு.

தொடங்குரை:  யாகம், ஓமம்

இருபத்தொரு வகை யாகங்கள் உள்ளன என்று அறிகிறோம். ஓமம் செய்தல் ஓமம் வளர்த்தல்  வேள்விசெய்தல் என்றும் சொல்லப்படும். யாகம் ஓமம் என்பவை ஒருபொருட் சொற்களாகக் கருதப்படுதலும் உளது.  ஓமம் என்பது ஒரு விதையைக் குறித்தலோடு, ஓமத் தீ வளர்த்தலையும் குறிக்கும். இச்சொல் தமிழில் பல்பொருட் கிளவியாதலின், யாகம் குறிக்கும் ஓமம் வளர்த்தலை ஹோமம் என்று அயலொலி ஏற்றிக் கூறினர். இது பொருள்வேறுபாடு கருதியதே ஆகும்.  ஓமம் என்ற விதையைக் குறிக்காதபோது அதை ஹோமம் என்று வேறுபடுத்தி ஒலித்தனர். ஓமம்வளர்த்தல் என்று விரித்தால் இந்தப் பொருள்மயக்கம் நீங்கும்.

யாகம் சொல்லமைப்பு:

யாகம் என்ற சொல் தமிழ்ச்சொல்தான்.  பூசை அல்லது தொழுகை மொழியும் திரித்து வழங்கிய தமிழே ஆதலினாலும்,  வீட்டில் தமிழ்ப் பேசியவனே பூசையின்போது தமிழ்த் திரிபுகளுடன் பரகதத் திரிபுகளையும் கலந்து  பூசையிற் பயன்படுத்திக்கொண்டான் என்பதனாலும் இத்திரிபுகள் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளையே குறித்தன.  பர கதம் என்றது பிராகிருதம் என்ற வெளிமாநிலத்து மொழித்திரிபுகளை.  பர கதம் என்றால் பரந்து பயன்பாடுகண்ட ஒலிமுறைய. பிராகிருதம் என்றது அப்பெயரைத் திரித்துக் கூறிக்கொண்டது ஆகும். யாகம் என்றது யாத்தல் என்ற கட்டுதல் பொருட் சொல்லில் உண்டான சொல்லமைப்பு.  கட்டுதலாவது தீவளர்த்தலைக் கட்டமைப்புச் செய்தல் என்ற பொருளதாகும். யா+ கு + அம் என்பது யாகம் என்றாகி யாத்துக் கட்டுங்கால் அதனுடன் இணைந்து (கு)  அமைந்த முறைத் தரவுகள் ( அம்) என்பதைக் குறித்தது.  நிறுவி அதை முடித்தல் முதல் உள்ள அனைத்தையும் குறிக்கக் கு என்ற சேர்வுப் பொருட்குறிப்பும்  அம் என்ற இறுதி அமைப்பு முழுமைபெறுதல் பொருளும் உள்ளமைந்தன. இவற்றின் பொருள் அறிந்துகொள்க. வேட்டல் விரும்புதலாம். வேள்வி என்பது அது.  

விரும்பிச் சேரும் சடங்கு.  சங்கல்பம்  (சங்கலப்பம்)

 இறைவழிபாட்டுச் சடங்குகளின் தொடக்கத்திலும், அதில் பங்குபெறுகிற முன்மாந்தன், இதில் நான் பங்குகொள்வதுடன் இந்த சடங்கினை நிகழ்த்துகின்ற பூசாரியை நான் அவ்வாறே பணிக்கின்றேன் என்னும் உரையைச் செவிப்படுமாறு சொல்லவேண்டும். எனவே இந்து மதத்தில் ( இது தற்காலப் பெயர்) இது பலகாலும் கடைக்கப்படிக்கப்பட்டு வந்தது. இந்த சடங்குகளில் யாரும் வற்புறுத்தப்படவில்லை.  ஒருமுறை கோயிலில் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டால் நீர் எல்லாவற்றிலும் வற்புறுத்தப்படுகிறீர் என்ற பணிப்புமுறை இந்து மதத்தில் இல்லை. இது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்குச் "சங்கல்பம்" செய்தல் எனப்படும். இதைச் சங்கற்பம் என்றும் எழுதுவர்.  விரலிலும் தருப்பை அணிவிக்கப்படும்.

இச்சொல் சங்கலப்பம் என்றே விடப்பட்டிருந்தால் இதில் தெளிவு மிகுந்திருக்கும்.  ஆனால் சொல்லமைப்பில் புதுமை இராது. தங்கலப்பம் என்றே விட்டிருக்கலாமே! அதுவும் ஓர் உத்திதான்.  புதுச்சொல் ஆக்கத்திற்குத் திரிபுகள் தேவைப்பட்டன.

பூசாரிகள் சடங்குகளை நடைபெறுவித்தாலும், உம் இறைவனைக் கண்டுபிடித்து மேன்மை கொள்ளுதல் உம்முடைய சொந்த முயற்சி ஆகும். வேறொரு முறையில் நீர் இறைவனைக் கண்டுகொள்வீராயின், உம்மை யாரும் அழைக்கவுமில்லை,  வலிந்து பணிக்கவுமில்லை. விசுவாமித்திரன் என்ற முனி உள்பட எல்லோரும் சொந்த முயற்சியே செய்தார்கள். நீ இதைச் செய்யவேண்டாம் என்று தடுத்த பிறர்பற்றிப் புராணங்கள் கூறியுள்ளன. நீ செய்க, இல்லையென்றால் தலையை வெட்டிவிடுவேன் என்று யாரும் சொன்னதாக யாம் அறியவில்லை. 

ஆகவே சங்கற்பம் என்ற சொல் முதன்மை பெறுகிறது. இதன் தமிழ் மூலங்களைப் பார்க்கின்ற வேளையில், ஏனை மொழிகளில் பிற மூலங்கள் கூறப்படும் என்பதை அறிக.

தம் + கல+ பு + அம் :  தாம் கலந்துகொள்வது.

தம் + கல் + பு + அம் >  தங்கல்பம் > சங்கல்பம் > சங்கற்பம்.  இவ்விறுதி புணர்ச்சித் திரிபு. தகரம் சகரம் ஆகும். இது திரிபு.

இதில் கல என்பதன் அடிச்சொல் கல் என்பதுதான். கல் என்பதில் அ என்ற பன்மைச் சொல் கலந்து கல என்றாகி கலத்தல் என்ற தொழிற்பெயரானது.

வந்தன சென்றன என்பவற்றில் அ என்ற பன்மைச்சொல் கொண்டு முடிந்தமை காண்க.  இடைச்சொல்லும் ஒரு சொல் என்பதே இவண் கருத்தாகும்.

கலப்பு அம் > கலப்பம் > கற்பம் என்று முடிக்க. கல என்பதில்  அகர கெடுக்க ( அல்லது எடுக்க). கல் என்பதே மிஞ்சுவது காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


திங்கள், 13 மே, 2024

பத்திரம் என்ற சொல்.

 பத்திரம் என்பது.

பற்று > பத்து.

இரு  

அம்

எல்லாம் இணைக்கப் பத்திரம் ஆகிறது.

ஒருவன் பற்றி வைத்திருக்க வேண்டிய பொருள் என்று இதிலிருந்து தெரிகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

ஆவணங்கள் நூல்கள் பத்திரம்

எம்மிடம் இருந்த சங்க இலக்கியத் தமிழ் நூல்கள் அனைத்தும் காணாமற் போய்விட்டன. மலேசியாவில் இருந்து எமது சேமிப்பறைகளிலிருந்து இவை தொலைந்தன. சில சட்ட நூல்கள், மென்பொருள் நூல்கள் மட்டுமே உள்ளன. நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய தென்னவென்றால், எம்மிடம் அது உள்ளது இது உள்ளது என்று மற்றவர்களுக்குப் பரப்புரை செய்துகொண்டே இருத்தலாகாது. அவர்களுக்கு ஒரு வேகம் வந்துவிட்டால் அவர்களில் யாராவது சதிவேலைகள் செய்து அவை இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள். யார் எப்படிச் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை. இன்னும் காணாமற் போனவை எவை எவை என்று இங்குக் கூறவில்லை.  அதனாற் பயனும் இல்லை.

இவை போன்றவை அழிக்கப் படுவதற்கான " நல்ல"  நேரம்  ஒரு போர்க்காலம் தான்.  இப்போது போர்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவும் காலமும் இதுவாகும்.  மகுடமுகி நோய்ப்பரவலும் ( கோவிட்19)  ஒரு போர்தான். அது போர் என்று தெரியாமலே உலகம் அதில் உழன்று மேல்வந்துள்ளது.

ஓர் இருநூறு ஆண்டுக்காலத்துக்கு இலங்கையிலிருந்து வெளிவந்த தாளிகைகளின் சேமிப்புகள் கொண்ட தமிழ் நூலகம் அழிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருங்கள்.

மெய்ப்பு பின்னர்.


அத்திறம் > அத்திரம் > அஸ்திரம்.

அம்பு அஸ்திரம் என்ற சொற்களை நாம் விரித்து ஆய்ந்துள்ளோம்.  இவற்றை முன்னர் நீங்கள் படித்திராவிட்டால் இங்குச் சென்று வாயிக்க- ( வாசிக்க)லாம்.

சொடுக்குக:  https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_20.html

இப்போது இன்னொரு வகையில் அஸ்திரம் என்ற சொல்லை அறிந்துகொள்ள முனைகிறோம். மேற்கண்ட இடுகையில் அஸ்திரம் என்பது தூரத்திலிருந்து அடிக்கும் வழி என்பதை அவ்வளவாகப் பெரிதுபடுத்தவில்லை.  இப்போது அடியை அல்லது உதையை மையமாக வைத்து அதே சொல்லைக் காட்டுவோம். தமிழிலே ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இதைக் காட்டலாம் என்பதை முன்னரே நாம் கூறியுள்ளோம். இங்குள்ள இடுகைகளில் சிலேடைகள்போல சொற்பிறப்பைக் காட்டுதலைத் தவிர்த்துள்ளோம். சிலவேளைகளில் தமிழ்மொழியில் வளத்தையும் வசதியையும் விரித்துரைப்பது அவசியமாகிறது.

அஸ்திரம் என்ற சொல்லையே இன்றும் எடுத்துக்கொள்கிறோம்.

முதலில் இறுதல் என்ற சொல்லைக் கவனத்தில் கொண்டுவருகிறோம்.  இறுதல் என்றால் முடிதல். இறு என்பதனுடன் தி என்ற விகுதி சேர இறுதி என்ற சொல் பிறந்து முடிவு என்ற பொருளைப் பயக்கிறது.  இன்றைக்கு உள்ள அஸ்திரங்களை அல்லது எறிபடைகளை ( missiles ) கொண்டு சில நொடிகளிலே பல ஊர்களை அழித்து பல்லாயிர அல்லது பல்லிலக்கவரை சாம்பலாகச் செய்துவிட முடியுமன்றோ? இத்தகைய திறனை அதே சொல்லில் காட்டுதல் கூடுமோ?  பார்க்கலாம். அஸ்திரம் என்ற சொல்லையே தேர்ந்தெடுப்போம்.

இறு என்ற சொல்லிலிருந்துதான் இற இறத்தல் என்ற சொல்லும் வருகிறது.  பல இறப்புகள் நிகழும் என்பதால் இறம் என்பது பொருத்தமான சொல்லிறுதி ஆகும். இறம் என்பதை இரம் என்று வைத்துக்கொள்ளலாம்.

அடித்து + இறு + அம் > அடித்திறம் > ( டி யை விலக்க) >  அத்திறம் > அத்திரம்> அஸ்திரம் என்ற அதே சொல் வந்துவிட்டது.

அழித்து அல்லது அடித்து இறுதல்.

அழித்திறம் >  அத்திறம் > அஸ்திரம் என்றும்  ஆகும்,  ழி விலக்கப்பட்டது.

பூசைமாந்தர் செய்ததுபோல இச்சொல்லை நாம் மாற்றி அழிப்பை அல்லது அடித்தலை மறைவாக்கியுள்ளோம்.

அஸ்திர என்பது  astro என்ற சொல் போலவே இருப்பதால் மிக்க நன்று.

இப்போது ஏவுகணை, எறிபடை என்பனவும் அறிவோம். பறக்குத்தி, பறவெடி, வெடிப்பறவி என்று பல உண்டாக்கலாம்.  சொல்லுக்கு நமக்குப் பஞ்சமில்லை. மனநிறைவு தருகிறதா என்பதே அறியத்தக்கது,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

ஞாயிறு, 12 மே, 2024

அம்மாவின் அருள்.

அம்மாவின் அருளால் அவருக்குப் பெருவெற்றி

இம்மா நிலத்தவர்க் கிருந்திடும் விரிவியப்பே, 

சனி, 11 மே, 2024

சாதாரணம், சாமானியம், சாமான்.

 வேண்டுதன்மை*,  கிடைப்பு**  என்ற இரண்டுமே எப் பொருளும் விலை உடையதாய் உள்ளதா என்பதற்கு விடைதருவனவாம். ஒருபொருள் தேடுவாரற்றதாய் இருக்குமானால் அதை யாரும் வேண்டுமென்னார். இயல்பாய்க் கிட்டும் பொருட்களும் சில தேவையுடையவாகிவிடும் நிகழ்வுகள் ஏற்பட்டுவிடலாம்.  அப்போது அவை விலையுடையவாகும். நாம் பொருட்களில் சிலவற்றைச் "சாதாரணம்" என்று குறிக்கிறோம்.  சாமான், சாமானியம்  என்றும் குறிக்கிறோம்.  இச்சொற்களைப் பற்றி யாம் சில குறிப்புகளே தருவோம்.

சமஸ்கிருதம் என்ற பூசைமொழியும் இந்தியாவிலே தோன்றி வளர்த்து விரிவாக்கப்பட்ட  மொழியே ஆகும்.  இதிலிருந்தும் தமிழிலிருந்தும் பல சொற்களை இலத்தீன் மொழி அறிஞர்கள் கற்றுக்கொண்டு தங்கள் (அப்போது) புதுமொழியை விரிவாக்கினர். உரோமப் பேரரசு அமைந்துகொண்டிருந்த அக்காலத்தில் ஓர் குறுகிய இடத்தில் வழங்கிய வட்டார மொழியாகிய இலத்தீனம், ஒரு பேரரசுக்கு ஏற்ற மொழியாக விரிவு செய்யப்பட்டுப் பயன்பாடு கண்டது. பலவகைகளில் புதுச்சொற்கள் படைக்கப்பட்டன. பிரிட்டீஷ் அரசு விரிந்த காலத்தில் ஆங்கிலோ செக்சன் மொழியாகிய ஆங்கிலமும் இவ்வாறே பல புதிய சொற்களைக் கடன் கொண்டு விரிவு செய்யப்பட்டது.பழைய பிரித்தானிய மொழி நசுக்குண்டு இறந்தது.  ஆனால் தமிழ் அரசு மொழியாய் ஆன பண்டைக் காலத்தில் இத்தகைய வசதி தமிழுக்குக் கிடைக்கவில்லை.  அதனால் அது தனக்கு வேண்டிய சொற்களைத் தானே உண்டாக்கிக்கொண்டது. அது தனித்தன்மை உடைத்தாய் இருந்து செழித்ததற்கு அதுவே காரணம்.  இன்று ஆங்கிலச் சொற்கள் நமக்குக் கிட்டுதல்போல் அந்தப் பழங்காலத்தில் பிறமொழிச் சொற்கள் நம் முன்னோர்க்குக் கிடைக்கவில்லை. அதனால் அது  தம்> தம் இழ் > தமிழ் ஆனதென்பதுண்டு. தனித்தியங்கிய மொழி.  விரிந்த பொருளிலக்கணம் உடைய மொழியாய்த் தமிழ் பரிணமித்தது. தமிழர்கள் அடிக்கடி போரிலீடுபட்டமையால் வரையறைகள் பல உண்டாகி எப்படிப் போர்புரிவது, எப்படி அதைப் பாடுவது என்பவற்றுக்கெல்லாம் இலக்கணம் உண்டாயிற்று.

சாமான் என்ற சொல்,  சாதல், மானுதல் என்ற இரண்டு சொற்களாலான ஒன்றாகும்.  ஒரு விதை போலும் உயிருள்ள பொருள் காயவைத்துச் சற்று சிறிதாகி அதுபோன்ற  விதைகளுடன் மளிகைக் கடையில் எடைக்கணக்கில் விற்கப்படுகிறது.  இவற்றை மளிகைச் சாமான் என்று கூறுகிறோம்.  சா - உயிரற்ற , மான் - மானும் ( ஒக்கும் ) பொருளுடன் விற்கப்படுவது, சா என்பது ஏவல் வினை,  மான் என்பதும் ஏவல் வினை. இரண்டு ஏவல் வினைகளை இணைத்துப் புனையப்பட்ட சொல். அருமையான அமைபு ஆகும்.  இது ஜாமான் அன்று,  சாமான் என்பதுதான்.


இவற்றையும் உசாவி அறிக:-


https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_4.html  சாமான்

https://sivamaalaa.blogspot.com/2022/08/blog-post_3.html   சாதாரணம்

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post.html       சாமானியம்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டம் இடலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


குறிப்புகள்:

வேண்டுதன்மை < வேண்டுதல்+ மை

கிடைப்பு <  (கிடைத்தல்)

புதன், 8 மே, 2024

கோவிந்தன் கோயிந்தன் சொல்

 தெய்வப்பெயராகிய கோவிந்தன் என்பதையும்  கோயிந்தன் என்பதையும் இன்று ஆய்ந்தறிந்து கொள்வோம். 

பல்வேறு இந்திய மொழிகளில் இது சில திரிபுகளை அடைந்து வழங்கும். கோவின்ட, கோபின்ட, கோபின்ட். கோவின்ட் என்பன சில திரிபுகள். பகரத்துக்கு வகரம் வருவது பல மொழிகளிலும் காணப்படும் திரிபுவகை. இந்தத் திரிபுகள் சொல்லில் எந்தக் கருதத்தக்க  பொருள் மாற்றத்தையும் உணடாக்கிவிடவில்லை.

கோவிந்தன் என்றால் மாடுகள் மேய்ப்பவன் என்ற பொருள் தரப்படுகிறது.  கண்ணன் அல்லது கிருஷ்ணன் இளமையில் மாடுமேய்க்கும் வேலையைப் பார்த்ததனால் இப்பெயர் பெற்றான் என்பர். ஆனால் கண்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்கள் அவன் நீல அல்லது கருப்பு நிறத்தினன் என்பதனால் ஏற்பட்டது என்பர். மாடுகள் மேய்ப்பவன் என்ற  பொருள் தமிழுக்கும் ஏற்புடையதே.

கோ + இன் + து  + அன்

கோ = மாடு(கள்)

இன் - உடைமை காட்டும் இடைச்சொல். உருபாகவும் வருவது.

து -  இடைநிலை.

ஆண்பால் விகுதி.

ஆகவே மாடுகளை உடையோன் என்பது பொருளாகிறது.

இவ்வாறு பிரிக்காமல் வேறு விதாமாகப் பிரித்து இன்னும் சிறந்த பொருள் கிட்டுகிறதா என்று பார்க்கலாம்.  ஏனென்றால் நெடுங்காலமாகப் பலவாறு பிரித்த சொல்தான் இது. தன் என்ற தமிழ்ச்சொல்லே இறுதியில் நிற்பதாகக் கருதி,  தன் கோக்களே (  மாடுகளே) தான் மேய்த்தவை என்ற பொருள் விளங்குபடியாகத் தன் என்ற சொல்லே இறுதி என்று முடிக்கலாம்,  எல்லாச் சொற்களுமே ஒரு விகுதியில்தான் முடிதல் வேண்டும் என்று எந்த இலக்கணமும் விதிக்கவில்லை. எனவே தன் என்பது தன்னைக் குறிப்பதாக, அதாவது பரமாத்மாவைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இதன் பொருள் என்னவென்றால் பரமாத்மா தன் பற்றர்களுக்குத் தானே வழிகாட்டி ஆகிறான் என்பதுதான். மாடுகள் என்பவை பற்றுடன் தன்னில் வந்து சேர்ந்தோர் ஆவர். இவ்வாறு அணியியற் பொருளிருக்கின்ற படியால் தன் என்று விடுதலும் சிறப்பே ஆகும். பற்றர்களைப் பின்னர் பெண்காளாக்கியது ஏனென்றால் பற்றின் ஆழத்தை வெளிக்கொணர்வதற்காகத் தான்.  ஆகவே மாடு பெண்கள் என்பவை எல்லாம் பற்றின் திறமும் இறைவனின் ஏற்பினையும் காட்டுவதே நோக்கமாகும்.

கோயிந்தன் என்றும் கோவிந்தன் என்றும் யகரம் வகரம் ஆகிய இரு உடம்படுமெய்களும் வரும், இவற்றுள் பிறமொழிகள் வகரத்தையே தேர்ந்தெடுத்துக்கொண்டு உள்ளன.

இன் என்பதற்கு இனிமை என்ற பொருளை எடுத்தால்  கோக்களுக்கு இனியவன் கண்ணன்;  கண்ணனுக்கு இனியவை கோக்கள் என்று இன் என்பது ஒரு நடுநாயகமாய் ஆய்விடும் சொல்லாகிவிடும்.  இது தமிழால் மட்டுமே வரும் பொருள் . இது வெகுமானிக்கத் தக்கதாகும்.

இடையனும் மாடுகளும் என்னும் பொருள்மரபு பிற மதங்களிலும் பரவி நலம் விளைத்துள்ள கருத்தியல் ஆகும்.  இதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம்

கருநிறத்தோனாகிய கடவுள் கண்ணன், வடநாட்டில் கொண்டாடப் பட்டாலும் ஒரு காலத்தில் தமிழர் நாவலந்தீவு முழுமையும் பரவியிருந்தனர் என்பதைக் காட்டும் அடையாளமாகக் கருதுவதற்குக் காரணமுள்ளதென்பதை அறிக .

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





தச்சுப் பொருட்கள் காத்து உலகுகாப்பீர்.







எழுசீர் விருத்தம் 


அச்சுப் புரைய அழகைச் தெளித்தார் அருகினில்  வைத்தார்  நமக்குநல்ல

தச்சுப் பொருட்கள் சளிநோய்க் கடுங்கட்  டுகளால் கெடுதல் அடைந்துபின்னே

வச்சுப் பயன்கொள் தரமே இலாமல் எடுத்தே எறிய  முனைந்தகாலை,

எச்சம் இவற்றை  அழகாய் உருப்படுத்  தித்தரு வேனே எனத்துணிந்தார்.


துணிந்தநற் றச்சரும் சின்னாள் அவற்றை இழைத்தார் அழகுத்  திரவமிட்டார்

அணிந்த திலகத் தரிவை நிகர்த்த பொலிவோ டிவற்றைச்  செய்துதந்தார்.

பணிந்தே இவைதமை எம்மிடம் சேர்த்தார் படத்தினில் காண்பிரோ எம்முடனே

இணைந்தே செயல்பட வாரீர் மரந்தமைக் காப்பீர் திருந்தும்  எழுமுலகே.


அச்சுப் புரைய --   அச்சுப்  போன்ற;  அழகைத் தெளித்தார் -  காட்சிக்கினிமையை உண்டாக்கினார்;  அருகினில்  வைத்தார் -  எம்மெதிரில் எடுத்து வைத்துக் காட்டினார்;   நமக்குநல்லதச்சுப் பொருட்கள் - இவை நமக்கு நல்ல மரவேலைப் பொருட்கள் ஆயின;    சளிநோய்க் கடுங்கட்  டுகளால் கெடுதல் அடைந்துபின்னே -  சளி நோய் காரணமாக கவனிக்க முடியாமல் கெட்டுவிட்ட பிற்காலத்து; வச்சுப் பயன்கொள் தரமே இலாமல் எடுத்தே எறிய  முனைந்தகாலை--- பயன்பட முடியாமல் போய் அப்புறப்படுத்த வேண்டிய நிலை வந்துற்ற காலத்தில் ; எச்சம் இவற்றை  அழகாய் உருபபடுத்  தித்தரு வேனே எனத்துணிந்தார்.-  எடுத்தெறிந்தவை போக இவற்றை அழகுபடுத்தி எமக்களிப்பேம் என்று துணிவு கொண்டார்.

துணிந்தநற் றச்சரும் சின்னாள் அவற்றை இழைத்தார் ---- அழகு படுத்தத் துணிந்த அவரும் சில நாட்களில் அவற்றை அழகு படுத்தினார்; அழகுத்  திரவமிட்டார் -- அழகிய திரவப் பூச்சு செய்தார்; அணிந்த திலகத் தரிவை நிகர்த்த பொலிவோ டிவற்றைச்  செய்துதந்தார். -  ஒரு பொட்டு அணிந்த பெண்ணைப் பார்த்த அழகைப் போல இவற்றை கவினாக்கினார்; பணிந்தே இவைதமைஎம்மிடம் சேர்த்தார் -  மிக்கப் பணிவுடன் இவற்றை எம்மிடம் முன்னிலைப் படுத்தினார்;  படத்தினில் காண்பிரோ ---  படத்தில் பாருங்கள் ; எம்முடனே இணைந்தே செயல்பட வாரீர் -  நீங்களும் எம்முடன் சேர்ந்து கொள்ளுங்கள்;  மரந்தமைக் காப்பீர் -  இயற்கையில் வளரும் மரங்களைக் காப்பாற்றவேண்டும்;   திருந்தும்  எழுமுலகே.- அப்போது உலகம் திருந்தும்.

எச்சம் -  எறிந்தன போக மிஞ்சியவை. வச்சு - வைத்து, பேச்சுவழக்குச் சொல். காண்பீரோ என்பது காண்பிரோ என்று குறுகிற்று.

புதிய புதிய மரச்சாமான்கள் வாங்கிவைத்தால் அவற்றைச் செய்ய பல மரங்கள் தேவைப்பட்டு, காடுகள் அழியும். காடுகளைக் காக்க முனையவேண்டும். அதுவே கவிதையின் செய்தி.







அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சாமான் கள் என்று கள்ளைத் தனியாகத்
தான் எழுதமுடிகிறது. உடனே திருத்தினால்
அது சாமாங்கள் என்று தானே திருந்திக்கொள்கிறது.
(தன்திருத்தம்), ஒருநாள் கழித்து இவற்றை ஒன்று சேர்த்தல்:
அப்போது இந்தத் தொல்லை வரவில்லை.

திருத்தங்கள் உடன் நடைபெறா என்று உணர்க.

திங்கள், 6 மே, 2024

அட்சரமும் சரசுவதியும்

 இந்நாட்களில் சரம் என்ற சொல் பெரிதும் பேசுவோரால் அருகழைக்கப்படுவதில்லை.  ஒருகாலத்து அது கவர்ச்சிச்சொல்லாய்ப் பேசுவோரிடை இருந்தது,  அட்சரம் என்ற சொல்லில் அது இருக்கிறது. இவற்றைச் சரமாக எழுதி அழகுபார்ப்பதற்குத் துணைப்பொருட்கள் சிலவே இருந்தன.  சரம் ஒரு தேவியினால் சாத்தியமாயிற்று என்று நினைத்தனர்.  அந்தச் சரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியே அவளையும் அழைத்து அறிந்துகொண்டனர் அவள் சொந்தமாகவே அங்கு வந்துவிட்டவள். சரத்தில் தானே தோன்றியவள் என்ற பொருட்பட அவளுக்குப் பெயரும் இட்டனர். பிறவிப்பயன் என்பதென்ன?  இதை அறியானாயின் அவன் மடையன்.   ஆனால் இவர்கள் மிக்க அறிவாளிகள். மகிழ்வுக்கோ குறைவில்லை.

பல சிறு கட்டிகளை வரிசையாக அடுக்கிக் கோத்து  ஒரு மாலை செய்தனர். வரியடுக்கில் வைத்த மாலை. அடுக்கமுறு மாலை.  ஒரு கடின ஒலியை விலக்கி ஒரு புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டனர்.  அந்தச் சொல் அக்கமாலை. அக்கமாலை உண்டான மகிழ்வில் எழுத்து ஒன்றை இணைத்துக்கொண்டு, அதைப் புகலுறு புனைகுமாலை என்றனர்.  அழகே அழகு. தண்டியாசிரியன் சொன்ன சித்திரகவிகள் போலப் புனைந்துகொண்டனர்.

அறுக்க அருகில் வருவதுதான்  அறுக்கரம்.   அறுக்க அறுக்க அருகி வந்து வேறு பொருள் பயக்கும்.  அறுக்க அருகில் ----   அக்கரம். அழகுறு சொல்லமைப்பு.  வர வர வர அது வருவது.  அண் அன் அனமாகும்.

புரிய நேரமாகக் கூடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சனி, 4 மே, 2024

பிருட்டபாகம் என்னும் உடலின் பாகம் - சொல்.

 பிறகிட்ட  -  இதை புரக்கட்டு, பெரக்கட்டு என்று நாவு பலவாறு பலுக்கும்.

பிருட்ட பாகம்.  இது மரூஉச் சொல்.  கி என்ற எழுத்து மறைந்து விட்டது  இட்ட ( இடு > இட்ட ) பாகம் என்பது உட்ட பாகம் ஆயிற்று.பிர்+ உட்ட > பிருட்ட!  பின் இது பூசை மொழியில் இடம்பெற்று,  பிரிஷ்ட, பிருஷ்ட என்று மகிழ்வாய் மெருகு இட்டுக்கொண்டு வழங்கிவருகிறது.  ற + இ சேர்ந்து ரு ஆனது இதன் ஈர்ப்பு ஆகிவிட்டது.

மொழி எவ்வாறு அழகுள்ளதாக இலங்குகிறது என்றால், இன்னொரு திரிபு பாருங்கள்:

அவையின் இடு(க்)கை >சவையின் இடுக்கை >  சவனி(டு)க்கை > சவனிக்கை.   இது மேடைக்கு இடப்படும் திரைச்சீலையைக் குறிக்கிறது. திரை விலகியபின் ஒருவன் வந்துபாடுவான். மக்கள் மகிழ்ச்சி அடைவர்.  அகரம் சகரமாகும். கடின ஒலிகள் ( டு போல)  தானே நீங்கிவிடும். கேட்பவன் கவனக்குறைவால் சொல்லில் மாற்றம்.

(ஞானயோகம்) மேவும் அவர் என்பது, பாகவதர் பாடுகையில் மே-பூங்கவ என்பதுபோல் ஒலிக்கிறது. படுதா போடும் வேலைக்காரனுக்கு நேரமில்லை. அதனால் அவனுக்கு சவனிக்கை என்று காதில் விழுந்து அவ்வாறே எடுத்துக்கொள்கிறான். இதில் மொழிக்கு ஒரு புதுச்சொல் கிடைத்துவிட்டதே.

பாவினால் மக்களைக் கவர்ந்தார்.  பா கவ(ர்ந்)தார் > பாக வதார்>  பாகவதர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

மற்றொரு வகையிலும் இச்சொல் விளக்கமுறும். இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_21.html.  இருபிறப்பி ஆகும்.


தொழிலில் ஒற்றுமை

 உங்களின் வேலையை  நீங்களே செய்வதில்

உங்களுக் கோர்பெயர் நல்லது வந்திடில்

உங்கள் மனமே  நிறைவினில் நிற்கும்  

உங்களுக் காகும் உடல்நலம் ஓங்கும்,


விரைந்து முடிக்கவே  வேண்டுவ தாயின்

வேண்டிய  நற்றுணை கொள்வதும் கூடும்.

சிறந்தது  கைத்திறம் உள்ளார்  உதவிடச்

சிறப்புடன் வேலை முடித்திட வேண்டும்


புன்னகை பூத்து முரண்பா டகற்றி,

புகழுற யாவரும் ஒற்றுமை போற்றி,


மன்னர்கள் நாமென நன்மகிழ் வெய்த,

முன்னரே ஆக்கமே நண்ணுதல் காக்கவே..


(இப்பாடல் வெண்தளை பயின்று வருமாறு செப்போலோசையில் எழுதப்படுகிறது,  அடுத்த வரியில் வெள்ளோசை தழுவப்படவில்லை.)


நல்லது - நல்ல பெயரைக் குறிக்கும். மற்ற நன்மையும் அடங்கும்,

ஓர் பெயர் - ஒரு பெயர். கவிதையில் ஒரு என்று எழுதவேண்டியதில்லை

இலக்கணம் விலக்கு அளிக்கிறது,

சிறந்தது கைத்திறம் =  கைத்திறம் என்பது சிறந்தது,  அது கொண்டு

நற்றுணை - நல்ல துணை.

எய்த -  அடைய.

நன்ணுதல் -  அடைதல்

முன்னரே - இது முன்னரே காக்க என்று இணைக்க.

காக்கவே -  காத்துக்கொள்க.


வியாழன், 2 மே, 2024

தினாத்யயா - சமஸ்கிருதச் சொல். பொருள்.

தினம் என்ற சொல்,  தீ என்ற தமிழிலிருந்து வருகிறது.  தீ என்பதோ தேய் என்பதிலிருந்து வருகிறது. சில பொருட்கள் தேய்வதனால் வெப்பம் மிக்குவந்து தீ உண்டாகிவிடுகிறது.

தினம் என்பது தமிழ்ச்சொல் என்று சில தமிழாசிரியர்கள் கூறியுள்ளனர்.

முதலில் தமிழர்கள் தமிழும் சமத்கிருதமும் இருகண்கள் என்றும் ஒன்றுக்கொன்று இணையானவை என்று சொன்னார்கள். வெள்ளைக்காரன் அது எங்கள் கண்டத்திலிருந்து உங்கள் கண்டத்துக்கு வந்த மொழி என்று கட்டுரைத்தபின்,  அவர்கள் கடன் வாங்கியதைத் தெரிவிக்காமல், நீங்கள் எல்லாம் கடன் வாங்கிவிட்டீர்கள் என்று சொல்லிவிட்டான். அந்நாளிலிருந்து தமிழறிஞர்கள் மனமிகக் கவன்று,  அது சமஸ்கிருதம், இது சமஸ்கிருதம் என்று பிரித்து. ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வால்மிகி என்ற தமிழ்ப்புலவன் தான் முதலில் சமஸ்கிருதத்தில் நூலெழுதியவன்.  அவன்பாடிய இராமரும் நீலவண்ணத்தவர்தான். வெள்ளையன் அல்லன்.

வான்மிகி என்ற புலவர் சங்கத்திலும் சென்று பாடியுள்ளார்.

சமஸ்கிருதம் என்பது நம் உள்ளூர் பூசை மொழி. 

நிற்க, தினம் என்பது நாள் என்று பொருள்படுதலால்,  தினாத்யா  என்ற சொல்லைப் பார்ப்போம்.  தினம் அற்றுப்போவது தான்  தினாத்யா அல்லது தினாத்யாய. அற்றுப்போவது என்றால் முடிந்துபோவது.  அறவே இல்லாமல் போவது அன்று.  (அல்ல).  தினம் அற்றுப் போவதால் இரவு வந்துவிடும்.  அற்று -  இன்று அத்துப்போனால்  நாளைச் சூரியன் முளைக்கும்.  அப்போது   வரும். பூமி சுற்றுவதும் நீங்கள் அறிந்ததே.[ Dinātyaya]

தினேஸ்வரன் என்ற பெயரும் பலரும் விரும்பும் பெயர். தினத்துக்கு ஈஸ்வரன் என்றால் சூரியன். இறைவன் > இஷ்வர் ( ஈஷ்வர்)> ஈஸ்வர் மீண்டும் அன் பெற்று ஈஸ்வரன் ஆகும்.  சூரியன் தெய்வமாக வணங்கப்படுவது. சூடு கொடுப்பவன் ஆதலால் சூடியன்: சூரியன் ஆனான்.

தினாதி என்பது தின ஆதி,  காலைப்பொழுது, இப்போது இவ்வாறு பல சொற்கள் உள்ளன. இந்த மாதிரிச் சொற்களின் மூலம் சமஸ்கிருதமும் பல பெற்று சொற்செழுமை அடைந்தது. 

தின அன்று அகம் என்பவற்றைக் கொண்டு  தின அந்து அக >  தினாந்தக என்ற சொல் உண்டானது. மாலை வந்து மருவும் நேரத்தைக் இது குறித்தது.

அன்று அல்ல என்பதுமாகும், அன் து < >அந்து

தேய் > தீ > தினம்போல,  தேய் என்பதிலிருந்தே டே  ( நாள் ) என்பதை ஐரோப்பியர்கள் உண்டாக்கிக்கொண்டனர்.

தீ இன் அம் > தி ன் அம் > தினம்,.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின

புதன், 1 மே, 2024

புதிய பிரதமர் வோங், மூத்த அமைச்சராகும் லீ மேதகையோருக்கு வாழ்த்துக்கள்.

 சிங்கமான பலசிங்கர்  சிறப்பொடுவாழ் சிங்கைநகர்

தங்கநகர்த் தலைமைசேர்  நல்அமைச்சர் வோங்கவரும்

பொங்கெழிலே  பூத்திருக்கப் பொறுப்பேற்கும் நன்னாளில்

தங்குகசீர்  மங்களமே  தரணிப்பண் நிலைதருமே.


நிறைவான செல்வமெலாம் நித்தலுமே பெருகிவர

நிறைவானும் குன்றாத மழைபொழியச் செழிப்பாகத்

திறைபொருளின் வளம்கொழிக்கத் தேன்மொழியும் கலந்துவர

இறைவரமும் தொடர்தரவே இவராட்சி நிலைதருமே.


பல்லாண்டு  நீள்நகரைப்  பண்புடனே ஆண்டவர்நம்

தொல்குடியின் லீசியன்லுங் துவள்வில்லா வானம்போல்.

வல்கணமொன்  றில்லாமல் வளமான ஆட்சிதந்தார்

நல்மணமே ஒன்றியன்று நலம்காக்க   நிலைதருமே.


இவை மூன்றடுக்கிய தாழிசைப்பாக்கள்.

அரும்பொருள்:

திறை பொருள்  - வரியும் பொருளியலும்

உம்மைத் தொகை.

நித்தல் - என்றும்

தரணிப்பண் -  உலகம் ஒத்து இருந்து பாராட்டுதல்

சிங்கர் -  சிங்கம்போன்ற மனிதர்கள் சிங்க( ம் ) + அர்> சிங்கர்

சிங்க(மவ)ர்>  ( தொகுத்தல் விகாரம் என்றும் கொள்க)

தொடர்தர =  தொடர்ந்துவர

இறைவரம் - கடவுள் கிருபை

தொல்குடி -  முதல் தலையமைச்சரின் குடி

நீள்நகர் - பெருநகர்

வல்கணம் - கடினமான தன்மை

ஒன்றியன்று -  ஒன்றாக இணைந்து

ஒன்று இயன்று - ஒன்றாய் இயன்று. ஆய் உருபு தொக்கது.

துவள்வில்லா -  துவள்வு இல்லா - மடங்கிக்கெடுதல் இல்லாத.

வன் கணம் நன் கணம் என்று புணர்த்தாமல் நல் வல் என்றே எதுகைநோக்கி இருத்தப்பட்டன. ஆகவே நல்கணம், வல் கணம், வன் கணம் : வன்மை நிகழ்வின் திரட்சிகள்;  நல் கணம் - நன்மை நிகழ்வின் திரட்சிகள் ( ஆட்சியில்) .

"நல் கணம்" என்பதைப் பயன் படுத்தாமல்  நல் மணம் என்று பாடியுள்ளோம்.

நட்பினை(சேர்தலை) மிகுத்தல்

 நட்பு என்ற சொல் நள் என்ற அடிச்சொல்லில் பிறந்தது. நள்+ தல் என்பது நட்டல் என்றும் வரும்.  நண்பு மற்றும் நட்பு என்றும் தோன்றும். நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு என்று தேவர் திருவாய் மலர்கின்றார். நண்பர்கள்  ஆனபின்  வீடு  இருந்த இடத்தில் இருக்கும் என்றாலும் வீடில்லை  அதாவது விடமுடியாது என் கின்றார்.  நண்பர்  ஆனபின் பிரிந்துவிடுதல் எளிதன்று.  நண்பர்களாகு முன்னர் மலைகள்போல்   பெரியனவாகத் தெரிந்த குற்றங்களும் கண்களாற் காணவும் இயலாதன ஆகிவிடும். அதனால்தான் வள்ளுவனார் வீடில்லை,  விட்டு விலக முடியாது என்று சொல்கிறார் வெகு திட்டவட்டமாக.

ஒரு செடியை நடுதல்,  மரத்தை நடுதல் இவை போன்றவைதாம்.  இந்த நட்டலும். கொஞ்ச நாட்களிலே  வேர்விட்டு வளரத் தொடங்கிவிடுகிறது. கூடியவர் பிரிந்தால் கொஞ்சம் அழுகையும் வரலாம்,  அப்போது உங்கள் நண்பர் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்ததாக ஊரெல்லாம் ஓமலித்தாலும் உங்களுக்குத் தெரியாது போய்விடும். நட்பில் குற்றம் தெரிவதில்லை. அப்புறம் வீடில்லை.  விடுபாடு கிடையாது.

இவ்வாறெல்லாம் ஏன் சொல்கிறோ மென்றால்,  நட்பு என்பதற்கும் செடி மரம் நடுவதற்கும் வேறுபாடில்லை.  எல்லாம் நள் என்ற அடிச்சொல்லிலிருந்தான் வருகிறது.  அதனால்தான் :"நட்டலிற் கேடில்லை, பின்னர் வீடில்லை:" என்கிறார்.

இப்படி நட்பில் மிகைபாடு இருத்தலால்,  பூசைமொழியில் மிகுத்தல் கருத்திலிருந்து மித்திரம் என்னும் சொல்லைப் படைத்துள்ளனர். நட்பு என்பதே ஒரு கூடுதலில் வரும் மிகைதான்.  இதை உணர்ந்துகொண்டால் மிகு திறன் என்பது ஏன் மித்திரம் ஆனதென்பதை உணரலாகும்..  இதை "திறன்" என்று சொல்வதை விட திரன் என்று சொல்வதே திரிதல் காட்ட எளிதான சொல்லமைபு ஆகும்.  இது உண்மையில் திரி+ அன் > திரன்தான். திரிபுப்பொருள். அகரவரிசையை  நோக்காது  எழுத்துத் திரிபுகளை மட்டும் நோக்குக. இந்த உத்தி புரிதலுக்குத் தேவையானதாகும்.  திரி என்பதில் இகரம் கெட்டு திர் அன் திரன் என்று வந்த சொல்.  மிகத் திரிதல் > மித்திரி அம்> மித்திர ஆகி,  பூசைமொழியில் வரும் நட்புச்சொல்லுக்கு மிக்க நெருக்கமான திரிபு வடிவங்களை முன்வைக்கும்.  திறம், திரம், திரி அம்,  என்பவற்றில் திரி  அம் என்பது மிகத் தெளிவான விளக்கம்  அதாவது புரியவைக்கும் விளக்கம் ஆகும்.

கூடுதல் என்ற தமிழ்ச் சொல்லும் மித்திரன் என்ற சங்கதச் சொல்லும் அதிகம் புலப்படுத்தும் கருத்தில் உண்டாயின. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


செவ்வாய், 30 ஏப்ரல், 2024

மேதின வாழ்த்துக்கள்

 வீட்டிலும் நாட்டிலும் வேலைகள்  செய்து 

விரிவாரி ஞாலம்   தெரிவேற்றம்  செய்தார்தம்

பாட்டை  உணர்ந்தோர்  பயன்கருதி ஏத்திய

நாட்டினர் கொண்டாடும்  மேதினமே இன்று,

வருகநன் மக்காள்  பெருகுபுகழ் அன்னார்

சருகென்றும் எண்ணா  துருகி வணங்குவம்.

அன்னவரால் இந்நகரம் தூய்மை அடைந்தது.

அன்னவரால் ஞாலம்  அலங்கோல  மேதவிர்ந்து

இன்னரும்  நல்லிடமாய் இங்கு  ஒளிர்ந்த(து.)

உழைப்போரை எப்போதும் ஓங்குயர்ந் தோராய்

இமைப்போதும் மாறாமல் ஏற்றியே போற்றுவீர்.

நம்மிறைவன் நல்லவர் என்றன்னார் போற்றுகிறான்,

தம்மை உணர்ந்தவரே தாரணி  தானுணர்ந்தார்.

வேலைகள் செய்வோர்க்    கியாதே இயன்றது

மூலையில் வைத்தொளிக்கா மூதறிவால் ஈந்திடுவீர்.

வேலனும் வேலைசெய் வள்ளி வரித்திட்டான்,

ஞாலம் பயனுற  நல்லதை இன்றுசெய்வீர்

கூலமோ  சேலையா தேனும் கொடுத்திடுவீர்.

நாளும் நலம்பெறுவோம் நாம். 


உழைப்பார்க்  உரித்தாம்நல் வாழ்த்து, பணியால்

பிழைப்பார்க்காம் ஏற்றம் இனி.



பரந்தாமன்

 பரந்தாமன் என்பது அழகிய தமிழ்ச்சொல்.

இது எவ்வாறு என்பதை இப்போது காண்போம்.

இன்னொரு மொழியில் இச்சொல் எப்படி அமைந்தது, என்ன பொருள் அதனின்று போதருகிறது என்ற இரண்டையும் கண்டபின் அதனின் மிக்கத் திறனுடைய பொருளை அதிலிருந்து கண்டு ஆன்ம நிறைவை அடைய வேண்டுமென்ற ஆவல் உமக்கு ஏற்படுமானல், அதன் எண்ணத்திலிருந்து நீங்குமுன்,  நீர் அதைத் தமிழால் பொருள் கண்டு பின் விலக வேண்டும். பற்பல ஆன்மிக நிலைகளில் தமிழ் உமக்குச் சிறந்த பொருளையும் ஆன்மிக நிறைநிலையையும் தரவல்லதாகும் என்பதை நீர் போகப்போக உணர்ந்துகொள்வீர்.

இவ்வாறு சொல்லிச்சென்றவர் அருளாளர்  அரவிந்த மகரிஷி  ஆவார்.  அவர் மாமுனிவர்.

பரந்தாமன் என்ற சொல்லில் பரம் + தாம் + அன்  என்ற சொற்கள் உள்ளன.

இதில் கண்ணன் தாமே பரம் என்கின்றான். பரம் என்றால் எங்கும் பரந்து நிறைந்துள்ள இறை.  -பேரான்மா ஆகிய நிறைவு.

ஆகவே தாமே பரம் ஆனவனே கண்ண பரமாத்துமன்  ஆவன்.

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் 

கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

ராட்சசி ( அமைப்பு)

தமிழில் இது அரக்கி என்று வரும்.

ககரம்  சகரமாகத் திரியும்.

அரக்கி > ( அரச்சி )> ரச்ச (சி)>  ராட்சசி.

அரக்க அகி > அரக்ககி>  ராச்சசி > ராட்சசி. (இன்னொரு வழியில்)

அக(ம்)> அகி: அகமுடையாள்.

ஒருத்தி அரக்கி எனப்படுதல் அவள் அகம் காரணமாக.

ககரம் சகரமாதல்:  சேரலம்> கேரளம்; கழிகடை> கழிசடை.  பட்சி>< பக்கி.  இன்னும் பல.

குருவிக்கு பக்கங்கள் தெளிவாக உள்ளன. சிறகுகள் இரண்டு பக்கமும்.  அதனால் பக்கம்>பக்கி>பட்சி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

இளக்காரம்

 இவ்வினிய நாளில் இளக்காரம் என்னும் சொல்லின் திறம் அறிவோம்.

முதலிற் காரம் என்னும் விகுதி போலுமோர் உறுப்பினை  அலசுவது தக்கது.

காரம் என்பதற்குக் கூறப்படும் பொருள் பல.   மிளகு அல்லது மிளகாய் முதலிய உண்துணைகளைக் கடித்தால் நாவில் ஏற்படும் உற்றுணர்வுக்குக் காரமென்பர். எரிவு தாங்காவிட்டால் சிறிது தண்ணீர் குடித்துக்கொள்வோம். தொண்டையில் சளியடைப்பு என்பது எல்லா மனிதருக்கும் ஏற்படும் நிலை.  இதை மிளகு மாற்றக்கூடுமென்னும் நினைப்பில் தியாகராச பாகவதர்கூட மிளகை வாயில் பாடிக்கொண் டிருக்கையில் போட்டுக்கொள்வார்  என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.  தமிழ் முரசு ஆசிரியராகத் திகழ்ந்த மேதகு சாரங்கபாணியார் நம் பாகவதர் சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட வேண்டும் என்று முயற்சிகள் செய்தார்.  அதற்குள் அவர் காலமாகி  விட்டபடியால்,  அவருக்குப் பதிலாக அவர்தம் இளவல் கோவிந்தராச பாகவதரைக் கச்சேரியில் சிங்கப்பூரில் கேட்கும் நற்பேறு கிட்டியது.  காந்தியைப்போல் ஒரு சாந்த சொரூபனை என்ற பாபநாசம் சிவன் பாடலை பழைய விக்டோரியா நினைவு மண்டபத்தில் அழகாகப் பாடினார்.  ஆனால் மிளகு வாயில் போட்டுக்கொண்டாரா என்று தெரியவில்லை. காரத்தை விளக்கும் முயற்சியில் இக்கேள்விச் செய்தியை  நினைவுகூர்ந்தோம்.

ஆனால் காரம் என்பதன் அடிச்சொல்  "கார்" என்பதுதான்.  கரு> கார் என்று திரியும். கருமுகில்கள் வானில்பல தோன்றி மழை வரும் காலத்தைக் கார்காலம் என்பர்.  அழல் ( தீ ) என்ற சொல்,  அயல் என்றும் திரியும்.  இது ழகர யகரத் திரிபுவகை. வாழைப் பழத்தை வாயைப்பயம்  என்று பேசிக்கேட்டிருக்கிறோம். இது பேச்சுமொழியில் என்றாலும் எல்லாம் அந்தத் திரிபுவகைதான்.  எந்த உருவில் எங்கு தோன்றினாலும் அது நம்மிடமிருந்து தப்பிவிடக் கூடாது. இதில் என்ன ஒரு வசதி என்றால்  வெண்பா எழுதும்போது யகர எதுகை தேவைப்பட்டுப் பொருத்தமாக வந்தால் அழல் என்பதற்கு நேரான பொருண்மையுள்ள சொல்லை அயல் என்ற உருவில் திணித்துப் பாட்டை எழுதிவிடலாம்.   இப்படி எழுதினால் இக்காலத்தில் புரிந்துகொள்வார் குறைவு என்பது வேறு இடர் ஆகும்.  குழம்பு காரமாகிவிட்டது என்று சொல்வதற்கு அயல்கிறது என்று கூறும் பேச்சு இப்போது மறைந்துவிட்டது. இதைக் குறிக்க ஆங்கிலத்தில் வரும் acrid என்ற சொல்லும் அண்மையில் யாரும் பயன்படுத்திக் கேட்கவில்லை.  Pungent என்னும் சொல் அணிமை உடையதாகலாம்.  சுவை, மணம் இரண்டையும் இந்தப் pungent என்னும் சொல் தழுவுகிறபடியால்  காரம் என்னும் ஒருசார் பொருண்மைக்கு இச்சொல் ஈடாகலாம்.

அலங்காரம் என்ற சொல்லிலிலும் காரம் என்ற பின்னொட்டு உள்ளது.  ஆனால் இது அழகாக்கப்பட்டது என்ற பொருள் உள்ள சொல்.  இதில் வரும் அல என்ற சொல் அழ(கு) என்பதற்கு நேர்.  பழம் என்பதும் பலம் என்பதும் பழுத்தது என்ற பொருளில் ஈடானவை.  ழ <> ல திரிபு. ஆயினும் அலகு என்ற சொல் பல்பொருட் சொல். அழகு என்பதற்கு நேரானதன்று. நம் ஆய்வு காரம் என்பதே ஆதலின், அலங்காரம் என்பதில் நாம் இதுவரை கருதிய காரமெதுவும் இல்லை,

கரி(~த்தல் )  என்னும் வினையடியாகத் தோன்றும் பெயர்ச்சொல்லான காரம் என்பது கரி + அம் என்ற அடியும் விகுதியும் இணைய முதனிலை நீண்டு காரம் என்று வரும்.  அது காரச்சுவை குறிக்கும் என்பது அறிக.  ஆனால் அலங்காரம், இளக்காரம் என்பவற்றில் வரும் காரம் என்ற ஈறு,  இதனுடன் தொடர்பு உடையதன்று.

கடுமையான பேச்சு  என்பதைக் காரமான பேச்சு என்போம்.  காரசாரமான வாதம் என்ற வழக்கும் உள்ளது.  இதில் வரும் காரமும் இளக்காரம் என்பதில் வரும் காரமும் ஒன்றன்ன்று.

இளக்காரம் என்ற சொல் பேச்சு வழக்கில் வரும் சொல்.  இளக்கு என்பதனடியாகப் பிறந்த வினைச்சொல் மற்றும் பிறவும் உள்ளன. மூலவினை இளக்குதல் என்பதே.  கடினம் குறைத்தல் என்பதே இதன் பொருண்மையாகும். இங்கு காரம் என்னும் துணைச்சொல் அல்லது விகுதி இல்லை. 

இளக்கு + ஆர்  + அம் >  இளக்காரம்  என்பதே சரியாகும்.  ஆர்தல் இதன் பொருள் நிறைதல்,  முழுமைப்படுதல் என்பதே.   இள என்ற அடியுடன் கு என்ற வினையாக்க விகுதி இணைந்து இளக்கு என்ற வினை அமைகிறது என்று கண்டுகொள்க. அதன் பின் வருவன ஆர்  மற்றும் அம் என்பனவே  ஆகும்.

வலக்காரம் என்ற சொல்  இதுபோல் தோன்றினாலும்  வலம் + கு + ஆரம் என்று வருவதே  ஆகும்,   வலக்குதல் என்ற வினை அமையவில்லை.  இங்கு வந்த கு என்பது ஓர் இடைநிலையாகிறது  வன்மை நிலைக்கு நிறைவு ஆதல் என்று அறிந்துகொள்க. காரம் இங்கு ஒரு சொல்லீறு அல்லது விகுதி என்றால் அது கு என்ற சேர்தல் குறித்த சொல் இணைந்த இறுதியே ஆகும்.  இவ்வாறு கு என்ற இடைநிலை பலவாறு பல சொற்களில் கலந்துள்ளது.  இவற்றுள் பெயர் வினை என்று வேறுபாடில்லை.  எடுத்துக்காட்டு:  செய்+ கு+ இன்று + ஆன்,  செய்கின்றான்.  கின்று என்பது சேர்பிரிப்பினால் வந்த புது இடைநிலையாகிறது.  ஆனால் இவ்வாறு செய்தல் வசதியாய் இருக்கக்கூடும்.

எது உணவு ஆகுகிறதோ,  அதுவே  ஆகாரம்.  ஆர்தல் என்றால் உண்ணுதலும் ஆகும்.   ஆதல் என்பதே மூலவினை.   ஆ -  வினை; கு-  பழந்தமிழ்ச் சொல். இணைவு குறிக்கும்,   ஆர் - உண் என்பது,  அம் விகுதி .  ஆ+ கு+ ஆர்+ அம்  > ஆகாரம் இதன் பொருள் உணவு. ஆ+ காரம் என்று பிரித்துக்கொள்வது ஒரு விரைவுவசதியாய்  இருக்கலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம் 28042024  1817 சில எழுத்துமாற்றங்கள்

சரிசெய்யப்பட்டன.





வியாழன், 25 ஏப்ரல், 2024

பணம் சேமிக்கும் வழிகளில் ஒன்று.

 கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால்

காற்றின் ஓட்டம் மிகுமே!--- நீர்

மிதவை போலும்  வருமோர் இன்பம்

மெத்த மகிழ்வே தருமே--- குளிர்

உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில்

ஒண்மின் ஆற்றல் குறுகும்---நாளைச்

சிதைவில் திறத்தில் செலவும் குன்றிச்

சேமிப் பாகும் பணமே.



உரை:

கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால் காற்றின் ஓட்டம் மிகுமே!--- கதவைக் கொஞ்சம் நீம்பலாக வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்துகொண்டால்  காற்றோட்டம் ஏற்படும்;  நீர் மிதவை போலும்  வருமோர் இன்பம் மெத்த மகிழ்வே தருமே--- படகில் செல்வதுபோல் காற்றின் இன்பம் மகிழ்ச்சியைத் தருகிறது; குளிர் உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில் ஒண்மின் ஆற்றல் குறுகும்--- குளிரூட்டி ( ஏசி) மின்சாரத்தை எடுத்துக்கொள்வது குறைந்துவிடும்; நாளைச் சிதைவில் திறத்தில் செலவும் குன்றி சேமிப் பாகும் பணமே -  மின்சாரக் கட்டணச் செலவு குறைந்து பணம் சேமிப்பு உண்டாகும் என்றவாறு.

சிதைவில்:  சிதைவு இல்.  சேதம் அல்லது மாறுதல் இல்லாத.  குளிரூட்டி - ஏசி என்னும் குளிர் இயக்கக்கருவி.

நீர்மிதவை போலும் வரும் ஓர் இன்பம் -  மிதவையில் செல்லும்போது வரும் தென்றலின் இன்பம். இங்கு: படகுச்செலவின் இன்பம்.

சேமிப்பு<  சேர்மிப்பு<  .... இச்சொல்லில் இர் மறைந்து சொல் உருவானது.

வாயு என்ற சொல்லின் பொருளகற்சி.

 ஆரியன் என்ற சொல் தமிழ்ச்சொல்,  அஃது ஆர்தல்,  பொருள்:  நிறைதல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பதை முன்னர் சொல்லியுள்ளோம். ஆனல் வரலாற்று ஆசிரியர் சிலர் இச்சொல் எங்கிருந்து வந்தது என்று அறிந்தர்களில்லை. ஒருவேளை arable என்ற சொல்லோடு தொடர்பு உளதோ என்று அயிர்த்தனர். ( சந்தேகப்பட்டார்கள்). இந்தச் சொல்லும் "ஏர்"  ( ஏர் உழவு) என்ற தமிழ்ச்சொல்லுடன் தொடர்புடையது. சுமேரியா முதலிய இடங்களிலும் தமிழ் வழங்கியுள்ளபடியால்,  அங்கிருந்து தமிழ் பரவுவது எளிது.  ஆனால் ஆரியன் பற்றிய வரலாற்று  ஆய்வுகளில் ஆரியர் என்போர் நாடோடிகள் என்று கூறப்பட்டுள்ளதால்,  அவர்கள் ஏர் உழுதனர் என்று கதை எதுவுமில்லை.  ஆரியன் என்பது ஒரு தமிழ்ச்சொல். இதைத் தமிழ் மூலமாகவே அறியவேண்டும்.

வாயு என்பது தமிழ்ச்சொல் ஆகும். இது சங்கப்பாடல்களில் இடம்பெறவில்லை என்று கூறினாலும், இது வாய் என்பதனடியாக எழுந்த சொல். வாயினால் ஊதுவதுதான் வாயு என்னும் காற்று. பின்னர் நிலத்திலிருந்து எழுந்து வெளிப்படும் காற்றும் வாயு என்று பொருள்விரிவு கண்டது.

உ என்பது முன்வருதல் குறிக்கும் சுட்டடிச்சொல்.

https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_6.html

சொடுக்கி வாசித்து அறிக.

வாய் என்பதற்கு இடம் என்ற பொருளும் உண்டு, எவ்விடத்திலும் வரும் காற்றையும் வாயு என்பதில் பொருள் மாறுபாடு எதுவும் நேர்ந்துவிடாது.

வாயூது என்பதன் இறுதி எழுத்து மறைந்த சொல்லாகக் கருத ஏற்புடைமை உளதாதல் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


புதன், 24 ஏப்ரல், 2024

வாசுகி - பெயர், மற்றும் பாம்பு என்றால் என்ன?

 வாசுகி என்பது ஒரு பாம்பின் பெயராகவே  நம் நூல்கள் கூறுகின்றன.  இது கிழக்குத் திசையில் இந்தப் பூமியைத் தாங்கிக்கொண்டுள்ளது என்று இந்நூல்களின்படி நாம்  அறிகிறோம்.

இதுபோன்ற சொற்கள், நம் காலத்திற்கும் முன்னரும்,  இவை கூறப்பட்டு  நமக்குக் கிடைத்துள்ள நூல்களின் காலத்திற்கு முன்னும் இருந்த நூல்களிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு நம்மை வந்து எட்டியுள்ளன.  அம் மிக்கப் பழைய நூல்களில் இருந்த சொற்களைப் பெயர்த்தெழுதியவர்கள் அச் சொற்களை அவர்களிடம் அப்போதிருந்த பதங்களைக் கொண்டே சொல்லவேண்டியதைப் புனைந்திருக்க வேண்டும்.  பாம்பு என்ற வுடன் இப்போது பக்கத்திலுள்ள காட்டில் இழைந்து திரியும் பாம்பு வகையைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருந்தாமல்  முடியும்.

எழில்மலை என்ற ஒரு மலைப்பெயரை  எலிமலை என்று மொழிபெயர்த்தனராம்.  அப்புறம் அந்த நாட்டுவேந்தனையும் மூஞ்சூறு இனத்தவன் என்று கூறிவிட்டனர்.  இதுபோன்ற தவறுகள் பெயர்த்தெழுதுவதிலும் அதை வாயித்து உணர்ந்து கொள்வதிலும் ஏற்படாமல் காத்துக்கொள்ளவேண்டும். நாமும் இங்கு முயல்வோம்.

பூமியைத் தாங்கிக்கொண் டிருக்கும் பாம்பு  என்பது புறப்பாகம் என்று பொருள்படவேண்டும்.

பாகம் : இது இடைக்குறைந்து,  பாகம்> பாம்  ஆகும்.

புறம்  என்பது, ஓரெழுத்தால் குறிக்கப்பட்டது,  பு  - புறம் அல்லது வெளி,

ஆகவே புறப்பாகம் என்பது சரியாகவருகிறது.

பாகம் புறம்,  பாம் + பு >  பாம்பு  ஆகிறது,  ஒரு நெடும்பாகம் என்பது பெறப்படுகிறது,

வாய் +  உ + கு + இ என்பவை வாயுகி  ஆகும் வாய் - இருக்கும் இடத்தில் முன் வந்து  சேர்ந்து இருப்பது என்று சரியாக வருகிறது,  இதிலுள்ள யகரம்  சகரம் ஆகும் என்பது திரிபு விதி.   ஆகவே வாயுகி என்பது வாசுகி ஆயிற்று.

வாய் என்ற  பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் இடம் என்று பொருள்.

இதை இப்போது பறந்துபோய் பார்க்க முடியாவிட்டாலும் எதுவும் முரணானது இல்லை என்று அறிக.

அது ஒரு நீண்ட தட்டாக இருக்கலாம். பூமியில் மேலோட்டில் பல தட்டுகள் உள்ளன.

வாசுகி என்றால் ஒரு பாம் பு. நீங்கள் கண்ட பாம்பு  அன்று.  பாம் பு - பாகம் புறத்தது.  புறத்தே உள்ள பாகம்.

பாகம் என்பது பாம் என்று இடைக்குறைந்தது.

பாம் கு> பாங்கு, இதிலும் பாகம் பாம் என்றே ஆகிக் கு விகுதி பெற்றது.

வணக்கம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 24042024 1248

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

The name Ranjan, Ranjani

 ரஞ்சன், ரஞ்சனி என்ற பெயர்கள் பலருக்கு உள்ளன,

நிறைந்தவன் >  நிறைஞ்சவன்.  இங்கு த என்பது ச என்று மாறிவிட்டது.   இது பேச்சுமொழித் திரிபு.

நிறைஞ்சவன் >  நிறைஞ்சன்.> நிரஞ்சன்.  

2ம் சொல்லில் றை - ர ஆனது  முதலாவது ஐகாரக் குறுக்கம், அடுத்து  த- ச திரிபு.  தனி>சனி போல.

நிரஞ்சன் >  ரஞ்சன்.  நிரஞ்சனி > ரஞ்சனி.   ( இது முதற்குறைப்போலி,  நிகரம் கெட்டது ).  ரகரம் முதலாகாது என்ற தொல்காப்பிய முனிவரின் விதியை மீறிய திரிபு.

உதாரணம்:  நிரம்ப >  ரொம்ப.

நீர் அங்கன் > நீரங்கன் > ரங்கன் ( கடவுட் பெயர்).

நீரின் அமிசம் ( அம்சம்) ஆன தேவன்.)

வேறு எழுத்துக்களிலும் வரும்:

உரு ஒட்டி >  உரொட்டி >  ரொட்டி.  ( ஓர் உருவாகச் செய்து சூடேற்றிய இருப்புத் தட்டில் ஒட்டி ஒட்டிச் சமைத்துச் [ சுட்டு ]எடுப்பது ).

ஒரு குழிவுள்ள இரும்புச் சட்டியில்  பிசைந்த மாவை நிறைத்து,  சூட்டில் ஒட்டி எடுப்பது )

நிறை ஒட்டி > நிரொட்டி > ரொட்டி  எனினுமாம்,

ரொட்டி என்பதை  லொத்தி என்பது சீனர்களின் பேச்சுத் திரிபு.  லோ தீ என்று பொருள்கூற அவர்களுக்கு வசதி ஆகிவிடுகிறது.  ல - ர திரிபும் உள்ளது.

மூலச்சொல் திரிந்தால்  றகர வருக்கம் ரகர வருக்கமாகித் தன் வன்மையை இழந்துவிடும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.


சனி, 20 ஏப்ரல், 2024

சாமியைக் கும்பிடுதல் தமிழர் பண்பாடு

 இங்குச் சில ஆய்வுரைகளை நீங்கள் அடைந்தறியும் பொருட்டு கீழே குறிப்பிடுகிறோம்.  சொடுக்கி வாசித்து அறிக. நீங்களே தாங்களாகவே தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.  ஆகையால் இது இங்கு பதிவுபெறுகிறது.

1. https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

2. https://sivamaalaa.blogspot.com/2019/12/blog-post_9.html

சாமி  இன்னொரு பொருள்

https://sivamaalaa.blogspot.com/2017/06/go-to-heaven-now.html

சொர்க்கத்தைத் தாக்கிய  அறிவாளிகள் சிலர்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வெள்ளி, 19 ஏப்ரல், 2024

விதிநிரல் : மிரட்டு - விரட்டு

 மிரட்டிய பின்னும் மிரட்டப்பட்ட மனிதன் அஞ்சி ஒடுங்கிய பின்னுமே அந்த மனிதனைத் துரத்திவிட முடிகிறது  

ஆகவே:

மிரட்டு ( மி )  >  விரட்டு.

இவ்வாறு சொற்கள் அவற்றின் தொடர்பொருள் நிரலுடன் தமிழில் அமைந்திருப்பது கண்டு வியக்கத் தகுந்ததாய் உள்ளது.  இதுபோலும் நிகழ்வு நிரலை யாம் ஏனைச் சொற்களிலும் கண்டுள்ளோம்.  ஆங்காங்கு எழுதியும் உள்ளோம்.

இது மிஞ்சு> விஞ்சு என்ற விதிநிரல் படியான  திரிபுவகையாகும், 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 18 ஏப்ரல், 2024

அ/திருஷ்டம் திட்டம் [ கேள்விக்குப் பதில்]

முன் இடுகையில் எழுப்பிய கேள்விக்கான பதிலை இங்குக் காண்க:

 இங்கு தெர் என்ற அடிச்சொல்லிலிருந்து தொடங்குவோம். இதுவே எளிதாகவும் சுருக்கமாகவும் முடிப்பதற்குரிய வழி.

தெர் >  தெரி >  தெரிதல்.

தெர் >  தெர் + உள் > தெருள்.  ( உள் என்பது விகுதி,  எ-டு:  கடவுள் ).

தெருள் > தெருட்டு >  தெருட்டுதல்.   தெளிவாக்குதல்.

பூசைமொழியில் இது மாற்றப்பட்டது:

தெருட்டு > திருட்டம் > திருஷ்டம்.

அதி + திருஷ்டம் >  அதிருஷ்டம்  :  மிகத் தெளிவான நிலை.  நற்பேறு உண்டான நிலை.   உயர்ந்த காட்சி பெற்ற தன்மை.

இது உண்மையில் தாயுமானவர் பெற்றதுபோலும் இறுதிக் காட்சி. சிலரே அடைவது, பிறரால் அடையமுடியாதது.  பணத்தை அடைவது அன்று. பணம் பிணத்துக்கு ஒப்பானது,  நிலையானது அன்று, 

திருஷ்டாந்தம் -  தெளிவுபடுத்துவது. சான்று. விளக்கம், எடுத்துக்காட்டுகள்.

திட்டம்: இது இடுகை இன்னொன்றில் விளக்குவோம்.

இங்குச் சொடுக்கி வாசிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_31.html

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.


புதன், 17 ஏப்ரல், 2024

அதிருஷ்டம் என்பதன் அமைப்பு.[கேள்வி]

 இன்று அதிருஷ்டம் என்ற பதம் கணித்தறிவோம்.

திருஷ்டம் என்பதனோடு  அ என்ற எதிர்மறை முன்னொட்டு சேர்க்கப்பட்டு இச் சொல் புனையப்பட்டுள்ளது. இந்த அகரத்தை விலக்கிவிட்டு, திருஷ்டம் என்பதனைப் பல்கலைக்கழக அகரவரிசையில் தேடினால், கிடைக்கவில்லை. வடவெழுத்தை, தொல்காப்பியமுனி சொன்னதுபோல் விலக்கிவிட்டு, அதற் குரிய எழுத்தைப் போட்டு,  திருட்டம் என்றாக்கினால்  அதுவும் கிடைக்க வில்லை. ஆகவே அது தமிழாகிவிடும் என்று முனிவர் நமக்குச் சொன்னபடி, ஒன்றும் நடக்கவில்லை. இப்படித் தேடியது கிடைக்காவிட்டால்தான் மகிழ்ச்சி மேலிடுகிறது.

இது திருட்டம் என்று வந்துவிட்டாலும், திருட்டினுடன் தொடர்பு உடையசொல் அன்று.  திருட்டு அம் என்று பிரித்து  ஆனந்தம் கொண்டாட முடியவில்லை.

அ என்பது அல்லாமை என்றால்,  திருட்டல்லாமை என்பது மகிழ்ச்சிக் குரியது தான்.  நம் பொருள் திருடப்படாமை ஆனந்தம் தானே?  ஆகவே சொல்லின் பொருள்  வந்துவிட்டது  எனலோமோ?

திருட்டில்லாவிடில் ஆனந்தமே. நம்மை அறியாமல் மனத்தில் பொங்கும் ஆனந்தமே.

என்னை  அறியாமல் மனம் கொப்பளிக்கும் ஆனந்தமே?

எண்ணமெல்லாம் வெல்லும் கனவாலே

விண்ணிலே கண்ணைவைத்த  அதிருஷ்டமே!

இங்குக்  கண்ணுறும் தொடர்பில் அடுத்த இடுகையைச்  சொடுக்கி வாசித்து உண்மை அறிக:-

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர். 

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

அதிசயம் என்று எதைச்சொல்வது, ஓர் ஆய்வு.

அதிசயம், வியப்பு இவற்றின் உள்ளீடுகள்


Wonder என்ற ஆங்கிலச்சொல்லின் மூலம்  செருமானிய மொழியின் அகரவரிசையில் wundran என்று தரவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் வியத்தல்  என்னும்  பொருண்மை பற்றிய உணர்ச்சியை  அது தொடக்கத்தில் குறிக்கவில்லை என்பர். பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அந்த மனவுணர்வையும் குறிக்க அது வழங்கிற்று என்று ஆங்கில வல்லுநர்கள் கூறுகின்றனர். பார்த்து அல்லது அறிந்தவுடன் புன்னகை பூக்கச் செய்வது  என்பது மூல இந்தோ ஐரோப்பியத்தில் காணப்படுகிறது. நகைப்போரும் உண்டென்று சொல்லப்படுகிறது,  இத்தகு நடப்புக்கு ஸ்மர என்ற சமஸ்கிருத்தச் சொல்லே  உதவிய ஆதி மூலச் சொல் என்று கூறப்படுகிறது.

தமிழில் ஆச்சரியம் என்ற சொல்லும் வழங்குகிறது.  இச்சொல்லில் ஆ என்பது ஆ என்னும் வியப்பொலி யெழுப்புதலைக் குறிக்கிறது.  சரியம்< சரிதல் என்பது சழிதல் என்றும் வரும் சொல்  ஆகும். சழிதல் என்பது உண்மையில் சுழிதல் அல்லது சுழலுதல் என்றும் வரும் மூலத்திற் பிறந்தது.  இது உம்மை > அம்மை என்பது போலும் உ - அ திரிபு ஆகும்.  உம்மை என்பது குறுகி உமை என்றும் ஆகும்.  ஒரு வியப்புக்குரிய நிகழ்வை அல்லது பொருளைக் கண்டவுடன் ஒருவகைச் சுழற்சி ஏற்படுகிறது.  கண்டு சுழலுதலே கண்டு மயங்குதலும் ஆகும்.  ஆகவே ஆச்சரியம் என்பது சரிதல் அல்லது சுழல்தல் என்பதே.  விழி என்ற சொல், இமைகளின் விரி என்பதே  ஆகும்.  இதிலிருந்து சழி, சரி என்ற திரிபை உணரலாம்.  வரி என்பது வழி என்று ஆயின் இரு வரிகளுக்கிடையில் இடனிருப்பதை உணர்த்துவதால் இவ்விரு சொற்களின் தொடர்பு அறியலாம்.  குரு என்பவர் ஒரு சீடர் குழுவினிடை பொலிகின்றவர்.  ஆகவே குழு மற்றும் குரு என்பவற்றின்ன் சொல்வளர்ச்சியை அறியலாம். குரு> குரவர் என்பது அவர் என்ற சொல் இணைந்த அமைப்பு  ஆகும். ஒழிதல், ஒருவுதல், ஒவுதல் என்பவற்றறின்  அணுக்கத்தினையும் அறிந்துகொள்க. வழி என்பது ஒரு வரிபோலும் நீர் ஓடுதல்.  இதிலிருந்து வழி வரி என்பவற்றின் அணுக்கத்தினையும் அறிந்துகொள்ளவேண்டும். ஆச்சரியம் என்பது ஒரு ஒப்பொலிக் கலவை ஆகும். ஒலிக்குறிப்புடன் இயற்சொல்லும் கலந்தது.

சுழலுதலும்  மருவுதலும் அசைவுகளே.   இவற்றை இணைத்தால்  சுழமரு என்று வரவேண்டும். ஒலிப்பில் இதனின் சற்று   வேறுபட்டும் வரலாம்.  சுழமரு  என்பதை ஏற்றுக்கொண்டு இதை ஸ்மர என்பதனுடன் ஒப்பீடு செய்வோம்.  மனத்துள் ஒரு எண்ணச்சுழல் உண்டாவதும் அதுபோய் உதடுகளில் மருவிப் புன்னகை யாவதும் எண்ணுவோம்.  இப்போது ஸ்மர என்பதிலிருந்து ஸ்மய்ல் என்றதும் அதன் முன்ன்னோடி வேறுபாடுகளுமான  ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பியச் சொற்கள் உண்டானமையும் இப்போது புரிந்துகொள்ளத் தக்கதாகி விடுகிறது.வியப்பைக் கண்ட மனச்சுழற்சியும் அது உதடுகளில் விரிவதுபோலும் அசைவாகிப் புன்னகை என்று அறியப்பட்டமையும் இவையெல்லாம் இறுதியில் "ஓண்ரன்" wondrun  ஆனமையும் பொழுது புலர்தல் போல் புதுச்சொல்லாய் அங்கு ஆனமையும் தெளிவாகிவிடுகிறது.  சுழமரு என்பதிலிருந்து  சுமர என்றாகி,  அது கிளைத்து :ஸ்மர ஆனது  எப்படி என்று தெளிவாகிறது.  ஸ்மர சார (காமனின் கணைகள்),     ஸ்மர ஜ்வாலா (  காமனின் ஆசைத்தீச்சுழல்கல்), ஸ்மர ருஜம்  ( காமனின்  உணர்வுகள்),  ஸ்மர வியால ( காமனின் எண்ண அலைகள்),  ஸ்மர அர்த  ( காமனின் வருநினைவுகள்), ஸ்மர தனு (காமனின் வில் ),ஸ்மர துர்மதனம்  (காமனின்  ஏற்புடைமை இல்லாத ஆசைகள்), எனப் புனைவுகள் விரிந்தன.சுழல், மருவுதல் என்ற அடிப்படைச் சொற்கள் இவற்றுக்கெல்லாம்  ஊற்றுக்களமாய் இருந்தது. 

வியப்பு என்பதை உணர்த்த,  எது இசைந்தது என்பதே இன்னொரு கேள்வியாகும்.  அது இசையும் என்பதே அதிசையும் > அதிசயம் ஆதலின்,  எதிசைந்தது என்பது அறிவுக்கு உணவாக்கும் கேள்வியாக்கிவிடுகிறது.  வியன் என்பது பெருமை அல்லது பெரிது ஆதலின்,  வியப்பு என்பது,  விய > வியப்பு எனப்  பெருமையே குறிக்கும்,  ஆகவே பெருமையானது ஒன்று இசைந்ததே வியப்பு  ஆகிவிடுகிறது

வி என்பது விரிவு குறிக்கும் எழுத்து/  இது விர் என்ற அடிச்சொல்லின் ரகர ஒற்று மறைந்த மீதம் ஆகுவது.    வி  அ >  விய என்றால் அங்கு விரிவு என்று பொருள். இனி, விர்> விய்> விய  என்று இதனை காட்டுதலும் ஆகும்.  வி அ > விய என்பதறிக. விரிவு அங்கு என்பது. பெரிது  என்பது இரு எல்லைகளும் ஒருபுறமும் இன்னும் இரு எல்லைகள் இன்னொரு புறமும் விரிந்தாலன்றி பெருமை என்பது ஏற்படாது ஒழியும். அதனால் வி அ என்பதும் விய என்பதும் உணரப்படும்.  வியப்பின் உள்ளீடு எல்லை விரிவாகவோ அன்றி உருவம் பெரிதாகவோ இருக்கலாம்.  எல்லாம் ஒருவழியில் வேறுபாடற்றவை.  அதில் எது இசைந்தாலும் அதிசையும் ,  அது அதிசயமே. அஃது இசையும் > அதிசையும் > அதிசயம் எனினுமாம்.

சகசமாக ஒன்று இசைந்திருந்தால்  அது சகசாதியம்.  அதையும் வியக்கலாம். Someone may be able to be surprised by just the common sense displayed. செயலில் ஒன்று இசைந்திருந்தால் அதை வியக்கலாம்.  தெய்விகத் தன்மை உள்ளதென்று ஒன்றை வியக்கலாம். அஃது இசைந்திருந்தலின் அதிசையும், > அதிசயம் ஆகிறது. இதை இசைவினால் வியப்பு என்க.  புத்த சைன நூலகளில் இவற்றைக் கண்டுணர்க.

சயம் என்ற தனிச்சொல் குறைதலையும் குறிக்குமாதலால் அதி சயமென்பது குறைவினிசைதலுமாகும்,

அயக்குதலென்பது அசைத்தல்.  ஒன்று அசைதலும் வியப்பை உண்ண்டாக்கலாம்.  அய என்பது சய ஆகும் பின் அம் விகுதியினால்  சயம் ஆகி,   அதிகுறைவும் அதிசயமே.

இப்போது அதிசயம் என்பதன் தன்மையை உணர்ந்துகொண்டீர்கள்.

அதிசையும் என்ற தொடரை அஃதிசையும் என்று எழுதுவர்.  சொல்லாக்கத்திற்கு அதிசையும் > அதிசயம் என்று திரிந்து சொல்லானது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

குறிப்பு:

அயக்கு-தல் >. அசக்கு-.  அசைத்தல். குன்றுக ளயக்கலின் (கம்பராமாயணம்.)

இந்த ஆங்கிலக் கவிதை கூட ஓர் அதிசயமான எழுத்துத்தான். முழுக்கவிதையையும் இங்குச் சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள். இதைப் பாடிய கவி ஒலிவர் கோல்டுசிமித்.

Beside yon straggling fence that skirts the way
With blossom'd furze unprofitably gay,
There, in his noisy mansion, skill'd to rule,
The village master taught his little school;
A................................

https://allpoetry.com/The-Village-Schoolmaster2

இதை இன்னொரு முறை வாசிப்பதும் எமக்கு மகிழ்வு விளைப்பதே. சொடுக்கிப் படிக்க இனிது, இதைப் 13 அகவையில் யாம் வாசித்தது நினைவுக்கு வருகிறது.


திங்கள், 15 ஏப்ரல், 2024

தேர்தல் முன் கணிப்புகள்

கருத்துகள்  கணிப்புகள்  கொஞ்சமோ---- சொல்லும்

கனிச்சுவை  ஆரூடம் பஞ்சமோ?

பொருத்துறார் உண்மையைப்  பொய்களில்  ----- நம்மைப்

பொய்யறியார் என்றோ புனைகிறார்?


வாக்குகள் எண்ணிட அறிகிறோம் ---- இதற்கு

வரட்டுரை  ஆக்குதல்  என்பயன்?

நாக்குக்குக் கொடுங்கள்  ஓய்வினை----  வரும்

நாள்வரையில் காக்க வாய்மையே.


ஆனை கிடக்குது பானைக்குள் ---- அதை

அறிந்துவிட் டாலென்ன பொல்லாப்பு?

தேனென்னும் தீஞ்சுவை கிட்டுமே ----  இனித்

தேசத்தார் பாங்கினில் தென்றலே.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

புள்ளிவிவரம் கேட்பது

 புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின்

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்று

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்

படுக்கையைத் தேடிப் பறக்காமல் கேட்டுவிடின்

பூமியில் அஃதும் இயல்பன்று  நாமிதிலே

 நேமத்தால் நன்மைகாண் போம்

-----  சிவமாலா

இதன் பொருள்:

புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின் --- ஒரு பொதுக்கூட்டத்தில் எழுதிக் கவனித்தாலே உருப்பெற்றுக் காணத்தக்க, புள்ளி விவரங்களை வாய்மொழியாகக் கூறத்தொடங்கிவிட்டால்,

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!--- மிக்கச் சிறந்த நினைவாற்றல் நிறைந்த அறிவாளிகள் கூடத் தூக்கத்தில் விழுந்துவிடுவர்;

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்ற---- கூட்டத்தில் சாப்பாடோ குடிக்கத் தேநீரோ கொஞ்சம் கொடுப்பார்கள் குடிக்கலாம் என்னும்;

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்--- ஏதாவது கிடைக்கும் பார்க்கலாம் என்று கூட்டத்திற்கு வருகின்ற ஊரின் பொதுமக்கள்;

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்---  கடுமை மிகுந்த பொருளியல் கருத்துகள் சொற்பொழிவில்  வரத்தொடங்கிவிடுமானால்;

படுக்கையைத் தேடிப் ---  மீண்டும் வீட்டுக்குச் சென்று படுத்துத் தூங்கவே மனங்கொள்வர்;  பறக்காமல்---  வீட்டுக்கு ஓடிவிடாமல்,

கேட்டுவிடின்--- ( அவ்வாறின்றி) உட்கார்ந்து எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்வார்கள் ஆயின்;

பூமியில் அஃதும் இயல்பன்று ---  அதுவும் எங்கும் எப்போதும் 

நடைபெறுவதன்று;

 நாமிதிலே---  நாம் இதைப் பகுத்துணர்வதானால் இதில்

 நேமத்தால் நன்மைகாண் போம்.--- இயல்பான விதிமுறைகள் கடைப்பிடிப்புகள் எவையோ அவற்றால்,    உண்மையைத் தெரிந்துகொள்வோம்.

யாரையும் குறைகூறுவதைத் தவிர்ப்போம் என்றவாறு.

நேமம் :  எப்போதும் உள்ளபடி .

Note:  The meanings have been made clear; we may need to paraphrase correctly with due 

regard to the poetic wordings. Will attend when time permits.

ஆச்சாரியன்


ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும். எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது. ஆ(சி)ரியன் எனக்் காண்க.  வாத்தியார் அறிவாளி என்பதை ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி, ஆசிரியறிவாளி என்றாக்கி, அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி, ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் இச்சொல் வந்துவிடுகிறது. வேறன்று அது.

ஆசிரிய ஆரியன்  
ஆச்சாரியன்.

ஆசிரிய என்பதில் ஆசி என்பதை மட்டும் எடுத்துக்கொள்க.  தமிழில்  ஆச் என்பது ஏற்புடைய சொல்லுரு  அன்று.

ஆ(ச் இ) ஆரியன்.  இவற்றுள் இ என்பதை விடுக.
ஆச்  ஆரியன்
ஆச்சாரியன்,  ஆச்சாரிய  என்றும்   வரும்.  பூசைமொழியில் அன் என்ற ஆண்பால் ஒருமை ஒழிக்கப்பட்டது.   இல்லை.

மேற்கண்டவை ஒலிமுறையில் விளக்கப்பட்டன.  தமிழ்ச் சந்தி முறையிலன்று. இலக்கணத்தின்படியுயன்று, இதுபோலும் சொல்லாக்க இலக்கணம் தமிழ்நூல்களில் சொல்லப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.  ஏனென்றால்  தமிழ் இலக்கணம் தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் உதவும் இலக்கணம்.  சொல்லாக்கம் சிறிதளவே சொல்லப்பட்டது. சொற்களை ஆக்கிக்கொள்வதற்கு உதவ உங்களுக்குப் போதிக்கப்படும் கலையோ தந்திரமோ அன்று.

தமிழ்ப் புணரியலின்படி,  ஆச்சாரியனாசிரிய  னென்று  வரவேண்டும்.  சொல் மிக நீண்டுவிட்டது. தமிழ் தமிழ் என்று  அரசியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூவுதலின் மூலமாகத் தங்கள்  அக்கறையை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.  தமிழைப் படிப்பவர்கள் குறைவு. இந்த நிலையில் பத்து எழுத்துக்கள் உள்ள ஒரு சொல், சரியன்று என்று  ஒதுக்கப்படலாம்.   சொற்களைக் குறுக்கிச் சிறு புனைவுகளாக்கினால் எடுத்தாளுவதற்கு எளிமையாக  விருக்கும்.  யாம் எழுதும்போதும் நீண்ட சொற்கள் வந்துவிடுகின்றன.  இத்தகைய நிலைகளைக் கருதித்தான் இடைக்குறை முதலிய வசதிகள் கவிதை எழுதுவோருக்கு உதவ உண்டாக்கப்பட்டன. இவையே கருதித்தான்  பண்டை நாட்களில் சொல்லாக்கத்திலும் இந்நெறி கடைப்பிடிக்கப்பட்டது,  தமிழ்க் கவிதைகளில் இசை முதன்மை வாய்ந்தது ஆதலின் அது முறியாமல் ஒழுக, சொற்கள் சிறியவாக்கப்பட்டன.   எ-டு:  கற்றதனால்  ஆய பயனென்கொல்?  என்ற தொடரில்  ஆகிய என்று எழுதினால் இசை முறிந்து வெண்பா கெடும். பண்டை நாட்களில் நெடுஞ்சொற்கள் வழக்கிலும் அருகியே வந்தன. பூசைமொழி அன் விகுதியையும் கொள்ளவில்லை யாதலின்,  ஆச்சார்யா என்று மேலும் சுருக்குண்டது.

பூசைமொழியிலும் சொற்கள் அவர்களின் முயற்சியையும் கடந்து,  நீண்டுதான் விட்டன.  இதனால் கரட்டியல்வு மிகுதியாகவே,  குரு நானக் முதலியவர்கள் குருமுகி முதலிய மொழிகளைக் கையாண்டனர்.. இதனால் சில மொழிகள் ஆற்றொழுக்குப் போலும் நடையை அடைந்தன. இவையாவும் நலம் கருதியவையே  ஆகும்.

ஆசிரியன் என்ற சொல்லே சகர வருக்க எழுத்துகள் இரட்டித்து ஆச்சாரியன் என்று வந்தது என்பது இன்னொரு கருத்தாம். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

சனி, 13 ஏப்ரல், 2024

Happiness and Sadness ( by Poet Saran)

 


There are moments of intense sadness, 

Of bawling your eyes out, 

Wet paper below your hands,

Scribbles of hatred and disenchantment, 

Staring into the sky, isolated and ostracised.

Every muscle hurting to move,

Every movement calling out for death,

The quietness all around you but endless voices in your head,

The atmosphere of desperation and despair, 

Of hatefulness and regret,

The singularity of a big xxxk you.


But there are also moments of intense happiness, The sun shining brightly down on you, 

The moon glowing in the darkness, 

The wind grazing by your skin, 

The shadows of movement and progress, 

Platonic loves of gesture and admiration, 

The warmth and contentment behind a laughter, The elation of a kinder mind and blissful quietness.


There will be moments of both, 

Co-existing together, 

Taking turns at times, 

Looping in oppositional forces, 

Of yin and yang, 

Of waves and lulls,

Of stillness and being, 

the totality of you.

வியாழன், 11 ஏப்ரல், 2024

தனுஷ் என்ற சொல்தோன்றுதல்

 இன்று தனுஷ் என்ற சொல் எவ்வாறு தோன்றிற்று என்று அறிந்துகொள்வோம்.

தன்னில்தான் இயங்கும் நிலைதான் தனுஷ் என்று சொல்லப்படுதிறது.  ஒவ்வொரு இராசிக்கும் ஒரு தன்மை,  குண இசைவுகள் முதலியன இருக்கும் என்பது உண்மையாயினும்,  தனுஷுக்கு இது  சற்று நிறைவை ஒட்டி நிற்கிறது என்பர்.உங்கள் இருகைகளாலும் ஒரு பூனையைத் தூக்கி கீழே போட்டுவிட்டாலும்  அது  கண்டபடி போய் விழாமல் ஒரு தந்திரத் தாவல் மன்னன்போல் நாலு காலும் சமநிலைப் படும்படியாக விழுந்து நிற்கும். ஓர் எருமையால் தூக்கி எறியப்பட்ட சிங்கம்  கண்டமாதிரி போய்த் தரையில் விழுகிறது.  அதனிடம் தந்திரத்தாவல் இல்லை. தாக்கும்போது முன்னங் கால்களால் அடித்துக்கொண்டு வாயினால் கடித்துப் பிடித்துக்கொள்கிறது. வீழ்ச்சியில் தந்திரம் இல்லை.

தனுஷ் என்ற சொல் "தன் உய்வு"  என்ற இரு தமிழ்ச் சொற்களிலிருந்து வருகிறது. அல்லது அதற்கான தமிழ்ப் பதத்தின் சமகாலப் புனைவாதலும் கூடும். ஆகவே, தன் உய்வு > த(ன்)னுய்வு> தனுசி/(வு)> தனுஷ்  ஆகும்.  இது தனுர் என்றுமாகும். உர் என்பது உரு என்பதன் சுருக்கம்

தனுஷ்கோடி (ஊர்ப்பெயர்) என்பதில் கோடி என்பது மூலை.  கோடு> கோடி, இது வளைவுப் பொருள்.  ஒரு நேர்கோட்டின் முடிவு  அதன் வளைவுதான்.  தனுஷ்கோடி என்பது தானே நிற்கும்  அல்லது தனியாக நிற்கும் ஒரு நிலப்பகுதி,  திட்டு, தீவு.   தீவு என்பது நிலத்தின் தீர்வு அல்லது முடிவு.  தீவகம் என்பதும் தீவுதான்.  தனிநிலம்,  அல்லது பிற நிலப்பகுதிகளைச் சார்ந்து நில்லாத, ஒரு தனிப்பகுதி.  நாவலந்தீவு என்றால் பேச்சில் வலிமை காட்டிய தன்மை இங்கு வாழும் மக்களுடன் முடிந்தது,  மற்றவர்போல் அதிகம் பேசிக் கொள்கைபரப்புச் செய்யாதவர்கள் என்றுபொருள்.  புத்தமதத்தைச் சீனாவுக்குப் போதித்தவர்கள் இந்தியர்கள். சீனா அதைப் பிறருக்கு எடுத்துரைத்தது குறைவு.  இந்தியர்களே முன்னணியில் இருந்தனர்.  நாவற்பழம் கிட்டிய அழகிய இடம் என்றும் பொருள்.  தீவகம் + அல்+ பு + அம் > தீவகற்பம்  ( தீவுக்குறை.).  தீவகம் அல் =  தீவு அல்லாத. ஒருபக்கம் நிலத்தொடர் உடைய,

உய்>( உயி)> உசி.  இது யகர சகரப் போலி.   ஒ.நோ:  பசு > பை.  (பசுந்தமிழ் > பைந்தமிழ் )

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

அதிசயம் என்பதற்கு இன்னொரு பொருட்பார்வை

 அதிசயம் என்ற சொல்லுக்கு உங்கள் வாத்தியார் பொருள் கூறியிருப்பார். நீங்கள் படித்த நூல்கள் சொல்லாக்கவியல் நூலா யிருந்திருந்தால், அதில் வேறுவிதமான சொற்பகுப்புகளை கூறியுமிருக்கலாம்.  இன்று இதை நாம் வேறொரு கோணத்திலிருந்து காண்போம்.

ஒன்றை ஓர் அதிசயம் என்றால், உங்களை வியக்க வைத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது.  வியப்புக்குரியது ஒவ்வொரு நிகழ்விலும் மாறுபடுகிறது. இந்த ஒவ்வொரு வியப்புக்கும் என்ன உள்ளடக்கம் என்று பார்த்து ஒரே பெயரைக் கொடுத்து எல்லாவற்றையும் ஒருங்கே முன்னிறுத்திவிட முடியாது. அதனால் இதற்குள் ஒரு கடினநிலை தோன்றியது.

ஒரு பெயரில் அடக்க இயலவில்லை.

அதனால் இந்தப் பெயரை இப்படி அமைத்தனர்.

அது இசையும்   

> அதிசையும்

> அதிசயம்.

எது இசையும் என்பது கேள்வியாக வந்தால்,  அது, வியப்பை உண்டாக்குகிறதே, அது!  அது வேறுபடு பொருளாம்.

நாலு கண்கள் இருக்கும் ஒரு விலங்கைக் கண்டுவிட்டால்,  அதில் வியப்பைத் தருமாறு இசைந்திருப்பது கண்களின் எண்ணிக்கை.

எதிசையுமோ  அதிசையும் -  அதிசயம்.

இந்தச்சொல்லை இப்படி உருவாக்கிய புலவன் மிகுந்த அறிவாளி என்று அறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

புத்தன்

 புத்தன்:

புத்தர் உலகிற் புதுநெறியைக் கண்டுபிடித்தவர்.

புது+ அர் > புத்தர். (தகரம் இரட்டிப்பு)

பூ - தோன்றுதல். (மூலச்சொல்.)

 பு>புகு >புது. ( புதியன புகுதல்)

மக்கள் அழைத்தது - சாக்கியமுனி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்





திங்கள், 8 ஏப்ரல், 2024

மோடி செயல்வீரர்

 அடுத்தடுத்த நாடுகளுக்கு அடிவருடி ஆகாமல்

எடுத்தகரு மம்எதுவும்  இனிதாகத் தான்செய்யும்

மோடிஎனும் செயல்வீரர்  முனைந்திட்ட .மூதறிஞர்

தேடித்திரிந் தலைந்தாலும் தேசமிதில்  கிட்டாதார்

நல்லவேலை  செய்பவரை இல்லிற்குள் அனுப்பென்றே

சொல்லுவதும் ஏதுக்கோ சூழ்ந்துவிடை காணோம்நாம்..


தாம்நலமே  செய்வதற்கே தலையெழுத்துச் சரியில்லார்

நாம்நலமே பெறுங்காலை ஏன் அவரைத்   துரத்துகிறார்.

அவரிருந்து பலகாலம் அனைத்துமக்க ளும்உயர

இவர்வழியே விடவேண்டும் தடைசெய்தல் தக்கதன்றே 

மக்கள்நாட்டம் நாட்டினேற்றம் முக்கால மும்சிறக்க

ஒக்க அவர்  இருந்தாலே  உலகுமிகப் பயன்பெறுமே..


தம்நிலையைத்  தாமறிந்து தம்வசதி செல்வநிலை

இம்மண்ணோர் இருப்புநிலை எதிர்காலம் ஆறு பேறு

எல்லாமும்  கணித்தறிந்து  சொல்லாடும் சூழ்திறனே

நல்லாராய் எடுபடுவார் நாடோறும் செல்திசையே

இல்லாதார் சிந்தித்தல் இல்லாமல் இல்லிற்செல்

சொல்விடையோ மட்டமான வல்வழிச்சொல் ஐயமிலை


வாரிசுகள்  யாருமிலார் எண்மலராய் நாடெண்ணி

ஓருயிராய்  ஒடுங்கியவர்  மாமுனிவர் மோடி இவர்.

பிள்ளையில்லை குட்டியில்லை அள்ளுபெருஞ்  செல்வமிலை 

தாயிழந்தும் ஓய்ந்துவிடார்  ஆயும்மக்கள் மேலெனவே

தேசமொன்று குறிக்கோளாய் வாசமலர் வாழ்வார்ந்தார்

ஏசலறியா   மோடி இரும்பொறையை வாழ்த்துகவே.




தக்கதன்றே - தக்கதல்ல.

பெறும்காலை - பெறுகின்ற காலத்தில்

இவர் வழியே விட -  எதிர்ப்பவர்கள் தடுக்காமல் இருக்க

உயர - முன்னேற்றமடைய

மக்கள் நாட்டம் - மக்களுக்கு வேண்டியவை

நாட்டினேற்றம் - நாடு செப்பனிடப்பட்ட முன்னேற்றம்

ஒக்க - நாட்டினருடன்

எண்மலர்:

கொல்லாமை, ஐம்பொறி யடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.ஆகிய எட்டு மலர்கள்.

தம் நிலை - தம்முடைய சொத்துப்பத்துகள்
இம்மண்ணோர் -  நாட்டுமக்கள் 
இருப்பு நிலை -  மக்களுக்குள்ள வசதிகள்
சொல்லாடும் -  உரை தொடுக்கும், பேச்சு நிகழ்த்தும்
நல்லாராய் எடுபடுவார் - நல்லவர்களாய் சொல்லப்படுவோர்
செல் திசை =  செல்லவேண்டிய வழி
இல்லாதார் -  சிந்தனை இல்லாதவர்கள்
இல்லிற் செல் - வீட்டுக்குப் போ எனப்படும் கூச்சல்
வல்வழிச்சொல் -  வன்மை காட்டும் சொல்
ஐயமில்லை - சந்தேகமில்லை

எண்மலர்  எட்டு நற்குணங்கள் மேலே காண்க
வாரிசு -  வருகின்ற  பின் தலைமுறைகள்.  ( வரு+ சு >வாரிசு,
சு - விகுதி ),
நாடெண்ணி - நாட்டு நலன் கருதி
மாமுனிவர் - மகரிஷி
ஆயுமக்கள், வாக்களிக்கும்  மக்கள்.
தலைவர்களை மக்கள் ஆய்வு செய்கின்றனர்.. முடிவுசெய்து
வாக்கை அளிக்கிறார்கள். அதனால் ஆயும் மக்கள்.
ஒ.நோ அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? (குறள்).
இரும்பொறை -  மலைபோன்றவர்.  இது சேரமன்னர்
பட்டப்பெயர், பொருள்  உள்ளது. 

வல்வழிச்சொல்: போகிற வழியில் சிந்திக்காமற் பேசுவது.

சமானம் என்னும் பதம்.

 பழைய இடுகை ஒன்றில் பதம் என்ற சொல்லும் எவ்விதம் அமைந்தது என்பதற்கு  விளக்கம் எழுதியுள்ளோம்.  ஒவ்வொரு வழக்கிலுள்ள தமிழ்ச்சொல்லிலும் பொருண்மை பதிவுற்று உள்ளது.  பதிவுற்று நிற்பதுதான் பதம் என்னும் சொல்.  பது, பதி என்பவை பதிந்துள்ளமை என்று பொருள்தரும். சற்றுக் குழம்புபோல் உள்ள பரப்பில் கெட்டியான ஒரு பொருள் நல்லபடி பதிந்துவிடுகிறது.  ஒரு பெண்ணாதிக்கக் குடும்பத்தில்  அப்பெண்ணை மணந்துகொள்ளும் ஆண்மகன் திருமணத்தின்பின் தன்னைப் பதிந்துகொள்ளுகின்றான். பண்டைக் காலத்தில் எழுத்துமுறையிலான பதிவுகள் இல்லை.  மனத்திலே பதிந்துகொள்ளும் முறையே இருந்தது. ஆகையினால் அவன் "பதி" எனப்பட்டான்

இதை மேலும் இங்கு விளக்கியுள்ளோம்.  சொடுக்கி வாயித்து  (வாசித்து)க் கொள்ளுங்கள்.  வாயினால் வெளிப்படுத்துவதுதான் வாயித்தல். யி பின்  சி  ஆகும்.

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_25.html

சுழுத்தி , சுழுமுனை நாடி என்பனவும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_15.html

சமானம் என்பது தமிழிலும் சங்கதத்திலும் (= சமஸ்கிருதத்திலும்)  உள்ள தற்சமச் சொல்.

இதைப் பாணினி என்ற பாணப் புலவன் சொன்ன படி பிரிக்காமல்  தமிழ்வழியில் பிரித்தறிவோம்.

சமம் +  ஆன + அம் >  சம +  ஆன + அம் >  சமானம்.  

சமானம் என்பதை  ஸமானம் என்று முன்னர் எழுதினர்.

இதை:

சமம்  +  அன் + அம் >   சம + அன் + அம் >  சமானம் என்றும்  பிரிக்கலாம்.

அன் என்பது அன்ன என்ற உவம உருபு  அன் என்று குறுகி இடைநிலையாக நின்றதாகும்.  " சமமான அதுபோலும் அமைந்தது " என்று இது வாக்கியமாகிப் பொருள் பயக்கும்.

சம என்பதில் இறுதி  அகரமும்   அன் என்பதன் முதலான அகரமும் இணைய:

அ + அ >  ஆ  என்பது ஒலியியல் முறையில்  சரியானதே,

அ அ என்பதைத் தட்டச்சுச் செய்தால்  ஆ ஆகிவிடும்.  அறிக.

விடுதலை விடுதலை என்ற பாரதியார் பாட்டில்  சரிநிகர்  சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்ற வரியையும் படித்து அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



சனி, 6 ஏப்ரல், 2024

மித்திரம் நட்பு - காக்கும் காஉசிக முனிவர்.

 தேவர் தம் நூலில் நட்பினை நன்கு  ஆராய்ந்து விளக்குகிறார். அவர்:


மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800


என்று தெளிவாகப் பாடுகிறார்.  ஆனால் இதிலுள்ள தொல்லை என்னவென்றால் ஒருவன் மாசற்றவன் என்று அவனுடன் பழகுமுன் எப்படித் தெரிந்துகொள்வது?  பிறகு பிறகு தானே ஒவ்வொருவன் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஓடுகிறது?

ஒருவன் ஒவ்வொரு மாலையிலும் போய்ச் சங்கிலி திருடுகிறான் என்று,  நாம் வீட்டிலுருந்துகொண்டு எப்படித் தெரிந்துகொள்வது?  ஒருநாள் பிடிபட்டபின் என்னை வந்து பிணையில் எடு ( bail me out please)  என்று தொலைபேசியில் அழைக்கும்  போதுதான்  தெரிகிறது. 

நட்பு என்பது மிக்கத்திறன் வாய்ந்தது.  அவனுக்காகச் சொத்தை அடைமானம் வைத்து காசு கட்டி அவனை மீட்டு வருகிறோம்.

இது நம் அளவில் நாம் செய்த நன்மை.  நாம்  அவனுக்கு மிக்கத்திறன் வாய்ந்த ஒரு நண்பன். நட்பு என்பதே ஒருவனையாவது காப்பாற்றவேண்டிய ஒன்று. இப்படி உலகில் பலரைக் காப்பாற்றியவர்தாம் கவுசிக முனிவர்.   அவர்: உலகம் என்றால் அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களுக்கு நோய் வந்தாலும் மருத்துவர் மருந்து கொடுக்கத்தான் செய்கிறார்.  அப்போதுதான் ஒருவர் உலக நண்பன் ஆகிறார்.

காவு  உசிக  முனிவர்.

காவு உயிக முனிவர்

காவு உய்வு இக முனிவர்.  காவலின் உயர்வு மிக    வாழ்ந்த முனிவர்.

காவு என்றால் அது காவல். 

அவரல்லரோ  உலக நண்பரான முனிவர்.



நட்பும் மிகத்திறம் உடையது. அதனானாலேதான்  மிக்கத்திறம் >  மிகத்திரம்>  மித்திரம் ஆயிற்று

மித்திர(ம்)  என்றால் சம்ஸ்கிருதத்தில் நட்பு. மிக்கத்திறன் என்பது நட்புத்தான்.

காத்தல் என்பது ஒரு கடவுளியல்பு.  முனிவர் அவரின் பதில்நிலையராக (representative) நின்று உலகுக்கெல்லாம் நண்பராகிறார்.

மிகத்திறம்> மி(க)த்திரம் > மித்திரன்.

கா உய் இக அன் >  காவுயிகன் >  காவுசிகன் > கௌசிகன்.
பொருத்தமான புனைவு ஆகும்.


வெள்ளி, 5 ஏப்ரல், 2024

பாக்கியம் என்பதன் அடிமுடிப்பொருள்.

 இவ்வுலகில் இலாபம் மட்டுமே ஏற்படுவதில்லை.  நட்டமும் ஏற்படத்தான் செய்கிறது. இரண்டுமே இந்த உலகம் என்னும் குட்டையில் ஊறிக்கிடைத்த மட்டைகள்தாம். இரண்டும் ஒரே மட்டை என்று வைத்துக்கொண்டால், மட்டையில் ஒரு பாக்கியம் என்னலாம்; மற்ற பகுதி பாக்கியமின்மை ஆகும். ஒன்று நல்ல பகுதி.  இன்னொன்று கெட்ட பகுதி.

பாக்கியம் என்றால் இயன்ற பகுதி.  அதனால்தான் அதற்கு இயம் என்ற விகுதி கொடுத்துள்ளனர்.  பாக்கியமின்மை நமக்கு இயலாத பகுதி. அதை நாம் இப்போது துருப்பிடித்த பகுதி என்னலாம்.  துருப்பிடித்த இரும்பு போல பயன்படுத்த வியலாத பகுதி. இதை இன்னும் சுருக்கிச் சொல்வதானால் "துருப்பாக்கியம்" -  என்று சொல்லிப்பாருங்கள். இன்னும் சுருக்கித் துர்ப்பாக்கியம் என்று சொல்லியும் பாருங்கள். 

துரு என்பது இரும்பைத் துருவிச் சென்று இறுதியில் ஒரு பொத்தலைப் போட்டுவிடுகிறது.  அதனால்தான் அதைத் துருவென்று சொன்னார்கள். துருவென்பது துருவுதல் என்பதன் அடிச்சொல். இறுதியில் இரும்பைத் தின்றுவுடும் துருவை துரு என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது. துருவென்பது சரியான சொல்.

பாக்கியம் என்றாலே அதை நற்பேறு என்றுதான் வேறு சொல்லால் குறிக்கமுடியம்.  அப்புறம்  துருப்பாக்கியம் என்றால் இப்போது பாக்கியம் என்ற சொல் "கெட்ட நற்பேறு"  என்று சொல்லலாமோ?   அது முரண்பாடாக இல்லையா?  ஆகவே,  பாக்கியம் என்றால் நற்பேறு அன்று,  வெறும் பேறு மட்டுமே,  நற்பாக்கியம் என்றால்தான் நல்ல பாக்கியம், துருப்பாக்கியம் என்றால்தான் கெட்டபாக்கியம் என்னலாமோ.

மனிதனே குறைகள் இல்லாதவன் அல்லன்;  அவனால் ஆக்கப்பட்ட மொழியும் குறைப்பட்டதே ஆகும். ம்

இப்படி ப்ளூம்ஃபீல்ட்டு முதலிய மொழிநூலறிஞர்கள் மொழிகளில் பல முரண்பாடுகள் உள்ளன என்று கூறுகிறார்கள்.  உலகின் எல்லா மொழிகளிலும்!   ஆங்கில மொழியிலிருந்து பல முரண்பாடுகளைக் காட்டுகிறார்கள். தமிழில் இப்படி நாம் காணும்போது,  உரையாசிரியர்களே நமக்கு வந்து வழிகாட்டுகின்றனர். பாக்கியம் என்றால் நல்ல பாக்கியம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறுவர்.  பள்ளமும் மேடும் அடுத்தடுத்து வருமாயின்  வண்டி கவிழ்ந்துவிடுமன்றோ?   நல்லபடியாக மட்டுறுத்துகின்றனர் என்று அறிக.

எனவே:

பாக்கியம் என்று வந்தால் அது நல்ல பாக்கியம் அல்லது பேறு.

துருப்பாக்கியம் என்றால் கெட்ட நிகழ்வு

அடிப்பொருள்

:  நல்ல பாகம் அல்லது பேறு.

ஏன் பாகம் என் கிறோம்?  பாகம் என்பது பகுதி,

எப்படிப் பகுதி ஆகும், பாருங்கள்:

பகு> பாகு>  பாகு + இயம் > பாக்கியம்.

இறுதி உகரம் வர ககரம் மெய்  இரட்டிக்குமே.

முடிப்பொருள்:

பாக்கியம் துர்ப்பாக்கியம் என்று உலகவழக்கில்  ( அன்றாடப் பயன்பாட்டில்) இருப்பதால்,  பாக்கியம் என்பது இப்போது பொதுப்பொருளில் வழங்குகிறது. 

ஆயினும் பாக்கியம் என்பதன் ஆக்கப்பொருள் நற்பேறு என்பதே.

இயம்:  இ + அம்  :  என்றால் இங்கு அமைவது அல்லது இயன்றது.

இயல் > இயம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.


வியாழன், 4 ஏப்ரல், 2024

dinosaur தமிழில்.

 dinosaur தமிழில்  வியனூரி.  மொழிபெயர்ப்பு.

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

பாசாங்கு

[இங்கு நீர், உம் என்று வரும் சொற்கள் உம்மை [( வாசிப்பவரை) க்] குறிப்பவை அல்ல)]

பசுமையாக இருப்பவை எல்லாம்  இயற்கைப் பசுமையாய் இருத்தல் அருமையே. பசுமையான இலை, தழை, செடி, கொடி, மரக்கிளைகள், வேறு துண்டுப் பொருள்கள் எல்லாவற்றையும் மேலே போர்த்திக்கொண்டு, அப்போர்வையின் கீழ் உம் எதிரிப்படைஞர்கள் ஒளிந்திருக்கவும் கூடும். அற்றம் பார்த்து உள்ளே அமர்ந்திருப்பர். நீர் வருகிறீர் என்று கண்ட வுடன் அண்மை அறிந்து  மேற்போர்த்தியவற்றை விலக்கிவிட்டு உம்மைக் கொல்வதற்கு முந்துவர். நீர் ஏமாளித்தனத்துடன் நடமாடினீராயின் கொலைப்படவும் கூடும். திடீரென்று வெளிப்பட்டு அணுகுவோரிடம் தப்பிச் செல்வதும் உலகில் அரிதாகவே நடைபெறுவதாகும். 

இதற்கான சுற்றுச்சார்புகள் அமைந்த இடம் ஒரு காடுதான். வீதியில் கொள்ளை யடிப்பவனுக்குப் பசுமைப் போர்வைகள் தேவைப்படாது.  அதுவன்று நாம் இங்கே கருதுவது. பாசாங்கு என்ற சொல்லைத்தான் விளக்க வருகிறோம். வேண்டிய காட்சியமைப்புகளைக் கற்பனை செய்துகொள்ளும்.

பாசாங்கு  என்பதில் பசுமை +  அம் + கு என்ற மூன்று பகவுகள் உள்ளன. பசுமை என்பதை மேலே மீண்டும் படித்துத் தெளிந்துகொள்ளும்.  அம் என்பது அழகு, அமைப்பு என்றெல்லாம் பொருள்படும் அடிச்சொல்.  இங்கு  இடைநிலையாக வந்துள்ளது.  கு என்பது இங்கு விகுதியாக வந்துள்ளது. நாக்கு என்பதில் ஒரு விகுதி  " கு" என்று வந்துள்ளது போலுமே இது. விகுதி என்பது சொல்லை மிகுதிப்படுத்தி வேறு ஒரு புதுச்சொல்லை உண்டாக்கும் முற்றுநிலை.

பாசாங் என்று மலாய் மொழியிலும் ஒரு சொல் உள்ளது.  அது பொருத்துதல் என்ற பொருளுடையது, மலாய் மொழி இயல்பின்படி சொல்லிறுதியில் முழுக் குகரம் வருவதரிது.. பொருளில் சில ஒற்றுமைகள் இருத்தல் கூடும்.  இருப்பினும் ஒன்றிலிருந்து மற்றது வந்தது என்று சொல்வதற்கில்லை. ஆயினும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் தென் கிழக்காசிய நாடுகள் முழுமையும் வேற்று இனங்களுடன் பழகிக் கலந்துள்ளனர். எனவே சொற்கலப்புகள் இயல்பானவையே. குமரிக்கண்ட அழிவின்பின் அங்கிருந்து தப்பி ஓடியவர்கள் கிமர் என்ற அடையாளம் கொண்டவர்களாக இப்போது இருக்கின்றனர் என்று  சிலர் (ஆய்வாளர்கள் ) கூறுகின்றனர்.  பல்லவ எழுத்துக்களுடன் கம்போடியக் கிமர் எழுத்துக்கள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. சோழ இளவரசி ஒருத்தியை அனிருத்த என்ற கம்போடிய இளவரசன் மணந்துகொண்டான் என்பர். அங்கோர்வாட் ஆலயங்களும் கருதற்குரியவை. நீல உத்தமன் என்ற சோழத் தளபதி இந்தோனீசிய பாலிம்பாங்க் தீவிலிருந்து வந்து சிங்கபுரத்தில் (சிங்கப்பூரில்) சோழ ஆளுநனாக இருந்து ஒரு மலாய் இளவரசியையோ ( அழகியையோ ) மணந்தான்.  பின் இவன் மலாய்மகனாகவே மாறி  Sang Nila Utama என்ற பெயருடன் ஆண்டான் என்பர். ( மலாயா தேச சரித்திரக் காட்சிகள், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, ஆசிரியர்: பிரமாச்சாரி கைலாசம் ).  வேறு சீன எழுத்தாளர்கள் எதியவையும் உள்ளன, இந்தியத் தொடர்பு பற்றியவை இவை, இப்போது எம்மிடம் இல. ( கோவிட் காலத்தில் எம் வீடு கைவிடப்பட்டு அழிந்தன ). இவற்றைக் கொண்டு யாம் மேற்கொண்டு ஒன்றும் சொல் ஆய்வில் ஈடுபடவில்லை. (மலாய் மொழிச் சொற்களை ஏன் இங்குக் குறிப்பிட வேண்டும் என்பார்க்கு இது போதுமானது). 

 பசுமை என்பதில் மை விகுதி விலகிற்று.  பசு+ அம் என்பது பாசாம் என்று நீண்டது.  வேறு சொற்பகவுகள் வந்து சேர்கையில் இவ்வாறு சொற்கள் நீள்வது இயல்பு. (பசு + அம் + கு > பாசு+ ஆம் + கு ).வந்தான் என்ற வினைமுற்று வாங்க என்று மாறுகிறதன்றோ.  அது வங்க என்று தோன்றுவதில்லை. வினைமுற்று, வியங்கோள்வினை, பொருட்பெயர்ச் சொல்லாக்கம் என்று எல்லா நிலையிலும் சொற்களில் மாற்றங்கள் நிகழும். ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்தாலே ஒளிவுகளும்  நெளிவுகளும் சுழிவுகளும் புரியும்.

பசு( மை) > பசு> பாசி. ( பசு+ இ ).  பசு என்பது பாசு என்று மாறி இகரம் ஈற்றில் வந்து சொல்லாயிற்று.

இத்துடன் முடிப்போம்.

அறிக மகிழ்க.