'' நமைக்காக்க!'' என்பது பலர் இணைந்து வேண்டும் ஒரு குழுவினரின் குரலாக ஒலிக்கின்ற வரை அது ''நமைக்காக்க வேண்டும் இறைவனே'' என்ற வேண்டுதலை முன்வைக்கும் ஒரு சொல்லாக இருந்தது. அது மந்திர மொழியாகி அதே வேண்டுதலையே முன்வைத்தால், அது மாற்றமின்றித் தொடர்ந்திருக்கலாம். அல்லது காலப்போக்கில் திரிபு அடைந்திருக்கவும் கூடும். இவ்விரண்டனுள் எது நடந்திருக்கும் என்பதை நமஹா என்ற சமஸ்கிருதச் சொல்லே காட்டுகின்றது.. நமைக்காக்க என்ற தமிழ்த் தொடர், நமஹா என்ற ஒரு சொல்லாக மாறியமைந்துவிட்டது.
இப்படி மாற்றம் அடைந்ததனால் மொழிக்கு ஒரு சொல்லால் ஒரு சிறு வளர்ச்சி ஏற்பட்டது. நமஹா என்ற புதிய சொல் சமஸ்கிருத மொழிக்குக் கிட்டியது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
மொழிகளில் ஒன்றன் அணைப்பினால் இன்னொன்று வளர்தல் என்பது எல்லா மொழிகளிலும் காணப்ப்படுகின்ற ஒரு தன்மையே ஆகும். இப்படித் தமிழின் ஒரு தொடர் சற்று மாற்றமடைந்து சமஸ்கிருதத்தைச் சற்று வளப்படுத்தியது வரவேற்கத் தக்கதொன்றே ஆகுமென்று உணர்க. இரண்டும் இந்திய மொழிகளே ஆகும் என்பதும் அறியற்பாலது ஆகும்.
ஏறத் தாழ எழுநூறு எண்ணூறு தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன என்று கமில் சுவலபெல் சொன்னார். இன்னும் அதிகம் கண்டுபிடித்தனர் வேறு ஆய்வறிஞர்கள். நாமும் சிலவற்றைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறோம். இதனால் மொழிபற்றிய அறிவு முன்னேறுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். தமிழ் இந்திய மொழிகளில் ஒன்று என்றும் சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்றும் முன்னர் செய்த வெள்ளையரின் ஆய்வு சொன்னதனால் மேலும் பல தமிழ்ச்சொற்களைச் சமஸ்கிருத்த்தில் கண்டுபிடிப்பதற்கு ஒரு மனத்தடை இருந்துவந்தது. இதற்குச் சரியான காரணிகள் இல்லை. வெள்ளையர்தம் கற்பனை ஆய்வினால் ஏற்பட்ட நிலையே இதுவாகும்.
இந்திய மொழிகள் இவை என்பது இப்போது புலப்படுதலால் ஒப்பீடு செய்வதற்கான தடை இப்போது இல்லை என்பது உணர்க.
நம- ஹா என்பது நமைக் கா என்பதன் திரிபே என்பதை அறிய, பொய்மை தானே விலகிவிடும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை உடைய இடுகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக