ஞாயிறு, 1 ஜூன், 2025

பாராயணம் அல்லது பாராமல் அணுகுதல் (படித்தல்)

பாராமல் என்ற தமிழ்ச்சொல்,  பாரா என்று சொற்புனைவுக்காகக் குறுக்குண்டது. 'ஆ-மல்' என்பதில்  மல் தேவைப்படவில்லை. அது இல்லாமலே எதிர்மறை உணர்த்துவிக்குக் வலிமை பாரா என்பதற்குண்டு/

இனி அணம் என்ற விகுதியை நோக்குவோம். இது அணுகுதல் குறிக்கும் அண் என்பதும் அமைப்புக் குறிக்கும் அம் என்ற இறுதிநிலையும் இணைந்துள்ள நிலையில், இவற்றுக்கும் பொருள் கூறுதல் எளிதாகவே தெரிகின்றது. பாராமல் எழுதியுள்ளதை அணுகி ( மனத்துள்) அமைத்தல் என்றே பொருள் கூறவேண்டும். பொருளும் சிறப்பாக அமைகின்றது.  பாராமல் என்னும்போது மனத்துள் என்பது பெறப்படுதல் காண்க.

அணுகுதல் -  மனத்தால் எழுத்துரையின் அருகிற்  சென்று, மனத்தினில் பதியவைத்தல்  என்றிதற்குப் பொருள் விரிக்கவும்.

பாராயணம் என்பது தமிழ்ச்சொல் என்பதில் ஐயமில்லை.

சொல்லாக்கத்தில்  பகுதிகள் அல்லது முதனிலைகள் எதிர்மறைகளாக இருத்தல் குறைவே.

பாராய்!  அணம் --  என்பது,  கவனிப்பீராக,  நான் அணுகிச்செல்கிறேன்.  பார்க்கமல் ஒப்பிக்கிறேன் என்று துணிச்சல் மொழியாகவும் சிலரால் கூறப்படலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்படுகிறது.

கருத்துகள் இல்லை: