இனி அணம் என்ற விகுதியை நோக்குவோம். இது அணுகுதல் குறிக்கும் அண் என்பதும் அமைப்புக் குறிக்கும் அம் என்ற இறுதிநிலையும் இணைந்துள்ள நிலையில், இவற்றுக்கும் பொருள் கூறுதல் எளிதாகவே தெரிகின்றது. பாராமல் எழுதியுள்ளதை அணுகி ( மனத்துள்) அமைத்தல் என்றே பொருள் கூறவேண்டும். பொருளும் சிறப்பாக அமைகின்றது. பாராமல் என்னும்போது மனத்துள் என்பது பெறப்படுதல் காண்க.
அணுகுதல் - மனத்தால் எழுத்துரையின் அருகிற் சென்று, மனத்தினில் பதியவைத்தல் என்றிதற்குப் பொருள் விரிக்கவும்.
பாராயணம் என்பது தமிழ்ச்சொல் என்பதில் ஐயமில்லை.
சொல்லாக்கத்தில் பகுதிகள் அல்லது முதனிலைகள் எதிர்மறைகளாக இருத்தல் குறைவே.
பாராய்! அணம் -- என்பது, கவனிப்பீராக, நான் அணுகிச்செல்கிறேன். பார்க்கமல் ஒப்பிக்கிறேன் என்று துணிச்சல் மொழியாகவும் சிலரால் கூறப்படலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை தரப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக