வியாழன், 22 ஆகஸ்ட், 2024

உக்ரேன் அமைதிக்கு மோடிஜி முயற்சி வெல்லும்.[ கவிதை]

 நட்புலகு நாடுமுனி மோடி யாகம்

பொற்புறுக போர்நிறுத்தம் வேண்டி யுக்ரைன்

நெற்பயிராய்த் தான்-  தழைக்கச் செலவு கொண்டார்

கற்கரையும் மண்ணிலவர் எண்ணம் வெல்க.     [1]


புத்தினுக்கோ எத்திசையும் பொன்றா ஒண்மை

எத்துணையும் வெல்வகையில் மோடி நீட்டும்

அத்திலகம் ஏற்றணிந்து நாடும் நன்மை

முத்தனைய முனைப்போடும் மூட்டும்,  வெல்க.  [2]


போரின்மை வாராதோ என்றார்  ஆட

நேர்புலமே பின் காண்பீர்   ஞால நண்பர்

சேருதிசை யாதானும் ஊறும்  வென்றி

வாரிமடை  ஒன்றில்லை வையம் வெல்க.   [3]


----------------------------------------------------------------------------------------------

(1)

நட்புலகு -  உலகில் போர்கூடாது என்று  விரும்புகிறவர் மோடி

முனி -  முனிவர்

யாகம் -  அமைதி வேண்டும் என்று தன்னை யாத்து ( கட்டுப்போட்டு)க் கொண்டவர் மோடி.  யாகம் என்பதற்கு யாத்தல் ( கட்டுதல்) என்பதே மூலவடி.

பொற்புறுக -  அணிபெறுக.  அடைவுகொள்க.

நெற்பயிராய் -- பலகாலும் அவர் அமைதியையே பரிந்துரைத்தார்.  அது பயிர்போல் வளர்ந்து பயன் தரும் என்பது.

செலவு - பயணம்

கல் கரையும் - (கற்கரையும்) - எவ்வளவு கடினமானாலும் இளகி வெற்றியை

மோடி அடைவார்.

மண்ணில் -  இவ்வுலகில்.


[2]

புத்தின் -  இரசிய அதிபர்

பொன்றா -  முடிந்துவிடாத

எத்திசையும் -  ( புத்தினின் வெற்றி, திசைக்குத் திசை வேறுபடும்.  போரின் பரிமாணங்கள் பல பக்கங்கள் உள்ளதாகிறது.}  பன்முகத் தன்மை உள்ளது.

ஒண்மை -  உலக  அங்கீகாரம்

எத்திசையும் - எல்லா நாடுகளிலும்.

எத்துணையும் -  எந்த அளவு ஆயினும் அமைதியை நோக்கி.

துணை - அளவு.

அமைதி என்பதும் ஓர் அளவிடற்குரியது. இடம் காலம் நடப்பு என இவையே வெற்றியின் அளவைத் தீர்மானிக்கும்.

அணிந்து -  திலகத்தை அணிந்துகொண்டு.

முத்து -  இது உள்ளிருந்து முட்டிக்கொண்டு வெளியில் வருவது.

முனைப்பு என்பதும் அத்தகைமை உடையது. உள்ளிருந்து வருவதுதான்..

மூட்டும்  -  விரிசல்களை ஒன்றுபடுத்திச் சரியாக்கும். முன்வரவர மூட்டுவாய் ஒன்றாகும். வெற்றியாகும்.

நன்மை மூட்டும் என்று வினைமுற்றால் முடிக்க.


[3]


போரின்மை -  உலகமைதி

ஆட  -  களிக்க

பின் - நேர்ந்த பின். இறுதியில்.

ஞாலநண்பர் -  விசுவாமித்திரர் ஆகிய மோடி  ( பிரதமர்)

நேர்புலமே  -  நிகழும் இடமே

சேருதிசை - எங்கு சென்றாலும்

ஊறும் -  உண்டாவது  

வென்றி -  வெற்றி.

வாரிமடை - வெள்ளத்தடுப்பு

தொடர்ச்சி:https://sivamaalaa.blogspot.com/2024/08/blog-post_25.html




கருத்துகள் இல்லை: