வியாழன், 8 ஆகஸ்ட், 2024

அசுவம் என்ற குதிரை

 குதிரை என்ற சொல் அது குதித்துக் குதித்து முன்செல்லும் ஒரு விலங்கு என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அசுவம் என்பது இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சொல்லே ஆகும்.

அசுவம் என்பதைப் பலவாறாகப் பிரித்துக் காட்டலாம் என்றாலும் , இப்போது அதைச் சுருக்கமாக இங்குக் காட்டுவோம்.

குதிரையின் அசைவு, குதித்து எழுதலும் பின் எழுநிலையினிAன்று விழுதலும் (கீழிறங்கி முன்னிருந்த மட்டத்திற்கு வருவதும் ) பின்னர் மீண்டும் எழுதலும் இவ்வாறு அது முன் செல்கிறது. இதைத்தான் குதி என்ற சொல்லும் காட்டுகிறது.

அசை, உ, அம் என்ற மூன்று சிறுசொற்கள் அசுவத்தில் உள்ளன.

அசு + ஐ > அசை.   அசு என்பது அடிச்சொல்.

அசை உ என்ற இரண்டு கூறாமல்  அ ஐ உ  என்றும் கூறிவிளக்கலாம். இதற்குக் காரணி,  அய் + உ  ( ஐ உ) இரண்டும் போதுமானது.

அய்  -  எழுந்து      உ  -  முன் செல்லுதல்.

எழுந்து என்றால் உடலை மேலே எழுப்பித்து என்பது.

அசு என்பது வந்தவுடன் அம் சேர்த்துச் சொல் அமைகிறது.

எப்படியெல்லாம் பார்த்தாலும், அசைந்து முன் செல்வதே குதிரை. அய் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால்,   அய் உ > அயு> அசு என்று முன் சொல்லும் அடியே வந்துவிடும்.

அசுவம் என்பது தமிழ்ச் சுட்டடிகளைக் காட்டுவதால் சமஸ்கிருதம் என்ற பூசைமொழி தமிழ்ச்சொல்லமைபைப் பின்பற்றியது ஆகும்.

ய் என்பதை இயைதல் குறிக்கும்.  இ ய் ஐ . இது குறுக்கப்பெற்றது.

அசுவம் என்ற சொல் அச்சுவம் என்றும் வழங்கியதாக நூல்கள் சொல்லும்,

ஐ(அய்) என்பதே மூலவடியாக இருப்பதால் அச்சுவம் என்பதை இடைவிரியாகக் கொள்ளலாம். இதைப் பின் ஆய்வு செய்வோம்.

அஸ்வம் என்பது பின் விரிப்பு ஆகும். சு என்பது ஸ் என்று மெலிப்பு ஏற்றப்பட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: