சனி, 17 ஆகஸ்ட், 2024

அலட்சியம் புனைந்தவிதம்

 அடுத்துச் சென்றுதான் ஒன்றை அணுகிக் கவனிக்க முடியும். மிக்கத் தொலைவிலுள்ள ஒன்றை எவ்வளவு சிரத்தையுடன்  அணுகினாலும் நமக்கு அதனுடன்  நெருங்கி நிற்கும் உறவுணர்வு ஏற்படுதல் குறைவே.

பண்டைச் சொற்களில் அடுத்திருத்தல் எவ்வளவு முன்மையுள்ள நிலை என்பதைச் சொற்புனைவுகளில் கண்டுதெளியலாம்.  இதற்கு அலட்சியம் என்பது ஒரு சிறந்த உதாகரணம் ஆகும்.  அத்துடன் உதாகரணம் என்பதன் தமிழ் மூலங்களையும் இங்கேயே விளக்கிவிடலாம் என்று எண்ணுகிறோம். முதலில் இலட்சியம் அலட்சியம்.

அடுத்திருக்கும் நிலைக்கு ஒரு சொல் வேண்டுமாயின் அதை "அடுத்திரு" என்பதிலிருந்தே படைக்கலாம். 

அடு> அடுத்தல்> அடுத்திரு>  அடுத்திய(லுதல்)  >  இல்+ அட்சிய

இவற்றுள் இல் என்பது இடம்.  அடுத்திய> அட்திய > அட்சிய. என்பது புனைவு,

இல் அட்சியம் என்பது அடுத்திருந்து கவனித்தல்.

அல் அட்சியம் என்பது இடத்தில் அல்லாமல் பிற முறைகளில் கவனித்தல்.  ஆகவே இடத்திலின்மையால் கவனிக்காமை.

அடு என்பதில் டு என்பது கடின ஒலி.  அது குறைக்கப்பட்டது,  ட் என்ற ஒற்று மட்டுமே எஞ்சியது.  டு வல்லினம்,  நீக்கமுற்றது,

இதை அலடுச்சியம் என்றால் இன்னா ஓசைத்துமாகும். சொல்புனைவுக்கு இது ஆகாது,

உதாகரணம் என்பது  உது + ஆகு+  அரு + அண்+ அம்.

அரு என்பது எப்போதாவது இருத்தல்.

அண் என்பது நெருக்கம். 

ஆகவே உதாகரணம் எப்போதாவது ஒன்றுடன் அணுக்கமுடைத்தாதல்.

எடுத்துக்காட்டுகள் அடிக்கடி நிகழா இயன்மை உடையவை.,

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்,


கருத்துகள் இல்லை: