வியாழன், 31 ஜூலை, 2025

அமானுடம் சொல்

 மனிதன் என்பவன் தன்னையே சீரிய, மிக உயர்ந்த  பிறவியாக எண்ணிக் கொண்டவன். என்றாலும் இயல்பு நிலை கடந்த நிகழ்வுகளைக் காணும்போதும் கேள்விப் படும் போதும்  அவற்றை "அமானுட மானவை  " என்று சொல்வதுண்டு. இச் சொல் ஒரு  பிற்காலப் புனைவு தான்.  சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் தமிழர்கள் உண்டாக்கிய சொல்தான்.

இது எப்படி அமைந்தது என்பது காண்போம்.

மனிதன் என்ற சொல் மன்  என்ற  அடியில் தோன்றுவது. மன் என்ற  அடிச்சொல்லுக்குரிய பொருள்களில் நிலைபெறுதல் என்பது சிறப்பானது. எல்லா உயிரினங்களிலும் சிறப்புடையவன் ஏன் எனில் கலை பல அறிந்தவன். அறிவியல் கண்டவன் . மன் + இ+ து +அன் என்றபடி அவனுக்குச் சொல் அமைந்தது. மற்ற உயிரினங்களைவிடத் தன்னைப் புவியி லெங்கும் நிலைபேறு உடையோனாய்க் கருதிக் கொள்பவன்.

முன் எப்போதினும் நிலைபேறு என்பதற் குரிய பொருள் இப்போதுதான் மனிதனுக்கு  மிகுதியும பொருந்தினதாகத் தெரிகிறது. படைப்புத் திறன் மிக்குவந்து சி றந்தவனாகிவிட்டான்.

நாளேற நாளேறச் சிறப்படைந்துவிட்டான்

இப்போது "அமானுடம்" என்ற சொல். அ என்பது  மறுதலை , ( "மாற்று இடம்").  அல்லாதது என்பது பொருள்.  மனிதனுக்குரிய இயல்புகளுக்கு மாற்றம் உடையதாய் இருத்தல் என்று பொருள்.

அகரம் இங்கு முன்னொட்டாக வருகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது




கருத்துகள் இல்லை: