வியாழன், 3 ஜூலை, 2025

மாலுதல் மாலை

 மாலுதல் என்னும்  வினைச் சொல்: மயங்குதல் -  கலத்தல் என்பன பொருள்


சொல்லின் அடி மால் என்பதுதான். இதனுடன் ஐ விகுதி இணைந்து வர, மாலை என்ற சொல்  உண்டாகும். பூக்கள் பலவும் கலந்து தொடுப்பதால் கலத்தல் பொருளதாயிற்று. பூக்கள் ஒன்றுடன் ஒன்று மயங்குவன என்பதும் அறிக. 

இனி அடிச்சொல் ஆ விகுதி பெற்றும் சொல் ஆகும். அப்போது மாலா என்றும்  சொல்லாம். இச்சொல் பிறமொழிகள் பலவினும் சென்று கலக்கும். இது தமிழுக்கும் பெருமையே. பலா நிலா என்பனவும் ஆ விகுதி உடையனவே . நீலா என்ற பெயரில் ஆ விகுதி கண்டு கொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பிறருடன் பகிர்ந்து கொள்க.







கருத்துகள் இல்லை: