இப்போது மூலிகை என்ற சொல் காண்போம்.
மூலச் சொல் முல் என்பது. இதிலிருந்து அமைந்த பண்டைச் சொற்களில் இன்னும் வழங்கிக்கொண்டிருக்கும் சொல் முலை என்பது. முல் என்ற அடிக்கு அர்த்தம் என்ன என்றால் ''முன்னிருப்பது'' என்பதுதான். முல்லை என்ற பூவின் பெயர் இன்னொன்று. ஐந்து நிலங்களில் முல்லை நிலம் என்பதும் ஒன்றாக இருப்பதால் முல்லை என்பது ஒரு மிக்கப் பழமையான ஒரு சொல்லாகும். நிலங்கள் நான் காகவோ ஐந்தாகவோ பிரிக்கப்படு முன்பே இச்சொல் இருந்த காரணத்தால்தான், முல்லைப்பண் முதலிய சொல்லமைப்புகள் ஏற்பட்டன. காந்தன், காயாகுருந்து, கொன்றை, துளசி முதலிய மண்ணில் முளைப்பன முல்லை நில மரங்கள் எனப்பட்டன என்பதும் காண்க. வேறெங்கும் எவையும் முளைப்பதில்லை என்று கூறலாகாது. வெள்ளி முளைக்கிறது என்ற சொல்வழக்கு இருக்கிறதே. அது வேறுவகையான முளைப்பு ஆகும்.
இவை கூறியது முல்லை, முலை எனப்படுவன பழஞ்சொற்கள் என நிறுவுதற் பொருட்டு.
முல் > மூல். குறிலும் நெடிலும் சொற்களுக்கு முதலாய் வரும். வருக, வாருங்கள் ( வாங்க) என்று வா என்ற சொல்லே நெடிலிலும் குறிலும் பகுதிகள் மாறுகின்றனவே, இவை அறிந்து தெளிக.
இ - என்பது ஓர் இடைநிலை. அன்றி ''அருகில்'' என்ற பொருளை எடுத்துக்காட்டினும் இழுக்காது என்று உணர்க.
கை என்பது பக்கத்திலிருப்பவை என்று உணர்த்தும் ஒரு விகுதி. தமிழன் வாழ்ந்த நிலத்தில் இந்த மூலிகைகள் வளர்ந்து கிடந்தன. அவற்றை அவன் பயன் கொண்டான் என்பதுதான் சரித்திர உண்மை. கட்டுக்கதைகள் ஏதுமின்றி சரியாகவும் திறமாகவும் சொல்லப்படுபவை சரித்திரம் அல்லது வரலாறு எனப்படும். திறம் என்பது விகுதியாக வருகையில் திரம் என்று மாறிவிடும். ஒரு கூட்டுச்சொல்லின் அல்லது சொல்லமைப்பின் பகவாக வரும்போது திறம் என்ற சொல் திரம் என்றாகும்.
மூலிகை என்ற சொல் இவ்வாறு அமைந்த எளிமையான சொல். இது சமஸ்கிருதம் என்று சிலர் கூறுவதுண்டு. மூலிகை என்பது சிற்றூர்ச்சொல். இது பூசைமொழியிலும் சென்று வழங்கியது. இப்போது பூசைமொழியும் இந்திய மொழியே ஆதலால், அதுவுல் தமிழினுள் அமைந்ததே ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
இப்பதிவு பகிர்வுரிமை உடையது,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக