வியாழன், 31 ஜூலை, 2025

ஆபயன் என்னும் சொல்

 இன்று ஆபயன்  என்னும் சொல்லைத் தெரிந்து இன்புறுவோம்.

இது  இலக்கண முறையில் எத்தகையை சொல்? ,வினைத்தொகை என்னும் வகையுட்  பட்டால்  ஆகும் பயன் என்னும் பொருளில் வந்து, வலித்தல் விகாரம் தோன்றாமல் போதரும்.  அப்போது ஆ என்பது பசுவைக் குறிக்காது. ஆப்பயன் என பகர மெய் தோன்றினால் பசு தந்தது என்று பொருள் பட்டுப் பால் ( தயிர், மோர், வெண்ணெய். நெய் முதலானவற்றைக் குறிக்கும்.

பாட்டில் ( செய்யுளில்) எதுகை நோக்கிக் குன்றி  மீண்டும் "ஆபயன்" என்று வருதலும் கொள்க. அப்போது அஃது ஆவின் பயனே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்ந்து கொள்க.









கருத்துகள் இல்லை: