வெள்ளி, 5 ஜூலை, 2024

சேமித்து அறம் செய்க.

 சோலை புரைஅழகில்  ---- விடுதியில்

சுந்தர மலர்பொருத்தி,

மாலை   நிலாவிளக்கம் ---- கூட்ட

மருவு  கவின்தனைப்பார்.


மந்த ஒளியினிலே ---மாந்தும்

மக்க   ளுடனமர்ந்தாய் 

வந்த உணவருந்தின் ---கண்டாய்

வான்பெறு ஆனந்தமே.


உண்டு முடிக்காமலே --- எதுவும்

ஒழித்திடு முன்நினைப்பாய்

இன்றிவ் வுலகினிலே ---உணவும்

இல்லார் பசித்திருப்பார்.


மீதப் பொருள்களிலே -  சேர்த்து

மேல்வரும் சேமிப்பினை 

யாதும் இலார்க்களிப்பாய் ----அறமே

யாண்டும் துணையுனதே.


பொருள்: 

புரை - போன்ற

சுந்தர -  அழகிய

ஒழித்திடு  -  வீசிடும் 

வான்பெறு - மிக உயர்ந்த

ஆனந்தம்-  ஆக நன்று ஆன மகிழ்வு,

(ஆ + நன் து அம்)

யாண்டும் - எப்போதும்

மாந்தும் -  உண்ணும் அல்லது  நீர் அருந்தும்

இலார் -  இல்லாதவர்


கருத்துகள் இல்லை: