சனி, 27 ஜூலை, 2024

சுலோகம்

 சுலோகம் யாது அறிவோம்.

இதில் இருக்கும் பகவுகளாவன.  சொல்(லுதல்).  ஓ(ங்)கு(தல்), அம் விகுதி.

சொல்+ ஓகு+ அம் >  சொலோகம்> சுலோகம்..

இதில் சொல் > சு(ல்) ஆன திரிபு.

இரு சொற்களின் தொடர்பு இங்கு விளக்கப்பட்டது.

இங்கு ஓங்கு ( இடைக்குறைந்து  ஓகு என்று ) நிற்கிறது.   ஆகவே ஓசையும் பொருளும் சொல்லைக் காட்டிலும் சுலோகத்தில் உயர்ந்து நிற்கின்றது  என்பது பெறப்படும்.  இது ஏன் சுலோகம் என்ற சொல் படைக்கப்பெற்றது என்பதற்கும் சொல்லுக்கும் சுலோகத்திற்கும் உள்ள வேறுபாட்டினையும் விளங்கக் காட்டிற்று.  தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் உள்ள தொடர்பினையும் காட்டி,  அது இந்தோ ஐரோப்பியம் என்று பெயரிடப்பட்டது ஒரு புனைவு எனற்பாலதையும் விளங்கவைக்கிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: