செவ்வாய், 9 ஜூலை, 2024

சத்திரம். சாவடி

 இந்த இரு சொற்களையும் நுணுகி ஆராய்வோம்.

சத்திரம் எனற்  பால சொல்லில் மூன்று பகுதிகள் : அவை சற்று,  இரு, அம். அமைப்பு குறிக்கும் விகுதி தான் அம் என்பது.  விகுதி  என்றால் சொல்லின் மிகுதியாய் நின்று சொல்லைப் பிறப்பிப்பது.

சற்று என்பது எழுத்து மொழியில் மட்டும் உள்ள வடிவம். இது சத்து என்றுதான் பேச்சில் வரும். இதன் மூலம் சல் என்பதே.இதன் பொருள் தேர்ந்தெடுத்த இடம் என்பது. கொஞ்ச நேரத்துக்கு என்றும் பொருத்தமான பொருளைத் தருகிறது. நேரம் இடம் இரண்டுக்கும் பொதுவான சொல் இதுவாகும். சலித்தல் என்பது சல் என்பதினின்றும் கிடைக்கும் சொல்லாதலால்  பொறுக்கி எடுத்த ஓர் இடத்தில் தங்குவது என்று பொருளாகிறது.

சத்து இரு அம் >  சத்திரு அம் > சத்திரம்.

இரு அம் என்பது இரம் என்று வருதலில் ருகரத்தில் உள்ள உகரம் ஒழிந்தது. ( கெட்டது )

பல் + து > பற்று >  பத்து.  ( இது பத்து என்ற எண்ணிக்கை. )  இதிலும் பற்று என்று வராமல் சொல்லாக்கத்தில் பத்து என்றே வந்தது.  சொல்லாக்கப் புணர்ச்சியில் இவ்வாறு வருதல் பெருவழக்கு ஆகும்.

பத்து என்ற எண்ணுக்குப் பெயருண்டாக்கிய போது, பல் து என்றிரண்டையும் சேர்த்துப் பெயரமைத்தனர். அதாவது எண்ணிக்கையில் பலவானது என்பதே பொருள்.

இனிச் சாவடி என்ற சொல்:

இது கல்வெட்டில் உசாவடி என்று காணப்பெறுகிறது.  ஆகவே சாவடி என்பது  உசாவு அடி என்பதில் உகரம் குன்றிய சொல்லாகும்.  உசா வி அறிவதற்கு அடுத்திருக்கும் கூடாரம் என்பது பொருள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்.




கருத்துகள் இல்லை: