வியாழன், 27 ஜூன், 2024

இலத்தீன் இலக்கணமும் தமிழும்.

 இலத்தீன் மொழி, சமஸ்கிருதம், தமிழ்  ஆகியவற்றிடை ஒற்றுமை ஒன்றுள்ளது. இத்தகைய ஒற்றுமை உள்ள மொழிகளில் இன்னும் இளமையுடன் எழில்காட்டும் மொழிகளில் தமிழ் சிறப்பினைப் பெறுகின்றது.தமிழில் வினை முற்றுக்களுக்கும் வினையெச்சங்களுக்கும் பொருள் தெரிவிக்கின்றன. வந்தான் என்பது வேறு,  வந்து  உண்டான் என்பது வேறு. வந்த பையன் என்றால் இங்கு வந்த என்பது வேறுபொருள் தருகிறது.  முற்று, எச்சம் என்றெல்லாம் வேறுவேறு பொருளைக் காட்டாத புத்துலக மொழிகளில்  பேசிப் பழகியோர் தமிழைப் பேசுகையில் இவற்றில் (பயன்பாட்டில்) தடுமாறுவர். உமது மொழி மிகவும் கடினம் என்று கவலை கொள்வர். சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்கவந்தவர்,  "தம்பீ!  நீ சாப்பிடு போச்சி?" என்று கேட்கிறார். நம் மொழி அவர்களுக்கு எளிதாய் இருப்பதில்லை. இலத்தீனும் சமஸ்கிருதமும்  தமிழைப் போன்று வாக்கியங்களை அமைக்கின்றன.

பெயர்ச்சொற்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு  வேற்றுமை என்பர். இவற்றுக்கு உருபுகளும் உள்ளன.

ஆங்கிலத்தில் இது declensions of the noun எனப்படும். இது பழைய ஃபிரஞ்சு மொழியிலிருந்து வந்தது என்பர். அதற்குரிய சொல்: clinaison  என்பதாகும்.  கிளத்தல் என்ற தமிழ் வினைச்சொல்லுடன் ஒப்பீடு செய்யத்தக்கது இது ஆகும்.  கிள என்பதை cli என்பதுடன் ஒப்பிட்டு நோக்குக.  de என்பது முன்னொட்டு.

இலத்தீனில் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் என்பதறிக.

மெய்ப்பு பின்னர்

மீள்பார்வை: 29062024 0354

கருத்துகள் இல்லை: