புதன், 19 ஜூன், 2024

கிருபை

 கிருபை என்னும் சொல்லின் மூலங்களைக் காண்போம்.

கிடைப்பவற்றில் மிக்க உயர்வானது, பெரியது என்றால் பற்றனுக்கு இறையருள்தான்.

தமிழில் இரு என்றால் பெரியது.

இரு + பு + ஐ > இருபை>  கு+ இரு+ பு+ ஐ >  கிருபை  ஆகும்.

கு - வந்து சேரும்  , இரு  -  மிகப் பெரிய,  பு -  புவியில் . ஐ - உயர்வானது,. விகுதியுமாகும்.

கி  - கிடைத்து,  இரு-  இருப்பனவில்,  பு -  புவியில்,  ஐ - உயர்வானது  ,  ஆகவே கிருபை என்றும் ஆகும்.

எழுத்துக்கள் கூடிப் புணர்ந்தமையும் திரிபுகளும் இங்கு விளக்கப்படவில்லை.  பழைய இடுகைகளில் கூறப்பட்ட முறையே இதற்குமாகும்.

இருமுறைகளிலும் வரலாம். இன்னும் உள்ளன. அவை இருக்க. இது பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க/

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை: