செவ்வாய், 21 மே, 2024

அதர்வண வேதம்

 அதர்வண வேதம் என்பதில் அதர்வணம் என்பது தமிழ்ப்புனைவாகும்.

அ =  அடுத்து.

தரு  -  தரப்படுகின்ற

அண் = மூன்றாம் வேதத்தை நெருங்கிய  படி ( அண்முதல் - நெருங்கியிருத்தல்)

அம் -  அமைந்தது

என்று தமிழில் பொருள்படும்,

அண் என்பது வண் என்றானது சந்தி.  வகர உடம்படுமெய்.

முன் எழுந்த மூன்று வேதங்களே வழக்கிலிருந்தமையால்,   அடுத்துத் தரப்படுவது என்றும்  அறிவு நூலாக முன்வந்த நூல்களை அண்மி  நிற்பது என்றும் பெயரிடப்பட்டது.  பூசாரிக்கு உரியது என்ற வழிகாட்டுதல் தேவையற்றதாகும்.  வேதம் என்ற சொல் போதுமானது,

வேய்தல்  -  செய்யப்பட்டது.

இவை எல்லாம் முற்றிலும் இந்தியாவிலே செய்யப்பட்ட நூல்கள். ஐரோப்பியருக்குத் தொடர்பற்றவை.  ஈரானுக்கும் தொடர்பில்லாதவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: